என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி
Byமாலை மலர்27 Jun 2017 7:56 PM GMT (Updated: 27 Jun 2017 7:57 PM GMT)
மூன்றுநாள் வெளிநாட்டு அரசுமுறை பயணத்தில் அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து நாடுகளுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி நெதர்லாந்தில் இருந்து இந்தியா புறப்பட்டார்.
நெதர்லாந்து:
மூன்று நாட்கள் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியா புறப்பட்டார். போர்ச்சுகல், அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் இன்று நெதர்லாந்தில் இருந்து இந்தியா புறப்பட்டார்.
முன்னதாக நேற்று காலை நெதர்லாந்திற்கு வந்த மோடி அந்நாட்டு பிரதமர் மார் ருட்டே-வை சந்தித்து பேசினார். இதன் பின் அங்கு வசிக்கும் இந்தியர்களை சந்தித்த மோடி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
போர்ச்சுகல், அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய மூன்று நாடுகளில் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி இந்தியாவுக்கு விமானம் மூலம் புறப்பட்டார் என பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப்பை சந்தித்த பிரதமர் மோடி அவருடன் நீண்ட நேர பேச்சுவார்த்தை நடத்தினார். இதுதவிர இருவரும் தனியாகவும் பேசிக் கொண்டார்கள்.
ஏற்கனவே போர்ச்சுகல் பிரதமர் அண்டோனியோ கோஸ்டாவுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். பின் அங்கு வசிக்கும் இந்தியர்களையும் அவர் சந்தித்து பேசினார்.
மூன்று நாட்கள் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியா புறப்பட்டார். போர்ச்சுகல், அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் இன்று நெதர்லாந்தில் இருந்து இந்தியா புறப்பட்டார்.
முன்னதாக நேற்று காலை நெதர்லாந்திற்கு வந்த மோடி அந்நாட்டு பிரதமர் மார் ருட்டே-வை சந்தித்து பேசினார். இதன் பின் அங்கு வசிக்கும் இந்தியர்களை சந்தித்த மோடி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
போர்ச்சுகல், அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய மூன்று நாடுகளில் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி இந்தியாவுக்கு விமானம் மூலம் புறப்பட்டார் என பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப்பை சந்தித்த பிரதமர் மோடி அவருடன் நீண்ட நேர பேச்சுவார்த்தை நடத்தினார். இதுதவிர இருவரும் தனியாகவும் பேசிக் கொண்டார்கள்.
ஏற்கனவே போர்ச்சுகல் பிரதமர் அண்டோனியோ கோஸ்டாவுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். பின் அங்கு வசிக்கும் இந்தியர்களையும் அவர் சந்தித்து பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X