என் மலர்tooltip icon

    உலகம்

    • கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கும் ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல்
    • அதேவேளையில் மிட்-ரேஞ்ச் பாலிஸ்டிக் என்ற புதிய ஏவுகணை மூலம் நடத்தியதாக புதின் சொல்கிறார்

    ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து ஆயிரம் நாட்களை தாண்டியுள்ள நிலையிலும் சண்டை முடிவுக்கு வரவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன் உக்ரைன் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அனுமதி அளித்தார்.

    இதனைத் தொடர்ந்து உக்ரைன் ரஷியா மீது அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக உக்ரைன் ரஷியா ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது. உக்ரைன் மீது முதன்முறையாக கண்டம் விட்டு கண்டம் தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தியதாக உக்ரைன் குற்றம்சாட்டியது.

    இவ்வாறு செய்தி வந்த நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மிட்-ரேஞ்ச் பாலிஸ்டிக் ஏவுகணையை உக்ரைன் பகுதி மீது செலுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் ஏவுகணை உக்ரைன் இலக்கை துல்லியமாக தாக்கி வெற்றிகரமாக அமைந்தது என புதின் தெரிவித்துள்ளார். இந்த ஏவுகணைக்கு ஒரேஷ்னிக் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    ஒரேஷ்னிக் அணு அல்லாத ஹைப்பர்சோனிக் கட்டமைப்பு கொண்டது. நொடிக்கு 2.5 முதல் 3 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. நவீன ஏர் பாதுகாப்பு சிஸ்டங்கள் கூட இதை தடுத்து நிறுத்த முடியாது. தடுத்து நிறுத்துவதற்கான சாத்தியம் இல்லை. இன்றைய நிலவரப்படி, இந்த ஏவுகணையை எதிர்கொள்ள எந்த வழியும் இல்லை என புதின் தெரிவித்துள்ளார்.

    ரஷியாவை நோக்கி நேட்டோ நாடுகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த ஒரேஷ்னிக் சோதனை எனத் தெரிவித்துள்ளார்.

    • மார்கரெட் சோலா என்ற அந்த மூதாட்டியின் பேத்தி நியூயார்க்கில் ‘மேக்கப்’ கலைஞராக உள்ளார்.
    • புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

    வயது என்பது வெறும் நம்பர்தான் என்பார்கள். இதற்கு ஏற்றாற்போல ஆப்பிரிக்காவின் ஜாம்பியாவில் உள்ள கிராமத்தை சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் பேஷன் அழகியாக மாறி உள்ளார். மார்கரெட் சோலா என்ற அந்த மூதாட்டியின் பேத்தி நியூயார்க்கில் 'மேக்கப்' கலைஞராக உள்ளார்.

    அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய சொந்த நாடான ஜாம்பியாவுக்கு வந்திருந்து தனது பாட்டியை சந்தித்தார். அப்போது பாட்டிக்கு நவநாகரீக உடைகள் அணிவித்தும், விக் அணிவித்தும் விதவிதமாக புகைப்படம் எடுத்தார்.

    இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இதனைத்தொடர்ந்து அவருக்கு பிரபல ஹாலிவுட் இணைய தொடரிலும் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.



    • எஞ்சிய வழக்குகளில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றன.
    • தோஷகானா வழக்கில் இம்ரான்கானுக்கு இஸ்லாமாபாத் ஐகோர்ட் நேற்று முன்தினம் ஜாமின் வழங்கியது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஊழல் உள்பட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதில் பல வழக்குகளில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய வழக்குகளில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றன.

    அந்த வகையில் அரசு கருவூலத்துக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியது தொடர்பான தோஷகானா வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகிய இருவரும் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் தோஷகானா வழக்கில் இம்ரான்கானுக்கு இஸ்லாமாபாத் ஐகோர்ட் நேற்று முன்தினம் ஜாமின் வழங்கியது. எனினும் இம்ரான்கான் மீது இன்னும் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவாரா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.

    இந்த நிலையில் தோஷகானா வழக்கில் ஜாமின் வழங்கப்பட்ட சில மணி நேரத்திலேயே மற்றொரு வழக்கில் இம்ரான்கானை போலீசார் கைது செய்தனர். கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிப் இ இன்சாப் கட்சியின் சார்பில் நடைபெற்ற போராட்டம் தொடர்பாக இம்ரான்கான் மீது பயங்கரவாதம் மற்றும் பிற குற்றச்சாட்டுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில்தான் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    • கயானா அதிபர் முகமது இர்பான் அலியை பிரதமர் மோடி சந்தித்தார்.
    • சரஸ்வதி வித்யா நிகேதன் மாணவர்கள் வந்தே மாதரம் பாடல் பாடி பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    ஜார்ஜ் டவுன்:

