என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இந்தியா கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வை தவிர வேறு எந்த கட்சியும் இதுவரை கூட்டணியில் சேர முன்வரவில்லை.
- பா.ம.க. உள்கட்சி மோதலால் பிளவுபட்டிருக்கிறது. அ.தி.மு.க.விலும் பிளவு ஏற்பட்டிருக்கிறது.
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது.
4 மாநகராட்சிகள், 54 நகராட்சிகள், 7 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 77 ஊராட்சி ஒன்றியங்கள், 498 கிராம பஞ்சாயத்துக்களையும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது.
மாவட்ட பஞ்சாயத்துக்களில் வெற்றி பெற்றது 3 மாதங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இத்தேர்தல் முடிவு அமைந்திருக்கிறது. இதில் ஆளும் கூட்டணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் பெற்ற அமோக வெற்றியைப் போல, 2026-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்லில் தமிழகத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் நல்லாட்சி அமைய இருப்பதை இந்த தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்துகிறது.
இந்தியா கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வை தவிர வேறு எந்த கட்சியும் இதுவரை கூட்டணியில் சேர முன்வரவில்லை. பா.ம.க. உள்கட்சி மோதலால் பிளவுபட்டிருக்கிறது. அ.தி.மு.க.விலும் பிளவு ஏற்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் 2021 சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வாங்கிய வாக்குகளை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பு உள்ள நிலையில், தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் உறுதியாக வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
இந்த நம்பிக்கைக்கு ஊக்கம் தருகிற வகையில் கேரள உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் அபார வெற்றி முன்னோட்டமாக அமைந்திருக்கிறது. இத்தகைய வெற்றியைப் பெற்றதற்கு கேரள மாநில காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட அனைவரையும் பாராட்டுகின்றேன், வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
- ஏ.கே.மூர்த்தியின் இல்ல திருமண வரவேற்பு விழா இன்று நடைபெற்றது
- தற்போது பாமக கட்சி ராமதாஸ் தரப்பு அன்புமணி தரப்பு என்று 2 கோஷ்டிகளாக உள்ளது.
பாமகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தியின் இல்ல திருமண வரவேற்பு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
பாமக தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி ஆகியோர் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
சென்னையில் ஏ.கே.மூர்த்தி இல்லத் திருமண விழாவில் நேருக்கு நேர் சந்தித்த அன்புமணி மற்றும் ஜி.கே.மணி ஆகியோர் வணக்கம் வைத்து கொண்டனர்.
தற்போது பாமக கட்சி ராமதாஸ் தரப்பு அன்புமணி தரப்பு என்று 2 கோஷ்டிகளாக உள்ளது. என்னையும், ராமதாசையும் பிரித்தது ஜி.கே.மணிதான் தான் என்று அன்புமணி தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- லோ பட்ஜெட்டில் தயாராகி, பல மடங்கு லாபத்தை இந்தாண்டு சில படங்கள் குவித்தன.
- இந்த படங்கள், தயாரிப்பாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரே நேரத்தில் நம்பிக்கை ஊட்டின.
பெரும் நட்சத்திரங்கள், நூறு கோடி பட்ஜெட், பிரம்மாண்ட விளம்பரம் அசெய்தால் தான் படம் வெற்றி பெறும் என்ற பார்முலாவை மாற்றி நல்ல கதை, சுவாரசியமான திரைக்கதை ஆகியவற்றால் 2025-ல் சில தமிழ் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்தன.
"சிறிய பட்ஜெட் = சிறிய வசூல்" என்ற பழைய கணக்கை முறியடித்து, லோ பட்ஜெட்டில் தயாராகி, பல மடங்கு லாபத்தை இந்தாண்டு சில படங்கள் குவித்தன. இந்த படங்கள், தயாரிப்பாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரே நேரத்தில் நம்பிக்கை ஊட்டின.
OTT, சிங்கிள் ஸ்க்ரீன், மல்டிப்ளெக்ஸ் என எல்லா தளங்களிலும் பொதுமக்களின் பாராட்டும், குடும்ப ஆதரவும் கிடைத்த படங்கள் தான் 2025-ன் உண்மையான பாக்ஸ் ஆபிஸ் ஹீரோக்கள். அவ்வகையில் இந்தாண்டு குறைந்த பட்ஜெட்டில் தயாராகி பல மடங்கு லாபம் கொடுத்த டாப் 5 வெற்றி படங்களை இந்த தொகுப்பில் காணலாம்

1. டூரிஸ்ட் பேமிலி:
பட்ஜெட்: ரூ.7 - 8 கோடி
வசூல்: ரூ.90 கோடி
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவான படம் 'டூரிஸ்ட் பேமிலி'. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கிய இப்படம் உலக அளவில் பெரும் வரவெற்பிற் பெற்று வசூலை வாரி குவித்தது.
