என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்ஐஆர்"

    • இன்னும் பல பெண்கள் மற்றும் இளம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் உள்ளது
    • இறுதி வாக்காளர் பட்டியல் ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகிறது.

    உத்தரப் பிரதேசத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்கான காலக்கெடுவை தேர்தல் ஆணையம் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது. அதன்படி மார்.6ஆம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். அதே நேரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியிடப்படும்.

    லக்னோவில் உள்ள லோக் பவனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது உத்தரப் பிரதேச தலைமைத் தேர்தல் அதிகாரி நவ்தீப் ரின்வா இந்த செய்தியை உறுதிப்படுத்தினார்.

    உத்தரப் பிரதேசத்தில் எஸ்ஐஆர் பணிகள் அக்டோபர் 27-ஆம் தேதி தொடங்கிய நிலையில் வாக்காளர் கணக்கெடுப்பு நவம்பர் 4 முதல் ஜனவரி 6 வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளுக்கான கால அவகாசம் ஜனவரி 6 முதல் பிப்ரவரி 6 வரை வழங்கப்பட்டது.

    இதுவரை பெயர்களை நீக்குவதற்காக படிவம் 7-இன் மூலம் 82,684 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதேசமயம், பெயர்களைச் சேர்ப்பதற்காக படிவம் 6-ஐப் பயன்படுத்தி சுமார் 37.8 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. புலம்பெயர்ந்த வாக்காளர்கள் படிவம் 6A-இன் மூலம் விண்ணப்பிக்கலாம்; இதுவரை 1,076 புலம்பெயர்ந்த வாக்காளர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ரின்வா தெரிவித்துள்ளார்.

     "சுமார் 1.40 கோடி வாக்காளர்களின் பெயர்கள் வரைவுப் பட்டியலில் இருந்தபோதிலும், அவை வரைபடமாக்கப்படவில்லை (not mapped). அதேசமயம், 2.22 கோடி வாக்காளர்கள் வரைபடமாக்கல் பணியை முடித்திருந்தாலும், அவற்றில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இது போன்ற அனைத்து வழக்குகளிலும் தற்போது நோட்டீஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    ஒட்டுமொத்தமாக, 3.26 கோடி வாக்காளர்களுக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட வேண்டியுள்ளது. இதுவரை 2.37 கோடி நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன, அவற்றில் 86.27 லட்சம் நோட்டீஸ்கள் ஏற்கனவே உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. கிட்டத்தட்ட 30 லட்சம் வழக்குகளில் விசாரணை நிறைவடைந்துள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு, கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் பிப்ரவரி 6-லிருந்து மார்ச் 6-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் அதுவரை பெயர் சேர்த்தல், நீக்கல் அல்லது விவரங்களில் திருத்தம் செய்வதற்கு விண்ணப்பிக்கலாம். இந்தச் சிறப்பு திருத்தப் பணியின் கீழான இறுதி வாக்காளர் பட்டியல் ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியிடப்படும்.

    வாக்காளர்களுக்கு உதவும் வகையில், அனைத்து வேலைநாட்களிலும் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்குச்சாவடிகளில் இருப்பார்கள்." என தெரிவித்தார். 

    மேலும் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவிற்கு முன்னரும் அனைத்து ஆட்சேபனைகளும் முறையாக ஆய்வு செய்யப்படும். இன்னும் பல பெண்கள் மற்றும் இளம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பொதுமக்கள் முன்வந்து பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

    மேலும், எதிர்காலத்தில் வீட்டில் இருந்தபடியே எளிதாக ஆன்லைன் மூலம் திருத்தங்களை மேற்கொள்வதற்கு வசதியாக, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரின் எழுத்துக்கள் ஆதார் அட்டையில் உள்ளது போலவே இருப்பதை உறுதி செய்யுமாறு அவர் வாக்காளர்களுக்கு அறிவுறுத்தினார். 

     

    • SIR நடவடிக்கையால் மேற்கு வங்கத்தில் ஏற்கனவே 110-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • மருத்துவமனையில் 45-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம் விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    SIR நடவடிக்கையால் மேற்கு வங்கத்தில் ஏற்கனவே 110-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பதற்றம் காரணமாக தினசரி 4 முதல் 5 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். மருத்துவமனையில் 45-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இத்தனை வருங்களுக்குப் பிறகு, நாம் நாட்டின் குடிமக்களா? என நிரூபிக்க வேண்டியுள்ளது.