    பிரதமர் நரேந்திர மோடி தனது சுற்றுப்பயணத்தின் 3வது கட்டமாக கயானா சென்றார். தலைநகர் ஜார்ஜ் டவுன் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    கயானா அதிபர் முகமது இர்பான் அலியை பிரதமர் மோடி சந்தித்தார். இரு நாட்டு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

    கயானா தலைநகர் ஜார்ஜ் டவுனில் உள்ள புரோமெனிடா பூங்காவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து, அங்குள்ள சரஸ்வதி வித்யா நிகேதன் பள்ளிக்கு பிரதமர் மோடி சென்றார். அங்குள்ள மாணவர்கள் வந்தே மாதரம் மற்றும் தேசபக்திப் பாடல்களைப் பாடி பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    இந்நிலையில், அதிபர் முகமது இர்பான் அலி மற்றும் பிரதமர் மோடி கயானாவில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்களைச் சந்தித்துப் பேசினர். கிரிக்கெட் வீரர்கள் பிரதமர் மோடிக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக அளித்தனர். அப்போது பேசிய அவர், இரு நாடுகளையும் கிரிக்கெட் இணைத்துள்ளது என தெரிவித்தார்.

    • கயானாவில் உள்ள காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
    • சரஸ்வதி வித்யா நிகேதன் மாணவர்கள் வந்தே மாதரம் பாடல் பாடி பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    ஜார்ஜ் டவுன்:

    பிரதமர் நரேந்திர மோடி 3 நாடுகளுக்கான அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். முதலில் நைஜீரியா சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபரை சந்தித்தார். நைஜீரியா பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி பிரேசில் சென்றார்.

    பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதையடுத்து, பிரேசில் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி கயானா சென்றார்.

    கயானா தலைநகர் ஜார்ஜ் டவுன் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கயானா அதிபர் முகமது இர்பான் அலியை பிரதமர் மோடி சந்தித்தார். இரு நாட்டு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

    இந்நிலையில், கயானா தலைநகர் ஜார்ஜ் டவுனில் அமைந்துள்ள சரஸ்வதி வித்யா நிகேதன் பள்ளிக்கு பிரதமர் மோடி சென்றார். அங்குள்ள மாணவர்கள் வந்தே மாதரம் மற்றும் தேசபக்திப் பாடல்களைப் பாடி பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    தொடர்ந்து அங்குள்ள வகுப்பறைக்குச் சென்ற பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடினார். நடன பயிற்சியையும் பார்வையிட்டார்.

    முன்னதாக, ஜார்ஜ் டவுனில் உள்ள புரோமெனிடா பூங்காவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    • பழங்குடி மக்கள் பயணம் செய்த வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு.
    • இந்தத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் லஷ்கர்-இ-இஸ்லாம் அமைப்பைச் சேர்ந்த 2 முக்கிய கமாண்டர்கள் உள்பட 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அருகிலிருந்த வீடுகளில் வசித்த பொதுமக்கள் சிலரும் காயமடைந்தனர்.

    இதற்கிடையே, பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் நேற்று பழங்குடி மக்கள் பயணம் செய்த வாகனங்கள்மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 38 பேர் உயிரிழந்தனர் என்றும், படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர். 20க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்தக் கொடூர தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

    தாக்குதல் நடந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    • வரலாறு, கலாச்சாரத்தை அறிய நான் இங்கு வந்தேன்.
    • முடிவுகள் மனிதகுலத்திற்கு நன்மை பயக்கும்.

    மூன்று நாடுகள் பயணமாக கயானா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றினார். முன்னதாக கயானாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாராளுமன்ற உரையில், பிரதமர் மோடி 14 ஆண்டுகளுக்கு முன்பு தான் மேற்கொண்ட கயானா பயணம் குறித்தும் பேசினார்.

    கயானா பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசும் போது, "நேற்று, கயானா எனக்கு அதன் உயரிய மரியாதையை வழங்கியது. இந்த கவுரவத்திற்காக அனைத்து கயானிய மக்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், அதை இந்திய குடிமக்கள் அனைவருக்கும் அர்ப்பணித்துக் கொள்கிறேன்."

    "சுமார் 180 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு இந்தியர் கயானாவிற்கு வந்தார். அன்றிலிருந்து, நல்லது-கெட்டது, எல்லா சூழ்நிலைகளிலும், இந்தியா-கயானா உறவுகள் உள்ளன. 14 ஆண்டுகளுக்கு முன்பு, நான் இந்த அழகான நாட்டிற்கு மிகுந்த ஆர்வம் கொண்ட நபராக வந்தேன். பொதுவாக, மக்கள் திகைப்பூட்டும் இடங்களுக்கு பயணம் செய்ய விரும்புகிறார்கள், ஆனால் கயானாவின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை அறிய நான் இங்கு வந்தேன்."

     


    "இன்று, 'முதலில் ஜனநாயகம், மனிதநேயம்' என்பதே நம்மை முன்னோக்கி நகர்த்துவதற்கான வலுவான மந்திரம். 'முதலில் ஜனநாயகம்' என்ற உணர்வு, அனைவரையும் அழைத்துச் செல்லவும், அனைவரின் வளர்ச்சியில் பங்கேற்க நமக்கு கற்றுக்கொடுக்கிறது. 'மனிதநேயம் முதலில்' என்ற உணர்வு நமது முடிவுகளின் திசையை தீர்மானிக்கிறது. 'மனிதநேயம் முதலில்' என்பது முடிவுகளின் அடிப்படையாக மாறும்போது, முடிவுகள் மனிதகுலத்திற்கு நன்மை பயக்கும்."

    "இந்தியாவும் கயானாவும் சுதந்திரம் அடைந்தபோது வெவ்வேறு சவால்கள் இருந்தன. இன்று, 21 ஆம் நூற்றாண்டில், உலகம் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. கொரோனாவுக்குப் பிறகு, நாம் அனைவரும் ஒரு புதிய உலகை நோக்கி செல்ல வேண்டியிருந்தது. இருப்பினும், உலகம் மற்ற பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டது."

    "முதலில் ஜனநாயகம், மனிதநேயம் என்ற உணர்வைப் பின்பற்றி, இன்று இந்தியா ஒரு விஸ்வ பந்துவாக உலகிற்கு தனது கடமைகளை நிறைவேற்றி வருகிறது. உலகளாவிய ரீதியில் ஒரு பிரச்சனை எழும் போதெல்லாம், இந்தியாவே முதல் பதிலளிப்பவராக அடியெடுத்து வைக்கிறது. கொரோனா குழப்பத்தின் போது, ஒவ்வொரு நாடும் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள முயன்றன. அந்த நேரத்தில், இந்தியா 150-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளைப் பகிர்ந்து கொண்டது."

    "நாங்கள் ஒருபோதும் விரிவாக்க உணர்வோடு முன்னேறவில்லை. வளங்களைக் கைப்பற்றுவது, வளங்களைப் பிடுங்குவது போன்ற மனப்பான்மையிலிருந்து நாம் எப்போதும் விலகியே இருக்கிறோம். இன்று இந்தியா எல்லா வகையிலும் உலக வளர்ச்சிக்கு ஆதரவாக நிற்கிறது, அமைதிக்கு ஆதரவாக நிற்கிறது. இந்த உணர்வுடன், இன்று இந்தியாவும் உலகளாவிய தெற்கின் குரலாக மாறியுள்ளது."

    "இது உலகில் மோதல்களுக்கான நேரம் அல்ல, மோதலை உருவாக்கும் சூழ்நிலைகளை கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்கான நேரம். இன்று பயங்கரவாதம், போதைப்பொருள், சைபர் கிரைம் என எத்தனையோ சவால்கள் உள்ளன. அவற்றை எதிர்த்துப் போராடுவதன் மூலம் மட்டுமே நம் வருங்கால சந்ததியினரின் எதிர்காலத்தை வடிவமைக்க முடியும்," என்று தெரிவித்தார்.

    • கடந்த 13 மாதங்களாக மோதல் நடைபெற்று வருகிறது.
    • பலரின் உடல்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்க கூடும்.

    ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதோடு, இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக ஹமாஸ் காசா முனைக்கு கடத்திச் சென்றது.

    இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த 13 மாதங்களாக மோதல் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், காசா முனையில் இதுவரை 44 ஆயிரத்து 056 பேர் உயிரிழந்து உள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 1 லட்சத்து 04 ஆயிரத்து 268 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று கூறப்படுகிறது. உயிரிழந்த பலரின் உடல்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்க கூடும் என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று காசா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    போரில் இதுவரை ஹமாஸ் ஆயுதக்குழுவை சேர்ந்த 17 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

    முன்னதாக காசா இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தென் ஆப்பிரிக்கா தொடர்ந்த வழக்கில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இஸ்ரேல் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கேலன்ட், ஹமாஸ் தலைவர் முகமது தியாப் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது.

    சர்வதேச அரசியல், நீண்ட கால முரண்கள் என பல்வேறு காரணங்களை கூறி தாக்குதல் நடத்துவது, தாக்குதலுக்கு பதில் தாக்குதல் மற்றும் போர் என்ற பெயரில் அப்பாவி உயிர்கள் அதிகளவில் படுகொலை செய்யப்படுவது உலக அமைதியை சீர்குலைத்து வருகிறது.

