என் மலர்
நீங்கள் தேடியது "டிரம்ப்"
- அனைத்து ஆயுதப்படை பிரிவினருக்கும் இந்தத் திட்டம் பொருந்தும்.
- பாதுகாப்புப் படைவீரர்ர்களே தேசத்தின் உண்மையான ஹீரோக்கள் என்றார் டிரம்ப்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுடன் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:
அமெரிக்காவின் பாதுகாப்புப் படைகளில் பணியாற்றிவரும் 14.5 லட்சம் பேருக்கு இன்ப அதிர்ச்சியாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.60 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகையை அறிவித்துள்ளேன்.
அமெரிக்கா சுதந்திரம் பெற்று ஒரு தேசமாக உருவான ஒரு ஆண்டாக 1776-ஐ நினைவு கூரும் வகையில் இந்தத் தொகை குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வாரியர் டிவிடெண்ட் என அழைக்கப்படும் இந்தத் திட்டம் தரைப்படை, கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை மற்றும் விண்வெளி படை என அனைத்து ஆயுதப்படை பிரிவினருக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தொடக்கத்தைக் கவுரவிக்கும் இந்தத் தொகைக்கு நமது வீரர்களைவிட தகுதியானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. அவர்களே தேசத்தின் உண்மையான ஹீரோக்கள் என புகழாரம் சூட்டினார்.
இந்த திட்டத்திற்கான நிதி ஆதாரமானது அமெரிக்காவின் பொது பட்ஜெட்டிலிருந்து எடுக்கப்படாமல் பிற நாடுகள் மற்றும் வெளிநாட்டு இறக்குமதி பொருட்கள் மீது விதிக்கப்பட்ட அதிரடி வர்த்தக வரி மூலம் திரட்டப்பட்ட வருவாயிலிருந்து வழங்கப்படுகிறது.
- BBC செய்தி நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வழக்கு தொடர்ந்தார்
- ட்ரம்பிடம் மன்னிப்புக் கேட்டு BBC நிறுவனம் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதியிருந்தது
2021 ஜனவரியில் தான் பேசிய உரையை தவறாக திரித்து வெளியிட்ட BBC செய்தி நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ரூ.90,000 கோடி இழப்பீடு கேட்டு புளோரிடா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
முன்னதாக டிரம்பின் பேச்சை எடிட் செய்து வெளியிட்டதாக எழுந்த விமர்சனத்தைத் தொடர்ந்து, பிபிசி இயக்குநர் ஜெனரல் டிம் டேவி மற்றும் செய்திகள் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி டெபோரா டர்னஸ் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.
இது தொடர்பாக ஏற்கனவே ட்ரம்பிடம் மன்னிப்புக் கேட்டு BBC நிறுவனம் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 2005-ம் ஆண்டு மாடலாக இருந்த வனேஸ்ஸாவை டிரம்ப் ஜூனியர் திருமணம் செய்தார்.
- இந்த தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரப்பின் முதல் மனைவியான இவானா டிரம்ப்புக்கு பிறந்த மூத்த மகனான டொனால்ட் ஜான் டிரம்ப் ஜூனியர், தொலைக்காட்சி பிரபலமாகவும் தொழிலதிபராகவும் இருந்து வருகிறார்.
டிரம்ப் நிறுவனங்களின் முக்கிய பொறுப்பில் இருக்கும் இவர் கடந்த 2005-ம் ஆண்டு மாடலாக இருந்த வனேஸ்ஸாவை திருமணம் செய்தார்.
இந்த தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் உள்ளநிலையில் இருவரும் மனம் ஒத்து பிரிவதாக 2018 ஆம் ஆண்டு அறிவித்தனர். அத்துடன் இவர்களின் 12 ஆண்டு மணவாழ்க்கை முடிவுக்கு வந்தது.
டொனால்ட் டிரம்ப் ஜூனியர் - பெட்டினா ஆண்டர்சன் என்ற பெண்ணை கடந்தாண்டு முதல் காதலித்து வந்தார். இந்நிலையில், இருவருக்கும் வெள்ளை மாளிகையில் திருமண நிச்சதார்தம் நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டிரம்ப் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
- துப்பாக்கி சூடு நடத்திய நபரை மற்ற அமெரிக்க ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.
