என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • தேசிய ஜனநாயக கூட்டணியின் 8 பேர் கொண்ட எம்.பி.க்கள் குழு கரூர் வந்தடைந்துள்ளது.
    • நேரில் பார்த்தவர்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.

    பாஜக தேசிய தலைவர் ஹெமா மாலினி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் 8 போர் கொண்ட குழுவை அமைத்து, கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க வேண்டும். கூட்டல் நெரிசல் ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    அதன்படி 8 பேர் கொண்ட குழு இன்று காலை கோவை விமான நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து கார் மூலம் கரூர் சென்றடைந்தது. கரூர் சென்ற அவர்கள் விபத்தை நேரில் பார்த்தவர்களிடம், கூட்ட நெரிசல் நடைபெற்றது குறித்து கேட்டறிந்தனர்.

    அப்போது ஒருவர் "ஆதர் அர்ஜுனா விஜயிடம் சென்று மக்கள் மயக்கம் அடைந்து கொண்டிருக்கிறார்கள் எனக் கூறினார். அவர்கள் உடனடியாக தண்ணீர் பாட்டில்களை விசினர். உள்ளூர் நிர்வாகம் தோல்வியடைந்துவிட்டது. சாலையின் அகலம் 19 அடி. வாகனத்திற்கு 12 அடி தேவைப்பட்டது. அசாதாரண நிலை ஏற்பட்ட பிறகு, அவர் பேச்சை முடித்து விட்டு, கிளம்பி விட்டார். விஜய் 10 நிமிடங்கள் மட்டுமே அந்த இடத்தில் செலவிட்டார்" எனக் கூறினார்.

    சம்பவத்தை நேரில் பார்த்த மற்றொருவர் "விஜய் பேச தொடங்கிய பிறகு 3 முதல் 4 நிமிடத்திற்குள் மக்கள் மயக்கம் அடையத் தொடங்கினர். அசாதாரண நிலை ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் வரத் தொடங்கியத. அதுவும் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியது.

    நாங்கள் எல்லோரும் ஓட ஆரம்பித்தோம். எல்லாவற்றையும் சரி செய்ய 1 மணி நேரம் ஆனது. எங்கள் பக்கத்தில் இருந்து செல்லாத பலர் கூட்டத்தில் இருந்தனர். அவர்கள் கூட்டத்தினரை மறுபக்கம் தள்ளாமல் பளத்தில் தள்ளினர்?" என்று கூறினார்.

    • நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர்.
    • 30 நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஒவ்வொரு மாதமும் ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், செப்டம்பர் மாதம் 'மதராஸி', 'பேட் கேர்ள்', 'காட்டி', 'காந்தி கண்ணாடி' உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

    இந்த நிலையில், அக்டோபர் மாத முதல் வாரத்தில் வெளியாக உள்ள படங்கள் குறித்து பார்ப்போம்...

    இட்லி கடை:

    தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் நாளை வெளியாக உள்ளது. இப்படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். தனுஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தை காண ரசிர்கள் ஆவலுடன் காத்து உள்ளனர்.

    காந்தாரா சாப்டர் 1:

    2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது. இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக 'காந்தாரா சாப்டர்1' உருவாகி உள்ளது. நாளை மறுநாள் 2-ந்தேதி இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் தமிழக தியேட்டர் வியாபார உரிமம் சுமார் ரூ.33 கோடிக்கு படத்தின் விநியோகம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மரியா:

    நடிகர் பாவெல் நவகீதன் நடிப்பில் , அறிமுக இயக்குனர் ஹரி கே சுதன் இயக்கியுள்ள படம் 'மரியா'. சாய்ஸ்ரீ பிரபாகரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படம் அக்டோபர் 3-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் சித்து குமரேசன், விக்னேஷ் ரவி மற்றும் சுதா புஷ்பா ஆகியோர் நடித்துள்ளனர். 

    • ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
    • சூர்யகுமார் இந்த தொடரில் பெரிய அளவில் ரன்களை குவிக்க தவறினார்.

    ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சூர்யகுமார் தலைமையில் களமிறங்கியது. இந்த தொடரில் இந்த அணி ஒரு தோல்வி கூட சந்திக்காமல் ஆசிய கோப்பையை வென்றது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சிலும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    சூர்யகுமார் இந்த தொடரில் பெரிய அளவில் ரன்களை குவிக்க தவறினார். ஆனால் கேப்டன்ஷிப்பில் எந்தவித பதட்டமும் இன்றி சரியான முடிவுகளை எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.

