என் மலர்
நீங்கள் தேடியது "சிவகங்கை"
- பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அஜித் குமாரின் உடலில் சிகரெட்டால் சூடு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட காயங்கள் இருப்பது தெரியவந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- அஜித் குமாரின் சகோதரருக்கு அரசு வேலை மற்றும் வீட்டுமனை வழங்கப்பட்டது.
சினிமாவில் தான் நம்ப முடியாத சம்பவங்கள் நடைபெறும். இதெல்லாம் எப்படி சாத்தியம்? என்று கேட்பவர்களுக்கு தற்போது அவை நிகழ்வது அதிர்ச்சியை அளிக்கிறது. காவல் நிலையங்களில் நடைபெறும் மரணம் தொடர்பான தகவல்கள் நம்மை நடுங்க வைக்கும் அளவிற்கு உள்ளது என்றால் அது மிகையல்ல...
அப்படி ஒரு சம்பவம் தான் மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு. அஜித்குமார் என்றால் நடிகர் என்று தான் நினைத்தது போய் தற்போது மடப்புரம் அஜித்குமார் சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது. அந்தஅளவுக்கு அந்த வழக்கு நம்மில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அது குறித்து பார்ப்போம்.,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளியம்மன் கோவிலில் தற்காலிக காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் அஜித்குமார் (29). இவர் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். ஒருநாள் மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு வந்த நிகிதா என்பவர் தனது காரை பார்க்கிங் செய்யுமாறு அஜித்குமாரிடம் காரின் சாவியை கொடுத்துவிட்டு கோவிலுக்குள் சென்றுவிட்டார். சில மணி நேரம் கழித்து வெளியே வந்த நிகிதாவிடம் அஜித்குமார் காரையும், சாவியையும் ஒப்படைத்தார்.
காரை பார்க்கிங் செய்தது ஒரு குற்றமா? என்பது போல் நிகிதா, காரில் இருந்த நகைகள் மற்றும் பணம் காணாமல் போனதாக அஜித்குமார் மீது புகார் கூறினார். இதுதொடர்பாக திருப்புவனம் தனிப்படை போலீசார், அஜித் குமாரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது போலீசார் தாக்கியதில் அஜித் குமார் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அஜித் குமாரின் உடலில் சிகரெட்டால் சூடு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட காயங்கள் இருப்பது தெரியவந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நிகிதா அளித்த புகாரில் முறையாக வழக்கு பதிவு செய்யாததும், இதில் பெரிய அரசியல் புள்ளி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் அஜித் குமாரை போலீசார் விசாரணை என்ற பெயரில் சம்பந்தப்பட்ட கோவிலுக்கு அழைத்து சென்று தாக்கும் வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விசாரணை தொடர்பாக ஆரம்பத்தில் மாநில சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட இவ்வழக்கு, பின்னர் தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 5 தனிப்படை காவலர்கள் மற்றும் ஒரு காவல்துறை வாகன ஓட்டுநர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மதுரை உயர் நீதிமன்றக் கிளை இந்த வழக்கை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. அஜித் குமார் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட ரூ.7.5 லட்சம் இழப்பீடு போதுமானது அல்ல எனக் கூறி, மேலும் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அஜித் குமாரின் சகோதரருக்கு அரசு வேலை மற்றும் வீட்டுமனை வழங்கப்பட்டது.
வழக்கின் சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ தனது விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. டெல்லி தடயவியல் ஆய்வக அறிக்கைக்காக சிபிஐ காத்திருக்கிறது.

இந்த வழக்கு காவல் நிலைய மரணங்களுக்கு எதிரான ஒரு முக்கிய வழக்காகப் பார்க்கப்படுகிறது. மேலும் சாத்தான் குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 5 ஆண்டுகள் ஆகியும் விசாரணை நிறைவடையாத நிலையில், சில மாதங்கள் பரபரப்பாக பேசப்பட்ட அஜித் குமார் மரண வழக்கு மட்டும் விதிவிலக்கா என்ன?
