என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசியான்-கிழக்காசிய மாநாடு முடிந்து தாயகம் புறப்பட்டார் மோடி
Byமாலை மலர்8 Sep 2016 11:23 AM GMT (Updated: 8 Sep 2016 11:24 AM GMT)
லாவோசில் நடைபெற்ற ஆசியான் மற்றும் கிழக்காசிய மாநாட்டில் பங்கேற்ற இந்திய பிரதமர் மோடி இன்று தாயகம் புறப்பட்டார்.
வியன்டியான்:
லாவோஸ் நாட்டில் வியன்டியான் நகரில் 14-வது ஆசியான் மற்றும் 11-வது கிழக்கு ஆசிய மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திரமோடி 2 நாட்கள் பயணமாக லாவோஸ் புறப்பட்டுச் சென்றார். மாநாட்டில் பங்கேற்று பேசிய மோடி, தீவிரவாதம் பரப்பப்படுவதால் பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக பாகிஸ்தான் நாட்டை மறைமுகமாக குற்றம்சாட்டினார்.
இந்த மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் ஒபாமா, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, லாவோஸ் பிரதமர் தொங்லான் சிகோலித், தென்கொரிய அதிபர் பார்க் ஜியன்-ஹை, மியான்மர் நாட்டின் சிறப்பு ஆலோசகர் ஆங் சான் சூகி ஆகியோரையும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புகளின்போது பரஸ்பர உறவுகள் மட்டுமின்றி தீவிரவாத ஒழிப்பு, வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.
இந்நிலையில் மோடி தனது 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று லாவோசில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டார். பிரதமர் மோடியின் குறுகியகால மற்றும் முக்கியமான பயணம் முடிந்ததையடுத்து விமானம் மூலம் புதுடெல்லிக்கு புறப்பட்டதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் டுவிட் செய்துள்ளார்.
லாவோஸ் நாட்டில் வியன்டியான் நகரில் 14-வது ஆசியான் மற்றும் 11-வது கிழக்கு ஆசிய மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திரமோடி 2 நாட்கள் பயணமாக லாவோஸ் புறப்பட்டுச் சென்றார். மாநாட்டில் பங்கேற்று பேசிய மோடி, தீவிரவாதம் பரப்பப்படுவதால் பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக பாகிஸ்தான் நாட்டை மறைமுகமாக குற்றம்சாட்டினார்.
இந்த மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் ஒபாமா, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, லாவோஸ் பிரதமர் தொங்லான் சிகோலித், தென்கொரிய அதிபர் பார்க் ஜியன்-ஹை, மியான்மர் நாட்டின் சிறப்பு ஆலோசகர் ஆங் சான் சூகி ஆகியோரையும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புகளின்போது பரஸ்பர உறவுகள் மட்டுமின்றி தீவிரவாத ஒழிப்பு, வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.
இந்நிலையில் மோடி தனது 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று லாவோசில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டார். பிரதமர் மோடியின் குறுகியகால மற்றும் முக்கியமான பயணம் முடிந்ததையடுத்து விமானம் மூலம் புதுடெல்லிக்கு புறப்பட்டதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் டுவிட் செய்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X