    இந்நிலையில் ரோகித் மற்றும் ரித்திகா கொடுத்த அறிவுரை தான் நம்பிக்கையான முடிவை எடுக்க உதவியது என இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    முக்கியமான தொடருக்கு முன்பு ரோகித் எப்படி வெளியில் இருந்து வரும் கருத்துகளை எப்படி தவிர்ப்பார் என்பது பற்றி ரோகித்திடமும் அவரது மனைவியிடமும் பேசியது எனக்கு நினைவிருக்கிறது.

    ரித்திகா தொலைபேசியிலிருந்து தனது அனைத்து சமூக ஊடக செயலிகளையும் மூடிவிட்டதாக என்னிடம் கூறினார். நானும் அதைப் பின்பற்றினேன். அது எனக்கு முடிவெடுப்பதற்கு உதவியது.

    என சூர்யகுமார் கூறினார்.

    • இந்த டேட்டா 28 நாட்களுக்கு 300 ஜிபி என வரையறுக்கப்பட்டுள்ளது.
    • நாடு முழுக்க பல நகரங்களில் இந்தத் திட்டத்தின் மூலம் 5ஜி டேட்டா கனெக்டிவிட்டி பெற முடியும்.

    வோடபோன் ஐடியா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல புதுமையான ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்களில், பயனர்களுக்கு அமேசான் பிரைமை வழங்கும் சில திட்டங்களும் உள்ளன. இந்த இரண்டு திட்டங்களும் ரூ.696 மற்றும் ரூ.996 விலையில் கிடைக்கின்றன. பயனர்களுக்கு அமேசான் பிரைம் சந்தா வழங்கும் இரண்டு திட்டங்கள் மட்டுமே உள்ளன.

    இரு ரீசார்ஜ் திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் டேட்டா வழங்குகின்றன. இந்த டேட்டா 28 நாட்களுக்கு 300 ஜிபி என வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களின் நன்மைகளை தொடர்ந்து பாரப்போம்.

    வோடபோன் ஐடியா நான்-ஸ்டாப் ஹீரோ திட்டங்கள்:

    வோடபோன் ஐடியா ரூ.696 திட்டம் அன்லிமிட்டெட் இன்கமிங், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டெட் டேட்டா (300 ஜிபி/28 நாட்கள்) ஆகியவற்றை பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன.

    இந்த திட்டத்தில் 56 நாட்களுக்கான அமேசான் பிரைம் லைட் சந்தா வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் HD (720p) தரத்தில் நிகழ்ச்சிகளை பார்க்கலாம். மேலும் அமேசான் தளத்தில் ஒரு நாள் இலவச டெலிவரி சேவைகளை பெறலாம். 5ஜி ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர், நாடு முழுக்க பல நகரங்களில் இந்தத் திட்டத்தின் மூலம் 5ஜி டேட்டா கனெக்டிவிட்டி பெற முடியும்.

    வோடபோன் ஐடியா ரூ.996 திட்டம் அன்லிமிட்டெட் இன்கமிங், தினமும் 100 எஸ்எம்எஸ், மற்றும் அன்லிமிட்டெட் டேட்டா (300 ஜிபி/28 நாட்கள்) ஆகியவற்றுடன் பயனர்களுக்கு வருகிறது. இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்தில் 90 நாட்களுக்கு அமேசான் பிரைம் லைட் சந்தா வழங்கப்படுகிறது.

    • தொடர் பழக்கத்தால் மைனர் பெண் 3 மாதம் கர்ப்பம்.
    • கருவை கலைக்க சொல்லி மைனர் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்ததால் ஆத்திரம்.

    சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த 16 வயது மைனர் பெண்ணை ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கிவிட்டு, பின்னர் கருவை கலைக்க சொன்னதால் இளைஞரின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் அந்த மைனர் பெண்.

    பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது சதாம். இவர் அபன்பூர் என்ற இடத்தில் எம்.எஸ். என்ஜினீயரிங் அதிகாரியாக வேலைப் பார்த்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரை சேர்ந்தவர் 16 வயது வயது மைனர் பெண். இவருக்கும் முகமது சதாமுக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதன் காரணமாக அந்த மைனர் பெண் கர்ப்பமாகியுள்ளார். இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன்னதினம் (செப்டம்பர் 28ஆம் தேதி) ராய்ப்பூருக்கு சென்றுள்ளார்.

