என் மலர்
உலகம்
- எக்ஸ்கார்டுகள், அவர்கள் விலை உள்ளிட்டவை குறித்து கணவர் தேடியதை பிரவுசிங் ஹிஸ்டரி மூலம் தெரிந்துகொண்டேன்.
- அவரின் சாம்பலை வீட்டுத் தோட்டத்தில் எனது வளர்ப்பு நாயின் மலத்துடன் கலந்தேன்.
புத்தகம்
உயிரோடு இருக்கும்போது தனக்கு துரோகம் செய்த கணவனின் சாம்பலை சாப்பிட்டதாக கனேடிய எழுத்தாளர் தனது சுயசரிதையில் எழுதியுள்ள சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் வசித்து வரும் கனேடிய எழுத்தாளர் ஜெசிகா வைட் [Jessica Waite] இறந்த பாஸ்டர்ட்ஸ்கான ஒரு விதவையின் வழிகாட்டி [A Widow's Guide to Dead Bastards] என்ற பெயரில் எழுதியுள்ள அவரது memoir வகை சுயசரிதை நினைவுக் குறிப்பு புத்தகம் சமீபத்தில் வெளியானது.

அதில் தனது கணவன் சீன் வைட் [Sean Waite] தன்னை ஏமாற்றி பல பெண்களுடன் தொடர்பில் இருந்தது, அதை தான் கண்டுபிடித்தது, அவர் கடந்த 2015 இல் இறந்தபிறகு நடந்த சம்பவங்கள் உள்ளிட்டவற்றை பற்றி விரிவாக எழுதியுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டில் டெக்சாஸ்-கு வேலை நிமித்தமாக சென்ற கணவர் உயிரிழந்தார்.
பிரவுசிங் ஹிஸ்டரி
அவரது உடல் எங்கிருக்கிறது என்பது பற்றி கேட்க ஹவுஸ்டன்[Houston] நகர மருத்துவமனையில் அலைபேசி எண்ணை பற்றி தேடுவதற்காக எனது கணவரின் ஐ- பாட் -ஐ எடுத்துக் பார்த்தேன். ஹவுஸ்டன் என்று தேடியதும் அவரது பிரவுசிங் ஹிஸ்டரியில் ஹவுஸ்தண் எஸ்கார்ட்ஸ் [escorts][பாலியல் துணைகள்] பற்றி எக்கச்சக்கமான விசயங்கள் இருந்தது.
பல்வேறு இடங்களில் உள்ள எக்ஸ்கார்டுகள், அவர்கள் விலை உள்ளிட்டவை குறித்து கணவர் தேடியதை தெரிந்துகொண்டேன். அதன்மூலம் எனது கணவன் பல் பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததும், ஆபாச வீடியோக்களுக்கு அடிமையாக இருந்ததையும் கண்டுபிடித்தேன்.

எஸ்கார்ட்
ஆபீசில் வேலை இருக்கிறது வீட்டுக்கு வர நேரமாகும் என்று என்னுடன் கூறிவந்த அவர் அங்கு உட்கார்ந்து நூற்றுக்கணக்கில் ஆபாச வீடியோக்களை டவுன்லோட் செய்து பார்த்து அதை சீரான வரிசையில் போல்டர்கள் போட்டு சேமித்து வைத்துள்ளார். எஸ்கார்ட் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதற்கென்றே கொலோராடோவில் [Colorado] அபார்ட்மெண்ட் வீட்டை வாடகைக்கு எடுத்து இருந்தும் எனக்கு தெரியவந்தது.
