என் மலர்tooltip icon

    ஈரான்

    • இந்தியாவும் ஈரானும் வலுவான இருதரப்பு உறவுகளை கொண்டுள்ளது.
    • மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தெஹ்ரானில் நடைபெற்ற ஈரானின் புதிய ஜனாதிபதி மசூத் பெஜேஷ்கியானின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.

    இந்தியாவில் முஸ்லிம்கள் பாதிக்கப்படுவதாகக் கூறிய ஈரானின் சுப்ரீம் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் கருத்துக்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

    இந்தியா, காசா, மியான்மர் உள்ளிட்ட எந்த ஒரு இடத்திலும் ஒரு முஸ்லிம் அனுபவிக்கும் துன்பங்களை நாம் கவனிக்காமல் இருந்தால் நம்மை முஸ்லிம்களாக கருத முடியாது என்று நபிகள் நாயகத்தின் பிறந்தநாளில் ஈரானிய தலைவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

    இதற்கு இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சகம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. கமேனி கூறிய கருத்துக்களை நிராகரித்து, தவறான தகவலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளது.

    சிறுபான்மையினர் குறித்து விமர்சனக் கருத்துக்களை வெளியிடும் நாடுகள், இதனை சொல்வதற்கு முன் தங்கள் சொந்த மனித உரிமைகள் பதிவுகளை முதலில் ஆராயுமாறு அமைச்சகம் மேலும் அறிவுறுத்தியது.

    இந்தியாவும் ஈரானும் வலுவான இருதரப்பு உறவுகளை கொண்டுள்ளது. சமீப காலங்களில் குறிப்பிடத்தக்க இடையூறுகள் எதுவும் இல்லை.

    முன்னாள் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் உத்தியோகபூர்வ விழாவில் கலந்து கொள்வதற்காக மே மாதம் துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் ஈரானுக்கு பயணம் செய்தார்.

    ஜூலை மாதம் கூட, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தெஹ்ரானில் நடைபெற்ற ஈரானின் புதிய ஜனாதிபதி மசூத் பெஜேஷ்கியானின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.

    • துணை ராணுவப் புரட்சிப் படையால் தயாரிக்கப்பட்ட கஹீம் 100 என்ற ராக்கெட் மூலம் இந்த சாட்டிலைட் ஆனது ஏவப்பட்டுள்ளது.
    • பாலஸ்தீன போருக்கு மத்தியில் இந்த தொழில்நுட்பம் மூலம் ஈரானில் இருந்தபடியே இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்த முடியும்

    ஈரான் ஏவிய ராக்கெட் மூலம் புதிய ஆராய்ச்சி சாட்டிலைட் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. துணை ராணுவப் புரட்சிப் படையால் தயாரிக்கப்பட்ட கஹீம் 100 என்ற ராக்கெட் மூலம் இந்த சாட்டிலைட் ஆனது ஏவப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் மூலம் ஈரான் செயற்கைக்கோளைச் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்துவது இது இரண்டாவது முறையாகும்.

    தற்போது நிலைநிறுத்தப்பட்டுள்ள சம்ரான் -1 [Chamran-1] என்று இந்த சாட்டிலைட் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இரானின் எலக்ட்ரானிக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மூலம் 60 கிலோ எடையில் தயாரிக்கப்பட்டு வருங்காலங்களில் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தும் டெக்னலாஜியின் [orbital manoeuvre technology] ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் தொழில்நுட்பத்தைச் சோதனை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

     

    இந்நிலையில் ஈரான் சாட்டிலைட்டை ராக்கெட் மூலம் ஏவ பயன்படுத்திய யுக்தியை போர் ஆயுதங்களான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவ பயன்படுத்தக்கூடும் என்று  அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. பாலஸ்தீன போருக்கு மத்தியில் இந்த தொழில்நுட்பம் மூலம் ஈரானில் இருந்தபடியே இஸ்ரேல் மீது ராக்கெட் மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தமுடியும் என்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அலி ஷாம்கானியின் மகன் ஹொசைன் ஷாம்கானி சத்தமே இல்லாமல் துபாயில் கச்சா எண்ணெய் வியாபார சாமர்ஜ்யத்தையே கட்டி எழுப்பியுள்ளார்
    • அந்த நிறுவனத்தை 'ஹெக்டார்' [Hector] என்ற புனைபெயருடன் ஹொசைன் ஷாம்கானி இயக்கி வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது

    ஈரான் அரசியல் புள்ளி 

    ஈரான் அரசில் முக்கிய முடிவுகளை எடுக்கும் மதத் தலைவர் அயத்துல்லா காமேனி -இன் ஆலோசகராகவும் இருப்பவர் அலி ஷாம்கானி [Ali Shamkhani]. ஈரான் நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலான Supreme National Security Council (SNSC) இன் தலைவராகவும் சுமார் 10 ஆண்டுகளாக அலி ஷாம்கானி இருந்துள்ளார். தற்போது அயத்துல்லா காமேனியின் ஆலோசகராக ஈரான் அரசியலிலும் ராணுவத்திலும் பலம் கொண்டவராக அலி ஷாம்கானி திகழ்ந்து வருகிறார்.

     

    ஹொசைனின் எண்ணெய் சாம்ராஜ்யம் 

    இவ்வாறாக அரசியலில் தனது இருப்பை நிலைநாட்டிவரும் அலி ஷாம்கானியின் மகன் ஹொசைன் ஷாம்கானி Hossein Shamkhan சத்தமே இல்லாமல் துபாயில் கச்சா எண்ணெய் வியாபார சாமராஜ்யத்தையே கட்டி எழுப்பியுள்ளார். ரஷியா மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் எண்ணெய் வர்த்தக கட்டுப்பாடுகளை விதித்ததுபோல ஈரான் மீது எண்ணெய் வர்த்தக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும் ஹொசைன் ஷாம்கானி சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவராக இருப்பதாக புளூம்பெர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஹொசைன் ஷாம்கானியின் இந்த வளர்ச்சி ஈரான் அரசில் அவரது தந்தையின் அரசியல் தொடர்புகளே காரணம் என்கிறது அந்த அறிக்கை.

     

     

    ஹெக்டார் என்கிற ஹொசைன் ஷாம்கானி

    அந்த அறிக்கைப்படி, சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் உள்ள கார்ப்பரேட் டவரில் மிலாவோஸ் Milavous Group Ltd, என்ற நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.ஆரம்பித்து சில மாதங்களிலேயே சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் குறிப்பிடத்தகுந்த இடத்தை அந்நிறுவனம் பிடித்துள்ளது. ப்ளூம்பெர்கிற்கு கிடைத்துள்ள தகவலின்படி வியாபார வட்டாரங்களில் அந்த நிறுவனத்தை 'ஹெக்டார்' [Hector] என்ற புனைபெயருடன் ஹொசைன் ஷாம்கானி இயக்கி வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஈரான், ரஷியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பெறப்பட்ட கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் பில்லியன் கணக்கில் இந்த நிறுவனத்தின் வருவாய் எட்டியுள்ளது.

     

     நெட்வொர்க் 

    ஹொசைன் ஷாம்கானியின் வர்த்தக தொடர்பு நெட்வொர்க் ஆனது ஈரான் நாட்டை சேர்ந்த எண்ணெய் வர்த்தக நெட்வொர்க்களிலேயே மிகப்பெரியது என்று கூறப்படுகிறது. அமெரிக்காவின் தடைகளை சட்டப்பூர்வமாக உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, மற்ற நிறுவனங்களுடனான பார்ட்னர்ஷிப் மூலமும் , ஷெல் நிறுவனங்கள் என்று அழைக்கப்படும் செயல்பாடு இல்லாத நிறுவனங்களை உருவாக்கியும் தனது சர்வதேச வர்த்தக ஆதிக்கத்தை ஹொசைன் ஷாம்கானி நிறுவியுள்ளார் என்று அந்த அறிக்கை கூறுகிறது. ஹொசைன் ஷாம்கானி மீதும் அவரது வர்த்தக நகர்வுகள் மீதும் அமெரிக்கா ஒரு கண் வைத்திருந்தாலும், 60 க்கும் மேற்பட்ட கப்பல்கள் கொண்டு பெரிய அளவில் இயங்கி வரும் அவரது நெட்வொர்க்கை முழுதாக செயலிழக்க செய்ய முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது

     