    அங்குள்ள லாட்ஜியில் இரண்டு பேரும் தங்கியுள்ளனர். அங்கு வைத்து முகமது சதாம், இந்த மைனர் பெண்ணிடம் கருவை கலைத்துவிட வற்புறுத்தியுள்ளார். அத்துடன் இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட, கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.

    பின்னர் சமதானம் அடைந்து தூங்க சென்றுள்ளனர். அப்போது, கருவை கலைக்க சொல்கிறாயா? என ஆத்திரமடைந்த அந்த மைனர் பெண், காதலன் மிரட்டிய அந்த கத்தியை எடுத்து, காதலின் கழுத்தை அறுத்துள்ளார். கழுத்தை அறுத்ததுடன், அவரின் செல்போனை எடுத்துக்கொண்டு வெளியில் வந்து கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு ரெயில்வே நிலையத்திற்கு சென்றுள்ளார். ரெயில்நிலையம் அருகே லாட்ஜ் சாவியை தூக்கி எறிந்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

    வீட்டிற்கு வந்த மகளிடம், எங்கு சென்றாய் என தாய் கேட்க, நடந்த விசயம் அனைத்தும் தாயிடம் கூறியுள்ளார். உடனடியாக தாய், மகளை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று நடந்த அனைத்தும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விாசரணை நடத்தி வருகின்றனர்.

    அந்த மைனர் பெண் 3 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். கருவை கலைக்க அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார். சதாம் அவரை திருமணம் செய்ய விரும்பவில்லை, கருவை கலைத்துவிடு எனச் சொல்லியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு, கொலையில் முடிந்துள்ளது.

    • எடப்பாடி பழனிசாமிக்கு வருவது கட்சி கூட்டம்.
    • விஜயை பார்க்க அனைத்து தரப்பினரும் வருவார்கள்.

    த.வெ.க. பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க நிர்வாகிகளான கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், மத்திய மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    அப்போது, டி.எ.ஸ்.பி தரப்பில் த.வெ.க. நிர்வாகிகள் மீது அடுக்கக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவை,

    * முனியப்பன் கோவில் பகுதியில் கேரவன் உள்ளே விஜய் சென்றுவிட்டார், அவரை பார்த்திருந்தால் கூட்டம் கலைந்திருக்கும்.

    * புஸ்ஸி ஆனந்த் வாகனத்தை நிறுத்தி தாமதத்தை ஏற்படுத்தியது.

    * பிரசார வாகனம் குறிப்பிட்ட இடத்தை அடைந்தவுடன் போதும் என்றேன், ஆனால் ஆதவ் இன்னும் முன்னே செல்ல வேண்டும் என்றார்.

    * கைது செய்யப்பட்டுள்ள த.வெ.க நிர்வாகிகள் இருவரும் விஜய் வாகனத்தை முன்னே செல்ல விடாமல் தாமதப்படுத்தினர்.

    * விஜய் வாகனம் ராங் ரூட்டில் சென்றது, நாங்கள் தடுத்தோம், ஆனால் 2-ம் கட்ட தலைவர்கள் பேருந்தை நிறுத்தவில்லை.

    * கரூர் பாலத்தில் இருந்து வேண்டுமென்றே தாமதமாக வந்ததாகவும் தன்னை மீறி ராங் ரூட்டில் சென்றதாகவும் டி.எஸ்.பி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

    இதனை தொடர்ந்து, மைதானம் போன்ற பகுதியை ஏன் கேட்கவில்லை என நீதிபதி பரத் குமார் கேள்வி எழுப்பினார். அதற்கு த.வெ.க. சார்பில், சனிக்கிழமை சம்பள நாள் என்தால் யாரும் கூட்டத்திற்கு வரமாட்டார்கள் என கணித்ததாக என தெரிவித்தனர்.

    இதையடுத்து நீங்கள் கேட்ட 3 இடமுமே பத்தாது. காலாண்டு விடுமுறை, வாரவிடுமுறை நாள் என்றபோதும், மக்கள் ஏன் குறைவாக வருவார்கள் என்று எப்படி கணக்கிட்டீர்கள்?

    * அதிக கூட்டம் வரும் என்று விஜய்க்கு தெரியுமா? அவரிடம் சொல்லப்பட்டதா?

    * விஜயை பார்க்க 10ஆயிரம் பேர் தான் வருவார்கள் என்று எதை வைத்து கூறினீர்கள்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நீதிபதி,

    * எடப்பாடி பழனிசாமிக்கு வருவது கட்சி கூட்டம்.

