என் மலர்

    நீங்கள் தேடியது "தெலுங்கானா"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தெலுங்கானா மாநில அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையில் நடந்தது
    • தெலுங்கானா மாநிலத்தின் 10-ம் ஆண்டு உதய தினத்தை 21 நாட்கள் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஆந்திராவில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாநிலமாக கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 2-ந் தேதி உருவாக்கப்பட்டது. அடுத்த மாதம் 1-ந் தேதியுடன் 9 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

    ஜூன் 2-ந் தேதி 10-ம் ஆண்டு பிறக்கிறது. இதை பிரமாண்டமாக கொண்டாட தெலுங்கானா அரசு முடிவு செய்தது.

    இந்நிலையில், தெலுங்கானா மாநில அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தெலுங்கானா மாநிலத்தின் 10-ம் ஆண்டு உதய தினத்தை 21 நாட்கள் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு நாளும் ஒரு கருத்தின் அடிப்படையில் விழா கொண்டாடப்படும். ஜூன் 2-ந் தேதி ஐதராபாத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்து, தெலுங்கானா மாநிலம் உருவாக உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கு முதல்-அமைச்சர் சந்திரசேகரராவ் அஞ்சலி செலுத்தி விழாவை தொடங்கி வைக்கிறார்.

    21 நாள் கொண்டாட்டத்துக்கு ரூ.105 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கைது செய்யும் முன் காவல் துறை அதிகாரிகளிடம் பந்தி சஞ்சய் குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
    • பந்தி சஞ்சய் குமார் கைது நடவடிக்கையை கண்டித்து தெலுங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

    தெலுங்கானா மாநிலத்தின் பாஜக தலைவர் பந்தி சஞ்சய் குமார் நேற்று இரவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யும் முன் காவல் துறை அதிகாரிகளிடம் பந்தி சஞ்சய் குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனினும், கைது செய்வதற்கான காரணத்தை காவல் நிலையத்தில் வைத்து சொல்வதாக கூறி போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

    காவல் துறை துணை ஆணையர் துலா ஸ்ரீனிவாஸ் தலைமையிலான காவல் துறை அதிகாரிகள் நேற்று நள்ளிரவு 12.45 மணி அளவில் மாமியார் வீட்டில் இருந்த பந்தி சஞ்சய் குமாரை கைது செய்து பொம்மலா ராமரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

     

    கைது நடவடிக்கையின் போது பந்தி சஞ்சய் வீட்டிற்கு விரைந்த பாஜக-வினர், போலீசாரை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் காவல் துறைக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இருந்த போதிலும், காவல் துறையினர் பந்தி சஞ்சய் குமாரை கைது செய்தனர். பந்தி சஞ்சய் குமார் கைது நடவடிக்கையை கண்டித்து தெலுங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

    டிஎஸ்பிசி வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் ஆதாரம் காண்பிக்க காவல் துறை சார்பில் பலமுறை பந்தி சஞ்சய் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. எனினும், ஒருமுறை கூட பந்தி சஞ்சய் குமார் ஆஜராகவில்லை, மாறாக தனது சட்ட வல்லுனர் குழுவை மட்டும் அனுப்பி வந்துள்ளார். சிறப்பு விசாரணைக்கு ஆஜராகாததே இவரின் கைதுக்கு காரணம் ஆகும்.

    இதுதவிர 10 ஆம் வகுப்பு வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாகவும் பந்தி சஞ்சய் குமார் செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாகவும் பந்தி சஞ்சய் குமார் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாளை 8-ந் தேதி சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்பட உள்ளது.
    • தெலுங்கானா அரசின் இந்த அறிவிப்பால் பெண் ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஐதராபாத்:

    நாளை 8-ந் தேதி சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, பெண்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் பல சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்த நிலையில் தெலுங்கானா மாநில தலைமை செயலாளர் சாந்திகுமாரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

    சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, அனைத்து அரசு பெண் ஊழியர்களுக்கும் மார்ச் 8-ந் தேதிவிடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேலும், அன்றைய தினம் ரூ.750 கோடி மதிப்பில் மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் தன்னார்வ மகளிர் அமைப்பினருக்கு வட்டி இல்லா வங்கி கடனுதவிகளை நிதி அமைச்சர் ஹரீஷ் ராவ் வழங்க உள்ளார்.

