என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெதர்லாந்து நாட்டில் ஊழல் வழக்கில் மந்திரி ராஜினாமா
Byமாலை மலர்27 Jan 2017 10:20 PM GMT (Updated: 27 Jan 2017 10:21 PM GMT)
நெதர்லாந்தில் நீதித்துறை மந்திரி பதவி வகித்த ஆர்த் வேன் டர் ஸ்டெயூர் ஊழல் வழக்கு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஆம்ஸ்டர்டாம்:
ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் நீதித்துறை மந்திரி பதவி வகித்தவர் ஆர்த் வேன் டர் ஸ்டெயூர்.
இவர் 2001-ம் ஆண்டு, தண்டிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரருக்கு இழப்பீடு வழங்கியதில் ஊழல் புரிந்துள்ளார். இந்த ஊழல், ஆர்த்துக்கு எதிராக திரும்பியது. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் புயல் வீசியது.
இதன் காரணமாக நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். இது பிரதமர் மார்க் ரூட்டின் அரசுக்கு பலத்த அடியாக அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
வருகிற மார்ச் மாதம் பொதுத்தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில், ஆர்த் சார்ந்துள்ள வலதுசாரி தாராளவாத கட்சி ஏற்கனவே கருத்துக்கணிப்புகளில் பின் தங்கி உள்ளது. இந்த நிலையில், ஊழல் குற்றச்சாட்டில் ஏற்கனவே நீதித்துறை மந்திரி பதவி வகித்து வந்த இவோ ஆப்ஸ்டெல்டன், அவரது துணை மந்திரி பிரெட் டீவன் ஆகிய 2 பேர் ராஜினாமா செய்த நிலையில், இப்போது ஆர்த்தும் பதவி விலகி இருப்பது அந்தக் கட்சியை ஆட்டம் காண வைத்துள்ளது.
ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் நீதித்துறை மந்திரி பதவி வகித்தவர் ஆர்த் வேன் டர் ஸ்டெயூர்.
இவர் 2001-ம் ஆண்டு, தண்டிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரருக்கு இழப்பீடு வழங்கியதில் ஊழல் புரிந்துள்ளார். இந்த ஊழல், ஆர்த்துக்கு எதிராக திரும்பியது. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் புயல் வீசியது.
இதன் காரணமாக நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். இது பிரதமர் மார்க் ரூட்டின் அரசுக்கு பலத்த அடியாக அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
வருகிற மார்ச் மாதம் பொதுத்தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில், ஆர்த் சார்ந்துள்ள வலதுசாரி தாராளவாத கட்சி ஏற்கனவே கருத்துக்கணிப்புகளில் பின் தங்கி உள்ளது. இந்த நிலையில், ஊழல் குற்றச்சாட்டில் ஏற்கனவே நீதித்துறை மந்திரி பதவி வகித்து வந்த இவோ ஆப்ஸ்டெல்டன், அவரது துணை மந்திரி பிரெட் டீவன் ஆகிய 2 பேர் ராஜினாமா செய்த நிலையில், இப்போது ஆர்த்தும் பதவி விலகி இருப்பது அந்தக் கட்சியை ஆட்டம் காண வைத்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X