என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டொனால்டு டிரம்பை இங்கிலாந்துக்கு அழைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து 10 லட்சம் பேர் மனு
Byமாலை மலர்30 Jan 2017 1:10 PM GMT (Updated: 30 Jan 2017 1:10 PM GMT)
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை இங்கிலாந்து வருமாறு அழைப்பு விடுத்த இங்கிலாந்து பிரதமர் தெரேசா மே, தனது அழைப்பை திரும்ப பெற வேண்டும் என 10 லட்சம் பேர் கையெழுத்திட்டு மனு தயாரித்துள்ளனர்.
லண்டன்:
அமெரிக்க அதிபராக சமீபத்தில் பொறுப்பேற்ற டொனால்டு டிரம்பை, கடந்த வாரம் இங்கிலாந்து பிரதமர் தெரெசா மே, வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார். அப்போது, டிரம்பை இங்கிலாந்து வருமாறு அவர் அழைப்பு விடுத்தார். மேலும், இங்கிலாந்து ராணி எலிசபெத் உடன் விருந்து உண்ண வேண்டும் என ராணி விரும்புவதாக, தெரேசா கோரிக்கை விடுத்தார்.
அதனை ஏற்றுக் கொண்ட டிரம்ப் இந்த ஆண்டில் இங்கிலாந்துக்கு வருவதாக உறுதியளித்தார்.
இந்நிலையில், அகதிகளாக வருவோர் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு கட்டுப்பாடுகளை விதித்து டிரம்ப் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார். மேலும், 7 முஸ்லீம் நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வருவோருக்கும் அவர் தடை விதித்தார். இது உலகமெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகளின் தலைவர்களும் டிரம்பின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.
டிரம்பின் நடவடிக்கையை எதிர்த்து இங்கிலாந்தில் உள்ள பொதுமக்கள் சுமார் 10 லட்சம் பேர், இங்கிலாந்து பிரதமர் டிரம்புக்கு விடுத்த அழைப்பை திரும்ப பெற வேண்டும் என கையெழுத்து இட்ட மனுவை தயார் செய்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் என்ற முறையில் அவர் இங்கிலாந்திற்குள் வரலாம். ஆனால், இங்கிலாந்து சார்பில் அழைப்பு விடுக்கும் போது அது எங்கள் ராணிக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1 லட்சம் பேர் கையெழுத்திட்டு மனு செய்தாலே, அதை எம்.பி.க்கள் விவாதிக்க வேண்டும் என்பது இங்கிலாந்தில் உள்ள நடைமுறையாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X