சாம்பல்
அவர் இறந்த துக்கம் ஒருபுறம், அவரை பற்றி தெரிந்துகொண்டதால் ஏற்பட்ட கோபமும் விரக்தியும் ஒருபுறம் என்று நான் மிகுந்த மன சஞ்சலத்தில் இருந்தேன். எனவே இறுதிச் சடங்கு முடிந்தவுடன் என்னிடம் தரப்பட்ட அவரது உடலின் சாம்பலை வீட்டுக்கு வந்து தோட்டத்தில் எனது வளர்ப்பு நாயின் மலத்துடன் கலந்தேன். எனது ஆத்திரம் அடங்கவில்லை. எனவே மேற்கொண்டு அந்த சாம்பலை சாப்பிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

சுவை
மேலும் அதன் சுவை எப்படி இருந்தது என்று விலாவரியாக அந்த புத்தக்த்தில் எழுதியுள்ளார். அதாவது, கணவரின் சாம்பல் பேக்கிங் பவுடரை விட சொசொரப்பாகவும், உப்பை விட தூசியாகவும் இருந்தது. எனது நாக்குக் கீழ் சுரந்த உமிழ்நீரில் கலந்த சாம்பலை நான் விழுங்கினேன் என்று தெரிவித்துள்ளார். தற்போது புதிய துணையை தான் தேடிக்கொண்டாலும், உயிரிழந்த கணவரை நினைக்காத நாளில்லை என்று தேர்விற்கும் ஜெசிகா, தனது உடலில் ஒரு பாகம் காணாமல் போனது போல் உணர்வதாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.
- மருத்தவ உதவிகள் கிடைக்காமலும், பட்டினியால் ஏற்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாகவும் அவதிப்பட்டு வருகின்றனர்
- கை, கால்களை இழந்த சிறுவர் சிறுமியரின் புகைப்படங்கள் காண்போர் நெஞ்சை பதற வைப்பதாக உள்ளன
போர்
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கடந்த ஒரு வருடமாக நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 41,500 பேர் உயிரிழந்துள்ளனர். 97 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த வருடம் இதே நாளில் [அக்டொபர் 7] ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டு பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்க இஸ்ரேல் போரைத் தீவிரப்படுத்தியது.
ஆனால் இந்த போரில் உயிரிழந்த பால்ஸ்தீனியர்களின் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். காசாவில் வாழ்ந்த சுமார் 23 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மனித உரிமை உதவிகள் எட்டாத துண்டிக்கப்பட்ட பிரதேசமாகக் காசா திகழ்ந்து வரும் நிலையில் இஸ்ரேல் வீசும் குண்டுகளை விட உணவுத் தட்டுப்பாடும் சுகாதார சீர்கேடுமே அம்மக்களின் கொடுங்கனவாக மாறியுள்ளது. கை, கால்களை இழந்த சிறுவர் சிறுமியரின் புகைப்படங்கள் காண்போர் நெஞ்சை பதற வைப்பதாக உள்ளன

சாலா
குழந்தைகள், கர்ப்பிணிகள் மருத்தவ உதவிகள் கிடைக்காமலும், பட்டினியால் ஏற்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாகவும் அவதிப்பட்டு வருகிறனர். இந்த அசாதார சூழ்நிலையில் குழந்தையை பிரசவிக்கும் தாய்மார்கள் நிர்கதியில் விடப்பட்டுள்ளனர்.
சொந்த நாட்டில் அகதியாக மத்திய காசாவில் டெய்ர் அல் பாலாஹ்[Deir al-Balah] பகுதியில் டென்ட் முகாம் ஒன்றில் கையில் தனது ஒருமாத பெண்குழந்தை மிலானா [Milana] - வை ஏந்தியவாறு பேசும் ராணா சாலா [Rana Salah] என்ற தாய், இவளை [குழந்தையை] இந்த போருக்கும், துன்பத்துக்கும் மத்தியில் பெற்றது என்னை குற்றவுணர்வில் தள்ளியுள்ளது. முடிவெடுக்கும் உரிமை எனக்கு இருந்திருந்தால் நான் இவளை பெற்றிருக்கவே மாட்டேன்.

மிலானா
இதற்கு முன் நாங்கள் இது போன்றதொரு அவலம் நிறைந்த வாழ்க்கையைக் கற்பனை கூட செய்து பார்த்ததில்லை. நான் இந்த குழந்தைக்கு துரோகம் செய்வதாகவே உணர்கிறேன். இதை விட மேம்பட்ட சூழலில் இவள் வாழ்ந்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சாலா வாழும் இதே டெய்ர் பகுதியில் மருத்துவமனை அருகில் இடம்பெயர்ந்தோர் தஞ்சமடைந்த மசூதி மற்றும் பள்ளி மீது நேற்று அதிகாலை இஸ்ரேல் குண்டுகளை வீசியது.
