search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியா, இந்தியாவைத் தொடர்ந்து ஜப்பானிலும் சாம்சங் நோட் 7 போன்களுக்கு தடை
    X

    ஆஸ்திரேலியா, இந்தியாவைத் தொடர்ந்து ஜப்பானிலும் சாம்சங் நோட் 7 போன்களுக்கு தடை

    சாம்சங் கேலக்சி நோட் 7 ரக போன்களை விமானங்களில் பயன்படுத்த வேண்டாம் என ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது.
    டோக்கியோ:

    தென் கொரியாவை சேர்ந்த மிகப்பெரிய எலக்ட்ரானிக் நிறுவனமான சாம்சங்சின் புதுரக போனான சாம்சங் கேலக்சி நோட் 7 வெடிக்கும் அபாயம் உள்ளதாக வந்த தகவலையடுத்து உலகளவில் விற்பனைக்காக அனுப்பப்பட்ட 2.5 மில்லியன் போன்களை அந்நிறுவனம் சமீபத்தில் திரும்பப்பெற்றது. மேலும், புதிய போன்களின் விற்பனையையும் நிறுத்தி வைத்தது.

    இந்நிலையில் விமானங்களில் பயணிப்போர் சாம்சங் கேலக்சி நோட் 7 ரக போன்களை பயன்படுத்த வேண்டாம் என ஜப்பான் அரசு புதிய உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

    வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் சாம்சங் நோட் 7 போன்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும், பேட்டரி இல்லாமல் கூட கொண்டு செல்ல வேண்டாம் எனவும் ஜப்பான் நாட்டு போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

    ஜப்பான் நாட்டில் சாம்சங் நோட் 7 ரக போன்கள் விற்பனை செய்யப்படவில்லை எனினும் முன்னேற்பாடாக ஜப்பான் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    இதேபோல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் விமானத்தில் சாம்சங் நோட் 7 போன்களை கொண்டு செல்ல தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×