என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்கா வெளியேற்றும் அகதிகளுக்கு கனடா பிரதமர் வரவேற்பு
Byமாலை மலர்30 Jan 2017 5:25 AM GMT (Updated: 30 Jan 2017 5:25 AM GMT)
அமெரிக்காவில் வெளியேற்றப்படும் அகதிகளை கனடா பிரதமர் வரவேற்றுள்ளார்.
டொரண்டோ:
அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய ‘விசா’ தடைவிதித்துள்ளார். அகதிகள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விமான நிலையங்களில் திரண்டு பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டிரம்பின் இக்கொள்கையை கனடா எதிர்த்துள்ளது. இது குறித்து அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் டிருடியூ டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், டிரம்பின் இத்தகைய நடவடிக்கை தீவிரவாதம் மற்றும் போருக்கு ஒப்பானது.
அமெரிக்கா அகதிகளை நிராகரித்து அங்கு செல்பவர்களை வெளியேற்றுகிறது. ஆனால் அவர்களை கனடா வரவேற்கிறது.
நீங்கள் (அகதிகள்) எங்கள் நாட்டுக்கு வாருங்கள். மேலும் அகதிகள் பிரச்சினை குறித்து விரைவில் அமெரிக்கா செல்லும் நான் அதிபர் டொனால்டு டிரம்புடன் பேசுவேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மெக்சிகோ மீது அதிபர் டிரம்ப் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து அவர் விமர்சனம் செய்யவில்லை. ஏனெனில் கனடாவில் இருந்து 75 சதவீதம் பொருட்கள் அமெரிக்காவுக்கு இறக்குமதி ஆகின்றன. இதற்கிடையே கனடா பிரதமரின் அகதிகள் வரவேற்புக்கு அந்நாட்டு தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
டிரம்பின் ‘விசா’ தடைக்கு ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒருவரின் பின்னணி மற்றும் மதம் அடிப்படையில் இது போன்று தாக்குதல் நடத்துவது நியாயமற்றது. ஜெனிவா அகதிகள் சட்டம் போர் நடைபெறும் நாடுகளின் அகதிகளை மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கிறது என்றார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய ‘விசா’ தடைவிதித்துள்ளார். அகதிகள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விமான நிலையங்களில் திரண்டு பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டிரம்பின் இக்கொள்கையை கனடா எதிர்த்துள்ளது. இது குறித்து அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் டிருடியூ டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், டிரம்பின் இத்தகைய நடவடிக்கை தீவிரவாதம் மற்றும் போருக்கு ஒப்பானது.
அமெரிக்கா அகதிகளை நிராகரித்து அங்கு செல்பவர்களை வெளியேற்றுகிறது. ஆனால் அவர்களை கனடா வரவேற்கிறது.
நீங்கள் (அகதிகள்) எங்கள் நாட்டுக்கு வாருங்கள். மேலும் அகதிகள் பிரச்சினை குறித்து விரைவில் அமெரிக்கா செல்லும் நான் அதிபர் டொனால்டு டிரம்புடன் பேசுவேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மெக்சிகோ மீது அதிபர் டிரம்ப் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து அவர் விமர்சனம் செய்யவில்லை. ஏனெனில் கனடாவில் இருந்து 75 சதவீதம் பொருட்கள் அமெரிக்காவுக்கு இறக்குமதி ஆகின்றன. இதற்கிடையே கனடா பிரதமரின் அகதிகள் வரவேற்புக்கு அந்நாட்டு தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
டிரம்பின் ‘விசா’ தடைக்கு ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒருவரின் பின்னணி மற்றும் மதம் அடிப்படையில் இது போன்று தாக்குதல் நடத்துவது நியாயமற்றது. ஜெனிவா அகதிகள் சட்டம் போர் நடைபெறும் நாடுகளின் அகதிகளை மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கிறது என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X