என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நவராத்திரி விழா: 21 வகையான காய் - கனிகளால் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு அலங்காரம்
Byமாலை மலர்8 Oct 2016 9:16 AM GMT (Updated: 8 Oct 2016 9:16 AM GMT)
மதுரை திருநகரில் உள்ள சித்திவிநாயகர் கோவிலில் நவராத்திரி திருவிழாவையொட்டி 21 வகையான காய்கனிகளால் ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.
மதுரை திருநகரில் உள்ள அண்ணா பூங்கா வளாகத்தில் இந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் கடந்த 2-ந்தேதி நவராத்திரி திருவிழா தொடங்கி நடந்து வருகிறது திருவிழாவையொட்டி தினமும் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.
திருவிழாவின் 6-வது நாளான நேற்று ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு சகாம்பரி அலங்காரம் செய்யப்பட்டது. இதற்காக 300 கிலோ தக்காளி, கத்திரி, புடலை, மிளகாய், வாழை என்று 21 வகையான காய் கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டது. கோவில் நிர்வாக அதிகாரி சுரேஷ்கண்ணன் அலுவலர் இருதயராஜ் ஆகியோர் மேற்பார்வையில் ஹரிபட்டர் தலைமையில் காலை 11 மணியில் இருந்து மாலை 5 மணி வரை சுமார் 6 மணி நேரம் அலங்கார பணியில் 50 பேர் ஈடுபட்டனர்.
சகாம்பரி அலங்காரத்தை தொடர்ந்து ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு சிறப்புபூஜையும் மகாதீப ஆராதனையும் நடந்தது. அம்மனுக்கு படைக்கப்பட்ட காய்-கனிகள் யாவும் கதம்பசாதமாக தயார் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இந்த கோவிலில் கடந்த 2-ந்தேதி நவராத்திரி திருவிழா தொடங்கி நடந்து வருகிறது திருவிழாவையொட்டி தினமும் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.
திருவிழாவின் 6-வது நாளான நேற்று ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு சகாம்பரி அலங்காரம் செய்யப்பட்டது. இதற்காக 300 கிலோ தக்காளி, கத்திரி, புடலை, மிளகாய், வாழை என்று 21 வகையான காய் கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டது. கோவில் நிர்வாக அதிகாரி சுரேஷ்கண்ணன் அலுவலர் இருதயராஜ் ஆகியோர் மேற்பார்வையில் ஹரிபட்டர் தலைமையில் காலை 11 மணியில் இருந்து மாலை 5 மணி வரை சுமார் 6 மணி நேரம் அலங்கார பணியில் 50 பேர் ஈடுபட்டனர்.
சகாம்பரி அலங்காரத்தை தொடர்ந்து ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு சிறப்புபூஜையும் மகாதீப ஆராதனையும் நடந்தது. அம்மனுக்கு படைக்கப்பட்ட காய்-கனிகள் யாவும் கதம்பசாதமாக தயார் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X