புகார் அளித்ததும் விசாரணை நடத்த மட்டுமே காவலர்களுக்கு அனுமதி உள்ள நிலையில், நீதி வழங்க நீதிமன்றங்கள் உள்ளது. ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் வரை தமிழ்நாட்டில் 27 காவல் நிலைய மரணங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் காவல் நிலைய மரணங்கள் தொடர்பாக இதுவரை தமிழ்நாட்டில் எந்தவொரு காவல் அதிகாரியும் தண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எது இப்படியோ அடுத்த காவல் மரணம் நிகழ்வதற்கு முன்பாகவாவது சாத்தான்குளம் தந்தை மகன் மற்றும் மடப்புரம் அஜித் குமார் வழக்குகளில் முறையாக விசாரணை நடத்தப்பட்டு விரைவில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
- இறந்தவர்கள் எனக் குறிப்பிட்டு பெயர் நீக்கம்
- முன்னதாக 2002-2005 காலகட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
சிவகங்கை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இந்துஜா மற்றும் அவரது கணவர் ரமேஷ் ஆகியோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக, இருவரும் மாவட்ட ஆட்சியர் பொற்கொடியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
உயிருடன் இருக்கையில் இறந்தவர்கள் எனக் குறிப்பிட்டு தங்கள் பெயர் நீக்கப்பட்டதாக இந்துஜா, மாவட்ட ஆட்சியர் பொற்கொடியிடம் முறையிட்டார். அதற்கு பதிலளித்த அவர், "ஏதேனும் தவறுகள் இருந்தால் அதைச் சரி செய்வதற்காகத்தான் இந்த பட்டியலை உங்களுக்கு கொடுத்திருக்கிறோம். தவறு நடந்தால் ஊழியர்கள் மீதுத் துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும், பணியிடை நீக்கம் செய்யவும் உத்தரவிட்டுள்ளேன்," என்று விளக்கம் அளித்தார். இருப்பினும் இந்துஜா, அவரது கணவர் ஆட்சியரிடம் வாக்குவாதத்தை தொடர்ந்ததால், மாவட்ட ஆட்சியர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) கடந்த மாதம் 4ஆம் தேதி தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ளிட்ட 9 மாநிலங்களிலும் புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களிலும் இந்த எஸ்.ஐ.ஆர். பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் இதற்கு முன்பாக, 2002-2005 காலகட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
- அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பெண்கள் உள்பட 11 பேர் பலி.
- 13 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 13 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் - பிள்ளையார்பட்டி சாலையில் அரசுப் பேருந்துகள் இரண்டு, நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி, மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரணமாகக் குணமடையும் வகையில், தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தி, உயர்தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 13 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 13 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
மேலும், நிவாரணத் தொகையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நிகழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற துயரச் செய்தியறிந்ததும் மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன்.
உடனடியாக மாவட்ட ஆட்சியரையும் மாவட்டப் பொறுப்பு அமைச்சர் திரு. கே.ஆர்.பெரியகருப்பன் அவர்களையும் தொடர்புகொண்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்திடுமாறு அறிவுறுத்தியுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்துள்ளவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
- மற்றொரு பரிசோதனை அறிக்கை நிலுவையில் உள்ளது.
- திருப்புவனத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு சென்றபோது தனது நகைகள் திருட்டு போனதாக பேராசிரியை நிகிதா திருப்புவனம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அக்கோவிலின் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமாரை, மானாமதுரை தனிப்படை போலீசார் அழைத்துச்சென்று தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே நிகிதா அளித்த நகை திருட்டு புகாரையும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் சில நாட்களுக்கு முன்பு நிகிதா அளித்த புகார் மற்றும் வழக்கு ஆவணங்கள் சி.பி.ஐ. வசம் திருப்புவனம் போலீசாரால் ஒப்படைக்கப்பட்டன.
இந்த நிலையில் போலீசில் நிகிதா ஏற்கனவே அளித்த நகை திருட்டு புகார் தொடர்பாக சி.பி.ஐ. நேற்று புதிய வழக்குப்பதிவு செய்தது. அந்த புகாரில் என்னென்ன உள்ளது என சி.பி.ஐ. அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:-
கடந்த ஜூன் 27-ந் தேதி காலையில் பேராசிரியை நிகிதாவும், அவருடைய தாயார் சிவகாமியும் காரில் மடப்புரம் கோவிலுக்குச் சென்றுள்ளனர். கோவில் காவல் பணியில் இருப்பவர்களுக்கான சீருடையைப் போல தோற்றமளிக்கும் வகையில் உடை அணிந்து வந்த அஜித்குமார் அவரை அணுகி உள்ளார்.