இப்படம் தமிழ் நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாயை வசூலில் கடந்தது. உலகளவில் சுமார் ரூ.90 கோடி வசூலை குவித்தது.கம்மியான பட்ஜெடில் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்ட மில்லியன் டால்டர் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு 10 மடங்கு லாபம் கொடுத்து மாபெரும் வெற்றியை கொடுத்துது.

2. தலைவன் தலைவி:
பட்ஜெட்: ரூ.25 கோடி
வசூல்: ரூ.100 கோடி
விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமாக உருவான 'தலைவன் தலைவி' படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இப்படத்தில் கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
ரூபாய் 25 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம், ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. ஒரு மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம், மிகப்பெரிய வெற்றியை இந்த ஆண்டு பதிவு செய்தது.

3. டிராகன்:
பட்ஜெட்: ரூ.35 கோடி
வசூல்: ரூ.150 கோடி
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் வெளியான டிராகன் திரைப்படம் 10 நாட்களில் 100 கோடி ரூபாயை உலகளவில் வசூலித்து சாதனை படைத்தது.
லவ் டுடே படத்தை தொடர்ந்து டிராகன் படமும் பிரதீப் ரங்கநாதனுக்கு வெற்றி படமாக அமைந்தது. இப்படம் மொத்தமாக உலக அளவில் 150 கோடி ரூபாய் வசூலை கடந்தது.
பட்ஜெட் அளவில் இப்படம் இந்த பட்டியலில் உள்ள மற்ற படங்களைவிட சற்றுக் கூடுதலானாலும், அதன் அபாரமான வசூல் காரணமாக தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுத்தது

4. மாமன்:
பட்ஜெட்: ரூ.10 கோடி
வசூல்: ரூ.50 கோடி
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவான படம் மாமன். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.
இப்படத்தில் ராஜ்கிரண், சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய்மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக தயாரான இப்படம் கிராம மக்களை வெகுவாக கவர்ந்தது.
ரூபாய் 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் சுமார் 50 கோடி வரை வசூல் செய்து கோலிவுட் சினிமா வட்டாரத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

5. குடும்பஸ்தன்:
பட்ஜெட்: ரூ.8 கோடி
வசூல்: ரூ.28 கோடி
இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்து வெளியான படம் 'குடும்பஸ்தன்'. இப்படத்தில் சான்வி மேகனா கதாநாயகியாக நடித்திருந்தார்.
ஒரு நடுத்தர குடும்ப ஆண்மகன் படும் பண கஷ்டங்களை மிக நகைச்சுவையாக இப்படம் கையாண்டது.
வெறும் ரூ.8 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.28 கோடி வசூலை குவித்து சிறிய படங்களும் பெரிய வசூலை குவிக்கும் என்று இந்தாண்டு தொடக்கத்தில் எடுத்துக்காட்டியது.
- ஜூன் முதல் டிசம்பர் வரை 6 மாத காலத்தில் மும்பையில் 93 சிறுமிகள் உட்பட 145 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்.
- குர்லா, வகோலா, பவாய், மால்வானி, சகினாகா போன்ற நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் குழந்தைகள் காணாமல் போனது தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் கடந்த 36 நாட்களில் 82 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர் என காவல்துறை கவலை தெரிவித்துள்ளது.
மும்பை காவல்துறை அறிக்கையில், நவம்பர் 1 முதல் டிசம்பர் 6 வரையிலான 36 நாட்களில், குழந்தைகள் காணாமல் போனதாக 82 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்தக் காலகட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட 41 சிறுமிகளும் 13 சிறுவர்களும் காணாமல் போயுள்ளனர். ஐந்து முதல் 11 வயதுக்குட்பட்ட சிறுமிகளும் சிறுவர்களும் காணாமல் போனவர்களில் அடங்குவர்.
இந்தக் காலகட்டகாத்தில் பச்சிளம் குழந்தைகள் காணாமல் போன சம்பவங்களும் பதிவாகியுள்ளது.
குர்லா, வகோலா, பவாய், மால்வானி, சகினாகா போன்ற நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் குழந்தைகள் காணாமல் போனது தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் ஜூன் முதல் டிசம்பர் வரை 6 மாத காலத்தில் மும்பையில் 93 சிறுமிகள் உட்பட 145 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக, அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த காணாமல் போன சம்பவங்களுக்குப் பின்னால் மனித கடத்தல் இருப்பதாக காவல்துறை சந்தேகிக்கிறது.
இதற்கிடையே இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஆளும் பாஜக முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ்க்கு கடிதம் எழுதி உள்ளார்.
- பல மாவட்டங்களில் வெப்பநிலை 4 முதல் 6 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ளது.
- மூடுபனி விளக்குகளைப் பயன்படுத்தவும், வாகனங்களுக்கு இடையேயான தூரத்தை கடைபிடிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
அரியானாவில் இன்று காலை முதல் சாலைகள் தெரியாத அளவுக்கு அடைந்த மூடுபனி சூழந்துள்ளது.
