என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லைபீரியா - பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 28 மாணவர்கள் பலி
Byமாலை மலர்18 Sep 2019 1:15 PM GMT (Updated: 18 Sep 2019 1:15 PM GMT)
லைபீரியா நாட்டில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 28 மாணவர்கள் உள்பட 30 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.
மொன்ரோவியா:
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லைபீரியாவின் தலைநகர் மொன்ரோவியா. இங்குள்ள பள்ளியில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் சிக்கி 28 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் உள்பட 30 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மாணவர்கள் பலியானதை அறிந்த அந்நாட்டு அதிபர் ஜார்ஜ் வே தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X