    தெலுங்கானா அரசின் இந்த அறிவிப்பையடுத்து பெண் ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தெலுங்கானா மாநிலத்தின் அசாதாரண வெற்றிக்கு மக்களின் ஆசியே காரணம்.
    • ரிது பந்து திட்டத்தின் கீழ் 65 லட்சம் விவசாயிகளுக்கு முதலீட்டு உதவித்தொகையாக ரூ.65 ஆயிரம் கோடியை வழங்கிய ஒரே மாநிலம் தெலுங்கானா.

    ஐதராபாத்:

    தெலுங்கானா சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதன் கூட்டுக்கூட்டத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றினார். அப்போது முதல்-மந்திரி சந்திரசேகர்ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    தெலுங்கானா மாநிலத்தின் அசாதாரண வெற்றிக்கு மக்களின் ஆசியே காரணம். முதல்-மந்திரின் திறமையான நிர்வாகமும், மக்கள் பிரதிநிதிகளின் கடின உழைப்பும், அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்பும் மாநிலத்தை வளர்ச்சியின் பாதையில் கொண்டு சென்று வருகின்றன.

    இன்று, மாநிலம் பொருளாதார ரீதியாக வலுவாக உள்ளது மட்டுமின்றி, நலன் மற்றும் வளர்ச்சியில் நாட்டிலேயே சிறந்து விளங்கும் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக உள்ளது.

    மாநிலத்தின் தனிநபர் வருமானம் கடந்த 2014-15-ல் ரூ.1,24,104 ஆக இருந்தது. இது 2022-23-ல் ரூ.3,17,115 ஆக அதிகரித்துள்ளது. 2014-15-ல் மாநிலம் உருவானபோது, தெலுங்கானாவில் 20 லட்சம் ஏக்கருக்கு மட்டுமே பாசன வசதி இருந்தது. இது தற்போது 73,33,000 ஏக்கராக அதிகரித்துள்ளது.

    ரிது பந்து திட்டத்தின் கீழ் 65 லட்சம் விவசாயிகளுக்கு முதலீட்டு உதவித்தொகையாக ரூ.65 ஆயிரம் கோடியை வழங்கிய ஒரே மாநிலம் தெலுங்கானா ஆகும்.

    மாநிலம் உருவானபோது 7,778 மெகாவாட் ஆக இருந்த மாநில மின் உற்பத்தி திறன், 18,453 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. கடந்த 8½ ஆண்டுகளில் 2,21,774 பணியிட நியமனங்களை அரசு மேற்கொண்டுள்ளது.

    இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

    தெலுங்கானாவில் அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்கி வைக்க வருமாறும், பட்ஜெட் ஆவணத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறும் கடந்த 30-ந்தேதி அரசு சார்பில் கவர்னரை சந்தித்து வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து இந்த கூட்டத்தொடரில் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இரண்டு பாறைகளுக்கு மத்தியில் உள்ள இடைவெளிக்குள் செல்போன் விழுந்துவிட்டது.
    • செல்போனை எடுக்க முயற்சித்தபோது பாறை இடுக்கில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டார்.

    நிஜாமாபாத்:

    தெலுங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டம் ரெட்டிபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு. இவர் நேற்று முன்தினம் மாலை, முயல்களை பிடிப்பதற்காக மலைப்பகுதிக்கு சென்றுள்ளார். பாறைகளுக்கு நடுவே தூங்கும் முயல்களைப் பிடிப்பதற்காக ஒரு இடத்தை எட்டி பார்க்கையில், அவரது செல்போன் தவறி இரண்டு பாறைகளுக்கு மத்தியில் உள்ள இடைவெளிக்குள் விழுந்துவிட்டது.

    சுமார் 15 அடி ஆழத்தில் விழுந்த செல்போனை எடுக்க முயற்சித்த ராஜூ, பாறை இடுக்கில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டார். இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பாறை இடுக்கில் சிக்கியிருந்த போது ராஜுவுக்கு அவரது உறவினரான அசோக் அவருக்கு உணவு அளித்து தைரியம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    மீட்பு பணியின்போது அதிகாரிகள் ராஜுவுக்கு ஆக்ஸிஜன் மற்றும் பழச்சாறு போன்ற திரவ உணவுகளை வழங்கினர்.