    சுபாஷ் சந்திர போஸால் உருவாக்கப்பட்ட திட்டக்குழுவை, மத்தியிலுள்ள பாஜக தலைமையிலான அரசாங்கம் ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாக நிதி ஆயோக்கை கொண்டு வந்துவிட்டது. போஸின் பிறந்தநாள் இன்னும் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது.

    இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    • வயதான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று உடல்நலம் பாதிக்கப்படுவதைப் பார்க்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
    • பல முக்கியப் பிரமுகர்களுக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

    தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) நடந்து வருகிறது.

    இந்நிலையில் SIR ஒரு குறைபாடுள்ள ஒரு செயல்முறை என்றும், இது பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தையும் அவதியையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பேரன் சந்திர குமார் போஸ் தெரிவித்துள்ளார்.

    வாக்காளர் பட்டியலில் தனது பெயரைத் தக்க வைத்துக் கொள்வதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தேர்தல் ஆணைய அதிகாரிகளின் முன் ஆஜரான பிறகு அவர் இவ்வாறு தெரிவித்தார். அவருக்கு முன்னதாக விசாரணை நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

    விசாரணைக்கு பின் அவர் கூறுகையில், இந்தத் திருத்தப் பணி மிகவும் அவசரமாகவும், முறையான திட்டமிடல் இல்லாமலும் செயல்படுத்தப்படுகிறது. ஊழியர்களுக்குச் சரியான பயிற்சி அளிக்கப்படாததால், இது ஒரு குழப்பமான நிலையை உருவாக்கியுள்ளது.

    என்னை விசாரணைக்கு அழைத்ததில் எனக்குப் பெரிய சிக்கல் இல்லை. ஆனால், வயதான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று உடல்நலம் பாதிக்கப்படுவதைப் பார்க்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

    மேலும், பாஜகவின் உத்தரவின் பேரில் தேர்தல் ஆணையம் இத்தகைய தன்னிச்சையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், இது மேற்கு வங்க மக்களுக்குக் கடும் இன்னல்களைத் தருவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் முன்வைக்கும் குற்றச்சாட்டைத் தானும் ஆதரிப்பதாகச் சந்திர குமார் போஸ் தெரிவித்துள்ளார்.

    சந்திர குமார் போஸ் மட்டுமல்லாது, நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், நடிகர் தேவ், கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தொழிலதிபர் ஸ்வபன் சாதன் பாசு மற்றும் எழுத்தாளர் ஜாய் கோஸ்வாமி உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களுக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    சிறிது காலம் பாஜகவோடு பயணித்த சந்திர குமார் போஸ், கடந்த 2023 இல் அக்கட்சியை விட்டு விலகியது குறிப்பிடத்தக்கது. 

    • முகமது ஷமி, கிரிக்கெட்டுக்காக சிறு வயதிலேயே கொல்கத்தாவில் குடியேறிவிட்டார்.
    • எஸ்.ஐ.ஆர். படிவத்தை முகமது ஷமி சரியாக பூர்த்தி செய்யவில்லை.

    கொல்கத்தா:

    தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தின் அடிப்படையில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். மேலும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டபோதும், விவரங்கள் போதுமானதாக இல்லை என ஒரு கோடி பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

    அதன்படி, கொல்கத்தாவில் வாக்குரிமை பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரரான முகமது ஷமிக்கும் தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. எஸ்.ஐ.ஆர்.படிவத்தை முகமது ஷமி சரியாக பூர்த்தி செய்யவில்லை என கூறப்படும் நிலையில், உரிய ஆவணங்களுடன் வாக்குச்சாவடியில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட முகமது ஷமி, கிரிக்கெட்டுக்காக சிறு வயதிலேயே கொல்கத்தாவில் குடியேறிவிட்டார்.

    இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற எஸ்ஐஆர் விசாரணைக்காக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இன்று ஆஜரானார். மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் (SIR) நடைமுறையின் கீழ் திட்டமிடப்பட்ட விசாரணைக்காக, இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இன்று கொல்கத்தாவில் உள்ள தேர்தல் அதிகாரிகளிடம் ஆஜராகி உள்ளார்.

    தெற்கு கொல்கத்தாவின் பிக்ரம்கர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், ஷமி தேவையான ஆவணங்களுடன் தேர்தல் அதிகாரிகளிடம் ஆஜராகி உள்ளார்.

    • மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் இருப்பவர்களைக் கூட விசாரணைக்கு நேரில் வருமாறு அழைக்கிறார்கள்.
    • பாஜக என்னதான் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு வேண்டிய பலன் கிடைக்காது.

    இந்தியத் தேர்தல் ஆணையம் பயன்படுத்தும் மொபைல் செயலிகள், பாஜகவின் தகவல் தொழில்நுட்ப (ஐடி) பிரிவால் உருவாக்கப்பட்டவை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.

    மேற்கு வங்கத்தின் கங்காசாகரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, "தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்காகப் பயன்படுத்தும் செயலிகள் பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவால் உருவாக்கப்பட்டவை.

    தேர்தல் ஆணையத்தின் இந்தச் செயலிகள் அரசமைப்புச் சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானவை.

    இவை முழுக்க முழுக்க பாஜகவின் ஐடி செல் கண்காணிப்பில் இயங்குகின்றன. தேர்தல் ஆணையம் அனைத்தையும் தவறாகச் செய்கிறது. உயிருடன் இருப்பவர்களை இறந்தவர்களாகப் பட்டியலிடுகிறார்கள்.

    மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் இருப்பவர்களைக் கூட விசாரணைக்கு நேரில் வருமாறு அழைக்கிறார்கள்.

    பாஜக என்னதான் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு வேண்டிய பலன் கிடைக்காது. மக்களின் குரலாக நான் நீதிமன்றம் செல்வேன்" என்று தெரிவித்தார்.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.     

    • முகம்மது ஷமி மற்றும் அவரது சகோதரர் சமர்ப்பித்த விண்ணப்பப் படிவங்களில் சில முரண்பாடுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது
    • விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருவதால், குறிப்பிட்ட தேதியில் ஆஜராக இயலாது

    இந்திய கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமி மற்றும் அவரது சகோதரர் முகம்மது கைப் ஆகியோருக்கு இந்திய தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. சிறப்பு தீவிர திருத்தம் செயல்முறையின் ஒரு பகுதியாக விசாரணைக்கு ஆஜராகுமாறு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

    மேற்குவங்கத்தில் டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கி மேற்கொள்ளப்பட்டு வரும் 'வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியின்' போது, முகம்மது ஷமி மற்றும் அவரது சகோதரர் சமர்ப்பித்த விண்ணப்பப் படிவங்களில் சில முரண்பாடுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, 'புரோஜனி மேப்பிங்' மற்றும் 'செல்ஃப் மேப்பிங்' விவரங்களில் தவறுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

    கொல்கத்தாவின் ராஷ்பெஹாரி தொகுதியின் கீழ் வரும் வார்டு எண் 93-ல் ஷமி ஒரு வாக்காளராகப் பதிவு செய்துள்ளார். இது தொடர்பான விசாரணைக்காக, ஜனவரி 5, 2026 அன்று ஆஜராகுமாறு அவருக்கு முதலில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் ராஜ்கோட்டில் நடைபெறும் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருவதால், குறிப்பிட்ட தேதியில் ஆஜராக இயலாது என ஷமி தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவித்துள்ளார்.

    ஷமியின் கோரிக்கையை ஏற்று, தேர்தல் ஆணையம் இந்த விசாரணையை வரும் ஜனவரி 9 முதல் 11 வரையிலான தேதிகளுக்கு மாற்றியமைத்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் அம்ரோஹாவில் பிறந்த போதிலும், ஷமி பல ஆண்டுகளாக கொல்கத்தாவில் வசித்து வருகிறார்.

    • வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளின் போது படிவத்தை முறையாக பூர்த்தி செய்யாத 12 லட்சம் பேருக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
    • சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு முகாம்கள் வருகிற 18-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த நவ.4-ந்தேதி முதல் டிச.14-ந் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்.) பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    இதன்படி தமிழகத்தில் தற்போது 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதில் இறந்தவர்கள் மட்டும் 26.94 லட்சம் பேர். முகவரி இல்லாத 66.44 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

    பொதுமக்கள் வசதிக்காக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளான விடுமுறை நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    ஜனவரி 1-ந்தேதியுடன் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும் எஸ்.ஐ.ஆர். பணியின் போது வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள் படிவம் 6-ஐ வழங்க வேண்டும். அதில் எஸ்.ஐ.ஆர். படிவத்தில் உள்ளதை போன்றே, தங்களது அல்லது தங்கள் பெற்றோரின், 2002, 2005-ம் ஆண்டு காலகட்ட வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்றும், இன்றும் வாக்காளர் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் திரண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளித்தனர்.

    வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளின் போது படிவத்தை முறையாக பூர்த்தி செய்யாத 12 லட்சம் பேருக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு பெயர் சேர்ப்பதற்கு கடந்த மாதம் 19-ந்தேதியில் இருந்து கடந்த 2-ந்தேதி வரையில் 7 லட்சத்து 40 ஆயிரத்து 559 பேர் விண்ணப்பித்திருப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    வாக்காளர் பட்டியலில் இருந்து 9575 பெயரை நீக்குவதற்கும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு முகாம்கள் வருகிற 18-ந்தேதி வரை நடைபெறுகிறது. அடுத்த வாரம் 10, 11 ஆகிய தேதிகளிலும்,அதற்கு அடுத்த வாரம் 17, 18 ஆகிய தேதிகளிலும் இந்த முகாம்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    வருகிற 18-ந்தேதிக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க முடியாது. இதன் பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது.

    • கோவையில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
    • அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.

    இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மதியம் 3 மணியளவில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

    இந்த சிறப்பு திருத்தப் பணிகளின்போது, உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு வாக்காளர்களின் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே தேர்தல் நடத்தும் அதிகாரிகள் என்பதால் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.

    இதில், தமிழகத்தில் மொத்தம் 98 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.அதன் முழுவிவரம் குறித்து பார்க்கலாம்..

    கோவை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில், இறந்தவரகள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவுகள் என மொத்தமாக 6.50 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

    SIR பணிக்கு முன் கோவையில் வாக்காளர்கள் எண்ணிக்கை 32.25 லட்சம், இது SIR பணிகளுக்கு பின் வாக்காளர் எண்ணிக்கை 25.74 லட்சம் என உள்ளது.

    இதேபோல்,சேலம் மாவட்டத்தில் 3.62 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்க வௌியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 3.62 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை- 14,25,018 வாக்காளர்கள் நீக்கம்

