search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீவிரவாத தாக்குதலுக்கு சதி: பிரான்சில் இளம்பெண் உள்பட 4 பேர் கைது
    X

    தீவிரவாத தாக்குதலுக்கு சதி: பிரான்சில் இளம்பெண் உள்பட 4 பேர் கைது

    பிரான்சில் தீவிரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாக சந்தேதகத்தின்பேரில் 16 வயது இளம்பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    பாரிஸ்:

    பிரான்சில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கி அடுத்தடுத்து நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகி உள்ளனர். இதன் காரணமாக நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சந்தேகப்படும்படியான நபர்கள் தீவிர கண்காணிப்புக்குப்பிறகு கைது செய்யப்படுகின்றனர்.

    அவ்வகையில், தெற்கு பிரான்சின் மோன்ட்பெல்லியரில் சந்தேகப்படும்படியான நபர்கள் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் அப்பகுதியை சுற்றி வளைத்து 16 வயது இளம்பெண் உள்பட 4 பேரை கைது செய்தனர். இதன்மூலம் அவர்களின் தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேரும், வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் எளிதில் தீப்பற்றக்கூடிய, திரவத்தை வாங்கியதாகவும், இதன் முலம் வெடிபொருட்களை தயாரிக்க திட்டமிட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×