நிகிதா தாயாரின் முதுமையை சாதகமாகப் பயன்படுத்தி, காரை நிறுத்த அஜித்குமாரே முன்வந்து சாவியை தன்னிடம் கொடுக்க வற்புறுத்தி வாங்கினார். பின்னர் கோவிலில் இருந்து வாகனத்திற்கு திரும்பிய பிறகு, தன் கைப்பை சிதைக்கப்பட்டு இருப்பதை நிகிதா பார்த்துள்ளார். சோதனை செய்தபோது, 6 பவுன் எடையுள்ள ஒரு சங்கிலி, 2½ பவுன் எடையுள்ள 2 தங்க வளையல்கள் மற்றும் ஒரு பவுன் எடையுள்ள கல் பதித்த 2 மோதிரங்கள் என மொத்தம் 9½ பவுன் தங்க நகைகள் காணாமல் போய் உள்ளன. அவற்றை கண்டுபிடித்து தர வேண்டும் என நிகிதா புகார் அளித்து உள்ளார்.
இந்த புகார் தொடர்பான விசாரணைக்காக போலீசார் அதே நாளில் அஜித்குமாரை அழைத்துச் சென்றனர். மறுநாள் இரவில் அவர் அரசு மருத்துவமனையில் இறந்துவிட்டதாக போலீசாரால் அறிவிக்கப்பட்டது. ஜூன் 29 அன்று மாலை 5.45 மணி முதல் கிட்டத்தட்ட 3 மணி நேரம் நீடித்த பிரேத பரிசோதனையில், அஜித்குமாரின் கால்கள், கைகள், மார்பு, வயிறு உள்ளிட்ட இடங்களில் 44 வெளிப்புற காயங்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றில் 19 காயங்கள் ஆழமானவை. தசை வரை நீண்டு இருந்தன. பிரேத பரிசோதனைக்கு சுமார் 12 முதல் 24 மணி நேரத்திற்கு முன்பு மரணம் நிகழ்ந்து இருக்கலாம் என்று மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் தடயவியல் சிகிச்சை நிபுணர்களின் அறிக்கை கூறி உள்ளது. ஆனால் இறப்புக்கான சரியான காரணத்தை குறிப்பிடவில்லை. மற்றொரு பரிசோதனை அறிக்கை நிலுவையில் உள்ளது. திருப்புவனத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
இவ்வாறு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
நிகிதாவிடம் இருந்து உண்மையிலேயே நகை திருட்டு போனதா? மேலிடத்தில் இருந்து வந்த அழுத்தம் காரணமாகவே அஜித்குமாரை போலீசார் கடுமையாக தாக்கி கொன்றனரா? என இந்த வழக்கில் சந்தேகம் எழுப்பப்பட்டது. அதன் உண்மைத்தன்மையை கண்டறிய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பேரிலேயே சி.பி.ஐ. இந்த நகை திருட்டு வழக்கையும் விசாரிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
- வாரச்சந்தை அருகே உள்ள நகராட்சி கட்டிடத்தில் மெக்கானிக் கடை நடத்தி வந்தார்.
- தலைமறைவான ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை:
சிவகங்கை நகர் காவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 51). மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கான இவர் அங்குள்ள வாரச்சந்தை அருகே உள்ள நகராட்சி கட்டிடத்தில் மெக்கானிக் கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். சதீஷ் பா.ஜ.க. கட்சியின் நகர் வர்த்தகப்பிரிவு தலைவராகவும் இருந்தார்.
இவர் வேலை முடித்து விட்டு தினமும் நண்பர்களை சந்தித்து மது அருந்துவது வழக்கம். அதன்படி நேற்று இரவு வேலை முடித்துவிட்டு சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் மெக்கானிக் கடையில் சந்தித்து மது அருந்தினர். அதே பகுதியில் தாரை தப்பட்டை குழுவினர் சிலர் தங்கியிருந்தனர். அவர்களும் மது அருந்தினர் போதை தலைக்கேறிய நிலையில் அந்த குழுவை சேர்ந்த சிலர் சதீஷ் தரப்பை சேர்ந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.
இது கைகலப்பாக மாறிய நிலையில் ஒருவரையொருவர் சரமாரியமாக தாக்கி கொண்டனர். இதில் சதீஷின் நண்பர் மணிபாரதி என்பவர் படுகாயமடைந்தார். அவரை அந்த கும்பல் தாக்கியபோது சதீஷ் தடுக்க முற்பட்டார். உடனே எதிர்தரப்பினர் அவரை தாக்கி கீழே தள்ளினர். இதில் தவறி விழுந்ததில் அவர் மயங்கினார்.
மோதல் குறித்து தகவலறிந்த சிவகங்கை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்திருந்த மணி பாரதி மற்றும் சதீஷை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்தில் சதீஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மணிபாரதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர்.