    சுமார் 48 மணி நேர தீவிர முயற்சிக்கு பிறகு இன்று பிற்பகல் ராஜூவை உயிருடன் மீட்டனர். உடனடியாக அவர் காமாரெட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதல்வர் சந்திரசேகர ராவ் இல்லத்தை நோக்கி ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியின் பேரணி சென்றது
    • டிஆர்எஸ் கட்சி எம்எஎல்ஏ பெட்டி சுதர்ஷன் ரெட்டியை ஷர்மிளா கடுமையாக தாக்கி பேசினார்.

    தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஷர்மிளா, ஆளும் சந்திரசேகர ராவ் அரசுக்கு எதிராக பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். இதுவரை சுமார் 3500 கிமீ பயணம் மேற்கொண்டுள்ள அவர் நேற்று தனது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்ட பேரணியில் பங்கேற்றார். இந்த பேரணி முதல்வரின் இல்லத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தது.

    அப்போது, ஷர்மிளா தனது காரில் புறப்பட்டுச் சென்றபோது, வாகனத்தை இழுத்துச்செல்லும் கிரேனை போலீசார் கொண்டு வந்து, அவரது வாகனத்தை இழுத்துச் சென்றனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. கிரேன் காரை இழுத்துச் செல்லும்போது அவர் காரில் அமர்ந்திருப்பதையும், அவரது ஆதரவாளர்களும் செய்தியாளர்களும் அவர்களுடன் ஓடுவதையும் காண முடிகிறது.

    நேற்று வாராங்கல் பகுதியில் உரையாற்றிய ஷர்மிளா, அந்த தொகுதியின் டிஆர்எஸ் கட்சி எம்எஎல்ஏ பெட்டி சுதர்ஷன் ரெட்டியை கடுமையாக தாக்கி பேசினார். இதனால் ஆத்திரமடைந்த டிஆர்எஸ் கட்சியினர், ஷர்மிளாவின் காரை தாக்கினர். பின்னர் ஷர்மிளாவின் ஆதரவாளர்களும் பதிலடி கொடுத்தனர். இது தொடர்பாக சிலரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

    இந்த மோதலைத்தொடர்ந்து ஷர்மிளாவின் பாத யாத்திரைக்கான அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. ஷர்மிளாவை போலீஸ் பாதுகாப்புடன் ஐதராபாத் அனுப்பி வைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதல் இரண்டு தளங்களில் தங்கியிருந்தவர்கள் மூச்சு திணறி உயிரிழந்தனர்.
    • மின்சார வாகன விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ, தங்கும் விடுதிக்கு பரவியது

    செகந்திராபாத்:

    தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் நகரில் மின்சார ஸ்கூட்டர் விற்பனை நிலையம் உள்ளது. அங்குள்ள வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் பகுதியில் நேற்றிரவு தீ பிடித்தது. இந்த தீ அருகில் இருந்த 4 மாடிகள் கொண்ட தங்கும் விடுதிக்கு பரவியது. அப்போது அங்கு 40 பேர் தங்கியிருந்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த விடுதியில் இருந்தவர்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


    கடும் புகை மூட்டம் காரணமாக அந்த விடுதியின் முதல் 2 தளங்களில் தங்கியிருந்த 7 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். பலர் விடுதியில் இருந்து கீழே குதித்தனர். இதில் காயடைந்தவர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், மீட்பு பணி நடைபெற்று வருவதாக ஐதராபாத் வடக்கு மண்டல கூடுதல் டிஜிபி தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற தெலுங்கானா மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி. ஸ்ரீனிவாஸ் யாதவ் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்தினார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வருகிற பாராளுமன்ற தேர்தலில் கரீம்நகர் தொகுதியில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை முதல் மந்திரி சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார். #ChandrashekarRao

    ஐதராபாத்:

    பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வில் கட்சிகள் தீவிரம் காட்ட தொடங்கி உள்ளன.