அதில் 26 பேர் உயிரிழந்தனர். 93 பேர் படுகாயமடைந்தனர். ஐநா குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின்[UNICEF] அறிக்கைத் தரவுகளில் படி சாலாவின் குழந்தை மிலானா காசாவில் கடந்த ஒரு வருடத்தில் போருக்கு மத்தியில் பிறந்து அவதிப்படும் 20,000 குழந்தைகளில் ஒருவள் ஆவாள்.
மரண வியாபாரம்
கணவனை இழந்து தனியே குழந்தையை தூக்கிக்கொண்டு குண்டுகளுக்கு பயந்து முகாம்களுக்கு முகாம் இடம்மாறி வரும் தாய்மார்கள் காசாவின் துயரத்துக்கு சாட்சிகளாக உள்ளனர். தற்கொலை எப்படி எதற்கும் தீர்வாக இருக்காதோ அதுபோல போர்களும் எதற்கும் தீர்வு கிடையாது என்பதை ஆயுதங்களை கொண்டாடும், வியாபாரம் செய்யும் மரண வியாபாரிகள் மக்களிடம் இருந்து மறைத்து வருகின்றனர். 'ஆயுதம் வாங்குற காசுக்கெல்லாம் அரிசி வாங்கியிருந்தா?' என்ற 'தம்பி' பட வசனமே தற்போதைய சூழலுக்கு பொருத்தமானதாக இருக்கக்கூடும்.
- கட்டமைப்பு வசதிகள் குடியிருப்பாளர்களின் அன்றாட தேவைகளை வளாகத்தை விட்டு வெளியேறாமல் பூர்த்தி செய்கிறது.
- 39 அடுக்குமாடி குடியிருப்புகளில் 20,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வசிக்கின்றனர்.
உலகின் மிகப்பெரிய குடியிருப்பு கட்டிடமான ரீஜென்ட் இன்டர்நேஷனலின் கண்கவர் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சீனாவின் கியான்ஜியாங் செஞ்சுரி சிட்டியில் அமைந்துள்ள இந்த 675 அடி உயர கட்டடக்கலை அதிசயம் ஆரம்பத்தில் உயர்தர ஓட்டலாக கட்டப்பட்டது. ஆனால் பின்னர் அது ஒரு விரிவான அடுக்குமாடி வளாகமாக மாற்றப்பட்டது.
S வடிவிலான ரீஜண்ட் இன்டர்நேஷனல் 1.47 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது மற்றும் அதன் 39 அடுக்குமாடி குடியிருப்புகளில் 20,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வசிக்கின்றனர்.
இதன் கட்டமைப்பு வசதிகள் குடியிருப்பாளர்களின் அன்றாட தேவைகளை வளாகத்தை விட்டு வெளியேறாமல் பூர்த்தி செய்கிறது.
இந்த வளாகத்தில் ஷாப்பிங் சென்டர்கள், உணவகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் உள்ளன.
கட்டிடத்திற்குள் உள்ள அதிநவீன உடற்பயிற்சி மையங்கள், உணவு கோர்ட், உட்புற நீச்சல் குளங்கள், மளிகைக் கடைகள், முடிதிருத்தும் கடைகள், நெயில் சலூன்கள் மற்றும் தோட்டங்கள் ஆகியவற்றை குடியிருப்பாளர்கள் அனுபவிக்கின்றனர்.
- ஈரானை தொடர்ந்து லெபனானும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்தது.
- இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்ள தங்கள் ராணுவம் தயாராக உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது
இஸ்ரேலில் ஒரு இரவு
பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் மீது கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 180 ராக்கெட்டுகளை சரமாரியாக ஏவியது ஈரான். 1 வருட கால பொறுமைக்கு பின்னர் மேற்கு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ஈரான் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இஸ்ரேல் வெகுகாலம் நிலைக்காது, மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் மதத்தவைவர் அயத்துல்லா காமினி கையில் ரைபிள் துப்பாக்கியுடன் பொதுவெளியில் தோன்றி பகிரங்க மிரட்டல் விடுத்தார்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்காவுடன் இணைந்து ஈரான் எண்ணெய்க் கிணறுகளையும், அணு சக்தித் தலங்களையும் தாக்க இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது. ஈரான் மிகப்பெரிய தவறிழைத்துவிட்டது என்றும் அதற்கான விலையை நிச்சயம் செலுத்தும் என்றும் இஸ்ரேல் அதிபர் நேதன்யாகு மிரட்டல் விடுத்திருந்தார்.
