என் மலர்tooltip icon

    பாராளுமன்ற தேர்தல் 2024

    • நாட்டு மக்களை இந்தியா கூட்டணி பிரிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது.
    • மக்கள் ஒற்றுமையாக இருந்தால் இந்தியா கூட்டணியில் உள்ளவர்களின் அரசியல் வாழ்க்கை முடிவடைந்து விடும்.

    பிரதமர் மோடி இன்று இரவு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராம்டெக்கில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியா கூட்டணி மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் மோடி 3-வது முறையாக ஆட்சிக்கு வந்தால், அதன்பின் ஜனநாயகம் மற்றும் அரசமைப்புக்கு ஆபத்து என பொய்த் தகவலை பரப்பி வருகின்றனர். நான் அரசியல் வந்தததில் இருந்து, ஒரு தேர்தலில் கூட இந்த விசயத்தை அவர்கள் கூறவில்லை. எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கவில்லையா?. சாதாரண ஏழை நபரின் மகன் பிரதமரான நிலையில், அவர்கள் ஜனநாயகம் ஆபத்து என பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

    நாட்டு மக்களை இந்தியா கூட்டணி பிரிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது. மக்கள் ஒற்றுமையாக இருந்தால் இந்தியா கூட்டணியில் உள்ளவர்களின் அரசியல் வாழ்க்கை முடிவடைந்து விடும் என்பது அவர்களுக்கு தெரியும்.

    அவர்கள் இந்து தர்மத்துடைய சக்தியை ஒழிக்க விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட இந்தியா கூட்டணியை ஒரு தொகுதியில் கூட நீங்கள் வெற்றி பெற அனுமதிக்க வேண்டுமா?. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், பா.ஜனதா உங்களிடம் வந்துள்ளது. உங்களது ஒவ்வொரு வாக்குகளும் அவர்களை வெற்றி பெற வைப்பதற்கு மட்டுமல்ல. எதிர்க்கட்சிகளை தண்டிப்பதற்கும்தான்.

    அவர்கள் என்னுடைய மறைந்த தாயார் அல்லது தந்தை குறித்து அவதூறு செய்யும்போது, இனிமேல் மோடி ஆட்சிதான். வாக்கு எந்திரம் (EVM) குறித்து அவர்கள் கேள்வி எழுப்பும்போது இனிமேல் மோடி ஆட்சிதான்.

    • பா.ஜனதா கட்சியில் புதிதாக ஒரு தலைவர் வந்திருக்கிறார். விமானத்தில் ஏறும்போது பேட்டி கொடுப்பார். இறங்கும்போதும் பேட்டி கொடுப்பார்.
    • பேட்டி கொடுத்து தலைவர் மக்களை ஈர்க்க பார்க்கிறார். இன்று தலைவர்கள் பல வழிகளில் மக்களை சந்திப்பார்கள்.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பொள்ளாச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம் கடல்போல் காட்சி அளிக்கிறது. பொள்ளாச்சி நகரம் குலுங்கும் வகையில் மக்கள் வெள்ளம் கூடியிருக்கின்றன. இது தேர்தல் பிரசாரம் கூட்டம் அல்ல. வெற்றி விழா கூட்டம்போல் காட்சியளிக்கிறது. வேட்பாளரின் வெற்றி இந்த எழுச்சியில் இருந்து பார்க்கப்படுகிறது.

    மு.க.ஸ்டாலின் அதிமுக 2, 3-ஆக போய்விட்டது என்று கூறுகிறார். பொள்ளாச்சி வந்து பாருங்கள். அதிமுக எப்படி இருக்கிறது என்று தெரியும். ஒன்றாக இருக்கிறது என்பது மக்கள் வெள்ளமே சாட்சி.

    அம்மா மறைவிற்குப் பிறகு அதிமுக-வை மு.க. ஸ்டாலின் உடைக்க, முடக்க முயற்சி செய்தார். ஆனால் உங்கள் ஆதரவோடு அனைத்தும் தவுடுபொடியாக்கப்பட்டது.

    எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தமிழக மக்களுக்கு இறைவன் கொடுத்த கொடை. நம்முடைய தலைவர்கள் நாட்டு மக்களுக்காக வாழ்ந்தார்கள். சில தலைவர்கள் வீட்டு மக்களுக்காக வாழ்ந்தார்கள். கூட்டுப் பொறுப்போடு தேர்தல் என்ற போரில் எதிரிகளை ஓடஒட விரட்டி வெற்றிக் கொடிகளை நாட்டுவோம்.

    மத்தியில் இருந்து தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வந்துவிட்டு செல்கிறார்கள். இதனால் என்ன பயன்?. வருகிறீர்கள். அதனால் ஒரு திட்டத்தை கொடுத்து மக்கள் நன்மை பெற்றிருந்தால் ஒரு பிரயோஜனம் உண்டு. அதைவிட்டு நேராக வருகிறர்கள். ரோட்டில் செல்கிறார்கள். அதோடு கதை முடிந்து விட்டது.

    மக்கள் ஓட்டு போட்டுவிடுவார்களா?. தமிழ்நாட்டு மக்கள் என்ன சாதாரண மக்களா?. அறிவுத்திறன் படைத்தவர்கள். எது சரி? தவறு? என எடைபோட்டு தீர்ப்பு அளிக்கக்கூடிய மக்கள் தமிழக மக்கள். இந்த ஏமாற்று வேலைகள் ஒன்றும் தமிழகத்தில் எடுபடாது.

    பா.ஜனதா கட்சியில் புதிதாக ஒரு தலைவர் வந்திருக்கிறார். விமானத்தில் ஏறும்போது பேட்டி கொடுப்பார். இறங்கும்போதும் பேட்டி கொடுப்பார். பேட்டி கொடுப்பதுதான் அவருடைய வேலை. பேட்டி கொடுத்து தலைவர் மக்களை ஈர்க்க பார்க்கிறார். இன்று தலைவர்கள் பல வழிகளில் மக்களை சந்திப்பார்கள்.

    ஆனால் இந்த தலைவர் டெக்னிக்கலாக அவ்வப்போது பேட்டி கொடுத்து மக்களை நம்பவைத்து வாக்குகளை பெற முயற்சிக்கிறார். அது அதமிழகத்தில் எடுபடாது. இங்கு உழைக்கின்றவர்களுக்குதான் மரியாதை உண்டு. மக்களுக்காக உழைக்கும் கட்சி அதிமுக., எவ்வளவு பேட்டிகளில் கொடுத்தாலும் ஒன்றும் எடுபட போவதில்லை.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

    • மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார்.
    • வெள்ளிக்கிழமை மாலை மதுரை வரும் அமித்ஷா சிவகங்கையில் நடைபெறும் ரோடு- ஷோவில் பங்கேற்று பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. பிரசாரத்திற்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று மாலை சென்னை வந்தார்.

    சென்னை பாண்டி பஜாரில் நடந்த பிரமாண்ட ரோடு- ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    இதனை தொடர்ந்து இன்று காலை பிரதமர் மோடி வேலூரில் நடந்து பொதுக்கூட்டத்திலும் அதனை தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    இந்நிலையில், நாளை மறுநாள் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தமிழகம் வருகிறார்.

    வெள்ளிக்கிழமை மாலை மதுரை வரும் அமித்ஷா சிவகங்கையில் நடைபெறும் ரோடு- ஷோவில் பங்கேற்று பிரசாரத்தில் ஈடுபடுகிறார். மறுநாள் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் காலை 9.50 மணிக்கு ரோடு-ஷோவில் பங்கேற்கும் அமித்ஷா பிற்பகல் 3 மணிக்கு நாகையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், மாலை 6.30 மணிக்கு தென்காசியில் நடைபெறும் ரோடு-ஷோவில் பங்கேற்று வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    • மோடியின் வெற்றிக்காக வீடு வீடாக செல்லுங்கள்.
    • தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற வேண்டும்.

    மேட்டுப்பாளையம்:

    தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று மாலை சென்னை வந்தார்.

    சென்னை பாண்டி பஜாரில் நடந்த பிரமாண்ட ரோடு- ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    இதனை தொடர்ந்து இன்று காலை பிரதமர் மோடி சென்னையில் இருந்து விமானம் மூலமாக வேலூர் சென்றார். வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவு திரட்டி பேசினார்.

