என் மலர்
உலகம்
அல்கொய்தா அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடனின் இளைய மகன் உமர் பின்லேடன் (வயது 48). சவூதியில் பிறந்த இவர் ஆப்கானிஸ்தான், சூடான் நாடுகளில் வசித்தார்.

பின்னர் அவர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் வடக்கு பிரான்சில் உள்ள நார்மண்ட் என்ற இடத்தில் வசித்து வருகிறார். இங்கிலாந்தை சேர்ந்த தனது மனைவியுடன் உமர் பின்லேடன் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் உமர் பின்லேடனை பிரான்சில் இருந்து வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ரீடெய்லியூ கூறும்போது, `உமர் பின்லேடன், சமூக வலைதளங்களில் மறை முகமாக பயங்கரவாதத்தை ஆதரிக்கும் கருத்துக்களை வெளியிட்டார். இதனால் அவர் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு நலன்களுக்காக எடுக்கப்பட்ட இந்த முடிவின் சட்டபூர்வமான தன்மையை நீதிமன்றங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. உமர் பின்லேடன் எந்த காரணத்திற்காகவும் பிரான்ஸ் திரும்புவதை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
- சிறுமி உட்படப் படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- ஐ.நா.வின் நிவாரண உதவிகளைத் தடுக்கும் வண்ணம் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் இரண்டு புதிய சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாலஸ்தீன நகரமான காசா இஸ்ரேல் தாக்குதலில் உருக்குலைந்துள்ள நிலையில் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருகிறது. நேற்றைய தினம் மத்திய காசாவில் அழ- புரெஜ் [Al-Bureij] அகதி முகாம் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் டெய்ர் அல் பாலா பகுதியில் உள்ள நஸ்ரேத் முகாமில் உள்ள அல்- அவ்தா [Al-Awda] மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் சிறுமி உட்படப் படுகாயமடைந்தவர்களுக்கு அம்மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டெய்ர் அல் பாலா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெயர்ந்தோர் தஞ்சமடைந்த மசூதி மற்றும் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குகளில் 26 பேர் உயிரிழந்தனர். 93 பேர் படுகாயமடைந்தனர். நேற்று காலை மத்திய காசா மற்றும் வடக்குப் பகுதிகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளது.
மத்திய காசா பகுதியில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேற இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது. இதற்கு மத்தியில் ஐ.நா.வின் நிவாரண உதவிகளைத் தடுக்கும் வண்ணம் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் இரண்டு புதிய சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது பேரழிவை ஏற்படுத்தும் என்று ஐ.நா தலைவர் கவலை தெரிவித்துள்ளார்.

- ஆயிரக்கணக்கான ஹிஸ்புல்லாவினரை நஸ்ரல்லாவோடு சேர்த்து கொன்றிருக்கிறோம் என்று நேதன்யாகு தெரிவித்துள்ளார்
- இஸ்ரேல் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோவை தங்கள் நாட்டுக்குள் நுழைய தடை விதித்தது
ஹிஸ்புல்லா கொலை
ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அவ்வமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட பின்னர் தற்போது அடுத்த தலைவராக ஆக இருந்த வரையும் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
மேலும் ஆயிரக்கணக்கான ஹிஸ்புல்லாவினரை நஸ்ரல்லாவோடு சேர்த்து கொன்றிருக்கிறோம் என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார் . இதற்கிடையே கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஈரான் 180 ஏவுகணைகளை ஒரே இரவில் சரமாரியாக ஏவியது மத்திய கிழக்கு முழுமைக்கும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அன்டோனியோ குட்ரஸ்
இந்நிலையில் லெபனானில் முழு தீவிரமான போர் உருவாக உள்ளதாக ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸ் தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் வைத்து நேற்றைய தினம் பேசிய அவர், மத்திய கிழக்கு சூழல் எந்நேரமும் வெடிக்காதிருக்கும் வெடிபொருள் நிரம்பிய பீப்பாய்யை தாற்காலிகமாக தடுத்து வைத்திருப்பது போன்றது, இந்த பிரச்சனை இவ்வாறு பெரிதாகப் பரவும் என்று பல மாதங்களாக நான் எச்சரித்தேன்.
