என் மலர்
நீங்கள் தேடியது "டிரம்ப்"
- அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்
- இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யப்போவதாக டிரம்ப் அறிவிப்பு
பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டால் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது. பட்ஜெட்டில், பங்குகளை வாங்குவதற்கும் விற்பதற்குமான வரி சற்றே உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் முதியீட்டாளர்கள் பீதியடைந்தனர்.
எனவே மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி சுமார் 500 புள்ளிகள் வரை சரிந்தது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் நேற்று தொலைபேசியில் பேசினார். இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.
பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதையாலும், அவரது வேண்டுகோளின் படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்" என்று தெரிவித்தார்.
டிரம்பின் இந்த அறிவிப்பால் இன்று இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 3657 புள்ளிகள் வரையும் தேசிய பங்குச்சந்தை எண் நிஃப்டி 1220 புள்ளிகள் வரையும் உயர்ந்து உயர்வுடன் தொடங்கியது.
இந்நிலையில், இன்றைய பங்குச்சந்தை முடிவில் சென்செக்ஸ் 2072 புள்ளிகள் உயர்ந்து 83,739 புள்ளிகளிலும் நிஃப்டி 639 புள்ளிகள் உயர்ந்து 25,727 புள்ளிகளிலும் வர்த்தகமானது.
- அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
- அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டால் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது. பட்ஜெட்டில், பங்குகளை வாங்குவதற்கும் விற்பதற்குமான வரி சற்றே உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் முதியீட்டாளர்கள் பீதியடைந்தனர்.
எனவே மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி சுமார் 500 புள்ளிகள் வரை சரிந்தது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் நேற்று தொலைபேசியில் பேசியுள்ளனர்.
இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.
பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதையாலும், அவரது வேண்டுகோளின் படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்" என்று தெரிவித்தார்.
டிரம்பின் இந்த அறிவிப்பால் இன்று இந்திய பங்குச்சந்தை தாறுமாறாக உயர்ந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 4000 புள்ளிகள் வரையும் தேசிய பங்குச்சந்தை எண் நிஃப்டி 1200 புள்ளிகள் வரையும் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.
11 மணிநேர நிலவரப்படி சென்செக்ஸ் 84,000 புள்ளிகளிலும் நிஃப்டி 25,750 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது.
- இங்கிலாந்து மணலில் தலையை புதைத்துக்கொள்வது புத்திசாலித்தனமல்ல.
- சீனா எங்களது 3-வது பெரிய வர்த்தகப் பங்குதாரராக உள்ளது.
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அரசு முறைப் பயணமாக சீனாவுக்குச் சென்று அந்நாட்டு அதிபர் ஜிஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்டவைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். மேலும் பல ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
டிரம்ப்பின் மனைவி மெலனியாவின் வாழ்க்கை குறித்த ஆவணப் படத்தின் சிறப்புக் காட்சி நடந்தது. இதில் பங்கேற்ற டிரம்ப் நிருபர்களிடம் கூறும்போது, சீனாவுடன் வர்த்தகம் செய்வது இங்கிலாந்துக்கு மிகவும் ஆபத்தானது என்றார்.
இதுதொடர்பாக இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் கூறும்போது, "இங்கிலாந்து மணலில் தலையை புதைத்துக்கொள்வது புத்திசாலித்தனமல்ல. சீனா உலகின் 2-வது பெரிய பொருளாதாரம் ஆகும். ஹாங்காங்குடன் சேர்த்து, சீனா எங்களது 3-வது பெரிய வர்த்தகப் பங்குதாரராக உள்ளது. எனது பயணத்தின் மூலம், வேலைவாய்ப்புகளுக்கும் செல்வத்தை உருவாக்குவதற்கும் நாங்கள் பல வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளோம்" என்றார்.
- அனைத்து கனடா விமானங்களுக்கும் சான்றிதழை அமெரிக்கா ரத்து செய்யும்.
- பிரிவினைவாத குழுவிற்கும், அமெரிக்க அதிகாரிகளுக்கும் இடையே ரகசிய சந்திப்பு நடந்ததாக தகவல்.
அமெரிக்கா-கனடா இடையே வர்த்தக போர் இருந்து வருகிறது. இதற்கிடையே சீனாவுடன் கனடா வர்த்தகத்தில் ஈடுபட்டால் அந்த நாடு மீது 100 சதவீத வரி விதிப்பேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் விற்கப்படும் கனடா விமானத்திற்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்து உள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த கல்ப்ஸ்ட்ரீம் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ஜெட் விமானங்களுக்கு சான்றளிக்க கனடா மறுத்ததற்குப் பதிலடியாக இந்த வரி நடவடிக்கை எடுக்கப்படுவதாக டிரம்ப் தெரிவித்தார்.