இந்நிலையில் அங்கு ரோஹ்தக், ஹிசார்,ரேவாரி மாவட்டங்களில் நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் பலர் காயமடைந்தனர்.
ரோஹ்தக் மாவட்டத்தில் மேஹம் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை சந்திப்பில் முதலில், ஒரு லாரி மற்றும் ஒரு கார் மோதிக்கொண்டன. தொடர்ந்து பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டன. சுமார் 35 முதல் 40 வாகனங்கள் விபத்தில் சிக்கின.
இந்த சம்பவத்தில் பல வாகனங்கள் நொறுங்கின. விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், காவல்துறை மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல், ஹிசார் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து ஒரு லாரியுடன் மோதியதில், பின்னால் வந்த மற்றொரு பேருந்து, ஒரு கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் ஒரு இரு சக்கர ஓட்டி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற பயணிகள் காயமின்றி தப்பியதாகத் தெரிகிறது.
மேலும், ரேவாரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை இல் மற்றொரு விபத்து ஏற்பட்டது. மூன்று முதல் நான்கு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இதனால் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரியானாவில் கடந்த சில நாட்களாக கடுமையான குளிர் நிலவி வருகிறது. பல மாவட்டங்களில் வெப்பநிலை 4 முதல் 6 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ளது.
இந்த சூழலில், இந்திய வானிலை ஆய்வு மையம் அடர்ந்த மூடுபனி உருவாகும் என்றும், வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மூடுபனி விளக்குகளைப் பயன்படுத்தவும், வாகனங்களுக்கு இடையேயான தூரத்தை கடைபிடிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கைவசம் 63.4 கோடி ரூபாய் உள்ளது.
- சி.எஸ்.கே. தன் கைவசம் 43.40 கோடி ரூபாய் வைத்துள்ளது
2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக வரும் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. கடந்த மாதம் தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக்கூடிய வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணிகளும் வெளியிட்டது.
சில அணிகள் சில வீரர்களை Trade முறையில் விடுவித்துள்ளது. மற்ற வீரர்களை முழுமையாக விடுவித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 வீரர்களை விடுவித்துள்ளது. அதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 9 வீரர்களை ரிலீஸ் செய்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் ரச்சின் ரவீந்திரா, அஸ்வின், தீபக் ஹூடா, சாம் கர்ரன், பதிரனா போன்ற பெரிய வீரர்களை விடுவித்துள்ளது. இதனால் சி.எஸ்.கே. தன் கைவசம் 43.40 கோடி ரூபாய் வைத்துள்ளது. இதனால் மினி ஏலத்தில் முக்கிய வீரர்களுக்காக பெரிய தொகை வரும் செல்லும்.
அதேவேளையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கைவசம் 63.4 கோடி ரூபாய் உள்ளது. இதனால் மினி ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஆதிக்கம் செலுத்தும்.
இதனால் தங்களுக்கு வேண்டிய வீரர்களை ஏலம் எடுக்க சிஎஸ்கே- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே கடும் போட்டி நிலவும் என்று ஏற்படுகிறது.
இதனிடையே மினி ஏலத்தில் கேமரூன் கிரீன் மீது சென்னை அணி கண்வைத்துள்ளது என்று தகவல் வெளியானது.
மினி ஏலத்தில் பேட்டர் என்று கேமரூன் கிரீன் பதிவு செய்துள்ளதால் அவர் பந்துவீசுவாரா? என்று கேள்வி எழுந்தது.
இந்நிலையில், 2026 ஐபிஎல் தொடரில் பந்துவீச தயாராக உள்ளதாக கேமரூன் கிரீன் அறிவித்துள்ளார். ஏல பட்டியலில் பேட்டர் என தனது மேலாளர் தவறாக தேர்வு செய்து விட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
காயத்தில் இருந்து மீண்ட கேமரூன் கிரீன் அண்மைகாலமாக பந்துவீசுவதை தவிர்த்து வந்த நிலையில், மினி ஏலம் நெருங்கும் நிலையில் இந்த விளக்கம் அளித்துள்ளார்.
- வெற்றிவாகை சூடப்போகும் நமது வேட்பாளர்களை, வெற்றித் தலைவர் மட்டுமே அறிவிப்பார்.
- முறைப்படி தலைவர் அவர்களால் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும்.
திருச்செங்கோட்டில் த.வெ.க. கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் போட்டியிடுவதாக தகவல் வெளியான நிலையில் வேட்பாளர்களை விஜயே அறிவிப்பார் என்று த.வெ.க. அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக த.வெ.க. ஐ.டி. விங் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வெற்றிவாகை சூடப்போகும் நமது வேட்பாளர்களை, வெற்றித் தலைவர் மட்டுமே அறிவிப்பார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் அறிவிப்பு குறித்துப் பரவி வரும் தகவல் உண்மையில்லை. தற்போது நடைபெற்று வருவது தொகுதிவாரியான மற்றும் பூத் வாரியான பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டங்கள் மட்டுமே. வேட்பாளர் அறிமுகம் குறித்த தகவல், முறைப்படி தலைவர் அவர்களால் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும்.