    திருவள்ளூர்- 6.19 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

    காஞ்சிபுரம்- 2.74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

    செங்கல்பட்டு- 7,01,871 வாக்காளர்கள் நீக்கம்

    தஞ்சாவூர்- 2.06 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

    நெல்லை - 2.16 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

    திருச்சி- 3.31 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

    கரூர்- 79.690 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

    நாமக்கல்- 1.93 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

    தென்காசி- 1.51 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

    தேனி- 1.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

    விழுப்புரம்- 1.82 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

    அரியலூர்- 24,368 வாக்காளர்கள் நீக்கம்

    ஈரோடு- 3,25,429 வாக்காளர்கள் நீக்கம்

    திருப்பூர்- 5,63,785 வாக்காளர்கள் நீக்கம்

    கோவை- 6,50,590 வாக்காளர்கள் நீக்கம்

    கன்னியாகுமரி- 1,53,373 வாக்காளர்கள் நீக்கம்

    சிவகங்கை- 1,50,828 வாக்காளர்கள் நீக்கம்

    விருதுநகர்- 1,89,964 வாக்காளர்கள் நீக்கம்

    பெரம்பலூர்- 49,548 வாக்காளர்கள் நீக்கம்

    தூத்துக்குடி- 1,62,527 வாக்காளர்கள் நீக்கம்

    கடலூர்- 2,46,818 வாக்கார்கள் நீக்கம்

    நாகை- 57,338 வாக்காளர்கள் நீக்கம்

    மதுரை- 3,80,474 வாக்காளர்கள் நீக்கம்

    தருமபுரி- 81,515 வாக்காளர்கள் நீக்கம்

    ராமநாதபுரம்- 1,17,364 வாக்காளர்கள் நீக்கம்

    திண்டுக்கல்- 3,24,894 வாக்காளர்கள் நீக்கம்

    கிருஷ்ணகிரி- 1,74,549 வாக்காளர்கள் நீக்கம்

    திருவாரூர்- 1,29,480 வாக்காளர்கள் நீக்கம்

    சேலம்- 3,62,429 வாக்காளர்கள் நீக்கம்

    திருப்பத்தூர்- 1,16,739 வாக்காளர்கள் நீக்கம்

    நீலகிரி- 56,091 வாக்காளர்கள் நீக்கம்

    திருவண்ணாமலை- 2,51,162 வாக்காளர்கள் நீக்கம்

    மயிலாடுதுறை- 75,378 வாக்காளர்கள் நீக்கம்

    ராணிப்பேட்டை- 1,45,157 வாக்காளர்கள் நீக்கம்

    புதுக்கோட்டை- 1,39,587 வாக்காளர்கள் நீக்கம்

    கள்ளக்குறிச்சி- 84,329 வாக்காளர்கள் நீக்கம்

    வேலூர்- 2,15,025 வாக்காளர்கள் நீக்கம்

    மொத்தம்- 97,37,832 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    • SIR பணிக்கு முன் கோவையில் வாக்காளர்கள் எண்ணிக்கை 32.25 லட்சம் ஆகும்.
    • சேலம் மாவட்டத்தில் 3.62 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    இதில், இறந்தவரகள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவுகள் என மொத்தமாக 6.50 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

    SIR பணிக்கு முன் கோவையில் வாக்காளர்கள் எண்ணிக்கை 32.25 லட்சம், இது SIR பணிகளுக்கு பின் வாக்காளர் எண்ணிக்கை 25.74 லட்சம் என உள்ளது.

    இதேபோல்,சேலம் மாவட்டத்தில் 3.62 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்க வௌியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 3.62 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    • இதில் வந்தே மாதரம் பாடல், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், திருப்பரங்குன்றம் விவகாரம் உள்ளிட்டவை குறித்து காரசார விவாதங்கள் நடந்தன.
    • காற்று மாசு குறித்து விவாதிக்கப்படாமலேயே கூட்டத்தொடர் முடிந்தது/

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இக்கூட்டத்தொடர் 19-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    15 அமர்வுகள் கொண்ட குளிர்கால கூட்டத்தொட ரின் முதல் 2 நாட்களில் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம் பணி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. 3-ந் தேதி முதல் கூட்டத் தொடரின் அலுவல்கள் நடந்தன.

    இதில் வந்தே மாதரம் பாடல், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், திருப்பரங்குன்றம் விவகாரம் உள்ளிட்டவை குறித்து காரசார விவாதங்கள் நடந்தன. அணுசக்தித் துறையில் தனி யாரை அனுமதிப்பது உள்பட முக்கிய மசோதாக்கள் இரு அவையிலும் நிறை வேற்றப்பட்டன.

    மக்களவையில் நேற்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமான விக்சித் பாரத்-ரோஜ்கர் மற்றும் அஜீவிகாமிஷன் (விபி-ஜி ராம் ஜி) மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இரு அவைகளிலும் நிறைவேறியது.

    இந்த நிலையில் இன்று காலை மக்களவை கூடிய தும் குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுவதாகவும், கால வரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாகவும் சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். அப்போது இந்தக் கூட்டத்தொடரின் போது சபையின் செயல்பாடு 111 சதவீதமாக இருந்தது என்று ஓம் பிர்லா கூறினார்.

    மேல்சபை இன்று காலை கூடியதும் அவைத் தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன், 15 நாட்கள் நடைபெற்ற கூட்டத் தொடரின் போது மேற்கொள்ளப்பட்ட சட்ட மியற்றும் மற்றும் பிற நடவடிக்கைகள் குறித்த சுருக்கத்தை வாசித்தார்.  