சிவகங்கையில் பா.ஜ.க. நிர்வாகி அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அந்த கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- காவலாளி அஜித்குமார் கொலை வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
- அஜித்குமார் குடும்பத்திற்கு எஸ்.சி., எஸ்.டி ஆணையம் சார்பில் ரூ.7.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது
அஜித்குமார் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் நிவாரண நிதியாக ரூ.25 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் தரிசனத்திற்கு வந்த நிகிதா என்ற பெண் காரில் வைத்திருந்த நகை மாயமான புகாரில் அங்கு பணியாற்றிய காவலாளி அஜித்குமார் குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரின் விசாரணையில் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட போலீஸ்காரர்கள் கண்ணன், ஆனந்த், பிரபு, சங்கர் மணிகண்டன், ராஜா ஆகிய ஐந்து பேரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, அஜித்குமார் கொலை வழக்கில் அவரது குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், அஜித்குமார் குடும்பத்திற்கு நீதிமன்ற உத்தரவு படி நிவாரண நிதியாக ரூ.25 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்
ஏற்கனவே அஜித்குமார் குடும்பத்திற்கு எஸ்.சி., எஸ்.டி ஆணையம் சார்பில் ரூ.7.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
- சி.பி.ஐ. அதிகாரிகள் போலீசார் அளித்த தகவல்களை வீடியோ பதிவும் செய்துகொண்டனர்.
- அஜித் குமாரை கொடூரமாக தாக்க உத்தரவிட்டது யார் என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் தரிசனத்திற்கு வந்த நிகிதா என்ற பெண் காரில் வைத்திருந்த நகை மாயமான புகாரில் அங்கு பணியாற்றிய காவலாளி அஜித்குமார் குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரின் விசாரணையில் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட போலீஸ்காரர்கள் கண்ணன், ஆனந்த், பிரபு, சங்கர் மணிகண்டன், ராஜா ஆகிய ஐந்து பேரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்களிடம் அஜித் குமாரை கொடூரமாக தாக்க உத்தரவிட்டது யார் என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. மேலும் அஜித் குமார் விசாரணைக்காக எங்கெங்கு அழைத்து செல்லப்பட்டார், அப்போது என்ன நடந்தது? எனவும் விசாரித்த சி.பி.ஐ. அதிகாரிகள் போலீசார் அளித்த தகவல்களை வீடியோ பதிவும் செய்துகொண்டனர்.
கடந்த 25 நாட்களாக நடைபெற்றுவரும் சி.பி.ஐ. விசாரணையில் அஜித்குமார் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஏராளமான ஆதாரங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். முன்னதாக அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் காயங்கள் இருந்ததாகவும், அவரை சித்ரவதை செய்ய மிளகாய் பொடி பயன்படுத்தப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.
இந்தநிலையில் சி.பி.ஐ. விசாரணையில், அஜித் குமாரை சித்ரவதை செய்ய மிளகாய்ப்பொடி எங்கு, எப்போது வாங்கப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் மடப்புரம் கோவிலின் கார் பார்க்கிங் அருகே உள்ள ஒரு மளிகைக் கடையில், அஜித் குமாரின் நண்பர் ஒருவர், காவல்துறையினர் கூறியதன் அடிப்படையில், மிளகாய்ப்பொடியை வாங்கி கொடுத்தது தெரியவந்துள்ளது. இந்த தகவல் விசாரணையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 12-ந்தேதி முதல் தங்களது விசாரணையை தொடங்கினர்.
- ராமச்சந்திரனுக்கு கொலையில் நேரடி தொடர்பு இல்லை என்பதால், அவர் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தையடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் (வயது 27) என்பவர் நகை திருட்டு புகார் தொடர்பாக போலீசாரால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு தனிப்படை பிரிவை சேர்ந்த கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய ஐந்து போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அஜித்குமாரை பல்வேறு இடங்களுக்கு போலீஸ் வேனில் அழைத்துச் சென்ற ராமச்சந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு ஆகஸ்ட் 20-ந்தேதிக்குள் தங்களது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 12-ந்தேதி முதல் தங்களது விசாரணையை தொடங்கினர். 20 நாட்களுக்கு மேலாக மதுரை, திருப்புவனத்தில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வரும் சி.பி.ஐ. அதிகாரிகள் அஜித்குமாரின் தாய் மாலதி, சகோதரர் நவீன்குமார் மற்றும் கோவில் பணியாளர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 5 போலீஸ்காரர்களையும் விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், சிறப்பு தனிப்படை போலீசார் காவலாளி அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீஸ் வேன் டிரைவர் ராமச்சந்திரன் கடந்த ஜூன் 27 மற்றும் 28-ந் தேதிகளில் அஜித் குமாரை எந்த எந்த இடத்திற்கு யார், யார் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர் என்பது குறித்து வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும், போலீஸ் வேனில் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று காட்டியுள்ளார்.