- இந்தத் தாக்குதலுக்கு மிகக் கடுமையான பதிலடிகொடுக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
சிரியாவில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் அமெரிக்க ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மத்திய சிரியாவில் உள்ள பால்மைரா நகருக்கு அருகே உள்ள ராணுவ முகாம் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 2 அமெரிக்க ராணுவ வீரர்கள், ஒரு அமெரிக்க உரைபெயர்ப்பாளர் என 3 அமெரிக்கர்கள் பலியானார்கள். 3 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து துப்பாக்கி சூடு நடத்திய நபரை மற்ற அமெரிக்க ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.
இந்த தாக்குதலை ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த நபர் நடத்தியதாகவும், அவர் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்தது. இதற்கிடையே இந்தத் தாக்குதலுக்கு மிகக் கடுமையான பதிலடிகொடுக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, "சிரியாவில் அரசாங்கத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு ஆபத்தான பகுதியில் ஐ.எஸ் நடத்திய தாக்குதல் இதுவாகும். இதற்கு தக்க பதிலடி கொடுப்போம். இந்தச் சம்பவத்தால் சிரிய அதிபர் அகமது அல்-ஷாரா அதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளார். சிரியா அமெரிக்கப் படைகளுடன் இணைந்து போராடி வருகிறது" என்றார்.
- பில்லியன் கணக்கான டாலர்கள் கருவூலத் துறையால் நிர்வகிக்கப்படும் ஒரு கணக்கில் வந்து சேரும்.
- குற்றவியல் சம்பவங்களில் ஈடுபட்டால் கோல்டு கார்டு விசா ரத்து செய்யப்படலாம்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். குறிப்பாக குடியேற்றத்துக்கு கடும் கட்டுபாடுகளை விதித்தார். அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி பணிபுரிய வழங்கப்படும் எச்-1பி விசாவுக்கும் கட்டுபாடுகளை கொண்டு வந்தார்.
இதற்கிடையே அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற கோல்டு கார்டு(தங்க அட்டை) விசா திட்டம் கொண்டு வரப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பு டிரம்ப் அறிவித்தார். 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.44.98 கோடி) செலுத்தினால் கோல்டு கார்டு விசா வழங்கப்படும் என்றும் இதற்கான நடைமுறைகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். அதன்பின் கோல்டு கார்டு விசாவுக்கான கட்டணத்தை குறைத்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ் 1 மில்லியன் டாலர் செலுத்தும் தனிநபர்களுக்கும், வெளிநாட்டு ஊழியருக்கு 2 மில்லியன் டாலர் செலுத்தும் நிறுவனங்களுக்கும் கோல்டு கார்டு விசா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் கோல்டு கார்டு விசா திட்டத்தை அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் கோல்டு கார்டு விற்பனையை டிரம்ப் அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் வெளிநாட்டினர் அமெரிக்க அரசிற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ.8.98 கோடி) நன்கொடையாக வழங்குவதன் மூலம் நிரந்தரமாக தங்கும் அந்தஸ்தைப் பெறுவார்கள்.
இதுதொடர்பாக டிரம்ப் கூறுகையில்," கோல்டு கார்டு விசா என்பது ஒரு கிரீன் கார்டு போன்றது. ஆனால் கிரீன் கார்டை விட பெரிய நன்மைகளை கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பெறப்படும் அனைத்து நிதிகளும் "அமெரிக்க அரசாங்கத்திற்கே செல்லும்.
பில்லியன் கணக்கான டாலர்கள் கருவூலத் துறையால் நிர்வகிக்கப்படும் ஒரு கணக்கில் வந்து சேரும். இதன்மூலம் நாம் நாட்டிற்கு நன்மை பயக்கும் காரியங்களைச் செய்ய முடியும். இந்தத் திட்டம் பெருநிறுவனங்கள் சிறந்த கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்ற திறமையாளர்களைப் பணியமர்த்தித் தக்கவைத்துக் கொள்ள உதவும்" என்றார்.
அமெரிக்காவின் மற்ற விசாவை போலவே, தேசிய பாதுகாப்பு அல்லது குற்றவியல் சம்பவங்களில் ஈடுபட்டால் கோல்டு கார்டு விசா ரத்து செய்யப்படலாம். 21 வயதுக்குட்பட்ட வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் திருமணமாகாத குழந்தைகளை விண்ணப்பத்தில் சேர்க்கலாம்.
ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 15 ஆயிரம் டாலர் செயலாக்கக் கட்டணமும், விசாவை பெற 1 மில்லியன் டாலரும் நன்கொடையாக செலுத்த வேண்டும்.
