என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விஜயை பார்க்க 10,000 பேர்தான் வருவார்கள் என்று எதை வைத்து கூறினீர்கள்?- த.வெ.க. தரப்புக்கு நீதிபதி கேள்வி
    X

    விஜயை பார்க்க 10,000 பேர்தான் வருவார்கள் என்று எதை வைத்து கூறினீர்கள்?- த.வெ.க. தரப்புக்கு நீதிபதி கேள்வி

    • எடப்பாடி பழனிசாமிக்கு வருவது கட்சி கூட்டம்.
    • விஜயை பார்க்க அனைத்து தரப்பினரும் வருவார்கள்.

    த.வெ.க. பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க நிர்வாகிகளான கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், மத்திய மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    அப்போது, டி.எ.ஸ்.பி தரப்பில் த.வெ.க. நிர்வாகிகள் மீது அடுக்கக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவை,

    * முனியப்பன் கோவில் பகுதியில் கேரவன் உள்ளே விஜய் சென்றுவிட்டார், அவரை பார்த்திருந்தால் கூட்டம் கலைந்திருக்கும்.

    * புஸ்ஸி ஆனந்த் வாகனத்தை நிறுத்தி தாமதத்தை ஏற்படுத்தியது.

    * பிரசார வாகனம் குறிப்பிட்ட இடத்தை அடைந்தவுடன் போதும் என்றேன், ஆனால் ஆதவ் இன்னும் முன்னே செல்ல வேண்டும் என்றார்.

    * கைது செய்யப்பட்டுள்ள த.வெ.க நிர்வாகிகள் இருவரும் விஜய் வாகனத்தை முன்னே செல்ல விடாமல் தாமதப்படுத்தினர்.

    * விஜய் வாகனம் ராங் ரூட்டில் சென்றது, நாங்கள் தடுத்தோம், ஆனால் 2-ம் கட்ட தலைவர்கள் பேருந்தை நிறுத்தவில்லை.

    * கரூர் பாலத்தில் இருந்து வேண்டுமென்றே தாமதமாக வந்ததாகவும் தன்னை மீறி ராங் ரூட்டில் சென்றதாகவும் டி.எஸ்.பி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

    இதனை தொடர்ந்து, மைதானம் போன்ற பகுதியை ஏன் கேட்கவில்லை என நீதிபதி பரத் குமார் கேள்வி எழுப்பினார். அதற்கு த.வெ.க. சார்பில், சனிக்கிழமை சம்பள நாள் என்தால் யாரும் கூட்டத்திற்கு வரமாட்டார்கள் என கணித்ததாக என தெரிவித்தனர்.

    இதையடுத்து நீங்கள் கேட்ட 3 இடமுமே பத்தாது. காலாண்டு விடுமுறை, வாரவிடுமுறை நாள் என்றபோதும், மக்கள் ஏன் குறைவாக வருவார்கள் என்று எப்படி கணக்கிட்டீர்கள்?

    * அதிக கூட்டம் வரும் என்று விஜய்க்கு தெரியுமா? அவரிடம் சொல்லப்பட்டதா?

    * விஜயை பார்க்க 10ஆயிரம் பேர் தான் வருவார்கள் என்று எதை வைத்து கூறினீர்கள்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நீதிபதி,

    * எடப்பாடி பழனிசாமிக்கு வருவது கட்சி கூட்டம்.

    * விஜயை பார்க்க அனைத்து தரப்பினரும் வருவார்கள்.

    * குழந்தைகள் கண்டிப்பாக வருவார்கள்.

    * அதற்குத் தகுந்த இடத்தை நீங்கள் கேட்டிருக்க வேண்டும் என்று கூறினார்.

    அதற்கு, இவ்வளவு பெரிய கூட்டம் வருமென்று நாங்களே எதிர்பார்க்கவில்லை என்று த.வெ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அனுமதி பெறும்போது வேலுச்சாமிபுரம் இடம் திருப்தியாக உள்ளது என புஸ்ஸி ஆனந்த் கூறினார். அப்போதே வேண்டாம் என சொல்ல வேண்டியது தானே என காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

    இவ்வாறு நீதிமன்றத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×