என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸ்திரேலியா, இந்தியாவைத் தொடர்ந்து ஜப்பானிலும் சாம்சங் நோட் 7 போன்களுக்கு தடை
Byமாலை மலர்17 Oct 2016 8:58 AM GMT (Updated: 17 Oct 2016 8:58 AM GMT)
சாம்சங் கேலக்சி நோட் 7 ரக போன்களை விமானங்களில் பயன்படுத்த வேண்டாம் என ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது.
டோக்கியோ:
தென் கொரியாவை சேர்ந்த மிகப்பெரிய எலக்ட்ரானிக் நிறுவனமான சாம்சங்சின் புதுரக போனான சாம்சங் கேலக்சி நோட் 7 வெடிக்கும் அபாயம் உள்ளதாக வந்த தகவலையடுத்து உலகளவில் விற்பனைக்காக அனுப்பப்பட்ட 2.5 மில்லியன் போன்களை அந்நிறுவனம் சமீபத்தில் திரும்பப்பெற்றது. மேலும், புதிய போன்களின் விற்பனையையும் நிறுத்தி வைத்தது.
இந்நிலையில் விமானங்களில் பயணிப்போர் சாம்சங் கேலக்சி நோட் 7 ரக போன்களை பயன்படுத்த வேண்டாம் என ஜப்பான் அரசு புதிய உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் சாம்சங் நோட் 7 போன்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும், பேட்டரி இல்லாமல் கூட கொண்டு செல்ல வேண்டாம் எனவும் ஜப்பான் நாட்டு போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
ஜப்பான் நாட்டில் சாம்சங் நோட் 7 ரக போன்கள் விற்பனை செய்யப்படவில்லை எனினும் முன்னேற்பாடாக ஜப்பான் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதேபோல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் விமானத்தில் சாம்சங் நோட் 7 போன்களை கொண்டு செல்ல தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தென் கொரியாவை சேர்ந்த மிகப்பெரிய எலக்ட்ரானிக் நிறுவனமான சாம்சங்சின் புதுரக போனான சாம்சங் கேலக்சி நோட் 7 வெடிக்கும் அபாயம் உள்ளதாக வந்த தகவலையடுத்து உலகளவில் விற்பனைக்காக அனுப்பப்பட்ட 2.5 மில்லியன் போன்களை அந்நிறுவனம் சமீபத்தில் திரும்பப்பெற்றது. மேலும், புதிய போன்களின் விற்பனையையும் நிறுத்தி வைத்தது.
இந்நிலையில் விமானங்களில் பயணிப்போர் சாம்சங் கேலக்சி நோட் 7 ரக போன்களை பயன்படுத்த வேண்டாம் என ஜப்பான் அரசு புதிய உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் சாம்சங் நோட் 7 போன்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும், பேட்டரி இல்லாமல் கூட கொண்டு செல்ல வேண்டாம் எனவும் ஜப்பான் நாட்டு போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
ஜப்பான் நாட்டில் சாம்சங் நோட் 7 ரக போன்கள் விற்பனை செய்யப்படவில்லை எனினும் முன்னேற்பாடாக ஜப்பான் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதேபோல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் விமானத்தில் சாம்சங் நோட் 7 போன்களை கொண்டு செல்ல தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X