    பின்னர் மேல்-சபையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக அவை தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன் அறிவித்தார். இதையடுத்து மேல் சபையிலும் குளிர்கால கூட்டத்தொடர் நிறைவுபெற்றது. இரு அவைகளின் நிறைவிலும் வந்தே மாதரம் இசைக்கப்பட்டது. இன்று டெல்லி காற்று மாசு குறித்து விவாதிக்கப்பட இருந்த நிலையில் அது குறித்து விவாதிக்கப்படாமலேயே தொடர் முடிவுக்கு வந்தது. 

    • மனுக்கள் வரும் 17ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
    • தலைமை நீதிபதி அமர்வு எஸ்ஐஆர் வழக்குகளில் இம்மாத இறுதிவரை வாதங்களை கேட்கும்.

    எஸ்ஐஆர் வழக்கில் ஜனவரி மாதம் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு அறிவித்துள்ளது.

    எஸ்ஐஆர் விவகாரத்தில் இதற்குமேல் புதிதாக எந்த வழக்குகளும் அனுமதிக்கப்படாது என்றும் தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.

    எஸ்ஐஆர் தொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகள் தாக்கல் செய்த மனுக்கள் வரும் 17ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

    இந்நிலையில், எஸ்ஐஆர் வழக்குகளில் இம்மாத இறுதிவரை வாதங்களை கேட்கும் தலைமை நீதிபதி அமர்வு ஜனவரி மாதத்தில் தீர்ப்பு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நாடாளுமன்றம் மிகப்பெரிய பஞ்சாயத்து என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
    • நாடாளுமன்ற விதிகளின்படி நாங்கள் எப்போதும் விவாதங்களுக்குத் தயாராக இருக்கிறோம்.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவர திருத்தம் தொடர்பாக மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தார்.

    இதுகுறித்து அமித் ஷா மேலும் கூறியதாவது:-

    இரண்டு நாட்களாக எதிர்க்கட்சிகளிடம் இதைப் பற்றி இரண்டு அமர்வுகளுக்குப் பிறகு விவாதிக்க வேண்டும் என்று சொன்னோம். ஆனால் அவர்கள் அதை ஒப்புக்கொள்ளவில்லை. நாங்கள் ஒப்புக்கொண்டோம்... ஏன் 'இல்லை' என்று சொன்னோம்? 'இல்லை' என்பதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.

    ஒன்று, அவர்கள் SIR பற்றிய விவாதத்தை விரும்பினர். இந்த சபையில் SIR பற்றிய விவாதம் இருக்க முடியாது என்பதை நான் தெளிவாக அறிவேன். SIR தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு.

    இந்தியாவின் EC மற்றும் CEC அரசாங்கத்தின் கீழ் செயல்படவில்லை. விவாதம் நடத்தப்பட்டு கேள்விகள் எழுப்பப்பட்டால், அதற்கு யார் பதிலளிப்பார்கள்? தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாக அவர்கள் சொன்னபோது, உடனடியாக ஒப்புக்கொண்டோம்.

    இந்த விஷயத்தில் விவாதம் தொடர்பாக முதல் இரண்டு நாட்களுக்கு ஒரு தடை ஏற்பட்டது. இது மக்களுக்கு இதைப் பற்றி விவாதிக்க நாங்கள் விரும்பவில்லை என்ற தவறான தகவல் பரவியது. இந்த நாட்டில் விவாதங்களுக்கு நாடாளுமன்றம் மிகப்பெரிய பஞ்சாயத்து என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

    பாஜக- தேசிய ஜனநாயக கூட்டணி ஒருபோதும் விவாதங்களிலிருந்து விலகிச் செல்லாது. எந்த விஷயமாக இருந்தாலும், நாடாளுமன்ற விதிகளின்படி நாங்கள் எப்போதும் விவாதங்களுக்குத் தயாராக இருக்கிறோம்.

    இந்திய வாக்காளர் மட்டுமே இந்தியாவில் வாக்களிக்க வேண்டும் என்பதை எஸ்ஐஆர் உறுதி செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×