    வேலூர் கூட்டம் முடிந்ததும் பிரதமர் மோடி கோவை மேட்டுப்பாளையத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அரக்கோணத்தில் இருந்து விமானம் மூலமாக பிற்பகல் கோவை விமான நிலையம் வந்தார். கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க.வினர் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து பொதுக்கூட்ட மேடைக்கு பிரதமர் மோடி வந்தார்.

    பொதுக்கூட்டத்தில் பேசிய கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும், பா.ஜ.க. மாநில தலைவருமான அண்ணாமலை,

    * ஒரு பறவை போல் பாசமாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.

    * தமிழ்நாட்டில் முதலமைச்சருடைய செயல்பாடு என்பதே இல்லை. பொம்மையாக ஒரு முதலமைச்சர் உட்கார்ந்து இருக்கார்.

    * தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் செயல்படாத ஒரு அரசு இருக்கிறது என்றால் முதல் தங்கப்பதக்கம் திராவிட முன்னேற்ற கழகத்தின் அரசுக்கு கொடுக்கணும்.

    * 70 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இதுபோன்ற ஒரு மோசமான ஆட்சியே பார்த்ததில்லை. மகளிர்களும், தாய்மார்களும் கொதித்து நின்று கொண்டுள்ளார்கள்.

    * தி.மு.க.வை பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் முதல் 10 நாட்கள் கூட்டணி வைத்து ட்ராமா, கடைசி 10 நாள் அவர்கள் சம்பாதிச்ச பாவ காச வெச்சு மக்களுக்கு கொடுக்கறது. இதை தான் 70 ஆண்டுகாலமாக திராவிட முன்னேற்ற கழகத்தின் அரசை பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

    * ஆனால் இந்த முறை அன்பு சகோதர, சகோதரிகளே திராவிட முன்னேற்ற கழகக்காரர்கள் யாராச்சு தன்னுடைய பக்கெட்டுல இருந்து ஓட்டுக்கு பணத்தை கொடுத்தா அது கஞ்சா மூலமாக வந்த பணம் என்பதை மறந்து விடாதீர்கள்.

    * உங்களுடைய குழந்தையின் எதிர்காலத்தை உறிஞ்சப்போகின்ற பணம் என்பதை மறந்து விடாதீர். அள்ளித்திண்ணிப்பதற்காக மூக்குத்தியோ, தோடோ கொடுத்தால் நம்மளுடைய ரத்தத்தையெல்லாம் உறிஞ்சி கசக்கி பிழிந்து 33 மாத காலமாக ஊழல் செய்த பணம் என்பதை மறந்து விடாதீர்கள்.

    * உலகில் எங்கு சென்றாலும், தமிழ் மொழி குறித்து பிரதமர் பேசுகிறார்.

    * அடுத்த 7 நாட்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

    * 7 நாட்கள் பிரதமருக்காக நாம் அர்ப்பணிப்போம், 5 ஆண்டு நமக்காக பிரதமர் உழைப்பார்.

    * மோடியின் வெற்றிக்காக வீடு வீடாக செல்லுங்கள்.

    * தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற வேண்டும் என்றார்.

    முன்னதாக, தேயிலைக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேட்டுப்பாளையம் ரெயில் பாதையை இரட்டை ரெயில் பாதையாக நடவடிக்கை எடுக்கப்படும். நிலக்கடலை, பாக்கு ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய இணை அமைச்சரும் நீலகிரி பா.ஜ.க. வேட்பாளருமான எல்.முருகன், பிரதமர் மோடி முன்னிலையில் வாக்குறுதி அளித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழ்நாட்டுக்கு இதுவரை 7 முறை வருகை தந்துள்ளார்.
    • பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரை சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் வாகன பேரணி பிரசாரத்தில் பிரதமா் மோடி ஈடுபட்டார்

    பாராளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழ்நாட்டுக்கு இதுவரை 6 முறை வருகை தந்துள்ளார். நேற்று 7-வது முறையாக அவர் தமிழகம் வந்தார். தனி விமானத்தில் சென்னை வந்த பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு தி.நகர் பனகல் பார்க் பகுதியில் ரோடுஷோ நடைபெறும் இடத்தை வந்தடைந்தார்.