- வெளிநாடுகளை சேர்ந்த 85 ஆயிரம் பேர்களின் விசாக்களை நாங்கள் ரத்து செய்துள்ளோம்.
- நமது சமூகங்களின் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாக இருப்பவர்கள்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப் பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அமெரிக்காவை மீண்டும் பாதுகாப்பானதாக மாற்றுவோம் என்ற முழக்கத்துடன் அவர் செயல்பட்டு வருகிறார்.
இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை வெளிநாட்டினரின் 85 ஆயிரம் விசாக்களை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி நிருபர்களிடம் கூறியதாவது:-
அதிபர் டிரம்ப்பும் செயலாளர் மார்கோ ரூபியோவும் ஒரு எளிய ஆணையைப் பின்பற்றுகிறார்கள். அமெரிக்காவை மீண்டும் பாதுகாப்பானதாக மாற்றும் வரை அவர்கள் ஓயமாட் டார்கள். கடந்த ஜனவரி மாதம் முதல் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட வெளிநாடுகளை சேர்ந்த 85 ஆயிரம் பேர்களின் விசாக்களை நாங்கள் ரத்து செய்துள்ளோம்.
இதுமுந்தைய ஆண்டை விட 2 மடங்கு அதிகம். தாக்குதல்கள் மற்றும் திருட்டுக்களில் ஈடுபடுபவர்கள், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பவர்களின் விசாக்களை நாங்கள் ரத்து செய்துள்ளோம். இவை மட்டுமே கிட்டத்தட்ட பாதி விசா ரத்துகளுக்குக் காரணம் ஆகும்.
இவர்கள் நமது சமூகங்களின் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாக இருப்பவர்கள். எனவே அவர்கள் நம் நாட்டில் இருக்க நாங்கள் விரும்பவில்லை.
அமெரிக்கா வர விசாவுக்கு விண்ணபிப்பவர்களுக்கு அனுமதி வழங்க நாங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமோ எடுத்துக்கொள்வோம். மேலும், விண்ணப்பதாரர் அமெரிக்கர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார் என்பதை உறுதி செய்யும் வரை நாங்கள் விசா வழங்க மாட்டோம்.
ஒரு விண்ணப்பதாரர் விசாவிற்குத் தகுதி பெறுகிறாரா என்பதைத் தீர்மானிக்கும்போது, தூதரக அதிகாரிகள் ஒரு காரணியை மட்டும் பார்க்காமல், அந்த நபரின் ஒட்டுமொத்த சூழ்நிலையையும் பார்த்து, பின்னர் விசா வழங்குவற்கான தகுதி குறித்து தீர்மானிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடந்த வாரம் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே பெண் பாதுகாப்பு அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் வெளிநாட்டினருக்கு விசா வழங்குவதில் அமெரிக்கா கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- மானிய விலையில் அரிசி இறக்குமதி செய்யப்படுவதால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கூறினர்.
- இந்திய அரிசிகள் அதிகமாக இறக்குமதி செய்யப்படுவதால் அமெரிக்க விவசாயிகள் பாதிக்கப்படுவதாக டிரம்ப் குற்றச்சாட்டினார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றத்தில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். எரிசக்தி பயன்பாடு, குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு, அமெரிக்க குடியேற்ற கொள்கையில் மாற்றம், உலகின் பல்வேறு நாடுகளில் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு பயிற்சி உள்ளிட்ட திட்டங்களுக்காக அமெரிக்கா அளித்து வந்த நிதி உதவி நிறுத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்தார்.
மேலும், இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதிப்பால் இந்தியாவில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. மேலும், இந்தியாவுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை அதிபர் டிரம்ப் நிர்வாகம் முன்வைத்தது.
இந்த நிலையில், இந்திய அரிசி, கனடா உரங்கள் மீது புதிய வரிகளை விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல்வெளியாகி உள்ளது.
வெள்ளை மாளிகையில் விவசாய பிரதிநிதிகளுடன் அதிபர் டிரம்ப் ஆலோசனை நடத்தினார். அப்போது விவசாயிகள், மானிய விலையில் அரிசி இறக்குமதி செய்யப்படுவதால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறினர். இதற்கு டிரம்ப், இந்த பிரச்சனையை கவனித்துக்கொள்வதாக அவர்களுக்கு உறுதியளித்தார். அமெரிக்க சந்தைகளை பாதிக்கும் நாடுகள் குறித்து அடையாளம் காணுமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.