சரியான நேரத்தில் சரியான வேட்பாளர்களைக் களமிறக்குவார் தலைவர். அதுவரை களத்தைத் தயார்படுத்துவோம். மக்கள் பணியில் கவனம் செலுத்துவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- "நகராட்சியில் LDF தோல்வியடைந்தால், நான் என் மீசையை மழித்துவிடுவேன்" என்று தேர்தலுக்கு முன்பு சபதம் எடுத்தார்.
- முந்தைய தேர்தல்களில் 12 இடங்களை வென்ற LDF, இந்த முறை ஐந்து இடங்களில் மட்டுமே வென்றது.
கேரளாவில் நடைபெற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. 6 மாநகராட்சிகளில் 4 இல் காங்கிரஸ் கூட்டணி வென்றுள்ளது.
மேலும் நகராட்சிகளிலிலும் காங்கிரஸ் கூட்டணி (UDF) கணிசமான இடங்களை கைப்பற்றியது. அதற்கு அடுத்தபடியாக ஆளும் இடது ஜனநாயக முன்னணி (LDF) அதிக இடங்களில் வென்றுள்ளது. பாஜக திருவனநாதபுரத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது.
LDF கணிசமான இடங்களில் வென்றாலும் காங்கிரஸ் கூட்டணியை விட பின்தங்கியது பேசுபொருளாகி வருகிறது.
இந்நிலையில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் இடது முன்னணி LDF தொண்டர் ஒருவர் தனது மீசையை சிரைத்துள்ளார்.
"நகராட்சியில் LDF தோல்வியடைந்தால், நான் என் மீசையை மழித்துவிடுவேன்" என்று தேர்தலுக்கு முன்பு பகிரங்கமாகக் கூறிய பாபு வர்கீஸ், முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கூறியது போல் தனது மீசையை மழித்துக் கொண்டார்.
பத்தனம்திட்டா மாவட்ட பஞ்சாயத்தில் உள்ள 16 இடங்களில் 12 இடங்களை வென்றதன் மூலம் காங்கிரசின் UDF பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.
முந்தைய தேர்தல்களில் 12 இடங்களை வென்ற LDF, இந்த முறை ஐந்து இடங்களில் மட்டுமே வென்றது.
கூடுதலாக, UDF 34 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் ஏழு தொகுதி பஞ்சாயத்துகளில் பெரும்பான்மையைப் பெற்றது.
- இந்தத் திட்டத்திற்கு மகாத்மா காந்தியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது, அது மாற்றப்படும்போது, மீண்டும் அரசாங்க வளங்கள் வீணாகின்றன.
- ஒரு காலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை தோல்வியின் சின்னம் என்று வர்ணித்த பிரதமர், இப்போது அந்தப் புரட்சிகரமான திட்டத்திற்குப் பெருமை தேடிக்கொள்ளும் நோக்கில் அதன் பெயரை மாற்றுகிறார்.
2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்டது 'மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்' (MGNREGA). இதன் கீழ் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. பாஜக ஆட்சியில் இதற்கான நிதியை பாஜக விடுவிக்காததால் இதன் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியும் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக மாநிலங்கள் குற்றம்சாட்டின.
இந்நிலையில் 'மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்' என்பதை விரிவுபடுத்தி 'புஜ்ய பாபு ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்' (Pujya Bapu Rural Employment Scheme) என மத்திய பாஜக அரசு பெயர் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
நேருவை தொடர்நது காந்தி மீது பாஜக வெறுப்பை உமிழ்ந்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டி இருந்தார்.
காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "இதற்குப் பின்னால் உள்ள மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
இதற்குப் பின்னால் உள்ள மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
முதலாவதாக, இந்தத் திட்டத்திற்கு மகாத்மா காந்தியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது, அது மாற்றப்படும்போது, மீண்டும் அரசாங்க வளங்கள் வீணாகின்றன.
அலுவலகங்கள் முதல் எழுதுபொருள் வரை அனைத்தையும் மறுபெயரிட வேண்டும், இது ஒரு பெரிய மற்றும் விலையுயர்ந்த செயல்முறையாகும். அப்படியானால் இதை தேவையில்லாமல் செய்வதன் பயன் என்ன? எனக்குப் புரியவில்லை" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தனது எக்ஸ் பக்கத்தில், "ஒரு காலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை தோல்வியின் சின்னம் என்று வர்ணித்த பிரதமர், இப்போது அந்தப் புரட்சிகரமான திட்டத்திற்குப் பெருமை தேடிக்கொள்ளும் நோக்கில் அதன் பெயரை மாற்றுகிறார்.