ஈரானில் ஒரு இரவு
அந்த வகையில் கடந்த வருடம் அக்டோபர் 7 அன்று ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதன் விளைவாக இந்த போர் தீவிரமானதால் தங்களின் மீது அதீ நாளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் என்று ஈரான் அச்சத்தில் உள்ளது.
எனவே நேற்றைய இரவு முழுவதும் ஈரானில் அனைத்து விமான சேவைகளும் திடீரென ரத்து செய்யப்பட்டன. நேற்று [ஞாயிற்றுக்கிழமை] இரவு 9 மணியில் இருந்து இன்று [திங்கள் கிழமை] காலை 6 மணி வரை அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக ஈரான் விமான போக்குவரத்து அமைப்பு தெரிவித்தது.

ஈரானை தொடர்ந்து லெபனானும் பெய்ரூட் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்தது. இந்நிலையில் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னர் ஈரானில் விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
தயார்
இதற்கிடையே இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்ள தங்கள் ராணுவம் தயாராக உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதற்கிடையே பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா புலனாய்வுத் தலைமையகம் மீதும், காசா பகுதிகள் மீதும் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. தங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலின் ஹைபா [HAIFA] நகர் மீது ஹிஸ்புல்லா ஏவுகணை வீசியுள்ளது.
- பிரேத பரிசோதனையில் அவர்கள் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
- இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கராச்சி:
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கைபத்கான் புரோகி கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 19-ந் தேதி ஒரே நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து 13 பேரும் உயிரிழந்தனர்.
பிரேத பரிசோதனையில் அவர்கள் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதாவது உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இது அவரது பெற்றோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த வாலிபரை திருமணம் செய்து வைக்கவும் மறுத்தனர்.
இது இளம்பெண்ணுக்கு கடும் ஆத்திரத்தை உண்டாக்கியது. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தனது குடும்பத்தையே தீர்த்துக்கட்டும் சதிகாரியாக மாறினார். இதற்கான திட்டத்தை தனது காதலன் யோசனைபடி அரங்கேற்றினார்.
அதாவது வீட்டில் ரொட்டி சமைக்க பயன்படுத்தும் கோதுமை மாவில் விஷத்தை கலந்தார். இதுதெரியாமல் சம்பவத்தன்று அந்த கோதுமை மாவில் இளம்பெண்ணின் குடும்பத்தினர் ரொட்டி சமைத்து சாப்பிட்டு அனைவரும் உயிரிழந்தனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த இளம்பெண்ணை நேற்று போலீசார் கைது செய்தனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய், தந்தை உள்பட குடும்ப உறவுகள் 13 பேரை இளம்பெண் விஷம் வைத்த கொன்ற சம்பவம் பாகிஸ்தானில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
- வடக்கு காசாவில் இருந்து இஸ்ரேலிய பகுதிகள் மீது ஏவுகணைகள் பாய்ந்தன.
- மத்திய பஸ் நிலையத்தில் உள்ள மெக் டொனால்ட்ஸ் உணவகத்தில் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது.
அக்டோபர் 7 தாக்குதல்
பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததாக இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டுவரும் ஹமாஸ் அமைப்பு கடந்த வருடம் இதே நாளில் [அக்டோபர் 7] முன்னெப்போதும் இல்லாத மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலை நோக்கி ஆயிரக்கணக்காக ராக்கெட்டுகள் சரமாரியாக பாய்ந்தன. ஆண்டுக்குள் தரைவழியாக ஊடுருவியும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதல்களில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் சுமார் 250 பேர் பணய கைதிகளாக பிடிப்பித்துச்செல்லப்பட்டனர். இதனால் கோபமுற்ற இஸ்ரேல் பணயக்கைதிகளை மீட்கவும் ஹமாஸை அழித்தொழிக்கவும் பாலஸ்தீனம் மீது கடந்த ஒரு வருடகாலமாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இதுவரை 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரமான போர் தொடங்கி 1 வருடம் ஆகிய நிலையிலும், அமைதி எட்டப்படாமல் அண்டை நாடான லெபனானுக்கும் போர் விரிவடைந்துள்ளது.