    * விஜயை பார்க்க அனைத்து தரப்பினரும் வருவார்கள்.

    * குழந்தைகள் கண்டிப்பாக வருவார்கள்.

    * அதற்குத் தகுந்த இடத்தை நீங்கள் கேட்டிருக்க வேண்டும் என்று கூறினார்.

    அதற்கு, இவ்வளவு பெரிய கூட்டம் வருமென்று நாங்களே எதிர்பார்க்கவில்லை என்று த.வெ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அனுமதி பெறும்போது வேலுச்சாமிபுரம் இடம் திருப்தியாக உள்ளது என புஸ்ஸி ஆனந்த் கூறினார். அப்போதே வேண்டாம் என சொல்ல வேண்டியது தானே என காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

    இவ்வாறு நீதிமன்றத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது. 

    • தமிழக வெற்றிக்கழகத்தினர் கூட்டத்தை ஒருங்கிணைப்பு செய்வதில் தவற விட்டுவிட்டனர்.
    • அடுத்த தலைமுறை இளைஞர்கள், மாணவர்கள் செத்து கிடக்கும்போது அழுகை வந்தது.

    திருச்சி:

    பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கரூர் சம்பவத்தில் நாங்கள் உடனடியாக சென்றதை பற்றி சிலர் தவறாக பேசுவது மிகவும் வேதனையாக உள்ளது. தமிழக அரசு சார்பில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில் அனைவரும் அவரவருடைய கருத்துக்களை கூறுவர்.

    நான் நாகப்பட்டினத்தில் இருந்து வந்து கொண்டிருக்கும் பொழுது எனக்கு செய்தி வந்தது. இரவு 10 மணிக்கு நான் கரூர் சென்றேன். நம் கண் முன்னாடியே பிணவறை முன்பு பள்ளி மாணவர்கள் செத்து ஸ்ட்ரக்சரில் தூக்கி வரும் பொழுது எந்த மனிதனாக இருந்தாலும், எந்த தலைவனாக இருந்தாலும் இறப்பின் பொழுது மன வேதனை இருக்கத்தான் செய்யும்.

    கரூரில் நடந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. நான் எந்த கருத்து சொன்னாலும் சரி இருக்காது. அவர் உடனடியாக களத்தில் சென்று கண்டுபிடித்து யார் மீது தவறு? என்று கூறினாலும் அது தவறுதான்.

    தமிழக வெற்றிக்கழகத்தினர் கூட்டத்தை ஒருங்கிணைப்பு செய்வதில் தவற விட்டுவிட்டனர். அனைவருக்கும் மனிதாபம் என்று ஒன்று உள்ளது .உயிரிழப்புகளில் அவர்களுக்கும் மனவேதனை இருக்கும். அந்த விதத்தில் இது சார்ந்து ஆணையம் சார்பில் ஒரு நல்ல அறிக்கை வரும் பொழுது அது பற்றி பேசலாம்.

    அடுத்த தலைமுறை இளைஞர்கள், மாணவர்கள் செத்து கிடக்கும்போது அழுகை வந்தது. அன்புமணி ராமதாசிற்கு நேற்றே நான் பதில் கூறிவிட்டேன். உணர்ச்சியற்ற இதுபோல் சிலர் இருக்கும் காலகட்டத்தில் நாங்களும் பொது வாழ்வில் இருக்கிறோம். மக்கள் நலன் சார்ந்து எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நாங்களும் இருக்கின்றோம்.

    டெட் தேர்ச்சி என்பது மிக அவசியம் என்ற கோர்ட்டு தீர்ப்பு அனைத்து ஆசிரியர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் அழைத்து இது குறித்து கருத்து கேட்கப்பட்டது. மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கவும் பள்ளி கல்வி முறை சீர்குலைவதை தடுக்கவும் உச்ச நீதிமன்றத்தில் பள்ளி கல்வித்துறை தமிழக அரசு சார்பாக மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளோம். ஆசிரியர்களை பாதுகாப்பது ஒரு புறம் இருந்தாலும் லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வியில் எந்த தடையும் ஏற்படாமல் பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதில் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

    ஒற்றுமை மிக முக்கியம். ஒரு சிலர் பதவி உயர்வு சார்ந்த கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள். ஒரு சிலர் வாழ்வாதாரமே போகக்கூடிய நிலை இந்த டெட் தீர்ப்பில் உள்ளது. டெட் தீர்ப்பில் முதலில் ஆசிரியர்களை காப்பாற்றுவோம். அதன் பிறகு இதில் உள்ள சிக்கல்களை முதலமைச்சருடன் கலந்து பேசி சரி செய்வோம்.