இது மகாத்மா காந்தியை நமது தேசிய மனசாட்சியிலிருந்தும், குறிப்பாக இந்தியாவின் ஆன்மா குடியிருப்பதாக அவர் கூறிய கிராமங்களிலிருந்தும் அழிப்பதற்கான மற்றொரு வழியாகும்.
இந்தத் திட்டத்திற்கு வேண்டுமென்றே இழைக்கப்படும் புறக்கணிப்பை மூடிமறைப்பதற்காக செய்யப்படும் ஒரு மேலோட்டமான மாற்றத்தைத் தவிர இந்த நடவடிக்கை வேறொன்றுமில்லை.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத் தொழிலாளர்கள் அதிக ஊதியம் கோரி வருகின்றனர், ஆனால் மத்திய அரசு ஆண்டுதோறும் இந்தத் திட்டத்திற்கான ஒதுக்கீட்டைக் குறைத்து வருகிறது.
நிலுவைத் தொகைகள் குவிந்து கொண்டே செல்கின்றன, இது இந்தத் திட்டத்திற்கு மெதுவான மரணத்தை ஏற்படுத்துவதற்காக கவனமாகத் திட்டமிடப்பட்ட ஒரு உத்தியாகத் தெரிகிறது.
உண்மையில், இந்த அரசாங்கத்திற்கு நலத்திட்டங்களை வழங்குவதில் எந்த நோக்கமும் இல்லை. யோசனைகள் தீர்ந்துவிட்ட நிலையில், அது வெறும் பாசாங்கு செய்கிறது.
மோடி அவர்களே, நீங்கள் விரும்பியபடி அதன் பெயரை மாற்றிக்கொள்ளுங்கள், இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டத்தை இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு வந்தவர்கள் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களும் திருமதி சோனியா காந்தி அவர்களும்தான் என்பதை மக்கள் அறிவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
- எவ்வளவோ சோதனைகளையெல்லாம் சாதனைகளாக மாற்றிய ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி.
- தமிழ்நாட்டில் வளர்ச்சி தொடர வேண்டும் என்றால் தி.மு.க.வின் ஆட்சி தொடர வேண்டும்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அவருடன் முத்தரசன், திருமாவளவன், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன் ஆகியோரும் பங்கேற்றனர்.
திருமண விழாவில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்ச்சி குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
* கூடுதலாக 17 லட்சம் சகோதரிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
* விடுபட்டவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
* எவ்வளவோ சோதனைகளையெல்லாம் சாதனைகளாக மாற்றிய ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி.
* வாக்குரிமையை காப்பாற்ற SIR பணிகளில் தி.மு.க.வினர் சுழன்று சுழன்று பணியாற்றினோம்.
* தேர்தல் முடியும் வரை தி.மு.க.வினரின் பணிகள் முடிவடையவில்லை.
* சாதனைகளை வீடு வீடாக கொண்டு சேர்த்து அவற்றை வாக்குகளாக மாற்ற வேண்டும்.
* அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சட்டசபையில் ஒருபோதும் முறையாக பதில் அளித்தது இல்லை.
* தமிழ்நாட்டில் வளர்ச்சி தொடர வேண்டும் என்றால் தி.மு.க.வின் ஆட்சி தொடர வேண்டும்.
* தமிழ்நாட்டில் 7-வது முறையாக திராவிட மாடல் ஆட்சி தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உத்தியோகஸ்தர்களுக்கு உயர்பதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும்.
- மாணவ - மாணவிகள் படிப்பில் அக்கறை செலுத்துவது நல்லது. பெண்களுக்குப் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும்.
தனுசு ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு அஷ்டமத்தில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். எனவே மாதத் தொடக்கத்தில் மனக்குழப்பங்கள் கொஞ்சம் அதிகரிக்கலாம். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும். மார்கழி 6-ந் தேதி குரு மிதுன ராசிக்கு வருகிறார். அப்பொழுது அவர் உங்கள் ராசியை சப்தம பார்வையாக பார்க்கிறார். எனவே அதன்பிறகு இடர்பாடுகள் அகலும். இனிய பலன் கிடைக்கும். தொழில் ரீதியாக எடுத்த புது முயற்சிகளில் வெற்றி உண்டு.
மிதுன - குரு
மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வருகிறார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. பொதுவாக குரு இருக்கும் இடத்தைவிட பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகம் உண்டு. அந்த அடிப்படையில் குருவின் பார்வையால் குழப்பங்கள் அகலும். குதூகலம் கூடும். இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சி வெற்றி தரும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் உதிரி வருமானமும் உண்டு. கல்யாண முயற்சிகள் கைகூடும். கடமையைச் செவ்வனே செய்து முடித்துப் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். குருவின் பார்வை சகோதர ஸ்தானத்திலும், லாப ஸ்தானத்திலும் பதிவதால் உடன்பிறப்புகளின் திருமண வாய்ப்பும் கைகூடலாம்.