ஒரு வருடம்
பாலஸ்தீனதுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து ஹிஸ்புல்லாவும், ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களும் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, ஈரானும் 180 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது வீசியது.
இதற்கிடையே அக்டோபர் 7 தாக்குதலை நடத்திய ஹமாஸ், அதே நாளையொட்டி இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. வடக்கு காசாவில் இருந்து இஸ்ரேலிய பகுதிகள் மீது ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஒன்றை இடைமறித்து அழித்ததாகவும், மற்றவை திறந்த வெளியில் விழுந்து வெடித்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் நேற்றைய தினம் இஸ்ரேலிய நகரமான பீர்ஷெபா [Beersheba] மத்திய பஸ் நிலையத்தில் உள்ள மெக் டொனால்ட்ஸ் உணவகத்தில் நுழைந்த அஹமத் என்ற நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் எல்லை பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். அஹமத் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.

உலகம்
இதற்கிடையே இஸ்ரேல் பாலஸ்தீன போரை நிறுத்த வலியுறுத்தி நேற்றைய தினம் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி பேரணி நடத்தினர். மத்திய லண்டனில் சுமார் 40,000 பேர் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பேரணி நடத்தினர். பாரிஸ், ரோம், மணிலா, கேப் டவுன், நியூயார்க் என பலேவறு நாடுகளிலும் பெரிய அளவிலான பேரணிகள் நடத்தப்பட்டன. வாஷிங்டன் நகரில் அமைத்துள்ள வெள்ளை மாளிகை அருகிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

- லெபனானை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் படை தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
- லெபனானின் தெற்கே அமைந்த பயங்கரவாத சுரங்கத்தை தகர்த்து விட்டோம் என இஸ்ரேல் தெரிவித்தது.
டெல் அவிவ்:
சர்வதேச நாடுகளின் அழுத்தத்தையும் மீறி பாலஸ்தீனம் மற்றும் லெபனான்மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பாலஸ்தீனத்தில் இதுவரை 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேலின் நடத்திய பதிலடி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர், ஹிஸ்புல்லா அமைப்பின் தடுப்பு காவல் பிரிவின் தளபதி நபில் குவாவக் உள்பட பலர் கொல்லப்பட்டனர்.
லெபனானை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் படை தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், லெபனானின் தெற்கே அமைந்த பயங்கரவாத சுரங்கத்தின் 250 மீட்டர் பகுதியை தகர்த்து விட்டோம் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், அவர்கள் சுரங்கத்திற்குள் இருக்கும் காட்சிகள் காணப்படுகின்றன. இதில் சமையலறை ஒன்றும், வசிக்கும் இடம், போருக்கு பயன்படுத்தும் பைகள், குளிர்சாதன பெட்டி ஒன்று மற்றும் பிற பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. ஹிஸ்புல்லாவின் ரத்வான் படைகள் இஸ்ரேலுக்குள் படையெடுக்க பயன்படுத்துவதற்காக இந்த சுரங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
- கராச்சி விமான நிலையத்தைச் சுற்றியுள்ள இடங்கள் பாதுகாப்பு வளையம்கீழ் கொண்டு வரப்பட்டன.
- தொடர்ந்து அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.
கராச்சி:
பாகிஸ்தானில் உள்ள கராச்சி விமான நிலையத்திற்கு வெளியே திடீரென வெடிச்சத்தம் கேட்டது.
விமான நிலையத்திற்கு வெளியே டேங்கர் ஒன்று வெடித்ததாக போலீசாரும், மாகாண அரசாங்கமும் தெரிவித்தன. இதில் 4 பேர் காயம் அடைந்தனர், பல வாகனங்கள் சேதமடைந்தன.
ஆனால் சிந்து மாகாண உள்துறை மந்திரி ஜியா உல் ஹசன் உள்ளூர் தொலைக்காட்சியான ஜியோவிடம் கூறுகையில், இது வெளிநாட்டினர் மீதான தாக்குதல் என தெரிவித்தார்.
இதுதொடர்பான வீடியோவில் கார்கள் தீப்பிடித்து எரிவதும், அங்கிருந்து அடர்த்தியான புகை எழுவதும் பதிவானது.