இந்த வழக்கில் ராமச்சந்திரன் சாட்சியம் முக்கியமாக இருப்பதால் அவர் அரசு தரப்பு சாட்சியாக மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் குமாரை பல்வேறு இடங்களுக்கு வேனில் அழைத்துச் சென்ற ராமச்சந்திரனுக்கு கொலையில் நேரடி தொடர்பு இல்லை என்பதால், அவர் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
- கூடுதல் இழப்பீடு தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகலாம்.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 27) என்பவர் திருட்டு புகார் தொடர்பாக போலீசாரால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு தனிப்படை பிரிவை சேர்ந்த கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, அஜித்குமார் கொலை வழக்கில் அவரது குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் கூடுதல் இழப்பீடு தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகலாம் என அறிவுறுத்தி நீதிபதிகள் வழக்கில் நீதிமன்ற உத்தரவை அரசு முறையாக நிறைவேற்றி வருவதாகவும், அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதாகவும் தெரிவித்தனர்.
- கடந்த வாரம் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது விசாரணையை தொடங்கினர்.
- சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை மற்றும் திருப்புவனத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 27) என்பவர் திருட்டு புகார் தொடர்பாக போலீசாரால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு தனிப்படை பிரிவை சேர்ந்த கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் வழக்கின் தீவிரத் தன்மையை கருத்தில் கொண்டு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவித்தார்.
அதன்படி கடந்த வாரம் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக திருப்புவனம் போலீஸ் நிலையத்திலிருந்து அவர்கள் வழக்கு ஆவணங்களை பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை மற்றும் திருப்புவனத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில், அஜித்குமாரை அடைத்து வைத்து தாக்கிய இடங்களில் ஆய்வு செய்து நேரடி விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த 19-ந்தேதி அஜித்குமார் தாக்கப்பட்டது குறித்து அவரது சகோதரரிடம் செய்து காண்பிக்குமாறு கூறி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சம்பவத்தில் தொடர்புடைய திருப்புவனம் பகுதியில் உள்ள பேக்கரியில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
இந்த நிலையில் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் திருப்புவனத்தில் சாட்சிகளிடம் 2-வது முறையாக விசாரணை நடத்தினர். அதன்படி தனிப்படை போலீசாருடன் அஜித்குமாரை வேனில் அழைத்து சென்ற போலீஸ்காரர் ராமச்சந்திரன், அஜித்குமார் சகோதரர் நவீன்குமார், கோவில் ஊழியர்கள் பிரவீன் மற்றும் வினோத், ஆட்டோ டிரைவர் அருண் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முதல் விசாரணை தொடங்கி உள்ளனர்.
- கான்ப்ரன்ஸ் மூலம் மதுரை மத்திய சிறையில் இருந்து 5 போலீஸ்காரர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்துள்ள மடப்புரத்தை சேர்ந்தவர் அஜித் குமார் (வயது 29). இவர் பிரசித்தி பெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்தார். கோவிலுக்கு வந்த பெண் ஒருவர் கொடுத்த நகை திருட்டு புகார் தொடர்பாக அஜித் குமாரை சட்ட விரோதமாக தனிப்பிரிவு போலீசார் அழைத்து சென்று கொடூரமாக தாக்கி விசாரணை நடத்தினர். இதில் படுகாயமடைந்த அஜித் குமார் பரிதாபமாக இறந்தார்.
அஜித் குமார் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக சிறப்பு தனிப்படை போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலீசாரால் தாக்கப்பட்டு அஜித்குமார் இறந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மாவட்ட நீதிபதி இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார். இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அதன் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முதல் விசாரணை தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று திருப்புவனம் குற்றவியல் நீதிமன்றத்தில் வந்தது. அப்போது கான்ப்ரன்ஸ் மூலம் மதுரை மத்திய சிறையில் இருந்து 5 போலீஸ்காரர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணை முடிவில் 5 போலீஸ்காரர்களுக்கும் வருகிற 30-ந்தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.