தற்போது ஆக்கிரமிக்கப்பட்ட தெற்கு முனையில்[பாலஸ்தீனம்] விஷயங்கள் கொதித்துக்கொண்டிருக்கிறது. லெபனான் மீதான தாக்குதல் மொத்த பகுதிகளையும் அச்சுறுத்தலில் தள்ளியுள்ளது. கடந்த சில நாட்களில் ஹிஸ்புல்லாவுக்கும் இஸ்ரேலிய படைகளுக்கும் இடையே புளூ லைனில் [லெபனான் - இஸ்ரேல் எல்லை] சண்டை நடந்துள்ளது.
இது ஐநா பாதுகாப்பு அமைப்பின் உடன்படிக்கைகள் 1701 மற்றும் 1559 ஐ மீறிய செயலாகும். தலைநகர் பெய்ரூட் உட்பட லெபனானில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 1500 பேர் வரை பலியாகியுள்ளனர். லெபனான் தரவுகளின்படி 10 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். அதில் 3 லட்சம் பேர் சிரியாவுக்குகள் சென்றுள்ளனர்.
ஏற்கனவே கடும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ள இஸ்ரேல் தாக்குதலால் லெபனானில் முழு தீவிரமான போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதை நிறுத்துவதற்கான நேரமும் உள்ளது. எல்லா நாடுகளினது இறையாண்மையும், பிராந்திய ஒருமைப்பாடும் மதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் காசாவில் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கொடுங்கனவாக மாறியுள்ள அட்டூழியங்கள் இரண்டாம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கிறது என்று தெரிவித்துள்ளார். ஐநாவின் நிவாரண உதவிகள் வழங்கும் [UNRWA] வை தடுக்க இஸ்ரேல் கொண்டுவர திட்டமிட்டிருக்கும் புதிய சட்டம் பேரழிவை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஆனால் இஸ்ரேல் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோவைதங்கள் நாட்டுக்குள் நுழைய தடை விதித்தது. ஐநாவின் நிவாரண உதவிகளை தடுத்து நிறுத்தும் புதிய இரண்டு மசோதாக்கள் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எச்சரிக்கை
இதற்கிடையே இஸ்ரேல் லெபனான் மீதான தாக்குதலை நிறுத்திக்கொள்ளவில்லை என்றால் நாங்கள் இஸ்ரேல் மீதான தாக்குதலை தீவிரப்படுத்துவோம் என்று ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போது கிர்யாத்[Kiryat], ஷமோனா [Shmona], மெடுலா[Metula] உள்ளிட்ட பகுதிகளுடன் சேர்ந்து வடக்கு இஸ்ரேலில் துறைமுக நகரமாகி ஹைபா மீதும் தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக வடக்கு இஸ்ரேல் மீது ஹிபுல்லா 85 ஏவுகணைகளை ஏவியதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
- லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
- லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இதையடுத்து ஹிஸ்புல்லா இயக்கத்தினரை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இந்த நிலையில், உயிரிழந்த நஸ்ரலாவை தொடர்ந்து ஹிஸ்புல்லா தலைவராக இருந்தவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் தெரிவித்துள்ளார்.

மேலும், ஹிஸ்புல்லா முன்னாள் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டதற்கு பிறகு அந்த அமைப்பை வழிநடத்த சரியான தலைமை இல்லை என்றும், அந்த அமைப்பு உடைந்து போயுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லா தனக்கு பின் ஹிஸ்புல்லாவின் உயர் அதிகாரியான ஹஷேம் சஃபிதீன் அந்த அமைப்பின் தலைவராக செயல்படுவார் என்று நஸ்ரல்லா உயிருடன் இருந்த போதே தெரிவித்து இருந்தார்.
- இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு 2 விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- அமெரிக்கா, இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி 2024-ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று இரு அமெரிக்கர்களுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு 2 விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மனித மூளையைப் போல இயங்க கணினிக்கு கற்றுத்தரும் மெஷின் லேர்னிங் கண்டுபிடிப்புக்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹாப்பீல்டு, இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெப்ரி ஹிண்டன் ஆகியோர் கூட்டாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- கடந்த 2006 ஆம் ஆண்டு, முதல் அணு ஆயுத சோதனையை மேற்கொண்ட வட கொரியா மேற்கொண்டது
- தென் கொரிய ராணுவம் அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து கூட்டாக அணு ஆயுத விவகாரங்களில் செயல்பட்டு வருகிறன.
கொரிய சாம்ராஜ்யம்
தென் கொரியா மற்றும் அமெரிக்கா மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவேன் என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரிய தீபகற்பத்தில் ஒரே நாடக இருந்த கொரிய சாம்ராஜ்யம் 1910 முதல் 1945 வரை ஜப்பானின் காலனியாக இருந்தது. இரண்டாம் உலகப் போரில் தோல்வியை ஒப்புக்கொண்டு ஜப்பான் சரணடைந்த பின்னர் அதே வருடத்தில் சுதந்திரம் பெற்ற கொரியா இரண்டாகப் பிரிந்தது.
வட கொரியா
வரலாற்றின் போக்கில் இரண்டு நாடுகளுக்குமிடையேயான பகைமை வளர்ந்து வந்தது. உலகின் இருந்து தன்னை முற்றிலுமாக துண்டித்து வாழும் வட கொரியா சமீப காலங்களாக ரஷியாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. தென் கொரியவுக்கு குப்பை பலூன்களை அனுப்புவது, எல்லையில் ராணுவ சோதனைகளைச் செய்வது என உலக நாடுகளையும் பயத்திலேயே வட கொரியா வைத்துள்ளது.

அணு ஆயுதம்
கடந்த 2006 ஆம் ஆண்டு, முதல் அணு ஆயுத சோதனையை மேற்கொண்ட வட கொரியா அதுமுதல் உலகின் அணு ஆயுத சக்தி கொண்ட நாடுகளுள் முக்கியமானதாக மாறியது, இந்தியா உள்ளிட்ட மற்றைய அணு ஆயுத நாடுகள் மேற்கு நாடுகளுக்குக் கட்டுப்பட்டிருக்கும் நிலையில் வட கொரியா சுதந்திரமாகச் செயல்பட்டு வருவதால் எப்போது என்ன செய்யும் என்று யூகிக்க முடியாமல் மேற்கு நாடுகள் குழம்பிப்போயுள்ளது.

கிம் ஜாங் உன்
கடந்த 2011 ஆம் ஆண்டு தனது தந்தையின் மறைவுக்குப் பின்னர் அதிகாரத்துக்கு வந்த கிம் ஜாங் உன் [40 வயது] மேற்குலகுக்குக் கடந்த காலங்களிலும் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தாலும்,தற்போதைய எச்சரிக்கை நவம்பர் 5 வர உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலை ஒட்டி வந்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

எச்சரிக்கை
நேற்றைய தினம் [ திங்கள்கிழமை] 'கிம் ஜாங் உன்' பல்கலைக்கழகத்தில் வைத்து நடந்த அரசு நிகழ்ச்சியில் உரையாற்றிய கிம் ஜாங் உன், நமக்கு எதிராக அவர்கள் ஆயுதப்படையை உபயோகித்தால் எந்த தயக்கமும் இல்லாமல் எதிரிகள் மீது தாக்குதல் நடத்தும் திறன் நம்மிடம் உள்ளது. தாக்குதல் என்று நான் சொன்னதில் அணு ஆயுதங்களும் அடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த எச்சரிக்கையானது தென் கொரிய ராணுவம் அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து கூட்டாக அணு ஆயுத விவகாரங்களில் செயல்பட்டு வரும் சூழலுக்கிடையில் கிம் ஜாங் உன் தரப்பில் இருந்து வந்துள்ளதாகவும் பார்க்கவேண்டியுள்ளது.