கராச்சி விமான நிலையத்தைச் சுற்றியுள்ள இடங்கள் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ள நிலையில் விமான நிலையம் அருகே குண்டு வெடித்தது போன்ற சத்தம் கேட்டது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மகன் ஆசையாக கேட்டார் என்பதற்காக மகனுக்கு விலை உயர்ந்த பைக் வாங்கி கொடுத்துள்ளார்.
- பைக்கை தீ வைத்து எரித்ததோடு, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் பைக் கேட்டு அடம்பிடிப்பது அதிகரித்து வருகிறது.
செல்லக்குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காக பெற்றோரும் தங்கள் மகன்கள் கேட்கும் பைக்கை வாங்கி கொடுக்கிறார்கள்.
ஆனால் மகன்களோ அந்த பைக்கில் விபரீத சாகசங்கள் செய்து பிரச்சினையில் சிக்கி கொள்வதும் அடிக்கடி நடந்து வருகிறது. அப்படி ஒரு சம்பவம் மலேசியாவில் நடைபெற்றுள்ளது.
மலேசியா கோலாலம்பூரை சேர்ந்த ஷா ஆலம் என்பவர் தனது மகன் ஆசையாக கேட்டார் என்பதற்காக மகனுக்கு விலை உயர்ந்த பைக் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் அவரது மகனோ அந்த பைக் மூலம் பந்தய போட்டிகளில் பங்கேற்பதை வாடிக்கையாக கொண்டதோடு, வீட்டிற்கு மிகவும் தாமதமாக வந்துள்ளார்.
இதனால் மகனின் பாதுகாப்பு பற்றி கவலையடைந்த அவர், மகனுக்கு அறிவுரை கூறி திருத்த முயன்றார். ஆனால் அவரது மகன் தந்தையின் அறிவுரைகளை கண்டுகொள்ளாததால் மகனுக்கு பாடம் புகட்ட ஷா ஆலம் முடிவு செய்தார்.
அதன்படி ஷா ஆலம் தனது மகனுக்கு ஆசையாக வாங்கி கொடுத்த பைக்கை அவரே தீ வைத்து எரித்ததோடு, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
அந்த வீடியோ வைரலானதோடு ஷா ஆலமின் செயலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
- லெபனான் மீது குறிவைத்துள்ள இஸ்ரேல், காசா மீதான தாக்குதலையும் தீவிரப்படுத்தி உள்ளது.
- இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சமடைந்திருந்த மசூதி மற்றும் பள்ளியை குறிவைத்து இன்று அதிகாலை குண்டுகளை வீசியது
சர்வதேச நாடுகளின் அழுத்தத்தையும் மீறி பாலஸ்தீனம் லெபனான் மீது இஸ்ரேல் சரமாரியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீனத்தில் இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இதில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். இந்நிலையில் தற்போது லெபனான் மீது குறிவைத்து இஸ்ரேல் தாக்கி வந்தாலும், காசா மீதான தாக்குதலையும் தீவிரப்படுத்தி உள்ளது.
மத்திய காசாவின் டெய்ர் அல்-பலாஹ் நகரில் அல்-பலாஹ் நகரில் அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனைக்கு அருகே இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சமடைந்திருந்த மசூதி மற்றும் பள்ளியை குறிவைத்து இன்று அதிகாலை இஸ்ரேல் குண்டுகளை வீசியது.
இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் 93 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதற்கிடையே வடக்கு காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தப்பட்டுள்ள இஸ்ரேல் அங்குள்ள மக்களை வெளியேறும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது.
- அதற்கேற்றவாறு கனடாவின் கொள்கைகளைச் சீரமைத்து வருகிறோம்
- நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசுக்குத் தொடர்பு உள்ளது என ட்ரூடோ குற்றம்சாட்டினார்
இந்தியாவுக்கு எப்போதும் முழுமையான ஆதரவை வழங்குவோம் என்று கனடா தெரிவித்துள்ளது. கனடா தலைநகர் ஒடாவா [Ottawa] நகரில் பேசிய அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் டேவிட் மாரிசான், இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்குக் கனடா முற்றுமுதலான ஆதரவை அளிக்கிறது. இருப்பது ஒரே ஒரு இந்தியாதான், இதை தெளிவுபடுத்தியாக வேண்டும்.
இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டை நாங்கள் மதிக்கிறோம். சர்வதேச விவகாரங்களில் இந்தியா முக்கிய சக்தியாக வளர்ந்துள்ளது. அதற்கேற்றவாறு கனடாவின் கொள்கைகளைச் சீரமைத்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். இந்தியா எல்லையில் சீன ஆக்கிரமிப்பு சர்ச்சை, காஷ்மீரில் நடந்துவரும் பயங்கரவாத சம்பவங்கள், சீக்கியர்களுக்கு தனி நாடு கோரும் காலிஸ்தான் பிரிவினைவாதம் உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து கனடா இந்த கருத்தைத் தெரிவித்துள்ளது.

முன்னதாக மூன்று மாதங்களுக்கு முன்பு கனடாவில் வைத்து காலிஸ்தான் பிரிவினைவாதியான நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்திய அரசுக்குத் தொடர்பு உள்ளது என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டியிருந்தார். இதனால் கானடா- இந்தியா இடையே உரசல் போக்கு நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.
- தலையை சற்று அசைத்ததால் அவரது காதில் குண்டு உரசி நூலிழையில் உயிர் தப்பினார்
- "மிகவும் எளிமையான செய்தியை வழங்க இங்கு திரும்பி வந்துள்ளேன்
அதிபர் தேர்தல்
உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட அமெரிக்காவுக்கான அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராகக் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
பென்சில்வேனியா துப்பாக்கிசூடு
தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுவரும் டிரம்ப் மீது கொலை முயற்சிகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. முதலாவதாக கடந்த ஜீலை 13 ஆம் தேதி பென்சில்வேனியா மாகாணத்தில் பட்லர் பகுதியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த டிரம்ப் மீது தாமஸ் குரூக்ஸ் என்ற 20 வயது இளைஞன் துப்பாக்கிச்சூடு நடத்தினான். அப்போது தலையை சற்று அசைத்ததால் டிரம்ப் நூலிழையில் உயிர் தப்பினார். இருப்பினும் அவரது காதில் குண்டு உரசி காயம் ஏற்பட்டுள்ளது.

தாமஸ் குரூக்ஸ் அந்த இடத்திலே சுட்டுக் கொல்லப்பட்டான். இதைத்தொடர்ந்து புளோரிடா கோல்ப் மைதானத்தில் வைத்து கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி மற்றொரு கொலை முயற்சி நடந்தது. ஆனால் அதில் இருந்தும் அவர் உயிர்தப்பினார். இந்நிலையில் முதல் முதலில் பென்சில்வேனியா தன்மீது துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் டிரம்ப் தற்போது மீண்டும் பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறார்.

எலான் மஸ்க் விஜயம்
அவரோடு தொழிலதிபர் எலான் மஸ்கும் பிரச்சாரம் செய்ய வந்துள்ளார். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா மற்றும் எக்ஸ் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் இந்த அதிபர் தேர்தலில் டிரம்பின் தீவிர ஆதரவாளராக மாறியுள்ளார். வெற்றி பெற்றால் மஸ்க்குக்கு அமைச்சரவையில் முக்கிய இடம் தருவேன் என்றும் டிரம்ப் உறுதியளித்துள்ளார். தனது உயிருக்கு ஆபத்து நேர்ந்த இடத்துக்கே மீண்டும் திரும்பியுள்ள டிரம்ப் அங்கு வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளார்.

செய்தி
அங்கு திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசிய டிரம்ப், "மிகவும் எளிமையான செய்தியை வழங்க பட்லருக்கு (Butler) திரும்பி வந்துள்ளேன், நாம் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற போகிறோம், நாம் தேர்தலில் வெற்றி பெற போகிறோம் என்பது தான் அந்த செய்தி.
இங்கு என்மீது துப்பாக்கி சூடு நடத்தியவர் என்னையும் , உருவாக இருக்கும் மிகப்பெரிய இயக்கத்தையும் தடுக்கும் நோக்கத்துடன் இருந்தார்" என்று பேசியுள்ளார்.
மேலும் இந்த கூட்டத்தில் பேசிய எலான் மஸ்க், ஜனநாயக கட்சியினர் அமெரிக்க மக்களிடம் இருந்து, பேச்சுரிமையையும், ஆயுதம் வைத்து இருப்பதற்கான உரிமையையும் பறிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.