    பனகல் பூங்கா முதல் பாண்டி பஜாா் வழியாக தேனாம்பேட்டை சிக்னல் வரை சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் வாகன பேரணி பிரசாரத்தில் பிரதமா் மோடி ஈடுபட்டார். அப்போது சாலையின் இருபுறமும் நின்று பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பூக்களை தூவி பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    பா.ஜ.க. வேட்பாளா்கள் தமிழிசை சவுந்தரராஜன் (தென்சென்னை), வினோஜ் பி.செல்வம் (மத்திய சென்னை), பால்.கனகராஜ் (வட சென்னை) ஆகியோருக்கு ஆதரவாக பிரதமா் மோடி வாக்கு சேகரித்தார்.

    பிரதமர் மோடியுடன் பிரசார வாகனத்தில் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், வினோஜ் பி.செல்வம், பால்.கனகராஜ் ஆகிய பாஜக வேட்பாளர்கள் உடன் இருந்தனர்.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் ரோடு ஷோவிற்கு கூடிய பா.ஜ.க தொண்டர்கள் "ஆப் கி பார்.. சாக்கோ பார்..." என்று முழக்கமிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    சாக்கோ பார் என்பது ஒரு வகை ஐஸ் கிரீம் என்பது கூடவா பா.ஜ.க தொண்டர்களுக்கு தெரியவில்லை என நெட்டிசன்கள் இந்த வீடியோவை பகிர்ந்து கலாய்த்து வருகிறார்கள். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நான் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போட்டியிடவில்லை.
    • இந்திய சமூகத்தில் திருநங்கைகளும் ஓர் அங்கம். ஆனால் எங்களுக்கு நாட்டில் ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை.

    உத்தரபிரதேசத்தின் நிர்மோகி அகாடா என்ற சாதுக்கள் அமைப்பைச் சேர்ந்த திருநங்கை மகாமண்டலேஸ்வரர் ஹேமாங்கி சகி (46). துறவியான அவர் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்து மதத்தை பரப்பி வருகிறார்.

    இந்த சூழலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து அகில பாரத மகா இந்து சபையின் வேட்பாளராக மகாமண்டலேஸ்வரர் ஹேமாங்கி சகி போட்டியிடுகிறார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நான் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போட்டியிடவில்லை. திருநங்கைகளின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதற்காக அரசியலில் களமிறங்கி உள்ளேன். திருநங்கைகள் குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை. மத்திய அரசின் சார்பில் திருநங்கைகள் நலனுக்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதுகுறித்து மத்திய அரசு விளம்பரம் செய்வதில்லை.

    இந்திய சமூகத்தில் திருநங்கைகளும் ஓர் அங்கம். ஆனால் எங்களுக்கு நாட்டில் ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை. எந்தவொரு அரசியல் கட்சியும் திருநங்கைகளை வேட்பாளர்களாக அறிவிப்பது இல்லை. அகில இந்து மகா சபை என்னை வேட்பாளராக அறிவித்து நாட்டுக்கு முன் உதாரணத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதை மற்ற கட்சிகளும் பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு மகாமண்டலேஸ்வரர் ஹேமாங்கி சகி தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாங்கள் 30 இடங்களுக்கு மேல் பிடிப்போம். மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா அரசு அமைந்த பிறகு நாங்கள் ஊடுருவலை தடுத்து நிறுத்துவோம்.
    • காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று மேற்கு வங்காளத்தில் உள்ள தக்சின் தினாஜ்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மம்தா பானர்ஜி ஊடுருவலை தடுக்கமாட்டார். ஏனென்றால் ஊடுருபவர்கள் மம்தா பானர்ஜியின் வாக்கு வங்கி. பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதாவல் ஊடுருவலை தடுக்க முடியும். நாங்கள் அசாம் மாநிலத்தில் ஊடுருவலை தடுத்து நிறுத்தினோம். நாங்கள் 30 இடங்களுக்கு மேல் பிடிப்போம். மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா அரசு அமைந்த பிறகு நாங்கள் ஊடுருவலை தடுத்து நிறுத்துவோம். பிரதமர் மோடியின் இந்த வாக்குறுதியை கூறுவதற்காக நான் இங்கு வந்துள்ளேன்.