- பிரச்சாரக் கூட்டத்தில் ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த இஸ்ரேலியர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்
- அமரிக்க தேர்தலில் இஸ்ரேல் பிரச்சனை முக்கிய தாக்கத்தை செலுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததாக இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டுவரும் ஹமாஸ் அமைப்பு கடந்த வருடம் அக்டோபர் 7-ந்தேதி முன்னெப்போதும் இல்லாத மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலை நோக்கி ஆயிரக்கணக்காக ராக்கெட்டுகள் சரமாரியாக பாய்ந்தன. தரைவழியாக ஊடுருவியும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதல்களில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் சுமார் 250 பேர் பணய கைதிகளாக பிடிப்பித்துச்செல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த ஒரு வருடமாக பாலஸ்தீன நகரங்களான காசா, ராஃபா உள்ளிட்டவை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி சுமார் 41, 500 பேரை கொன்று குவித்துள்ளது. மேலும் லெபனான் மீது தாக்குதல், ஈரான் பதிலடி என மத்திய கிழக்கு முழுமைக்கும் போர் விரிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டிரம்ப், தான் மற்றும் அதிகாரத்தில் இருந்திருந்தால் அக்டோபர் 7 தாக்குதல் நடந்தே இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் பிரச்சாரக் கூட்டத்தில் ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த இஸ்ரேலியர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின் பேசிய அவர், இந்த நாளில் [அக்டோபர் 7] நடந்த கொடுங்கனவை நம்மால் [அமெரிக்கர்களால்] மறக்கவே முடியாது, நான் அதிபராக இருந்திருந்தால் இந்த தாக்குதல் நடந்தே இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரானின் அணு சக்தி நிலையங்களை முதலில் அளிக்க வேண்டும் என்று டிரம்ப் அதிரடி கருத்து ஒன்றைத் தெரிவித்திருந்தார். தற்போதைய அதிபர் ஜோ பைடன் இந்த விஷயத்தில் முற்றிலும் தவறாக இஸ்ரேலை வழிநடத்தி வருவதாக டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
அமரிக்க தேர்தலில் இஸ்ரேல் பிரச்சனை முக்கிய தாக்கத்தை செலுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமைதி உடன்படிக்கையை ஏற்காமல் இருப்பது அமெரிக்க தேர்தலில் ஆதிக்கம் செலுதத்தானோ என்று ஜோ பைடனும் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மக்கள் தொகையில் சுமார் 7.5 மில்லயன் மக்கள் யூதர்கள் ஆவர். இவர்களில் வாக்குரிமை பெற்றவர்களில் 27 சதவீதம் பேர் மட்டுமே கடந்த தேர்தலில் டிரம்பை ஆதரித்தனர். 65 சதவீதம் பேர் ஆளும் ஜனநாயக கட்சிக்கே ஆதரவளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒருவொரு சீட் இருக்கைகளுக்கு முன்னே பயணிகள் பொழுதுபோக்குக்காக டிவி மாட்டப்பட்டிருக்கும்.
- PAUSE செய்து நிறுத்தவோ அல்லது மொத்தமாக ஆப் செய்வவோ முடியவில்லை
ஆஸ்திரேலியாவில் இருந்து ஜப்பான் சென்ற விமானத்தில் பயணிகள் இருக்கைகளில் முன்னே உள்ள திரைகளில் ஆபாசப் படம் ஒளிபரப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆஸ்திரேலிய நகரமான சிட்னியில் [Sydney] இருந்து ஜப்பானில் உள்ள ஹனேடா [Haneda] நகருக்கு கடந்த வாரம் பயணிகளை ஏற்றிக்கொண்டு கட்னாஸ் [Qantas] QF59 விமானம் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுள்ளது.

