என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![வங்காளதேச சிறுமிக்கு அபூர்வ தோல் நோய் வங்காளதேச சிறுமிக்கு அபூர்வ தோல் நோய்](https://img.maalaimalar.com/Articles/2017/Feb/201702011031324891_Bangladesh-Girl-Diagnosed-with-Tree-Man-Skin-Disease_SECVPF.gif)
X
வங்காளதேச சிறுமிக்கு அபூர்வ தோல் நோய்
By
மாலை மலர்1 Feb 2017 5:01 AM GMT (Updated: 1 Feb 2017 5:01 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
வங்காளதேச சிறுமிக்கு முகத்தில் மரம் போன்று தசைகள் வளரும் அபூர்வ தோல் நோய் பாதிப்பு உள்ளது.
டாக்கா:
வங்காளதேசத்தை சேர்ந்த 10 வயது சிறுமி சஹானா காதுன். இவள் ஒருவித அபூர்வ தோல் நோயினால் அவதிப்படுகிறாள். இவளது முகம், காது, நாடி, மூக்கு உள்ளிட்ட இடங்களில் மரம் போன்று சிறிய அளவில் சதை வளர்ந்துள்ளது. இவள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள்.
இவளது தந்தை முகமது ஷாஜகான் கூலி வேலை பார்க்கிறார். இந்த நோய்க்கு டாக்காவில் உள்ள மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சஹானா சிகிச்சை பெற்று வருகிறாள்.
அவளுக்கு டாக்டர்கள் தீவிர பரிசோதனை செய்து வருகின்றனர். இது ஒரு அபூர்வ நோய் என்றும், உலக அளவில் 6 பேர் இத்தகைய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சிறுமி சஹானாவின் தந்தை முகமது ஷாஜகான் கூறும்போது, “நாங்கள் மிகவும் ஏழைகள். எனது மகள் 6 வயதில் தனது தாயை இழந்தாள். உடலில் வளரும் மரம் போன்ற தசையை அகற்றி எனது மகளின் அழகிய முகத்தை டாக்டர்கள் மீண்டும் திருப்பி தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
வங்காளதேசத்தை சேர்ந்த 10 வயது சிறுமி சஹானா காதுன். இவள் ஒருவித அபூர்வ தோல் நோயினால் அவதிப்படுகிறாள். இவளது முகம், காது, நாடி, மூக்கு உள்ளிட்ட இடங்களில் மரம் போன்று சிறிய அளவில் சதை வளர்ந்துள்ளது. இவள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள்.
இவளது தந்தை முகமது ஷாஜகான் கூலி வேலை பார்க்கிறார். இந்த நோய்க்கு டாக்காவில் உள்ள மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சஹானா சிகிச்சை பெற்று வருகிறாள்.
அவளுக்கு டாக்டர்கள் தீவிர பரிசோதனை செய்து வருகின்றனர். இது ஒரு அபூர்வ நோய் என்றும், உலக அளவில் 6 பேர் இத்தகைய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சிறுமி சஹானாவின் தந்தை முகமது ஷாஜகான் கூறும்போது, “நாங்கள் மிகவும் ஏழைகள். எனது மகள் 6 வயதில் தனது தாயை இழந்தாள். உடலில் வளரும் மரம் போன்ற தசையை அகற்றி எனது மகளின் அழகிய முகத்தை டாக்டர்கள் மீண்டும் திருப்பி தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)