என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்திய வீரருக்கு அமெரிக்காவில் சிறை சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்திய வீரருக்கு அமெரிக்காவில் சிறை](https://img.maalaimalar.com/Articles/2017/Mar/201703030542271188_Indian-in-US-for-snowshoe-contest-is-accused-of-sex-abuse_SECVPF.gif)
X
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்திய வீரருக்கு அமெரிக்காவில் சிறை
By
மாலை மலர்3 March 2017 12:12 AM GMT (Updated: 3 March 2017 12:12 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்திய பனிச்சறுக்கு வீரருக்கு அமெரிக்காவில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சாரனாக் லேக்:
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்திய பனிச்சறுக்கு வீரருக்கு அமெரிக்காவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பனிச்சறுக்கு போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்ற இந்திய வீரர் அங்குள்ள 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயதான இளைஞரான தன்வீர் ஹீசைன் என்பவர் தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் சாரனாக் லேக் பகுதி போலீஸ் கேசி ரியர்டன் தெரிவித்துள்ளார்.
![](/uploads/DA96FF6E-1B72-4846-B7EC-CEF9CB91F514_L_styvpf.gif)
இந்த சம்பவம் குறித்து கேசி கூறியதாவது,
கடந்த திங்கள்கிழமை அதிரோன்டக் மலைப்பகுதியில் வைத்து தன்வீர், அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தன்வீர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 5,000 அமெரிக்க டாலர்கள் செலுத்தி தன்வீர் ஜெயிலில் இருந்து பெயில் வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் தன்வீருக்கு எந்த சம்பந்தமும் இல்லை, அவர் குற்றவாளி அல்ல என்று தன்வீரின் வழக்கறிஞர் பிரெயின் பேரட் தெரிவித்துள்ளார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்திய பனிச்சறுக்கு வீரருக்கு அமெரிக்காவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பனிச்சறுக்கு போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்ற இந்திய வீரர் அங்குள்ள 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயதான இளைஞரான தன்வீர் ஹீசைன் என்பவர் தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் சாரனாக் லேக் பகுதி போலீஸ் கேசி ரியர்டன் தெரிவித்துள்ளார்.
![](/uploads/DA96FF6E-1B72-4846-B7EC-CEF9CB91F514_L_styvpf.gif)
இந்த சம்பவம் குறித்து கேசி கூறியதாவது,
கடந்த திங்கள்கிழமை அதிரோன்டக் மலைப்பகுதியில் வைத்து தன்வீர், அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தன்வீர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 5,000 அமெரிக்க டாலர்கள் செலுத்தி தன்வீர் ஜெயிலில் இருந்து பெயில் வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் தன்வீருக்கு எந்த சம்பந்தமும் இல்லை, அவர் குற்றவாளி அல்ல என்று தன்வீரின் வழக்கறிஞர் பிரெயின் பேரட் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)