    அமெரிக்காவின் தேள் 

    ஹெக்டார் அதாவது ஹொசைன் ஷாம்கானியின் வழிகாட்டுதலில் இயங்கி வரும் மிலாவோஸ் நிறுவனம் சீனாவின் சினோபெக், செவ்ரான்,BP உள்ளிட்ட பெரு வணிக கொள்முதல் நிறுவனங்களுக்கு எண்ணெய் சப்ளை செய்து வருகிறது. ஆனால் இது அனைத்தும் சட்டபூர்வமாக நடப்பதால் அமெரிக்காவால் எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறது. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி ஆண்டுக்கு 35 பில்லியன் டாலர் என்ற அளவுக்கு இருப்பதால், ஹொசைன் ஷாம்கானியின் வர்த்தகத்தில் கை வைப்பது சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலையை  உயர்த்தும். அது அமெரிக்காவில் வர இருக்கும் அதிபர் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அமெரிக்கா தேள் கொட்டினாலும் பரவா இல்லை என்று  மவுனமாக இருந்து வருகிறது. 

    • பாகிஸ்தானில் இருந்து ஈராக் நோக்கி பேருந்து சென்றது.
    • இந்த பேருந்து ஈரானில் விபத்தில் சிக்கியதில் 28 பேர் பலியாகினர்.

    டெஹ்ரான்:

    பாகிஸ்தானில் இருந்து ஈராக் நோக்கி 50க்கும் மேற்பட்ட ஷியா யாத்ரீகர்களை ஏற்றிச்சென்ற பேருந்து மத்திய ஈரானில் திடீரென கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சுமார் 28 பேர் பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் 23 பேர் காயம் அடைந்தனர், அவர்களில் 14 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    மத்திய ஈரானில் உள்ள யாஸ்டி மாகாணத்தில் நேற்று இரவு இந்த விபத்து நடந்தது என உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.

    • இந்த வாரத்தில் ஈரான், இஸ்ரேல் மீதான தாக்குதலை முன்னெடுக்கும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.
    • எங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது எங்களின் உரிமை என்று ஈரான் அதிபர் மசூத் தெரிவித்துள்ளார்

    ஈரானில் வைத்து ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட சம்பவம் இஸ்ரேலுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையில் போர் மூலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு, ஏமன் நாட்டில் இயங்கி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் என இஸ்ரேலின் பாலஸ்தீன தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஈரானின் புதிய அதிபராகத் தேர்வான சீர்திருத்தக் கட்சியைச் சேர்ந்த மசூத் பெசஸ்க்கியானின் பதவியேற்பு நிகழ்ச்சிக்காக ஈரான் வந்த இஸ்மாயில் ஹனியே அவரது வீட்டில் வைத்து கொல்லப்பட்டார். இதற்கு இஸ்ரேல் தான் காரணம் என்று ஈரான் குற்றம்சாட்டியது. இதனால் இஸ்ரேல் மீது ஈரான் எந்த நேரமும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தெரிகிறது. நேரடித் தாக்குதலுக்கு அதிபர் மசூத் மற்றும் ஈரான் புரட்சிகர படையினர் இடையில் கருத்து வேறுபாடு இருந்தாலும், இஸ்ரேலுக்கு பதிலடி கொடுப்பதில் ஈரான் உறுதியாக உள்ளது.

     

     

    இதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த வாரத்தில் ஈரான், இஸ்ரேல் மீதான தாக்குதலை முன்னெடுக்கும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது. எனவே இஸ்ரேலை பாதுகாக்க நீர்மூழ்கிகளையும், ஏர்கிராப்ட்களையும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்துள்ளது.

     

     

    மேலும் அமெரிக்காவுடன் சேர்ந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் ஆகிய மேற்கு நாடுகள் இணைந்து ஈரானை எச்சரித்துள்ளது. இஸ்ரேல் மீதான ராணுவ நடவடிக்கை, கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும், பிராந்தியங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் மேற்கூறிய  நாடுகளின் தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டும், தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு பேசியும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் எங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது எங்களின் உரிமை என்று ஈரான் அதிபர் மசூத் பேசஸ்கியான் உறுதிபட தெரிவித்துள்ளார். 

     

    • இஸ்மாயில் ஹனியே படுகொலைக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் சூளுரை.
    • இஸ்ரேல் தலைநகர் மீது வான்தாக்குதல் நடத்த ஈரான் அதிபர் யோசிப்பதாக தகவல்.

