search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மூவர்ணக் கொடியின் நிறத்தில் ஒளிரும் புர்ஜ் கலிபா (வீடியோ)
    X

    மூவர்ணக் கொடியின் நிறத்தில் ஒளிரும் புர்ஜ் கலிபா (வீடியோ)

    இந்தியக் குடியரசுத் தின விழா நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கும் நேரத்தில், உலகின் மிகப் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா முழுவதும் மூவர்ணக் கொடியின் நிறத்தில் ஒளிர்கிறது.
    துபாய்:

    நாளை நடை பெற உள்ள இந்தியக் குடியரசுத் தின விழாவில் சிறப்பு விருந்தினராக அபுதாபி இளவரசர் ஷேக் முகம்மது பின் சயீத் அல் நஹ்யான் பங்கேற்கிறார்.

    அதனையொட்டி,  ஐக்கிய அமீரகத்தில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவில் இந்திய மூவர்ணக் கொடியின் நிறத்தில் விளக்குகளை அமைத்து ஒளிரவிட அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்தது.

    இன்று மாலை முதல் கட்டிடத்தில்  அமைக்கப்பட்ட விளக்குகளை ஒளிரவிட்டுள்ளது. புர்ஜ் கலிபா கட்டிடம் முழுவதும் மூவர்ணக் கொடியின் நிறமான காவி, வெள்ளை, பச்சை ஆகிய வண்ணத்தில் பிரகாசமாக ஒளிர்கிறது. மேலும், இந்தியக் கொடியினுடன் ஐக்கிய அமீரகத்தின் தேசியக் கொடியும் இணைந்து ஒளிர்ந்தது.

    பார்ப்பவர்களின் மனதை பிரமிக்கச் செய்யும் இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    Next Story
    ×