என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![துருக்கி மருத்துவமனையில் நோயாளிகளை பிணைக் கைதிகளாக பிடித்து தற்கொலைக்கு முயன்ற போலீஸ் துருக்கி மருத்துவமனையில் நோயாளிகளை பிணைக் கைதிகளாக பிடித்து தற்கொலைக்கு முயன்ற போலீஸ்](https://img.maalaimalar.com/Articles/2017/Feb/201702011951156037_Turkish-Policeman-Tries-To-Kill-Self-In-Istanbul-Hospital_SECVPF.gif)
X
துருக்கி மருத்துவமனையில் நோயாளிகளை பிணைக் கைதிகளாக பிடித்து தற்கொலைக்கு முயன்ற போலீஸ்
By
மாலை மலர்1 Feb 2017 2:21 PM GMT (Updated: 1 Feb 2017 2:21 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
துருக்கி நாட்டில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளை பிணயக் கைதிகளாக பிடித்து வைத்த போலீஸ் ஒருவர், தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இஸ்தான்புல்:
துருக்கி நாட்டில் இஸ்தான்புல் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில், மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் போலீஸ் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தனது அறையில் அவர் தனியாக இருக்கும் போது துப்பாக்கியை எடுத்து மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளை மிரட்டியுள்ளார்.
மருத்துவமனையில் இருந்த அனைவரும் பயந்து ஒரு அறையில் பதுங்கியுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மருத்துவமனையை சுற்றி வளைத்தனர். இதனால், பயந்து போன நோயாளி துப்பாக்கியை தனது தலையில் வைத்து சுட முயற்ச்சித்துள்ளார். ஆனால், அதற்குள்ளாக மற்ற போலீசார் தடுத்து விட்டனர்.
பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தவர்களையும் போலீசார் விடுவித்தனர். போலீஸ் விசாரணையில், அந்த நபர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர் என்றும், பயத்தின் காரணமாக இப்படி செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேலும், அவருக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)