    இஸ்ரேலுடனான நேரடி போரைத் ஈரான் புதிய அதிபர் மசூத் பெசெஸ்கியன் விரும்பவில்லை எனவும், இதனால் ஈரான் அதிபருக்கும் இஸ்லாமிய புரட்சிப் படைக்கும் (Islamic Revolutionary Guard Corps (IRGC)) இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் தி டெய்லி டெலிகிராப் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

    ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதற்கு இஸ்ரேல்தான் காரணம் என ஈரான் குற்றம்சாட்டியது. அத்துடன் இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்தப்படும என ஈரான் உயர் அதிகாரம் படைத்த தலைவர் அயதுல்லா காமேனி சூளுரைத்தார்.

    தற்போது இஸ்ரேல் மீது எந்தவகையான தாக்குதலை நடத்துவது என்பதில் ஈரான் அதிபருக்கும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது.

    ஈரானின் அண்டை நாடுகளில் உள்ள இஸ்ரேலின் உளவுத்துறை (மொசாட்) தளங்களை தாக்குவதற்கு அதிபர் மசூத் பெசெஸ்கியன் முன்மொழிந்துள்ளதாக "தி டெய்லி டெலிகிராப்" நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

    அதே நேரத்தில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் தலைவர்கள் டெல் அவிவ் மற்றும் இஸ்ரேலின் பிற நகரங்களில் ஹிஸ்புல்லா மற்றும் மற்றவர்களின் ஆதரவுடன் வான்தாக்குதல் நடத்தலாம் என்பதில் உறுதியாக உள்ளனர்.

    இஸ்ரேலுடன் நேரடி போரில் ஈடுபட்டால் ஈரான் அதிக விளைவுகளை சந்திக்கும் என அதிபர் யோசிக்கிறார். இதுதான் முக்கிய காரணமாக அதிபர் தரப்பில் பார்க்கப்படுகிறது.

    அதிபரின் முன்மொழிவை புறக்கணித்து இஸ்ரேலை தாக்க இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தயாராகி வருவதாகவும், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனியின் உத்தரவை இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை கண்டிப்பாக நிறைவேற்றும் என்றும் நாளிதழ் மேலும் தெரிவித்துள்ளது.

    ஈரானின் தன்னிச்சை அதிகாரம் படைத்த செல்வாக்குமிக்கதாக புரட்சிகர காவல்படை இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

    • ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார்.
    • இஸ்மாயில் ஹனியே கொலைக்கு இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த ஈரான் உயர் அதிகார தலைவர் உத்தரவு.

    ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் வைத்து ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை கொலை செய்ததன் மூலம் இஸ்ரேல் மூலோபாய தவறு செய்துவிட்டது. ஏனென்றால் இஸ்ரேல் அதற்கான மோசமான விலையை கொடுக்க இருக்கிறது என ஈரான் பொறுப்பு வெளியுறவுத்துறை மந்திரி அலி பகாரி தெரிவித்துள்ளார்.

    சவுதி கடற்கரை நகரான ஜெட்டாவில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டதற்கு அடுத்த நாள் அலி பாகரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    மேலும் பதற்றம், போர் மற்றும் மற்ற நாடுகளுடன் மோதலை விரிவாக்கம் செய்ய இஸ்ரேல் விரும்புகிறது. எனினும் ஈரானுடன் போர் புரியும் நிலையில் இஸ்ரேல் இல்லை. அவர்களுக்கு அதற்கான திறனும் இல்லை. வலிமையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

    இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) 57 உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்து இஸ்மாயில் ஹனியே படுகொலைக்கு இஸ்ரேல்தான் முழு பொறுப்பு என பிரகடனம் செய்தனர்.

    இதற்கிடையே ஹிஸ்புல்லா ராணுவ கமாண்டர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு முழு வீச்சில் பதிலடி கொடுக்கப்படும் என லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

    கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினர் தெற்கு இஸ்ரேலில் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1198 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அத்துடன் 251 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதில் 111 பேர் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இதில் 39 பேர் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. இதில் 39,699 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பொதுமக்கள் எத்தனை பேர், ஹமாஸ் அமைப்பினர் எத்தனை பேர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரால் கிழக்கு மத்திய பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.

    • இஸ்மாயில் ஹனியே ஈரானில் அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
    • மேற்குலக நாடுகளில் உள்ள 2-வது பெரிய உளவு அமைப்பு மொஸாட் ஆகும்.

    ஈரான் நாட்டின் புதிய அதிபராக மசூத் பெசேஷ்கியான் ஜூலை 30 அன்று பதவி ஏற்றார். இந்த பதவியேற்பு விழாவில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கலந்து கொண்டார்.