    இந்த நிலையில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி வேட்பாளர்களை அறிவிக்க தொடங்கி உள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தில் கரீம்நகர் தொகுதியில் தற்போது தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்த வினோத்குமார் எம்.பி.யாக இருக்கிறார். அவர் மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று நேற்று சந்திரசேகரராவ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    கரீம்நகர் தொகுதிக்குட்பட்ட சர்சீலா நகரில் நடந்த கட்சி ஊழியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட சந்திரசேகரராவ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். தற்போது தெலுங்கானாவில் எம்.பி.க்களாக இருக்கும் டி.ஆர்.எஸ். கட்சி எம்.பி.க்கள் அனைவருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் கரீம்நகரில் மீண்டும் வேட்பாளராக வினோத்குமார் அறிவிக்கப்பட்டதும் டி.ஆர்.எஸ். கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வினோத்குமாருக்கு டி.ஆர்.எஸ். கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    தெலுங்கானாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி அமோக வெற்றி பெற்றது. 43 சதவீதம் பேர் இந்த கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

    இதையடுத்து தெலுங்கானாவில் அனைத்து எம்.பி. தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று டி.ஆர்.எஸ். கட்சி தலைவர் சந்திரசேகரராவ் இலக்கு நிர்ணயித்துள்ளார்.

    சந்திரசேகரராவின் வேட்பாளர் அறிவிப்பு காரணமாக காங்கிரஸ், பா.ஜ.க., தெலுங்கு தேசம் கட்சிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளன. #ChandrashekarRao

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தெலுங்கானாவில் தொங்கு சட்டசபை அமைந்தால் சந்திரசேகர ராவ் கட்சிக்கு ஆதரவு கொடுப்போம் என்று பா.ஜனதா அறிவித்துள்ளது. #TRS #BJP
    ஐதராபாத்:

    5 மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 11-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெலுங்கானாவில் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி (டிஆர்எஸ்) மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    119 தொகுதிகளை கொண்ட அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க 60 உறுப்பினர்கள் தேவை. இந்தியா டுடே, டைம்ஸ் நவ் உள்ளிட்ட 3 கருத்து கணிப்பில் டிஆர்எஸ் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் தொங்கு சட்டசபை ஏற்பட்டால் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதிக்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக பா.ஜனதா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில பா.ஜனதா தலைவர் கே.லட்சுமண் கூறியதாவது:-

    தெலுங்கானாவில் தொங்கு சட்டசபை ஏற்பட்டால் சந்திரசேகர ராவ் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுப்போம். காங்கிரஸ், எம்.ஐ.எம். ஆகியவைதான் எங்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆகும். அவர்களை ஆட்சி அமைக்க விடமாட்டோம். இதனால் எங்களது ஆதரவு டிஆர்எஸ் கட்சிக்கு இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பெண் பார்க்க சென்று பெண்ணை பிடித்துப் போய் கல்யாண கனவுடன் இருந்த ராணுவ வீரரை பிடிக்கவில்லை என பெண் வீட்டார் கூறியதால், மனம் உடைந்து ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் கத்வால் மாவட்டத்தைச் சேர்ந்த ரெவுலாபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வினோத் குமார். ராணுவத்தில் பணியாற்றும் இவர் விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளார். மகனுக்கு திருமண செய்து பார்க்க நினைத்த பெற்றோர் சமீபத்தில் ஒரு பெண்ணை பார்க்க சென்றுள்ளனர்.

    பெண்ணை வினோத் குமாருக்கு மிகவும் பிடித்து போனது. ஆனால், பெண் வீட்டார் வினோத் குமாரை பிடிக்கவில்லை என கூறிவிட்டனர். இதனால், மனம் உடைந்து போன வினோத் குமாரிடம், வேறு பெண்ணை பார்க்கலாம் என அவரது தந்தை சமாதானம் தெரிவித்துள்ளார்.

    ஆனால், பெண்ணை மிகவும் பிடித்து போய் திருமண கனவில் இருந்த வினோத் குமார், அதே பெண்ணை தான் திருமணம் செய்வேன் என கூறி தந்தையிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், இன்று காலை ரெயில் முன்னர் பாய்ந்து வினோத் குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo