search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bat"

    • கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவ என்ன காரணம் என்பதை கண்டறியும் பணியில் மத்திய குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.
    • மொத்தம் 12 வவ்வால்களின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியபோது, அங்கு டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் பரவியது. காய்ச்சல் பாதிப்புக்குள்ளான ஆயிரக்கணக்கானோர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றனர்.

    இந்நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவியது.நிபா வைரஸ் பாதித்து 2 பேர் அடுத்தடுத்து பலியாகினர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் மேலும் சிலருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. நிபா தொற்று பரவலை கட்டுப்படுத்த கோழிக்கோடு மாவட்டத்தில் சுகாதாரத் துறையினர் முகாமிட்டனர்.

    அவர்கள் தொற்று பாதித்த பகுதிகளில் தொடர்ந்து கண்காணித்தனர். அந்த பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கையாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டது.

    புதிதாக யாருக்கும் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே, அங்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் படிப்படியாக தளர்த்தப்பட்டன. கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவ என்ன காரணம் என்பதை கண்டறியும் பணியில் மத்திய குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.

    அவர்கள் தொற்று பாதித்த பகுதிகளில் இருந்த தோட்டங்களில் தங்கியிருக்கும் வவ்வால்களின் மாதிரிகளை சேகரித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு பரிசோதனைக்கு அனுப்பி இருந்தனர். மொத்தம் 12 வவ்வால்களின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

    அவற்றில் சில வவ்வால்களுக்கு நிபா வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் வவ்வால்கள் மூலமாகவே கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தொற்று பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

    இது குறித்து கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறும்போது, "கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவியதற்கு வவ்வால்கள் தான் காரணம் என்பது உறுதியாகி உள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதனை உறுதிப்படுத்தி மின்னஞ்சல் அனுப்பி உள்ளது" என்று தெரிவித்தார்.

    • கோழிக்கோடு நகரில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.
    • நோயாளிகளுக்குத் தேவைப்படும் தடுப்பு மருந்தை வழங்க தேசிய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புக்கொண்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் காய்ச்சலைத் தொடா்ந்து 2 போ் கடந்த திங்கள்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து, அவா்களுடன் தொடர்பில் இருந்த உறவினா்கள் 4 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களின் ரத்த மாதிரிகள், நிபா தொற்று பரிசோதனைக்காக புனேவில் அமைந்துள்ள தேசிய தீநுண்மியியல் கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பரிசோதனையின் முடிவில், உயிரிழந்த 2 பேருக்கும் நிபா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டிருந்தது உறுதிப்படுத்தப்பட்டதாக மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று முன்தினம் தெரிவித்தாா். உயிரிழந்தவா் ஒருவரின் 9 வயது மகன் மற்றும் உறவினா் என 2 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது.

    இதைத் தொடா்ந்து, மாவட்டம் முழுவதும் சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கோழிக்கோடு நகரில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.

    கேரள சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் தற்போது நடைபெற்று வரும் நிலையில், நிபா தொற்று பாதிப்பு தொடா்பாக பேரவையில் கேள்விகள் எழுப்பப்பட்டன.

    அதற்கு பதிலளித்துப் பேசிய மாநில சுகாதாரத் துறை மந்திரி வீணா ஜாா்ஜ், 'மாநிலத்தில் பரவும் நிபா வைரசானது அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட வங்கதேச வகையைச் சாா்ந்தது. ஆனால், தொற்று பாதிப்பு குறைவாகவே உள்ளது.

    தேசிய தீநுண்மியியல் கழகத்தின் (என்.ஐ.வி.) தொற்றுநோயியல் நிபுணா்கள் சென்னையில் இருந்து கேரளாவுக்கு வந்து தொற்று பாதிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொள்வா். நிபா தொற்று பாதித்த நோயாளிகளுக்குத் தேவைப்படும் தடுப்பு மருந்தை வழங்க தேசிய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புக்கொண்டுள்ளது.

    கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் தற்காலிக ஆய்வகம் அமைத்து நிபா தொற்றைப் பரிசோதிக்கவும் மாநிலத்தில் வௌவால்கள் குறித்து கணக்கெடுத்து ஆய்வு நடத்தவும் புனே என்.ஐ.வி. குழு வருகின்றனா்.

    கண்காணிப்பு, மாதிரி பரிசோதனை, ஆராய்ச்சி மேலாண்மை, தொடா்பு கண்டறிதல், நோயாளிகளின் போக்குவரத்து மேலாண்மை மற்றும் பிற பணிகளுக்காக 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொற்று பரவலைத் தடுப் பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திறம்பட மேற்கொள்ளப் பட்டு வருகிறது' என்றாா்.

    தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள கோழிக்கோடு மாவட்டத்தின் ஆத்தஞ்சேரி, மருதோங்கரா, திருவள்ளூா், குட்டியாடி, காயக்கொடி, வில்லியப்பள்ளி, கவிலும்பாறை ஆகிய 7 கிராமங்கள் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது தவிர புறமேரி கிராமப் பஞ்சாயத்தில் ஒரு வாா்டு கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சுமார் 50-க்கும் மேற்பட்ட வவ்வால்கள் இறந்து கீழே விழுந்தன.
    • போக்குவரத்துதுறை அதிகாரிகள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த மரங்களில் வவ்வால்கள் தலைகீழாகதொங்கி வருகிறது. பகல் நேரங்களில் தலைகீழாக தொங்கும் வவ்வால்கள் இரவு நேரங்களில் பறந்து திரியும்.நாகர்கோவில் ராணி தோட்டம் டெப்போ பகுதியில் 3 பழமை வாய்ந்த மரம் உள்ளது.

    இந்த மரங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வவ்வால்கள் தொங்குவது வழக்கம். இதனால் இங்கு இரவு நேரங்களில் வவ்வால்கள் சத்தம் அதிகமாக இருக்கும். நேற்றும் வழக்கம் போல் ஏராளமான வவ்வால்கள் தொங்கிக்கொண்டு இருந்தது.

    இந்நிலையில் இன்று காலை மரத்திலிருந்து வவ்வால்கள் இறந்து கீழே விழுந்தன. ஒன்றன்பின் ஒன்றாக வவ்வால்கள் இறந்து விழுந்து கொண்டே இருந்தது.சுமார் 50-க்கும் மேற்பட்ட வவ்வால்கள் இறந்து கீழே விழுந்தன. கீழே விழுந்த வவ்வால்களை அந்த பகுதியில் சுற்றி திரிந்த நாய்கள் தூக்கி சென்றது. இதை பார்த்த போக்குவரத்துதுறை அதிகாரிகள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    மேலும் போலீசுக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த மேலும் சில வவ்வால்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. மரத்திலிருந்து வவ்வால்கள் திடீரென இறந்து விழுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள். வெப்ப தாக்கம் அதிகமாக உள்ள காரணத்தினால் வவ்வால்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இறந்து விழுந்த வவ்வால்களை வனத்துறை அதிகாரிகளும் சுகாதாரத் துறை அதிகாரிகளும் பரிசோதனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

    ×