உடன்பிறந்தவர்கள் பகை மாறி பாசம் காட்டுவர். பூர்வீக சொத்துக்களை தக்கவிதத்தில் பாகம் செய்துகொள்வீர்கள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். பெற்றோரின் மணி விழாக்கள், முத்து விழாக்கள் போன்ற விழாக்களை நடத்தும் யோகமும் சிலருக்கு வாய்க்கும். இதுவரை விலகிக் கொள்வதாகச் சொல்லி அச்சுறுத்திய பங்குதாரர்கள் இப்பொழுது, தொழிலில் நீடிப்பதாக சொல்வார்கள். புகழ்பெற்ற புராதன கோவில்களுக்குச் சென்று வழிபட்டு வரும் எண்ணம் நிறைவேறும்.
தனுசு - சுக்ரன்
மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் உங்கள் ராசிக்கே வரும் இந்த நேரம் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கொடுக்கல் - வாங்கல்கள் சீராகவும், சிறப்பாகவும் அமையும். உத்தியோகத்தில் பதவி உயர்வு வருவதற்கான சூழ்நிலை உண்டு. பயணங்கள் பலன் தருவதாக அமையும். பணிபுரியும் இடத்தில் இருந்து விலகிக் கொண்டு புதிய இடத்திற்குச் செல்லலாமா? என்று சிந்தித்தவர்களுக்கு, இப்பொழுது நல்ல தகவல் கிடைக்கும். இக்காலத்தில் எதிர்பாராத சில நல்ல நன்மைகளும் வந்துசேரும்.
மகர - செவ்வாய்
மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். விரயாதிபதி உச்சம் பெறும் இந்த நேரத்தில், விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் வரலாம். புதிய சொத்துக்கள் வாங்க நினைப்பவர்கள் வில்லங்கம் பார்த்து வாங்குவது நல்லது. சகோதர அனுசரிப்பு சற்று குறையும். உடன்பிறப்புகள் ஒத்துழைப்பு திருப்தி தராது. சேமிப்பு கரையும் நேரம் இது.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்பதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ - மாணவிகளுக்கு கல்வி மேன்மை உண்டு. பெண்களுக்கு வரவைக் காட்டிலும் செலவு கூடும். வரன்கள் வாசல் தேடி வரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 17, 23, 24, 27, 28, ஜனவரி: 7, 8, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.
மகர ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, ராசிநாதன் சனி தன ஸ்தானத்தில் வலிமை பெற்று சஞ்சரிக்கிறார். எனவே தனவரவு தாராளமாக வந்து கொண்டேயிருக்கும். தொழில் வெற்றி நடைபோடும். துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவுவர். உச்சம் பெற்ற குருவின் பார்வை மாதத் தொடக்கத்தில் அமைவதால் கல்யாணக் கனவுகள் நனவாகும். காரிய வெற்றியும், பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும் கிடைக்கலாம். குரு பகவான், மிதுன ராசிக்கு சென்ற பிறகு கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். உத்தியோக மாற்றம், ஊர் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
மிதுன - குரு
மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு செல்கிறார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு வரும் குருவால் சில நல்ல மாற்றங்களும் வந்து சேரும். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். அவர் வக்ரம் பெறுவது நன்மைதான். நல்ல சந்தர்ப்பங்கள் இல்லம் தேடிவரும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் கணிசமான தொகை கைகளில் புரளும். உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு மட்டுமல்லாமல் பதவி உயர்வும் கூட ஒருசிலருக்கு வரலாம். கடன் சுமை படிப்படியாக குறையும்.
குருவின் பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிவதால் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். பணப்பற்றாக்குறை அகலும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டுமென்ற எண்ணம் பூர்த்தியாகும். புதிய வாகனம் வாங்கிப் பயணிக்க எடுத்த முயற்சி கைகூடும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு மேலிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அதன் விளைவாக புதிய பொறுப்புகள் வந்துசேரும்.
தனுசு - சுக்ரன்
மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும் பொழுது விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் ஏற்படும். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டாளிகள் ஒரு சிலர் விலகினாலும், புதியவர்கள் வந்திணைவர். நீண்டதூரப் பயணங்கள் பலன்தருவதாக அமையும். உத்தியோகத்தில் இலாகா மாற்றங்கள் எதிர்பாராத விதத்தில் வரலாம். வளர்ச்சியும், தளர்ச்சியும் மாறி மாறி வரும் நேரம் இது.
மகர - செவ்வாய்
மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். லாபாதிபதியான அவர் உச்சம் பெறும்போது, பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். கிளைத் தொழில் தொடங்கும் வாய்ப்பும் ஒருசிலருக்கு உண்டு. வீடு வாங்குவது அல்லது வீடு கட்டுவது பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வந்துசேரும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இலாகா மாற்றம் வரலாம். கலைஞர்களுக்கு புகழ் கூடும். மாணவ - மாணவிகள் படிப்பில் அக்கறை செலுத்துவது நல்லது. பெண்களுக்குப் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். சுபச்செய்திகள் வந்துசேரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 18, 19, 26, 27, 29, 30, ஜனவரி: 9, 10, 11, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.
