என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆங் சான் சூகியுடன் மோடி சந்திப்பு: பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை
Byமாலை மலர்8 Sep 2016 8:32 AM GMT (Updated: 8 Sep 2016 8:32 AM GMT)
ஆசியான் - இந்தியா, கிழக்காசியா உச்சி மாநாட்டிற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி மியான்மர் நாட்டின் சிறப்பு பிரதிநிதி ஆங் சான் சூகியை இன்று சந்தித்து இரு நாடுகளின் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
வியன்டியான்:
லாவோஸ் நாட்டில் வியன்டியான் நகரில் 14-வது ஆசியான் மற்றும் 11-வது கிழக்கு ஆசிய மாநாடு நடக்கிறது. அதில் பங்கேற்க பிரதமர் நரேந்திரமோடி நேற்று அங்கு சென்றார். இன்று தொடங்கிய மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மோடி மாநாட்டிற்கு இடையே மியான்மர் நாட்டின் சிறப்பு ஆலோசகர் ஆங் சான் சூகியை சந்தித்து இந்தியா-மியான்மர் இடையிலான உறவுகள் குறித்து இன்று கலந்துரையாடினார்.
மேலும் இந்த சந்திப்பின்போது, இந்தியா-மியான்மர் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சியாளர்கள் நடத்தும் போராட்டம் ஆகியவை குறித்து இருவரும் பேசியதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்தார்.
மேலும் பால் உற்பத்தி, விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் பருப்பு வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தம் குறித்தும் இருவரும் கலந்துரையாடினர். பேச்சுவார்த்தையின் முடிவில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த ஆங் சான் சூகி, விரைவில் இந்தியா வரவிருப்பதாக தெரிவித்தார்.
ஏற்கனவே அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஜப்பான் அதிபர் ஷின்ஸா அபே ஆகியோரை மோடி சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.
லாவோஸ் நாட்டில் வியன்டியான் நகரில் 14-வது ஆசியான் மற்றும் 11-வது கிழக்கு ஆசிய மாநாடு நடக்கிறது. அதில் பங்கேற்க பிரதமர் நரேந்திரமோடி நேற்று அங்கு சென்றார். இன்று தொடங்கிய மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மோடி மாநாட்டிற்கு இடையே மியான்மர் நாட்டின் சிறப்பு ஆலோசகர் ஆங் சான் சூகியை சந்தித்து இந்தியா-மியான்மர் இடையிலான உறவுகள் குறித்து இன்று கலந்துரையாடினார்.
மேலும் இந்த சந்திப்பின்போது, இந்தியா-மியான்மர் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சியாளர்கள் நடத்தும் போராட்டம் ஆகியவை குறித்து இருவரும் பேசியதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்தார்.
மேலும் பால் உற்பத்தி, விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் பருப்பு வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தம் குறித்தும் இருவரும் கலந்துரையாடினர். பேச்சுவார்த்தையின் முடிவில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த ஆங் சான் சூகி, விரைவில் இந்தியா வரவிருப்பதாக தெரிவித்தார்.
ஏற்கனவே அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஜப்பான் அதிபர் ஷின்ஸா அபே ஆகியோரை மோடி சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X