    ஏப்ரல் 17-ந்தேதி ராம் நவமி. கடவுள் ராமர் பிறந்த தினம். ஐந்து வருடத்திற்குள் ராமர் கோவில் விசயத்தை பிரதமர் மோடி முடித்து வைத்தார். பூமி பூஜை நடத்தப்பட்டு கோவில் கட்டப்பட்டது. 500 வருடத்திற்குப் பிறகு கடவுள் ராமர் அவரது பிறந்த இடத்தில் பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். ராம நவமி அவரது பிரமாண்ட வீட்டிற்குள் நடைபெற இருக்கிறது.

    காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. முஸ்லிம் தனிச்சட்டம் கொண்டு வரப்படும், பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது எனச் சொல்கிறார்கள். அவர்களுடைய தேர்தல் பிரசாரத்தில் தாய்லாந்தின் போட்டோ இடம் பிடித்துள்ளது. ஏனென்றால், ராகுல் பாகா தொடர்ச்சியாக விடுமுறைக்காக அங்கே செல்கிறார்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    • தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று வீதி வீதியாக பிரசாரம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
    • புகாரின் பேரில் உவரி போலீசார், சத்யா மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யா நேற்று ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உவரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பிரசாரம் செய்தார்.

    அப்போது அவர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று வீதி வீதியாக பிரசாரம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்த புகாரின் பேரில் உவரி போலீசார், சத்யா மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 21-ம் நூற்றாண்டில் அனைவரும் இணைந்து பாரதம் மற்றும் தமிழ்நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக்குவோம்.
    • தமிழகத்தை தி.மு.க. பின்னோக்கி அழைத்துச் செல்கிறது.

    வேலூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா கூட் டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்து வருகிறார். சென்னையில் நேற்று அவர் ரோடு ஷோ நடத்தினார்.

    இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) காலை பிரதமர் மோடி வேலூரில் பிரசாரம் செய்தார். வேலூர் கோட்டை மைதானத்தில் பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் சார்பில் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடந்தது.

    இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு வேலூர் பா.ஜ.க. வேட்பாளர் ஏ.சி. சண்முகம், திருவண்ணாமலை பா.ஜ.க. வேட்பாளர் அஸ்வத்தாமன், நரசிம்மன் (கிருஷ்ணகிரி), பா.ம.க. வேட்பாளர்கள் சவுமியா அன்புமணி (தர்மபுரி), வக்கீல் பாலு (அரக்கோணம்), கணேஷ் குமார் (ஆரணி) ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

    இதற்காக பிரதமர் மோடி சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் அப்துல்லாபுரம் விமான நிலையத்திற்கு வந்தார்.

    அங்கிருந்து காரில் கோட்டை மைதானத்திற்கு வந்தார். கோட்டை முன்பு அண்ணாசாலையில் திரண்டிருந்த பொதுமக்கள் மலர் தூவி கோஷம் எழுப்பியபடி பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    வேட்டி, சட்டை அணிந்து மேடைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி கூட்டத்தில் திரண்டிருந்த தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.

    பின்னர் முக்கிய நிர்வாகிகள் பிரதமர் மோடிக்கு பொன்னாடை அணிவித்தனர். பிரதமர் மோடிக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் செங்கோலை பரிசாக வழங்கினார்கள்.

    கூட்டத்தில் பிரதமர் மோடி பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

    தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம். நான் உங்களிடம் தமிழில் பேசாமல் இருப்பதற்கு வருத்தம் தெரிவித்து எனது உரையை ஆரம்பிக்கிறேன்.

    வர இருக்கிற தமிழ் புத்தாண்டு தினத்திற்கு எனது வாழ்த்துகளை உங்கள் அத்தனை பேருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். வருகிற ஆண்டு நமது அனைவருக்கும் வளர்ச்சி மிகுந்த ஆண்டாக அமைய எனது வாழ்த்துகளை பரிமாறிக் கொள்கிறேன்.

    உங்களுடைய அன்பு, ஆசீர்வாதம் எனக்கு தெரிகிறது. எனவே தமிழக மக்களின் வளர்ச்சிக்காக என்னை அர்ப்பணித்து எனது முழு திறமையையும் வெளிபடுத்துவேன். வேலூரில் கூடிய கூட்டம் புதிய சகாப்தம் படைக்கப் போவதை டெல்லி உள்ள தலைவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். மிகப்பெரும் புரட்சியை உருவாக்கிய இடம் வேலூர்.