மேலும், அனைத்து கனடா விமானங்களுக்கும் சான்றிதழை அமெரிக்கா ரத்து செய்யும் என்றார்.
இந்த நிலையில் மேற்கு கனடாவில் எண்ணை வளம் மிக்க ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள பிரிவினைவாத குழுவிற்கும், அமெரிக்க அதிகாரிகளுக்கும் இடையே ரகசிய சந்திப்பு நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து கனடா பிரதமர் மார்க் கார்னி கூறும்போது, கனடாவின் இறையாண்மையை அமெரிக்கா மதிக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்றார்.
- அசாதாரண குளிர்காலத்தில் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று நான் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டேன்.
- இந்த தற்காலிக போர் நிறுத்தத்திற்கு புதின் ஒப்பு கொண்டார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறிய தாவது:-
உக்ரைனில் கடுமையான உறைபனி நிலவும் நிலையில், தலைநகர் கீவ்மற்றும் பிற நகரங்கள் மீது ஒரு வாரத்திற்கு தாக்குதல் நடத்த வேண்டாம் என்று ரஷிய அதிபர் புதினிடம் கேட்டு கொண்டேன். இந்த அசாதாரண குளிர்காலத்தில் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று நான் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டேன்.
இந்த தற்காலிக போர் நிறுத்தத்திற்கு புதின் ஒப்பு கொண்டார். இது சிறப்பான முடிவு. இதை உக்ரைன் தரப்பில் முதலில் நம்ப முடியவில்லை. அவர்கள் மிகவும் மோசமான சூழலில் போராடி வருவதால் அதை கேட்டு மகிழ்ச்சி அடைந்தனர் என்றார். ஆனால் இது தொடர்பாக ரஷியாவிடம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
- அதிபர் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிப்பதாக அறிவித்தார்.
- குறிப்பாக இந்தியா தங்களுக்கு அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டினார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிப்பதாக அறிவித்தார். குறிப்பாக இந்தியா தங்களுக்கு அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டினார்.
இதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி முதல் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். அதன்பின், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 50 சதவீதமாக உயர்த்தினார்.
இதேபோல், பல்வேறு நாடுகள் மீது அதிபர் டிரம்ப் வரிவிதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், தென் கொரிய பொருட்களுக்கான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதில் தென் கொரியா தாமதப்படுத்தி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என டிரம்ப் தெரிவித்தார்.
வரி அதிகரிப்பு குறித்து முறையான அறிவிப்பு எதுவும் வரவில்லை என்றும், வாஷிங்டனில் உள்ள அதிகாரிகளுடம் இதுகுறித்து பேசுவோம் என தென் கொரியா தெரிவித்துள்ளது.
- மற்ற நாடுகளின் செயல்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது.
- நம்மால் எதை மாற்ற முடியுமோ அதில் மட்டும் கவனம் செலுத்துவோம்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்-கனடா பிரதமர் மார்க் கார்னி இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இதற்கிடையே சீனாவுடன் வர்த்தக உறவு வைத்து கொண்டால் கனடாவுக்கு 100 சதவீத வரி விதிப்பேன் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
இந்தநிலையில் டிரம்பின் மிரட்டலுக்கு பதிலடியாக வீடியோ ஒன்றை மார்க் கார்னி வெளியிட்டார்.
அதில் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து அவர் பேசியதாவது:-
வெளிநாட்டு அச்சுறுத்தலை சமாளிக்க கனடா பொருட்களையே வாங்குவோம், கனடாவை கட்டமைப்போம். மற்ற நாடுகளின் செயல்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது.
எனவே நம்மால் எதை மாற்ற முடியுமோ அதில் மட்டும் கவனம் செலுத்துவோம். கனடியர்கள் தங்கள் பணத்தை உள்நாட்டில் செலவழித்து உள்ளூர் தொழிலாளர்களை ஆதரிக்க ஊக்குவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டிரம்ப், பொதுமேடையில் “கனடா அமெரிக்காவால்தான் உயிர் வாழ்கிறது” என்றார்.
- கியூபெக் திரும்பிய கார்னி வீடியோ ஒன்றை வெளியிட்டு டிரம்பை கடுமையாக விமர்சித்துள்ளர்.
சீனாவுடன் உறவு வைத்துக் கொண்டால் கனடாவுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
அமெரிக்கா அதிபர் டிரம்ப் கனடாவை தனது நாட்டுடன் இணைக்க தொடர்ந்து அறைகூவல் விடுத்து வருகிறார். இதற்கு கனடா நாட்டு பிரதமர் மார்க் கார்னி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். முன்னாள் பிரதமர் ட்ரூடோ காலத்தில், டிரம்ப் அவரை "பிரதமர்" என அல்லாமல், "கவர்னர் ட்ரூடோ" என்று அழைத்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் கனடா-அமெரிக்கா இடையேயான உறவு கசக்க தொடங்கியது. இருப்பினும் இதனை புதுப்பிக்கும் முயற்சியில் கனடா சார்பில் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தன.
