என் மலர்
நீங்கள் தேடியது "வரைவு வாக்காளர்பட்டியல்"
- கோவையில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
- அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மதியம் 3 மணியளவில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
இந்த சிறப்பு திருத்தப் பணிகளின்போது, உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு வாக்காளர்களின் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே தேர்தல் நடத்தும் அதிகாரிகள் என்பதால் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.
இதில், தமிழகத்தில் மொத்தம் 98 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.அதன் முழுவிவரம் குறித்து பார்க்கலாம்..
கோவை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில், இறந்தவரகள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவுகள் என மொத்தமாக 6.50 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
SIR பணிக்கு முன் கோவையில் வாக்காளர்கள் எண்ணிக்கை 32.25 லட்சம், இது SIR பணிகளுக்கு பின் வாக்காளர் எண்ணிக்கை 25.74 லட்சம் என உள்ளது.
இதேபோல்,சேலம் மாவட்டத்தில் 3.62 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்க வௌியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 3.62 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர்- 6.19 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
காஞ்சிபுரம்- 2.74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
தஞ்சாவூர்- 2.06 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
நெல்லை - 2.16 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
திருச்சி- 3.31 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
கரூர்- 79.690 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
நாமக்கல்- 1.93 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
தென்காசி- 1.51 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
தேனி- 1.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
விழுப்புரம்- 1.82 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
- தேனிமாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வருகிற 27-ந் தேதி வெளியிடப்பட உள்ளது.
- இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ந் தேதி வெளியிடப் படும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி:
தேனி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் மறு வரையறை செய்யப்பட்டு வரைவு வாக்காளர் பட்டிய லானது மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான ஷஜீவனா தலைமையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வருகிற 27-ந் தேதி வெளியிடப்பட உள்ளது.
மேற்படி வரைவு வாக்காளர் பட்டியலானது உத்தமபாளையம், பெரியகுளம் வாக்காளர் பதிவு அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலக ங்களிலும், ஆண்டிபட்டி, பெரியகுளம், உத்தமபாளை யம், போடி மற்றும் தேனி ஆகிய பகுதிகளில் உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வட்டாட்சியர் அலுவலக ங்களிலும் மற்றும் தேனி, பெரியகுளம், போடி, சின்னமனூர், கம்பம் மற்றும் கூடலூர் ஆகிய பகுதிகளில் உதவி வாக்காளர் பதிவு அலுவலர், நகராட்சி ஆணையர் அலுவகங்களில் பொதுமக்களின் பார்வை க்காக வைக்கப்படும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கலு க்கான சிறப்பு முகாம்கள் அடுத்த மாதம் 4, 5, 18, 19 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்க ளிலும் நடத்தப்படும். வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்ட நாளில் இருந்து டிசம்பர் 9-ந் தேதிக்குள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் வாக்காளர் பதிவு அலுவலர், வருவாய் கோட்டாட்சி யரிடம் தெரிவிக்கலாம்.
இதனை தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ந் தேதி வெளியிடப்படும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.






