search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துபாய் விமான நிலையம் (கோப்புப்படம்)
    X
    துபாய் விமான நிலையம் (கோப்புப்படம்)

    ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நேரடி விமான சேவைக்கு இங்கிலாந்து தடை

    உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஐக்கிய அரபு அமீகரத்தில் இருந்து நேரடி விமான சேவைக்கு இங்கிலாந்து தடைவிதித்துள்ளது.
    ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நேரடி விமான போக்குவரத்துக்கு இங்கிலாந்து தடைவிதித்துள்ளது. இதனால் எப்போதும் ஓய்வில்லாமல் இயங்கும் துபாய் டூ லண்டன் விமானத்தடம் மூடப்படுகிறது. முன்னணி விமான நிறுவனங்களான அமிரேட்ஸ் மற்றும் எதிஹாட் ஏர்வைஸ் நிறுவனங்கள், இந்திய நேரப்படி மாலை 6.30 மணியில் இருந்து விமான சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.

    இங்கிலாந்து புருண்டி, ருவாண்டா நாட்டிற்கான விமான சேவைக்கும் தடைவிதித்துள்ளது. ஆனால் இங்கிலாந்து, அயர்லந்து, மற்ற நாட்டைச் சேர்ந்த இங்கிலாந்தில் வசிப்பவர்கள் வர அனுமதி அளிக்கப்படுவார்கள். அவர்கள் 10 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வது கட்டாயம் என இங்கிலாந்த அரசு அறிவித்துள்ளது.
    Next Story
    ×