    அந்த சமயத்தில் இஸ்மாயில் தங்கியிருந்த வீட்டில் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டை, ரிமோட் மூலம் இயக்கி வெடிக்கச்செய்து அவரை படுகொலை செய்துள்ளனர்.

    இதனையடுத்து ஈரானில் நடந்த இஸ்மாயில் ஹனியே இறுதி ஊர்வலத்தில் திரளான மக்கள் பங்கேற்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இஸ்ரேல்தான் இந்த படுகொலைக்குக் காரணம் என ஹமாஸ் மற்றும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

    இந்நிலையில் இஸ்மாயில் ஹனியே தங்கியிருந்த வீட்டில் வெடிகுண்டுகளை நிரப்ப இஸ்ரேலின் உளவுத்துறை அமைப்பான மொஸாட் ஈரானின் செக்யூரிட்டி ஏஜெண்டுகளை நியமித்தது என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

    விபத்தில் மரணமடைந்த ஈரானின் முன்னாள் அதிபர் இப்ராகிம் ரைசியின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக இஸ்மாயில் தெக்ரான் நகரத்திற்கு வந்திருந்தார். அப்போதே அவரை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஆனால் அதீத கூட்டம் காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

    இதனையடுத்து அந்த திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி இஸ்மாயில் தெக்ரானில் வழக்கமாக தங்கும் புரட்சிகர காவல்படையினர் ரகசிய கூட்டங்கள் நடத்தும் வளாகத்துக்குள் அமைந்துள்ள 3 அறைகளில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டு அவரை கொலை செய்துள்ளனர் என்ற தகவல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வருடத்திற்கு 3 பில்லியன் டாலர் பட்ஜெட் மற்றும் 7,000 பணியாளர்களுடன் இயங்கும் மொசாட் அமெரிக்காவின் CIA க்கு அடுத்தபடியாக மேற்குலக நாடுகளில் உள்ள இரண்டாவது பெரிய உளவு அமைப்புஎன்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தெக்ரானில் உள்ள வீட்டில் தங்கியிருந்த போது வெடித்துச்சிதறியதில் அவரும் அவரது மெய்க்காப்பாளர்களில் ஒருவரும் மரணம் அடைந்தனர்
    • ரகசிய கூட்டங்கள் நடத்தும் வளாகத்துக்குள் அமைந்துள்ள அந்த வீட்டில் 2 மாதத்துக்கு முன்பே வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

    ஈரான் நாட்டின் புதிய அதிபராக மசூத் பெசேஷ்கியான் கடந்த செவ்வாய்க்கிழமை [ஜூலை 30] அன்று பதவி ஏற்றார். இந்த பதவியேற்பு விழாவில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கலந்து கொண்டார். அத்துடன் ஈரானின் உச்ச அதிகாரம் பெற்ற அயதுல்லா அலி கமேனியையும் சந்தித்து பேசினார்.

    இந்த நிலையில்தான் இஸ்மாயில் ஹனியே ஈரானில் அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். அவருக்கு பாதுகாப்பளித்து வந்த ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை(IRGC) வெளியிட்ட அறிக்கையில், ஹமாஸ் அரசியல் அலுவலகத்தின் தலைவரான இஸ்மாயில் ஹனியே தெக்ரானில் உள்ள வீட்டில் தங்கியிருந்த போது வெடித்துச்சிதறியதில் அவரும் அவரது மெய்க்காப்பாளர்களில் ஒருவரும் மரணம் அடைந்தனர் என்று தெரிக்கப்பட்டிருந்தது.




     


    இஸ்ரேல்தான் இந்த படுகொலைக்குக் காரணம் என ஹமாஸ் மற்றும் ஈரான் நம்புகிறது. ஆனால் இஸ்ரேல் இதுவரை இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்காத நிலையில் அமெரிக்கா இந்த தாக்குதல் குறித்து பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்த கூற்றுப்படி, இஸ்மாயில் தெக்ரானில் வழக்கமாக தங்கும் புரட்சிகர காவல்படையினர் ரகசிய கூட்டங்கள் நடத்தும் வளாகத்துக்குள் அமைந்துள்ள அந்த வீட்டில் 2 மாதத்துக்கு முன்பே வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளது.




