என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தீவிரவாதிகளின் புகலிடம் ஜெர்மனி: துருக்கி அதிபர் பேச்சு
Byமாலை மலர்3 Nov 2016 4:24 PM GMT (Updated: 3 Nov 2016 4:24 PM GMT)
தீவிரவாதிகளின் புகலிடம் ஆக ஜெர்மனி உருவாகியுள்ளது என்று துருக்கி ஜனாதிபதி டய்யீப் எர்டோகன் பேசினார்.
அங்காரா:
தீவிரவாதிகளின் புகலிடம் ஆக ஜெர்மனி உருவாகியுள்ளது என்று துருக்கி ஜனாதிபதி டய்யீப் எர்டோகன் பேசினார்.
துருக்கியில் கடந்த ஜூலையில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் தொடர்புடைய அமெரிக்காவை சேர்ந்த மதகுருவின் ஆதரவாளர்களை வெளியேற்ற ஜெர்மனி தவறி விட்டது என்றும் துருக்கி அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார்.
துருக்கியில் கடந்த 30 வருடங்களாக குர்தீஷ் இனத்திற்கு சுயாட்சி கோரி குர்தீஷ் இன போராளிகள் மற்றும் இடதுசாரிகளும் ஆயுத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஜெர்மனி நீண்ட நாட்களாக தஞ்சம் அளித்து வந்துள்ளது என்றும் எர்டோகன் கூறியுள்ளார்.
அவர், ஜெர்மனியிடம் இருந்து எதனையும் நாங்கள் எதிர்நோக்கி இருக்கவில்லை. ஆனால் தீவிரவாதத்தினை தூண்டியதற்காக நீங்கள் வரலாறில் நியாயம் கற்பிக்கப்படுவீர்கள்... ஜெர்மனி தீவிரவாதிகளின் முக்கிய புகலிடம் ஆக உருவாகியுள்ளது என தலைநகர் அங்காராவில் உள்ள அரண்மனையில் நடந்த விழா ஒன்றில் பேசினார்.
குர்தீஷ் இன போராளிகள் மற்றும் புரட்சிகர மக்களின் சுதந்திர முன்னணி அமைப்பினர் ஆகியோரை பல வருடங்களாக பாதுகாத்து வரும் ஜெர்மனியை நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம். அந்த நாடு முன்னாள் இமாம் மற்றும் துருக்கி நாட்டின் மதபோதகரான குலெனின் தீவிரவாத அமைப்பிற்கு பின்புலம் ஆக உருவாகியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
தீவிரவாதிகளின் புகலிடம் ஆக ஜெர்மனி உருவாகியுள்ளது என்று துருக்கி ஜனாதிபதி டய்யீப் எர்டோகன் பேசினார்.
துருக்கியில் கடந்த ஜூலையில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் தொடர்புடைய அமெரிக்காவை சேர்ந்த மதகுருவின் ஆதரவாளர்களை வெளியேற்ற ஜெர்மனி தவறி விட்டது என்றும் துருக்கி அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார்.
துருக்கியில் கடந்த 30 வருடங்களாக குர்தீஷ் இனத்திற்கு சுயாட்சி கோரி குர்தீஷ் இன போராளிகள் மற்றும் இடதுசாரிகளும் ஆயுத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஜெர்மனி நீண்ட நாட்களாக தஞ்சம் அளித்து வந்துள்ளது என்றும் எர்டோகன் கூறியுள்ளார்.
அவர், ஜெர்மனியிடம் இருந்து எதனையும் நாங்கள் எதிர்நோக்கி இருக்கவில்லை. ஆனால் தீவிரவாதத்தினை தூண்டியதற்காக நீங்கள் வரலாறில் நியாயம் கற்பிக்கப்படுவீர்கள்... ஜெர்மனி தீவிரவாதிகளின் முக்கிய புகலிடம் ஆக உருவாகியுள்ளது என தலைநகர் அங்காராவில் உள்ள அரண்மனையில் நடந்த விழா ஒன்றில் பேசினார்.
குர்தீஷ் இன போராளிகள் மற்றும் புரட்சிகர மக்களின் சுதந்திர முன்னணி அமைப்பினர் ஆகியோரை பல வருடங்களாக பாதுகாத்து வரும் ஜெர்மனியை நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம். அந்த நாடு முன்னாள் இமாம் மற்றும் துருக்கி நாட்டின் மதபோதகரான குலெனின் தீவிரவாத அமைப்பிற்கு பின்புலம் ஆக உருவாகியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X