search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிரியா விவகாரத்தில் ஒன்றுப்பட்டு செயலாற்ற வேண்டும்: டிரம்ப் - புதின் கூட்டறிக்கை
    X

    சிரியா விவகாரத்தில் ஒன்றுப்பட்டு செயலாற்ற வேண்டும்: டிரம்ப் - புதின் கூட்டறிக்கை

    அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின் முதன்முறையாக ரஷிய அதிபர் புதினுடன் டெலிபோனில் பேசிய டிரம்ப் சிரியா விவகாரத்தில் ஒன்றுப்பட்டு செயலாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
    மாஸ்கோ:

    அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற பின் முதன் முறையாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் டெலிபோனில் டொனால்டு டிரம்ப் பேசினார்.

    அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த 20-ந்தேதி டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றார். அதை தொடர்ந்து ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா நாட்டு தலைவர்களுடன் டெலிபோனில் பேசினார்.

    சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனும் டெலிபோனில் பேசினார். அப்போது ‘இந்தியா அமெரிக்காவின் உண்மையான நண்பன் என புகழாரம் சூட்டினார்.

    இந்த நிலையில் பதவி ஏற்ற பின் முதன் முறையாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் நேற்று டெலிபோனில் பேசினார். இத்தகவலை ரஷிய அதிபரின் கிரம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.

    அதில் அப்போது அமெரிக்கா- ரஷியா ஆகிய 2 நாடுகளும் சர்வதேச தீவிரவாதத்துக்கு எதிராக போராடுவது என்றும் குறிப்பாக சிரியாவில் ஆதிக்கம் செலுத்தும் ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் சில தீவிரவாத அமைப்புகளை அடக்கி ஒடுக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இப்பேச்சு ஆக்கப் பூர்வமாக இருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மத்திய கிழக்கு, அரபு மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான பிரச்சினை, ஈரான் அணு ஆயுத திட்டம், வடக்கு மற்றும் தென் கொரியா பிரச்சினைகள் மற்றும் உக்ரைனின் தற்போதைய நிலை குறித்தும் விவாதித்தனர்.

    முக்கியமாக சர்வதேச தீவிரவாதத்தை ஒடுக்குவதில் ஒன்றுபட்டு செயல்பட இரு நாட்டு தலைவர்களும் முடிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×