சுவிட்சர்லாந்தில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் டிரம்ப், மார்க் கார்னி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது டிரம்ப் அறிவித்த அமைதி வாரியத்தில் இணைய கார்னிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்று அமைதி வாரியத்தில் இணைய கார்னி ஒத்துக்கொண்டார்.
மேலும், அமெரிக்காவுடனான உறவை புதுப்பித்து கொள்ளவும் கார்னி ஒரு வாய்ப்பாக இதனை கருதினார். இருப்பினும் டிரம்ப் அவருடைய கோரிக்கையை நிராகரித்தார். மேலும், டிரம்ப் இது "பெரிய தலைவர்களுக்கான உருவாக்கப்பட்ட மிக உயரிய குழு, இதில் கனடாவுக்கு இடமில்லை" என்று பகிரங்கமாக அறிவித்தார்.
மேலும், அவர் பொதுமேடையில் "கனடா அமெரிக்காவால்தான் உயிர் வாழ்கிறது" என்றார். இதனால் சுவிட்சர்லாந்தில் இருந்து பெரும் ஏமாற்றத்துடன் கார்னி திரும்பினார்.
பின்னர் கியூபெக் திரும்பிய அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு டிரம்பை கடுமையாக விமர்சித்துள்ளர். அதில் அவர் "கனடா அமெரிக்காவால் உயிர் வாழ்வதில்லை. நாங்கள் கனடியர்கள் என்பதால்தான் கனடா செழிக்கிறது." என்றார்.
பின்னர் அமெரிக்கா-கனடா இடையிலான நீண்டகால உறவைப் பாராட்டிய கார்னி, அதே நேரத்தில், எங்கள் வீட்டின் உரிமையாளர்கள் நாங்களே. இது எங்கள் நாடு; எங்கள் எதிர்காலம்; முடிவு எங்களிடமே உள்ளது. மேலும், நடுத்தர சக்தி நாடுகள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும், பெரும் சக்திகள் பொருளாதார ஒருங்கிணைப்பை ஆயுதமாகவும், சுங்க வரிகளை அழுத்தம் செலுத்தும் கருவியாகவும், நிதி கட்டமைப்புகளை கட்டாயப்படுத்தும் சாதனமாகவும், விநியோகச் சங்கிலிகளைப் பயன்படுத்திக் கொள்ளும் பலவீனங்களாகவும் மாற்றத் தொடங்கியுள்ளன, என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு டிரம்ப் கடும் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "என்ன நினைத்துக்கொண்டுள்ளார் என தெரியவில்லை. எங்கள் தயவு இல்லாமல் சீனாவை சார்ந்து இருக்க விரும்புகிறாரா கவர்னர் கார்னி.
சீனப்பொருட்களை கனடாவில் இறக்குமதி செய்தால் அவர்கள் போகிற போக்கில் உங்களை விழுங்கிவிடுவார்கள். அதனை மீறி நீங்கள் சீனா உடன் உறவு வைத்துக்கொள்ள விருப்பப்பட்டால் உங்கள் மீது 100 சதவீதம் வரிவிதிக்கப்படும்" என்றார்.
முன்னதாக அமெரிக்காவின் அடுத்தக்கட்ட பாதுகாப்பு அம்சமான தங்க கவசத்தில் இணைய கனடா மறுப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
- டிரம்ப்பின் பேச்சு நேட்டோ மட்டுமின்றி இங்கிலாந்து நாட்டையும் அவமதிப்பதாக உள்ளது.
- நேட்டோ துருப்புக்களின் தியாகங்களைப் பற்றி உண்மையாகவும் மரியாதையுடனும் பேசப்பட வேண்டும்.
டென்மார்க்கின் தன்னாட்சி பிராந்தியமான கிரீன்லாந்தை கைப்பற்ற நினைக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவுக்கு ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, நேட்டோ அமைப்பில் அமெரிக்காவை தவிர பிறநாடுகளின் படைகள் முக்கிய பங்காற்றவில்லை. ஆப்கானிஸ்தான் போரில் முன்களத்தில் அமெரிக்க படையினரே இருந்தனர், பிற நாடுகளின் படையினர் முன்களத்தில் இல்லை. நேட்டோ அமைப்பில் பிற நாடுகளை அமெரிக்கா சார்ந்திருக்கவில்லை. அவர்கள் நமக்கு தேவையும் இல்லை என்றார்.