மேலும், இந்திய அரிசிகள் அதிகமாக இறக்குமதி செய்யப்படுவதால் அமெரிக்க விவசாயிகள் பாதிக்கப்படுவதாக டிரம்ப் குற்றச்சாட்டினார்.
- சாலைக்கு டொனால்ட் டிரம்ப் அவென்யூ' என்று பெயரிடப்படும் என்று தெலுங்கானா அரசு தகவல்
- பசுமை வழிச் சாலைக்கு மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா பெயரை சூட்ட அரசு முடிவு
ஐதராபாத்தில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் அமைந்துள்ள சாலை ஒன்றுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயரை சூட்ட தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. அதாவது அந்த சாலைக்கு டொனால்ட் டிரம்ப் அவென்யூ' என்று பெயரிடப்படும் என்று தெலுங்கானா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் அமைக்கப்பட உள்ள RRR எனப்படும் பசுமை வழிச் சாலைக்கு மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா பெயரை சூட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக தகவல் தெரிவிக்க மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கும், அமெரிக்க தூதரகத்திற்கும் தெலுங்கானா அரசு கடிதம் எழுதவுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், டெல்லியில் நடைபெற்ற USISPF மாநாட்டில் பேசிய தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, "ஐதராபாத்தில் உள்ள முக்கிய சாலைகளுக்கு முன்னணி உலகளாவிய நிறுவனங்கள் மற்றும் தலைவர்கள் பெயரைச் சூட்ட வேண்டும் தெரிவித்தார்.
குறிப்பாக கூகிள் மற்றும் கூகிள் மேப்ஸின் உலகளாவிய தாக்கத்தையும் பங்களிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் ஒரு முக்கிய பகுதிக்கு 'கூகிள் ஸ்ட்ரீட்' என்று பெயரிடப்படும் என்றும் மைக்ரோசாப்ட் மற்றும் விப்ரோ பெயரும் சாலைகளுக்கு வைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மக்களை ஒன்றிணைத்து எதிர்கால சந்ததியினருக்கு நம்பிக்கையை கொண்டு வரும் தனிநபர்களை அங்கீகரிப்பதற்காக உருவாக்கப்பட்ட விருதாகும்.
- இந்த விருதை டிரம்ப்புக்கு சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் கியானி இன்பான்டினோ வழங்கினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் போர் உள்பட 8 போர்களை நிறுத்தியதாக தொடர்ந்து கூறி வருகிறார். இதற்காக தனக்கு அமை திக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
மேலும் இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு கிடைக்கும் என்று டிரம்ப் எதிர்பார்த்தார். ஆனால் அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவர் மரியாவுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் டிரம்புக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா), அமைதிக்கான பரிசை வழங்கி உள்ளது. அடுத்த ஆண்டு ஜூன்-ஜூலை மாதங்களில் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடக்கிறது.
இதற்கான போட்டி அட்டவணை வெளியீடு நிகழ்ச்சி வாஷிங்டனில் நடந்தது. இதில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் புதிதாக உருவாக்கப்பட்ட அமைதிக்கான பரிசு வழங்கப்பட்டது.
மக்களை ஒன்றிணைத்து எதிர்கால சந்ததியினருக்கு நம்பிக்கையை கொண்டு வரும் தனிநபர்களை அங்கீகரிப்பதற்காக உருவாக்கப்பட்ட விருதாகும்.

இந்த விருதை டிரம்ப்புக்கு சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் கியானி இன்பான்டினோ வழங்கினார். அப்போது டிரம்புக்கு தங்கப்பதக்கம் அணிவிக்கப்பட்டது. தங்க கோப்பையும் வழங்கப்பட்டது.
இதுதொடர்பாக இன்பான்டினோ கூறும் போது, மக்கள் மீது அக்கறை கொண்ட தலைவர் டிரம்ப். உலகம் முழுவதும் அமைதி மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இது உங்கள் அமைதி பரிசு என்றார்.
தனக்கு அமைதிக்கான பரிசு வழங்கப்பட்டதற்கு டிரம்ப் நன்றி தெரிவித்து கொண்டார். அப்போது அவர் கூறும்போது, இது உண்மையிலேயே என் வாழ்க்கையின் மிகப்பெரிய மரியாதைகளில் ஒன்றாகும். நான் பதவியேற்பதற்கு முன்பு அமெரிக்கா அதிகமாக சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் தற்போது சிறப்பாக முன்னேறி வருகிறது என்றார்.
- ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும் ஒரே தலைவர் அவர்தான் என்று பேசியபோது டிரம்ப் தலையாட்டுகிறார்.
- வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று இருந்தனர். அப்போது ரஷியா- உக்ரைன் மோதல் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து அதிபர் டிரம்ப்க்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
அச்சமயம், அதிபர் டிரம்ப் கண்களை மூடி தூங்கிக்கொண்டுள்ளார். டிரம்புக்கு அருகில் அமர்ந்திருந்த வெளியுறவு செயலாளர் ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும் ஒரே தலைவர் அவர்தான் என்று பேசியபோது டிரம்ப் தலையாட்டுகிறார்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த மக்கள், 79 வயதான டொனால்டு டிரம்பின் உடல்நிலை மோசமடைந்துள்ளதை இந்த வீடியோ காட்டுவதாக கருத்து தெரிவிக்கின்றனர்.
- வெனிசுலா மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
- வெனிசுலா ஒருபோதும் வெளிநாட்டு அழுத்தம் அல்லது ஆதிக்கத்திற்கு அடிபணியாது.
கராகஸ்:
வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். மேலும் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலை ஊக்குவிப்பதாக டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
இதையடுத்து கடந்த செப்டம்பா் முதல் வெனிசுலா அருகே கரீபியன் பகுதியில் அமெரிக்கா கடற்படையை பெரும் அளவில் குவித்து வருகிறது. இதனால் வெனிசுலா மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்றால் மதுரோவும் அவரது குடும்பத்தினரும் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் என்று வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ தெரிவித்து உள்ளார்.
தலைநகர் கராகசில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற மதுரோ தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசியதாவது:-
நாங்கள் அமைதியை விரும்புகிறோம். இறையாண்மை, சமத்துவம், சுதந்திரம் கொண்ட அமைதியை விரும்புகிறோம். அடிமையின் அமைதியையோ, காலனித்துவ அமைதியையோ நாங்கள் விரும்பவில்லை. வெனிசுலா ஒருபோதும் வெளிநாட்டு அழுத்தம் அல்லது ஆதிக்கத்திற்கு அடிபணியாது. எனது ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா முயற்சிக்கிறது. மோதலுக்குத் தயாராகும்போது வெனிசுலா வெளிப்புற கட்டளைகளுக்கு அடிபணியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அமெரிக்காவில் போதைப்பொருள் புழங்குவதற்கு வெனிசுலாதான் காரணம் என்று டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்
- கரீபியன் கடற்பகுதியில் போர்க்கப்பல்கள், போர் விமானங்களை அமெரிக்கா குவித்து வருகிறது
அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட காலமாக பகை இருந்து வருகிறது. அமெரிக்காவில் போதைப்பொருள் அதிகளவு புழங்குவதற்கு வெனிசுலா தான் காரணம் என்று டிரம்ப் குற்றச்சாட்டி வரும் நிலையில், கரீபியன் கடற்பகுதியில் போர்க்கப்பல்கள், போர் விமானங்களை அமெரிக்கா குவித்து வருகிறது.
இந்த நிலையில் ராணுவ நடவடிக்கைகள் காரணமாக வெனிசுலா வான்வெளியில் பறக்கும் போது எச்சரிக்கை யாக இருக்குமாறு அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் தெரிவித்தது. இதனால் உலக அளவில் பெரும்பாலான விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன.
ஸ்பெயின், போர்ச்சுகல், சிலி, கொலம்பியா, பிரேசில், டிரினிடாட் டொபாகோ ஆகிய நாடுகளை சேர்ந்த சில விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான விமான சேவைகளை ரத்து செய்தன.
இந்நிலையில், வெனிசுலாவின் வான்வெளி மூடப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வான்வெளி மற்றும் அதை சுற்றியுள்ள வான்வெளி மூடப்படுகிறது. இதனை அனைத்து விமான நிறுவனங்கள், விமானிகள், போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் கடத்தல்காரர்கள் கவனத்தில் கொள்ளவும்" என்று சரிகை விடுத்துள்ளார்.
டிரம்பின் இந்த மிரட்டலுக்கு கண்டனம் தெரிவித்த வெனிசுலா, இது ஒரு 'காலனித்துவ அச்சுறுத்தல்' என்று தெரிவித்துள்ளது.