ஒருவொரு சீட் இருக்கைகளுக்கு முன்னே பயணிகள் பொழுதுபோக்குக்காக டிவி மாட்டப்பட்டிருக்கும். அதில் தங்களுக்கு விருப்பமான படங்களை பயணிகள் தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம். ஆனால் அன்றைய தினம் பயணிகளால் படங்களை தேர்ந்தெடுக்க முடியவில்லை. அதற்குப் பதிலாக அனைவரின் திரைகளிலும் ஆபாசப் படம் ஒளிபரப்பாகியுள்ளது.
அதைப் பயணிகள் PAUSE செய்து நிறுத்தவோ அல்லது மொத்தமாக ஆப் செய்வவோ முடியாமல் இருந்ததால் பலருக்கு அசவுகரியமான சூழல் ஏற்பட்டுள்ளது.

விமானத்தின் எண்டர்டெயின்மென்ட் சிஸ்டமில் ஏற்பட்ட தொழில்நுட்ப பழுது காரணமாக இது நடத்ததாக விமான ஊழியர்கள் விளக்கம் அளித்துள்ளதுள்ளனர். சுமார் ஒரு மணி நேரம் ஆபாசப் படம் ஓடிய பிறகே பழுது சரிசெய்யப்பட்டு வேறு படங்களை மாற்ற முடிந்திருக்கிறது.
இது குறித்து விமானத்தில் பயணித்த சில பயணிகள் இணையத்தில் பேசியதை அடுத்து இந்த சம்பவம் வைரலாகி வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவத்துக்கு கட்னாஸ் விமான சேவை நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
- கடற்கரைகள் மற்றும் கடலில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
- கடற்கரையில் என்ன தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் தெரிவிக்கவில்லை.
டெல்அவிவ்:
பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தும் போரில் ஹமாசுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இதையடுத்து ஹிஸ்புல்லா இயக்கத்தினரை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதனால் ஹிஸ்புல்லா-இஸ்ரேல் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது.
லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. குறிப்பாக தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படுகிறது.
மேலும் தெற்கு லெபனான் எல்லைக்குள் நுழைந்த இஸ்ரேல் படையினர் தரைவழித் தாக்குதலையும் தொடங்கினர். இதற்கிடையே லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் விரிவுப்படுத்தியது. அந்நாட்டின் வடக்கு பகுதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தநிலையில் லெபனானின் தெற்கு கடற்கரையில் தாக்குதல் தொடங்கப்பட உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் கூறும்போது, லெபனானின் தெற்கு கடற்கரையில் விரைவில் ராணுவ நடவடிக்கைகளை தொடங்க உள்ளோம். எனவே பொதுமக்கள் கடற்கரைகளில் இருந்து விலகி இருக்குமாறு வலியுறுத்துகிறோம்.
மீனவர்கள் கடலில் இருந்து 60 கிலோமீட்டர் தூரத்துக்கு வெளியே இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். லெபனானின் அவாலி ஆற்றின் தெற்கே வசிப்பவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக கடற்கரைகள் மற்றும் கடலில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இந்த நதி இஸ்ரேல்-லெபனான் எல்லைக்கு வடக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் மத்திய தரைக்கடலில் கலக்கிறது. லெபனானின் தெற்கு கடற்கரையில் என்ன தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே காசாவில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் மீது ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதேபோல் வடக்கு இஸ்ரேலிய நகரமான ஹைபாவை குறிவைத்து லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ஏவுகணைகள் வீசினர். இந்த தாக்குதலில் சிலர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
- கடந்த மாதம் 21-ந்தேதி சின்வார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
- கத்தாருடன் ரகசியமாக பேசியதாக தகவல்.
ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரானுக்கு சென்றிருந்தபோது கொல்லப்பட்டார். அவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஹமாசின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் பொறுப்பேற்றார். இதற்கிடையே கடந்த மாதம் 21-ந்தேதி இஸ்ரேல் தாக்குதலில் சின்வார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இதை உறுதி செய்யும் முயற்சியில் இஸ்ரேல் ஈடுபட்டு வந்தது.
இந்த நிலையில் யாஹ்யா சின்வார் உயிருடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் தலைவர் சின்வார் உயிருடன் இருப்பதாகவும், அவர் கத்தாருடன் ரகசியமாக பேசியதாவும் இஸ்ரேலிய ஊடகம் தெரிவித்து இருக்கிறது.