டிரம்பின் கருத்துக்கு இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, டிரம்ப்பின் பேச்சு நேட்டோ மட்டுமின்றி இங்கிலாந்து நாட்டையும் அவமதிப்பதாக உள்ளது. அந்த கருத்து அவமானகரமானவை மற்றும் வெளிப்படை யாகவே அதிர்ச்சியூட்டு பவை. இதற்கு டிரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
அதேபோல் இங்கிலாந்து இளவரசர் ஹாரி கூறும் போது, "ஆப்கானிஸ்தானில் நான் பணியாற்றினேன். அங்கு வாழ்நாள் முழுவதும் நண்பர்களை உருவாக்கினேன். அங்கு நண்பர்களை இழந்தேன். நேட்டோ துருப்புக்களின் தியாகங்களைப் பற்றி உண்மையாகவும் மரியாதையுடனும் பேசப்பட வேண்டும் என்றார்.
- இந்திய சுத்திகரிப்பு நிலையங்களின் ரஷிய எண்ணெய் கொள்முதல் சரிந்துவிட்டது.
- ரஷிய எண்ணெயை வாங்குவதை இந்தியாவில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் கணிசமாகக் குறைத்துள்ளன.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார்.
அமெரிக்கா மீது இந்தியா அதிக வரி விதிப்பதாக கூறி இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரியை விதித்தார். மேலும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்தினார்.
இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கிடையே ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா கணிசமாக குறைத்துள்ளது என்றும் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
இந்த நிலையில் அமெரிக்க நிதித்துறை மந்திரி ஸ்காட் பெசென்ட் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ரஷிய எண்ணெயை வாங்கியதற்காக நாங்கள் இந்தியாவின் மீது கூடுதலாக 25 சதவீத வரி விதித்தோம். தற்போது ரஷிய எண்ணெயை வாங்குவதை இந்தியாவில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் கணிசமாகக் குறைத்துள்ளன.
இந்திய சுத்திகரிப்பு நிலையங்களின் ரஷிய எண்ணெய் கொள்முதல் சரிந்துவிட்டது. அது ஒரு வெற்றியாகும். இந்தியாவின் மீதான வரிகள் இன்னும் அமலில் உள்ளன. அவற்றை நீக்குவதற்கு ஒரு வழி இருப்பதாக நான் நினைக்கிறேன் என்றார்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான தற்போதைய 50 சதவீத வரி, 25 சதவீதமாக குறைக்கப்படலாம் என்று ஸ்காட் பெசென்ட் சூசகமாக தெரிவித்துள்ளார்.
- காசா போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் டிரம்ப் அமைதி வாரியம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளார்.
- இதில் சேர ரஷிய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
வாஷிங்டன்:
இஸ்ரேல்-பாலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டு வந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைதி வாரியம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளார்.
இந்த வாரியத்தில் சேர ரஷிய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைத்துள்ள காசா அமைதிக் குழுவில் சவுதி அரேபியா, கத்தார், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, ஜோர்டான், இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 8 இஸ்லாமிய நாடுகள் இணைந்துள்ளன.
காசாவில் நிரந்தர போர்நிறுத்தத்தை அமல்படுத்துதல், தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பு செய்தல் ஆகியவை இந்த குழுவின் நோக்கம். காசாவின் நிர்வாக விவகாரங்களை இந்தக் குழு மேற்பார்வையிடும் என்று கூறப்படுகிறது. டிரம்ப் அமைத்த காசா அமைதி வாரியத்தை இந்தியா புறக்கணித்தது.
இதற்கிடையே சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் பங்கேற்ற கனடா பிரதமர் மார்க் கார்னி பேசுகையில், அமெரிக்காவின் தயவால் கனடா வாழவில்லை. டிரம்பின் காசா அமைதி வாரியத்தில் சேர பணம் செலுத்தப் போவதில்லை என தெரிவித்தார்.
இந்நிலையில் காசா அமைதி வாரியத்தில் சேர கனடாவுக்கு விடுத்த அழைப்பை டிரம்ப் திரும்ப பெறுவதாக அறிவித்தார்.
- காசா போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் டிரம்ப் அமைதி வாரியம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளார்.
- இதில் சேர ரஷிய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
டாவோஸ்:
இஸ்ரேல்-பாலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டு வந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைதி வாரியம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளார்.
இந்த வாரியத்தில் சேர ரஷிய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைத்துள்ள காசா அமைதிக் குழுவில் சவுதி அரேபியா, கத்தார், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, ஜோர்டான், இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 8 இஸ்லாமிய நாடுகள் இணைந்துள்ளனர்.
காசாவில் நிரந்தர போர்நிறுத்தத்தை அமல்படுத்துதல், தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பு செய்தல் ஆகியவை இந்த குழுவின் நோக்கம். காசாவின் நிர்வாக விவகாரங்களை இந்தக் குழு மேற்பார்வையிடும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், டிரம்ப் அமைத்த காசா அமைதி வாரியத்தை இந்தியா புறக்கணித்து விட்டது.