கும்ப ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசிநாதன் சனி வலிமை பெற்று சஞ்சரிக்கிறார். எனவே மனக்கிலேசங்கள் அகலும். உடல் நலம் சீராகி உற்சாகத்தோடு இயங்குவீர்கள். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கும்பத்தில் ராகு சஞ்சரிப்பதால் எடுத்த முயற்சிகளில் எளிதில் வெற்றி கிடைக்கும். புதியவர்கள் பங்குதாரர்களாக வந்திணைந்து பொருளாதாரத்தை மேம்படுத்தி கொடுப்பார்கள். சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் சிறப்பான மாதமாகவே அமையும்.
மிதுன - குரு
மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதியப் போகிறது. குரு பார்க்க கோடி நன்மை என்பதற்கேற்ப, இக்காலம் உங்களுக்கு ஒரு பொற்காலமாக அமையப் போகிறது. அதிலும் 9-ம் பார்வையாக குரு பார்வை பதிவதால் பொன், பொருள் சேர்க்கையும், பொருளாதார முன்னேற்றமும், நண்பர்கள் வழியில் நல்ல வாய்ப்புகளும் வந்துசேரும். குடும்பத்தில் மேலும் சிலர் வருமானம் ஈட்டும் சூழ்நிலை ஏற்படும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.
'நீண்ட நாட்களாக வரன்கள் வந்து விட்டுப்போகிறதே.. எப்பொழுதுதான் இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும்' என்று கவலைப்பட்டவர்களுக்கு, நல்ல தகவல் இல்லம் தேடி வரப்போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். வெளிநாடு செல்வதில் தாமதம் ஏற்பட்டவர்களுக்கு அல்லது வெளிநாட்டிலிருந்து தாய்நாடு செல்ல முடியாமல் தத்தளித்தவர்களுக்கு இப்பொழுது வழிபிறக்கும். உங்கள் எண்ணங்கள் ஈடேறும் விதத்தில் குரு பார்வை கைகொடுக்கப் போகிறது.
தனுசு - சுக்ரன்
மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும்பொழுது, தொழில் முன்னேற்றம் ஏற்படும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவோடு தொழிலை விரிவுபடுத்திக் கொள்வீர்கள். செய்யும் செயல்பாடுகளில் இருந்த தடைகள் உடைபடும். புதிய பணியாளர்கள் உங்கள் எண்ணங்களைப் புரிந்து கொண்டு செயல்படுவர்.
மகர - செவ்வாய்
மார்கழி 30-ந் தேதி, மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய் உச்சம் பெறும்போது, தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். கணிசமான தொகை கைகளில் புரளும். வாடகை கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்த கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். தேர்ந்தெடுத்த களம் எதுவாக இருந்தாலும், அதில் வெற்றி கிடைக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொன்னான நேரம் இது. வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு நட்பால் நன்மை உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதில் இருந்தபடியே தொழில் செய்யும் சூழல் உருவாகும். கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மாணவ - மாணவிகள், படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு வருமானம் திருப்தி தரும். வளர்ச்சி கூடும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 16, 17, 20, 21, 27, 28, ஜனவரி: 1, 2, 12, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.
மீன ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு, பஞ்சம ஸ்தானத்தில் உச்சம்பெற்றும், வக்ரம் பெற்றும் சஞ்சரிக்கிறார். அதன் பார்வை உங்கள் ராசியில் பதிவது யோகம்தான். ஆனால் மாதத் தொடக்கத்திலேயே 6-ம் நாள் வக்ரமாகி 4-ம் இடத்திற்கு செல்கிறார். இதன் மூலம் அவர், அர்த்தாஷ்டம குருவாக மாறுகிறார். எனவே விழிப்புணர்ச்சியோடு இருந்தாலும் விரயங்கள் கூடும். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். மருத்துவச் செலவுகளால் மனக்கலக்கம் ஏற்படும். ஏழரைச் சனியில், விரயச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் எதையும் ஒருமுறைக்குப் பல முறை யோசித்துச் செய்ய வேண்டிய நேரம் இது.
மிதுன - குரு
மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அவரது பார்வை பலனால் மாற்றங்கள் ஏற்படும் என்றாலும் கூட, 4-ம் இடத்தில் குரு இருப்பது அவ்வளவு நல்லதல்ல. பணநெருக்கடி ஏற்படலாம். ஒரு கடனை அடைக்க, மற்றொரு கடன் வாங்கும் சூழல் உருவாகும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. ஆரோக்கியத் தொல்லையால் கவலைப்பட நேரிடலாம். பணிபுரியும் இடத்தில் பதற்றமும், மனக்குழப்பமும் உருவாகும்.