    இன்றைய கூட்டத்தின் மூலம் வேலூர் மீண்டும் ஒரு சரித்திரம் படைக்கும். வேலூர் கோட்டையில் ஆங்கிலேயரை எதிர்த்ததை போல் மீண்டும் ஒரு வரலாறு நிகழ உள்ளது. வீரம் நிறைந்த வேலூரில் இறைவன் ஜலகண்டேஸ்வரரர், கடவுள் முருகப் பெருமானை தாழ்பணிந்து வணங்குகிறேன்.

    2014-ம் ஆண்டுக்கு முன்னர் வளர்ச்சியே இல்லை. எந்த பத்திரிகையை புரட்டினாலும் ஊழல், முறைகேடு குறித்த செய்திகளே இருந்தன. இப்போது தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கும், அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் மிகுந்த வரவேற்பு கிடைக்கிறது.

    21-ம் நூற்றாண்டில் அனைவரும் இணைந்து பாரதம் மற்றும் தமிழ்நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக்குவோம். உலக அரங்கில் இந்தியா இன்று வலிமையான நாடாக பார்க்கப்படுகிறது. அதில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மிகப்பெரியதாக உள்ளது.

    இந்தியா வல்லரசு ஆவதில் தமிழ்நாட்டின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும். அதற்காக தமிழகம் கடுமையாக உழைக்கிறது.

    வேலூர் மக்களின் எதிர்பார்ப்புகளை மனதில் கொண்டு உதான் திட்டத்தின் கீழ் வேலூர் விமான நிலையம் விரைவில் திறக்கப்படும். சென்னை, பெங்களூரு தொழில் துறை வழித்தடம் வேலூர் வழியாகத்தான் செல்கிறது. இதனால் வேலூர் வளர்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தி.மு.க. பெரும் தடையாக இருக்கிறது. அனைத்திலும் தி.மு.க. அரசியல் செய்கிறது.

    தி.மு.க. ஒரு குடும்பத்தின் கம்பெனியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த தி.மு.க.வும் ஒரு குடும்பத்தின் சொத்தாக உள்ளது. இதனால் தமிழகத்தின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

    தமிழகத்தை தி.மு.க. பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. தி.மு.க.வின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேறவில்லை. கொள்ளையடிப்பதிலும், ஊழலுக்கும் தி.மு.க. காப்பிரைட் வைத்துள்ளது.

    மத்திய அரசு அனுப்பும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதியை தி.மு.க. ஊழல் செய்வதற்காக பயன்படுத்திக் கொள்கிறது. ஊழலின் ஒட்டுமொத்த அதிகார மையமாக தி.மு.க. அரசு உள்ளது. தி.மு.க. பழைய சிந்தனையிலேயே உள்ளது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மாவட்டம் தோறும் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக வெள்ளிக்கிழமை தமிழகத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. வருகிறார்.

    நெல்லை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

    இதனை ஒட்டி தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் தமிழகத்தின் பிரதான கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மாவட்டம் தோறும் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் தமிழகத்தில் பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக நாளை மறுநாள் தமிழகத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. வருகிறார். அவர் அன்றைய தினம் நெல்லையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

    இந்த பிரசாரத்தின் போது நெல்லை உள்ளிட்ட 6 தென் மாவட்டங்களை சேர்ந்த பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாளை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே அமைந்துள்ள தனியார் பள்ளி மைதானத்தில் பொதுக்கூட்ட மேடையில் பேசுகிறார்.

    இதனையொட்டி நெல்லை மாநகர் முழுவதும் நாளை (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் 13-ந்தேதி காலை 6 மணி வரை 2 நாட்கள் நெல்லை மாநகர பகுதி முழுவதும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • புதுக்கோட்டையில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் வைகோ பேசிக்கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் வைகோவை பார்த்து போதையில் கத்தினார்.
    • பேச்சை நிறுத்திய வைகோ, மதுவை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் என் தாய் உயிரை விட்டார்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில்:-

    பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அடியோடு மாற்றப்படும். தலைநகர் சென்னையில் இருந்து திருச்சிக்கு மாற்றப்படும் என்று தடுமாறிய அவர், இல்லை... இல்லை... வாரணாசிக்கு மாற்றப்படும் என்றார். வைகோவின் இந்த தடுமாற்றமான பேச்சு அங்கு நின்ற பொதுமக்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.