    அந்த வகையில் போரின் போர்வையில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்தது சர்வதேச நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு இருப்பது இருதரப்பு போரின் தீவிரத்தன்மையை குறைக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    • இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு.
    • 1.85 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய அதானி நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

    சூரிய மின்சக்தி ஒப்பந்தம் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,029 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொழிலதிபர் கவுதம் அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதன் காரணமாக, கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி ஆகியோருக்கு நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

    இந்நிலையில், நீதிமன்ற பிடிவாரண்ட் உத்தரவை தொடர்ந்து கென்யாவில் அதானி நிறுவனம் மேற்கொள்ள இருந்த விமான நிலைய விரிவாக்கம், மின்சார திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ, விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கான செயல்முறையை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    கென்யாவின் நைரோபி விமான நிலைய விரிவாக்கத்திற்கு 1.85 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய அதானி நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

    ஆப்பிரிக்காவின் பரபரப்பான விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு பதிலாக அதனை 30 ஆண்டுகள் குத்தகைக்கு எடுக்கவும் திட்டமிடப்பட்டது.

    ஆனால், விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு 30 ஆண்டுகள் குத்தகைக்கு விடும் ஒப்பந்தத்திற்கு கென்ய உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ருமேசா, 215.16 செமீ (7 அடி 1 அங்குலம்) உலகின் உயரமான பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
    • ஜோதி அம்கே, 62.8 செமீ (2 அடி 1 அங்குலம்) உலகின் உயரம் குறைந்த பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.

    துருக்கியைச் சேர்ந்த 27 வயதான ருமேசா, 215.16 செமீ (7 அடி 1 அங்குலம்) உலகின் உயரமான பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.

    இந்தியாவை சேர்ந்த 30 வயதான ஜோதி அம்கே, 62.8 செமீ (2 அடி 1 அங்குலம்) உலகின் உயரம் குறைந்த பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.

    2024 கின்னஸ் உலக சாதனை தினத்தை கொண்டாடுவதற்காக, உலகின் மிக உயரமான பெண்ணான ருமேசா கெல்கியும், உலகின் உயரம் குறைந்த பெண்ணான ஜோதி அம்கேயும் லண்டனின் புகழ்பெற்ற சவோய் ஓட்டலில் தேநீர் அருந்துவதற்காக சந்தித்தனர்.

    அவர்கள் இருவரும் சந்தித்த வீடியோவை கின்னஸ் உலக சாதனையாளர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

    • பழங்குடி மக்கள் பயணம் செய்த வாகனங்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு.
    • வாகனங்கள் சென்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக தகவல்.

    பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையில் பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

    இதில் லஷ்கர்-இ-இஸ்லாம் அமைப்பைச் சேர்ந்த இரண்டு முக்கிய கமாண்டர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். 6 பேர் காயம் அடைந்தனர்.

    இந்த சண்டையில் அருகில் இருந்து வீடுகளில் வசித்த பொதுமக்கள் சிலரும் காயம் அடைந்தனர்.

    இந்நிலையில், இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் இன்று பழங்குடி மக்கள் பயணம் செய்த வாகனங்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 8 பெண்கள் மற்றும் 5 குழந்தைகள் அடங்குவர்.

    மேலும், படுகாயமடைந்த 29 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வாகனங்கள் சென்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • இஸ்ரேல் அளித்த அறிக்கைகளை நிராகரித்த நீதிமன்றம் மூவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
    • இஸ்ரேல் மனிதநேய விரோத செயல்களில் ஈடுபட்டதாக சர்வதேச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    தென் ஆப்பிரிக்கா தொடர்ந்த காசா இனப்படுகொலை வழக்கில் நெதன்யாகுவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

    இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கேலன்ட், ஹமாஸ் தலைவர் முகமது தியாப் ஆகியோருக்கும் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பாலஸ்தீன மக்களின் மரணம் தொடர்பாக இஸ்ரேல் அளித்த அறிக்கைகளை நிராகரித்த நீதிமன்றம் மூவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

    போர் என்ற பெயரில் இஸ்ரேல் மனிதநேய விரோத செயல்களில் ஈடுபட்டதாக சர்வதேச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின், ஜப்பான் உள்ளிட்ட 124 ICC உறுப்பு நாடுகள் தங்கள் நாட்டிற்குள் இவர்கள் நுழைந்தால் கைது செய்ய வேண்டியது கட்டாயமாகிறது.

    ×