- சைரன்கள் ஒலித்த இடங்களின் வரைபடத்தையும் IDF பகிர்ந்துள்ளது.
- ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு மத்திய இஸ்ரேலில் உள்ள அனைத்து இடங்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின.
பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததாக இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டுவரும் ஹமாஸ் அமைப்பு கடந்த வருடம் அக்டோபர் 7-ந்தேதி முன்னெப்போதும் இல்லாத மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலை நோக்கி ஆயிரக்கணக்காக ராக்கெட்டுகள் சரமாரியாக பாய்ந்தன. ஓர் ஆண்டுக்குள் தரைவழியாக ஊடுருவியும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதல்களில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் சுமார் 250 பேர் பணய கைதிகளாக பிடிப்பித்துச்செல்லப்பட்டனர். இதனால் கோபமுற்ற இஸ்ரேல் பணயக்கைதிகளை மீட்கவும் ஹமாஸை அழித்தொழிக்கவும் பாலஸ்தீனம் மீது கடந்த ஒரு வருடகாலமாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இதுவரை 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலில் 1,200 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட கொடிய தாக்குதல்களின் முதல் ஆண்டு நினைவு நாளில் இஸ்ரேல் மீது ஏமனில் இருந்து தரையிலிருந்து மேற்பரப்பு ஏவுகணைகள் வீசப்பட்ட பின்னர் டெல் அவிவ் உட்பட மத்திய இஸ்ரேல் முழுவதும் வான்வழி தாக்குதல் சைரன்கள் எதிரொலித்தன. ஏவுகணையை யார் வீசினார்கள் என்று இஸ்ரேல் குறிப்பிடவில்லை, ஆனால் ஈரான் ஆதரவு ஹூதிகள் - ஏமனில் உள்ள ஒரு ஷியா போராளிக் குழு - கடந்த ஒரு வருடத்தில் காசாவில் பாலஸ்தீனியர்களுடன் ஒற்றுமையாக இஸ்ரேலை பல முறை தாக்கியுள்ளது.
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ள வீடியோவில் சைரன் ஒலித்ததுடன் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள ஓடி ஒளியும் காட்சி காண்போரை கவலை அடைய செய்துள்ளது.
ஹமாஸ் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இஸ்ரேல் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது வான்வழித் தாக்குதல் தொடர்பான சைரன்கள் ஒலிக்கும்போது மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள ஓடி ஒளிகின்றனர். மேலும் பத்திரிகையாளர்கள் பலர் தரையில் படுத்து உள்ளனர்.
இதனிடையே, ஓராண்டு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், ராக்கெட்டுகளில் இருந்து தஞ்சம் புகுந்தவர்களின் படத்தை இஸ்ரேல் பாதுகாப்புப் படை பகிர்ந்துள்ளது.
சைரன்கள் ஒலித்த இடங்களின் வரைபடத்தையும் IDF பகிர்ந்துள்ளது. ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு மத்திய இஸ்ரேலில் உள்ள அனைத்து இடங்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின என்பது குறிப்பிடத்தக்கது.
- பயங்கரவாதிகளிடம் இருந்து 6 கையெறி குண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
- துப்பாக்கி சூட்டின் போது 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதேசமயம், 8 பேர் தப்பியோடினர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மியான்வாலி மாவட்டத்தின் மேகர்வால் பகுதியில் பயங்கரவாத எதிர்ப்புத்துறை போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக பயங்கரவாத எதிர்ப்புத்துறை போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகர்வால் பகுதியில் உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இது பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாத எதிர்ப்புத்துறை போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டைக்கு வழிவகுத்தது.
இந்த துப்பாக்கி சூட்டின் போது, 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதேசமயம், 8 பேர் தப்பியோடினர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் பயங்கரவாதிகளிடம் இருந்து 6 கையெறி குண்டுகள், 7 கலாஷ்னிகோவ்கள், துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