    இதே போல புதுக்கோட்டையில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் வைகோ பேசிக்கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் வைகோவை பார்த்து போதையில் கத்தினார். பேச்சை நிறுத்திய வைகோ, மதுவை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் என் தாய் உயிரை விட்டார். அந்தாள வெளியில் தூக்கி போடுங்க என்று உத்தரவிட்டார். அவர் கட்சிக்காரர் என்று கூட்டத்தில் இருந்து பதில் வந்தது. இதனால் கோபமடைந்த வைகோ கட்சிக்காரர் என்றால் குடிக்க வேண்டுமா? நான் அடிவயிறு வலிக்க பேசிக் கொண்டிருக்கிறேன் என்று சலித்துக்கொண்டபடி தொடர்ந்து பேசி முடித்தார்.

    • நம்முடைய தமிழ் உலகின் மிகவும் பழமை வாய்ந்த மொழி.
    • திமுகவும் இந்தியா கூட்டணியும் பெண்களை அவமதிக்கிறார்கள்.

    வேலூர்:

    வேலூரில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * பிரித்தாளும் அரசியலை திமுக செய்து வருகிறது.

    * மக்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் வகையில் கருத்துகளை பரப்புகிறது திமுக.

    * முழு நாடும் தமிழின் பெருமையை அறிய வேண்டும் என்பதே எனது முயற்சியாக உள்ளது.

    * நான் உங்கள் அனைவரையும் காசிக்கு அழைக்கிறேன்.

    * குஜராத்தை சேர்ந்தவன் என்ற முறையில் சவுராஷ்டிரா தமிழ் சங்கமத்திற்கு அழைக்கிறேன்.

    * நம்முடைய தமிழ் உலகின் மிகவும் பழமை வாய்ந்த மொழி.

    * நான் பாராளுமன்றத்தில் செங்கோலை நிறுவியபோது திமுக அந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

    * காங்கிரசும், திமுகவும் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தது.

    * தற்போது, தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்படும்போது திமுக, காங்கிரஸ் கண்ணீர் வடிக்கிறது.

    * தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை இலங்கையில் இருந்து உயிரோடு மீட்டுக்கொண்டு வந்தேன்.

    * நான் குஜராத்தில் முதல்வராக இருந்தபோது, வேலூர் அருகே உள்ள தங்க கோவிலுக்கு வந்திருக்கிறேன்.

    * திமுக, காங்கிரஸ் சனாதனத்தை அழிப்பதை பற்றி பேசி வருகிறார்கள்.

    * திமுக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகள் அயோத்தி ராமர் கோவிலை புறக்கணிக்கிறார்கள்.

    * திமுகவும் இந்தியா கூட்டணியும் பெண்களை அவமதிக்கிறார்கள்.

    * தற்போதைய திமுக தலைவர்கள் பெண்களை அவமானப்படுத்துவதை வேலூர் மக்கள் அறிவார்கள்.

    * ஜெயலலிதா குறித்து எப்படி எல்லாம் மோசமாக பேசினார்கள் என்பது மக்களுக்குத்தெரியும்.

    * ஏப்.19-ந்தேதி தமிழகத்தின் பெருமையை காக்க, வளர்ச்சிக்காக நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

    * உங்கள் ஒவ்வொரு ஓட்டும் தமிழகத்தின் வளர்ச்சிக்கான உத்தரவாதம்.

    * அயோத்தி ராமர் வேடத்தில் ஒரு சிறுவன் எனக்கு கைகாட்டுவதை நான் பார்க்கிறேன்.

    பெரியோர்களே, எனக்கு ஆசி வழங்குவதற்காக, எனக்கு ஆதரவு தருவதற்காக வந்துள்ள இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி வணக்கம்.

    பாரத் மாதா கி ஜே, வந்தே மாதரம் என்று கூறி உரையை முடித்தார்.

    ×