'தொழில் மாற்றம் செய்யலாமா? அல்லது நடக்கும் தொழிலையே தொடரலாமா?' என்ற சிந்தனை அதிகரிக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்கள் வீண்பழிக்கு ஆளாக நேரிடும். குடும்பத்தில் பழைய பிரச்சினை மீண்டும் தலைதூக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. வாகனத்தால் தொல்லைகளும், வளர்ச்சியில் குறுக்கீடுகளும் வந்து கொண்டேயிருக்கும். எனவே இதுபோன்ற நேரங்களில் சுய ஜாதக அடிப்படையில் திசாபுத்திக்கேற்ற தெய்வங்களை தேர்ந்தெடுத்து வழிபடுவது நல்லது.
தனுசு - சுக்ரன்
மார்கழி 7-ந் தேதி தனுசு ராசிக்கு சுக்ரன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும்போது மிகவும் கவனமாக இருப்பது நல்லது. பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கும். பணியாளர் தொல்லைகளும், திடீர், திடீரென விரயங்களும் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவர். வேலைப்பளு கூடும். சகப் பணியாளர்களால் பிரச்சினைகள் உருவாகும். குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும் இக்காலத்தில் அவசியம் தேவை.
மகர - செவ்வாய்
மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் வலிமையடையும் இந்த நேரம் பணப்புழக்கம் அதிகரிக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். பூர்வீக சொத்துக்களை பங்கிட்டுக் கொள்வதில் இருந்த பிரச்சினை நீங்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதில் தடை அகலும். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள், முன்பின் தெரியாதவர்களை நம்பி எந்தப் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் உறுதியாகலாம். கலைஞர்களுக்கு புது முயற்சியில் வெற்றி கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் மிகுந்த கவனம் தேவை. பெண்களுக்கு விரயங்கள் கூடும். வீடு மாற்றம், இடமாற்றம் வரலாம்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 16, 19, 23, 24, 29, 30, ஜனவரி: 3, 4, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.
- அனுராதா கணவர் கடந்த ஆண்டு இறந்த நிலையில் அவரது மகன்களுக்கும் வேலை இல்லாததால் குடும்பம் பண கஷ்டத்தில் இருந்துள்ளது.
- காவல்துறை மற்றும் சட்ட அலுவலக அதிகாரிகள்வந்தபோது வீடு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது.
மாத வாடகை செலுத்த முடியாமல் வீட்டை விட்டு விரட்டப்படும் சூழலில் குடும்பம் ஒன்று தற்கொலை செய்த சோக சம்பவம் தலைநகர் டெல்லியில் அரங்கேறி உள்ளது.
டெல்லியின் கல்காஜியில் ஒரு தாய் மற்றும் அவரது இஒரண்டு குழந்தைகளின் உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டன.
இந்தக் குடும்பம் இங்கு ஒரு வீட்டில் ரூ.40,000 மாத வாடகைக்கு அனுராதா கபூர் (52), அவரது மகன்கள் ஆஷிஷ் கபூர் (32) மற்றும் சைதன்யா கபூர் (27) வசித்து வந்தனர்.
அனுராதா கணவர் கடந்த ஆண்டு இறந்த நிலையில் அவரது மகன்களுக்கும் வேலை இல்லாததால் குடும்பம் பண கஷ்டத்தில் இருந்துள்ளது. கட்டுமானத் துறையில் பணிபுரிந்த கணவர், குடும்பத்திற்கு மிகப்பெரிய கடன் சுமையை ஏற்படுத்தியிருந்தார்.
இந்த வீட்டின் மூன்றாவது மாடியை டிசம்பர் 2023 இல் குடும்பத்தினர் வாடகைக்கு எடுத்தனர். ஆனால் அவர்கள் வாடகை செலுத்தவில்லை.
கடந்த ஆண்டு கணவரும் இறந்த பிறகு, வீட்டை காலி செய்ய வீட்டு உரிமையாளர் நீதிமன்றத்தை அணுகினார் .
கடுமையான மன அழுத்தத்தில் இருந்த மகன்கள் கடந்த மாதம் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். வாடகை தொடர்பாக வீட்டு உரிமையாளருடன் அடிக்கடி வாக்குவாதங்கள் நடந்து வந்தன.
வீட்டு உரிமையாளரின் புகாரைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி வீட்டை காலி செய்ய காவல்துறை மற்றும் சட்ட அலுவலக அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை வந்தபோது, வீடு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது.
வீட்டு உரிமையாளர் அழைத்தபோது திறக்காததால், போலி சாவியைப் பயன்படுத்தி கதவைத் திறந்தபோது, தாயும் அவரது இரண்டு மகன்களும் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர்.
உடல்களுக்கு அருகில் ஒரு தற்கொலைக் குறிப்பு கண்டெடுக்கப்பட்டதாகவும், அதில் பண நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக எழுதப்பட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர் .
இறந்தவரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், உடல்கள் பிரேத பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.






