என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கடலூரில் மணல் கடத்தல்
நீங்கள் தேடியது "கடலூரில் மணல் கடத்தல்"
கடலூர் மாவட்டத்தில் திருவாரூரில் இருந்து கோவைக்கு மணல் கடத்திய 4 லாரிகளை மந்தாரக்குப்பம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்கும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதில் மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் பல்வேறு இடங்களில் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் லாரி, மினி லாரி உள்ளிட்ட வாகனங்களை தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு மந்தாரக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் கமல்ஹாசன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக 7 டிப்பர் லாரி வந்துகொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்ததில் நாலு மணல் லாரிகள் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.
பின்னர் 4 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை செய்ததில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து மணல் கடத்தி கொண்டு கோயம்புத்தூருக்கு செல்ல இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 லாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் மணல் கடத்தல் தொடர்பான வேறு யாரேனும் இதில் தொடர்பு உள்ளார்களா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டம் வழியாக மணல் கடத்தி கொண்டு வெளியூருக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.
கடலூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்கும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதில் மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் பல்வேறு இடங்களில் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் லாரி, மினி லாரி உள்ளிட்ட வாகனங்களை தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு மந்தாரக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் கமல்ஹாசன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக 7 டிப்பர் லாரி வந்துகொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்ததில் நாலு மணல் லாரிகள் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.
பின்னர் 4 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை செய்ததில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து மணல் கடத்தி கொண்டு கோயம்புத்தூருக்கு செல்ல இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 லாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் மணல் கடத்தல் தொடர்பான வேறு யாரேனும் இதில் தொடர்பு உள்ளார்களா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டம் வழியாக மணல் கடத்தி கொண்டு வெளியூருக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.
கடலூரில் மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அதிகாரியை ஆபாசமாக திட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:
கடலூர் ரெட்டிச்சாவடி மற்றும் செல்லஞ்சேரி ஆகிய பகுதிகளில் மாட்டுவண்டிகளில் திருட்டுதனமாக மணல் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகனுக்கு தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து செல்லஞ்சேரி கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகன் பஸ்நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மாட்டுவண்டியில் மணல் கடத்திக்கொண்டு தெய்வசிகாமணி(வயது 60) என்பவர் வந்தார். அவரிடம் கிராம நிர்வாக அதிகாரி மணல் எங்கிருந்து கொண்டு வருகிறீர்கள் என்று கேட்டார்.
அப்போது அவர் கிராம நிர்வாக அதிகாரியை ஆபாசமாக பேசி அரசு பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாலமுருகன் ரெட்டிச்சாவடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து தெய்வசிகாமணியை கைது செய்து மணடல் கடத்திய மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.
கடலூர் ரெட்டிச்சாவடி மற்றும் செல்லஞ்சேரி ஆகிய பகுதிகளில் மாட்டுவண்டிகளில் திருட்டுதனமாக மணல் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகனுக்கு தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து செல்லஞ்சேரி கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகன் பஸ்நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மாட்டுவண்டியில் மணல் கடத்திக்கொண்டு தெய்வசிகாமணி(வயது 60) என்பவர் வந்தார். அவரிடம் கிராம நிர்வாக அதிகாரி மணல் எங்கிருந்து கொண்டு வருகிறீர்கள் என்று கேட்டார்.
அப்போது அவர் கிராம நிர்வாக அதிகாரியை ஆபாசமாக பேசி அரசு பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாலமுருகன் ரெட்டிச்சாவடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து தெய்வசிகாமணியை கைது செய்து மணடல் கடத்திய மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X