    அரசாங்கம் அன்பு கரங்கள் திட்டத்தில் அயல் நாட்டிற்கு வேலை செல்வது வரை கல்வித் துறையில் பல முன்னேற்றத் திட்டங்களை கொண்டு வருகிறோம். மாணவர்கள் அறிவு சார்ந்த கருத்துக்களை பெற்று யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு தெரிவியுங்கள். படிக்க வேண்டிய வயதில் படியுங்கள். அதில் கவனம் செலுத்துங்கள்.

    உங்களை நம்பி தான் வீடும், அரசும் உள்ளது. உங்களுக்கு பிடித்த தலைவர்கள் பின்னால் நீங்கள் செல்லுங்கள். நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. உங்களது உயிர் மிக முக்கியம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • ஒட்டுமொத்த உலக நாடுகளும் போரை வேண்டாம் என இறங்கி வந்தன.
    • போரை தொடங்க வேண்டாம் என அமெரிக்கா கேட்டுக்கொண்டது.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. மே மாதம் 7ஆம் தேதி அதிகாலை பாகிஸ்தான் நாடடிற்குள் புகுந்த இந்திய விமானப்படை விமானங்கள், அங்குள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது.

    இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. தாக்குதல்களை இந்தியா திறம்பட எதிர்த்தது பதிலடி கொடுத்து வந்தது. இந்த சண்டை மே 10ஆம் தேதி வரை நீடித்தது. பின்னர் இருநாட்டு ராணுவத் தலைவர்கள் பேச்சுவார்த்தை முடிவில் சண்டை முடிவுக்கு வந்தது.

    ஆனால், வர்த்தக ஒப்பந்தத்தை முன்வைத்து இந்தியா- பாகிஸ்தான் இடையேயான சண்டையை முடிவுக்கு கொண்டு வந்தேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். ஆனால் இந்தியா- பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தில் 3ஆவது நாடு தலையீடு இல்லை என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது.

    இதற்கிடையே இந்திய எதிர்க்கட்சிகள் 3ஆவது நாடு தலையீட்டை கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில்தான் டி.வி. விவாதத்தின்போது இந்தியாவின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரான ப. சிதம்பரம் 26/11 தாக்குதலின்போது போரை தொடங்க வேண்டாம் என்று அமெரிக்கா சொன்னதாக தெரிவித்துள்ளார். இதற்கு பாஜக தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

    டி.வி. விவாதத்தின்போது "அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் காண்டலீசா ரைஸ் என்னிடமும், பிரதமரிடமும் (அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்) போரை தொடங்க வேண்டாம். ஆயுதம் மூலம் (போர்) பதிலடி கொடுப்பதை மறுபரிசீலனை செய்யுங்கள் எனத் தெரிவித்தார். ஆனால், நான் இது தொடர்பாக அரசு முடிவு எடுக்கும் எனக் கூறினேன். ஆனால், எனது மனதில் பதிலடி கொடுக்க வேண்டும் சிந்தனை ஓடியது. மொத்த உலகமும் இந்திய அரசிடம், போரை தொடங்க வெண்டும் எனத் தெரிவிக்க முன் வந்தது" என்றார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நுகர்வோர் விவகாரத்தறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி "வெளிநாட்டு அதிகாரத்தில் 26/11 தாக்குதலின்போது அரசு தவறான கையாண்டது தொடர்பாக ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் தெரிந்ததை, 17 வருடங்களுக்குப் பிறகு சிதம்பரம் ஒப்புக்கொண்டுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.

    • இப்படத்திற்கு சாம். சி. எஸ். இசையமைக்க விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.
    • இப்படம் அக்டோபர் மாதம் 31-ந்தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    'வெண்ணிலா கபடிகுழு', 'நீர்ப்பறவை', 'முண்டாசுப்பட்டி', 'ராட்சசன்', 'கட்டா குஸ்தி' போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் விஷ்ணு விஷால். இவர் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'லால் சலாம்' திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

    இதனை தொடர்ந்து தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்யன்'. இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம். சி. எஸ். இசையமைக்க விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

    'ஆர்யன்' படம் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அக்டோபர் மாதம் 31-ந்தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், 'ஆர்யன்' படத்தின் டீசர் குறித்த அறிவிப்பினை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று மாலை 5.06 மணிக்கு டீசர் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். இந்த டீசரை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.