     


    இந்த நிலையில்தான் கத்தார் நாட்டில் நடந்த அரசியல் சந்திப்பை முடித்துக்கொண்டு, ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவுக்கு வருகை தந்த இஸ்மாயில் அந்த வீட்டில் இருப்பதை உறுதி செய்தபிறகு, மர்ம நபர்கள் அங்கு புதைத்து வைத்திருந்த வெடிகுண்டை, ரிமோட் மூலம் இயக்கி வெடிக்கச்செய்துள்ளனர் என்று  நியூ யார்க் டைம்ஸ் இதழ் தெரிவிக்கிறது. இதற்கிடையில் ஈரானில் நடந்த இஸ்மாயில் ஹனியே இறுதி ஊர்வலத்தில் திரளான மக்கள் பங்கேற்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.




     




     


    • இஸ்மாயில் ஹனியே சிந்திய ரத்தத்துக்கு பழிவாங்குவது எங்கள் கடமை.
    • கடுமையான தண்டனையை பெறுவதற்கு இஸ்ரேல் களம் அமைத்துள்ளது என்றார்.

    தெக்ரான்:

    பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிப்போம் என்று இஸ்ரேல் சூளுரைத்து உள்ளது.

    இதற்கிடையே ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஈரான் தலைநகர் தெக்ரானில் உள்ள வீட்டில் இருந்தபோது படுகொலை செய்யப்பட்டார்.

    அவரை இஸ்ரேல் கொலை செய்துள்ளது என்று ஈரான், ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளன. ஈரான் நாட்டுக்குள்ளே ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டது. அந்நாட்டு அரசை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது. இதற்கு இஸ்ரேலை பழி வாங்குவோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் ஈரானின் உச்ச தலைவர் அயோதுல்லா அலி காமேனி, இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை நடத்தும் படி ராணுவ படைகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட சிறிது நேரத்தில் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டம் அயோதுல்லா அலி காமேனி தலைமையில் நடந்தது. இதில் இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த அவர் உத்தரவிட்டுள்ளார்.

    போர் விரிவடையும் பட்சத்தில், இஸ்ரேல் தாக்குதல் மற்றும் தற்காப்பு ஆகிய இரண்டிற்கும் திட்டங்களை தயாரிக்குமாறு ஈரானின் புரட்சிகர காவலர்கள் மற்றும் ராணுவ தளபதிகளை அறிவுறுத்தினார். மேலும் அயோதுல்லா அலி காமேனி வெளியிட்ட அறிக்கையில், இஸ்மாயில் ஹனியே சிந்திய ரத்தத்துக்கு பழிவாங்குவது எங்கள் கடமை. ஏனென்றால் இது எங்கள் நாட்டில் நடந்தது. கடுமையான தண்டனையை பெறுவதற்கு இஸ்ரேல் களம் அமைத்துள்ளது என்றார்.

    இது குறித்து ஈரான் அதிகாரிகள் கூறும்போது, இஸ்ரேல் மீது ஈரான் எவ்வளவு வலிமையுடன் தாக்குதல் நடத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஹைபாவிற்கு அருகிலுள்ள ராணுவ இலக்குகள் மீது டிரோன்கள், ஏவுகணைகளின் கூட்டுத் தாக்குதலை நடத்த ராணுவத் தளபதிகள் பரிசீலித்து வருகின்றனர்.

    அதே வேளையில் பொதுமக்கள் மீது தாக்குதலை தவிர்ப்பது எங்களது குறிக்கோளாக இருக்கும். மேலும் ஈரான்,ஏமன், சிரியா, ஈராக் உள்ளிட்ட நட்பு நாட்டுப் படைகளுடன் இணைந்து மற்ற முனைகளில் இருந்து ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதலை நடத்தவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    ஈரான் மீது இஸ்ரேலோ அல்லது அமெரிக்காவோ தாக்குதல் நடத்தினால் போரை விரிவுப்படுத்தும் படியும், அதற்கேற்ப தயாராகும்படியும் படைகளுக்கு காமினி உத்தரவிட்டு உள்ளார் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஈரான் தலைநகர் தெக்ரானில் உள்ள தனது வீட்டில் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார்
    • இஸ்மாயில் ஹனியே ஹமாஸ் சார்பாக பல்வேறு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று வந்தார்.

    இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

    இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிப்போம் என்று இஸ்ரேல் சூளுரைத்தது. ஆனால் இப்போரில் குழந்தைகள், பெண்கள் உள்பட 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியே இன்று அதிகாலை படுகொலை செய்யப்பட்டு உள்ளார். ஈரான் தலைநகர் தெக்ரானில் உள்ள தனது வீட்டில் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார் என்றும் அவருடன் பாதுகாவலர் ஒருவரும் கொல்லப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவரது படுகொலையை ஈரான் மற்றும் ஹமாஸ் இயக்கம் உறுதிப்படுத்தியது. இதுதொடர்பாக ஹமாஸ் கூறும்போது, இஸ்மாயில் ஹனியே தெக்ரானில் உள்ள அவரது இல்லத்தில் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று தெரிவித்தது.

    மேலும் ஈரானின் புரட்சிகர காவலர் படை வெளியிட்ட அறிக்கையில், ஹமாஸ் அரசியல் அலுவலகத்தின் தலைவரான இஸ்மாயில் ஹனியேவின் வீடு தெக்ரானில் தாக்கப்பட்டது. இதில் அவரும் அவரது மெய்க்காப்பாளர்களில் ஒருவரும் வீர மரணம் அடைந்தனர் என்று தெரிவித்தது.

    இந்த கொலை சம்பவம் எவ்வாறு நடந்தது, இஸ்மாயிலை கொலை செய்தது யார்? என்பது குறித்த முழுமையான தகவல் வெளியாகவில்லை.

    ஹமாசின் அரசியல் பிரிவுக்கு தலைமை தாங்கிய இஸ்மாயில் ஹனியே நேற்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.

    ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியையும் அவர் சந்தித்து பேசினார். அதன்பின் அவர் தனது வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில்தான் அவர் இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

    62 வயதான இஸ்மாயில் ஹனியே ஹமாஸ் சார்பாக பல்வேறு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று வந்தார். அவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே இஸ்மாயில் ஹனியேயை இஸ்ரேல் படுகொலை செய்ததாக ஹமாஸ் கூறியுள்ள நிலையில், வெளிநாட்டு ஊடகங்களில் வரும் செய்திகளுக்கு தாங்கள் பதிலளிக்க முடியாது என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    • இந்த விழாவில் இந்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார்
    • ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

    ஈரான் அதிபராக இருந்த இப்ராஹிம் ரசி கடந்த மே 17 ஆம் தேதி அஜர்பைஜான் எல்லையில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். எனவே அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஈரானில் கடந்த ஜூன் 28 நடந்தது.

    இதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஜூலை 5 ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் சீர்திருத்தக் கட்சி வேட்பாளர் மசூத் பெசஸ்கியான் 54 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் ஈரான் அதிபராக மசூத் பெசஸ்கியான் பதவியேற்றுள்ளார்.

     

    பாலஸ்தீன போர், ஹெஸ்புல்லா -இஸ்ரேல் போர் பதற்றம் ஆகிய பிரச்சனைகளுக்கு மத்தியில் மசூத் பெசஸ்கியானின் இந்த பதவியேற்பு விழா முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த விழாவில் இந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, துருக்கி, சவுதி அரேபியா, எகிப்து, ஈராக் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

     

    இந்த பதவியேற்பு விழாவில் காசாவில் இஸ்ரேலின் போர்க் குற்றங்கள் குறித்து பாராளுமன்ற சபாநாயகர் பேசுகையில், அவையில் இருந்த 'பலர், இஸ்ரேல் அழியட்டும், அமெரிக்கா அழியட்டும்' [Death to Israel, Death to America] என்று முழக்கம் எழுப்பினர். இந்த முழக்கங்களுக்கு மத்தியில் மசூத், அதிபராக பதவியேற்றுக்கொண்டார்.

     பதவியேற்பின்போது 'புனித குரான் மற்றும் ஈரான் பிரஜைகளின் முன்னிலையில், இஸ்லாமிய குடியரசுக்கும், நாட்டின் அரசியலமைப்புக்கும் பதுகள்வளனாக இருப்பேன் என்று கடவுள் மீது ஆணையாக உறுதியேற்கிறேன்' என்று மசூத் தெரிவித்தார்.

     

    இதற்கிடையில், ஹிஸ்புல்லாவின் சமீபத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் விவாதமாக லெபனான் தலைநகர் பெய்ருட் மீது இஸ்ரேல் நேற்று வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஹிஸ்புல்லாவின் முக்கியத் தலைவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அறிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு முன்பிருந்தே, லெபனானை இஸ்ரேல் தகுமானால் தீவிரமான போரில் ஈரான் இறங்கும் என்று மசூத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    ×