    • கரூர் துயர சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார்.
    • கரூரில் நடந்த கொடூரத்தை பற்றி உண்மை கண்டறியும் குழுவை அமைத்திருப்பது அரசியல் நோக்கம் கொண்டதே.

    கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் பற்றி அறிந்தவுடன் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இது தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டார். அதன்படி ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார்.

    கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் குழுவை அமைத்துள்ளது. இந்த குழு இன்று கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க உள்ளனர்.

    இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில்,

    * கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை பா.ஜ.க. நேரடியாக தொடங்கி உள்ளது.

    * கரூரில் நடந்த கொடூரத்தை பற்றி உண்மை கண்டறியும் குழுவை அமைத்திருப்பது அரசியல் நோக்கம் கொண்டதே.

    * காங்கிரஸ் பேரியக்கமும் உண்மை அறியும் குழுவை நியமித்து கரூருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    * கரூர் விவகாரத்தில் பா.ஜ.க.வின் சதியை முறியடிக்க காங்கிரஸ் கட்சியின் தலையீடு உடனடி தேவையாக உள்ளது.

    * தமிழ்நாடு அல்லாத பிற மாநில பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழுவை ராகுல் காந்தி நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
    • ஒருநாள் தொடர் அக்டோபர் 19-ந் தேதி தொடங்குகிறது.

    ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனையடுத்து இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடர் அக்டோபர் 14-ந் தேதியுடன் முடிவடைகிறது.

    அதனை தொடர்ந்து இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

    முதலில் ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இதன் முதல் போட்டி அக்டோபர் 19-ந் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக விலகி உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

    அவர் ஆசிய கோப்பை தொடரின் போது காயத்தால் பாதிக்கப்பட்டார். இதனால் கடைசி 2 போட்டிகளில் பாண்ட்யா விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • இப்படிப்பட்ட நேரத்தில் பழி சுமத்துவது தேவையில்லாத ஒன்று, தவறான ஒன்று.
    • அந்த நேரத்தில் மக்களோடு மக்களாக நிற்க வேண்டும்.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் கரூரில் மக்களை சந்தித்து உரையாற்றும்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக த.வெ.க. தலைவர்கள் அரசு மற்றும் காவல்துறை மீது பழிபோடுவது குறித்து கனிமொழி எம்.பி.யிடம் கேள்வி கேட்கப்பட்டது.

    இதற்கு கனிமொழி எம்.பி. கூறியதாவது:-

    பாதிக்கப்பட்ட மக்களுடன் உடனடியாக நின்றது திமுக மற்றும் அரசாங்கம். மக்களின் உயிர் மற்றும் ஆறுதல்தான் முக்கியமான விசயம். அடிப்படையில் எல்லோரும் மனிதர்களாக செயல்பட வேண்டும். விசாரணை முடிவில் உண்மை வெளிவரும்.

    யார் மீது தவறுகள் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெளிவாக சொல்லியிருக்கிறார்.

    இப்படிப்பட்ட நேரத்தில் பழி சுமத்துவது தேவையில்லாத ஒன்று, தவறான ஒன்று. அந்த நேரத்தில் மக்களோடு மக்களாக நிற்க வேண்டும்.

    அந்த நேரத்தில் கட்சி தலைவர் அந்த இடத்தை விட்டு செல்வதோ, ஆறுதல் கூட சொல்லாமல் அந்த இடத்தை விட்டு அகன்று செல்வதோ, தன்னுடைய பாதுகாப்பை மட்டுமே நினைப்பதோ என்னைப் பொறுத்தவரையில் பார்த்திராத ஒன்று. அவர்கள் இல்லை என்றாலும், அடுத்தக்கட்ட தலைவர்களை அனுப்பியிருக்க வேண்டும்.

    நான் செல்கின்ற போதும் கூட அந்த கட்சியை சார்ந்த தலைவர்கள் இல்லை என்று பார்க்கும்போது மனிதாபிமானம் இல்லை என்று சொல்லத்தோன்றுகிறது. மற்ற கட்சித் தலைவர்கள் கூட மக்களோடு நின்று உதவி செய்து கொண்டிருக்கிறாரக்ள்.

    இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.

    ×