என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • 56 கட்சிகள், இயக்கங்கள் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கின்றன.
    • தலைவர்களை அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் வரவேற்றனர்.

    சென்னை:

    தொகுதி மறுசீரமைப்பு குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்குகிறது.

    இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து சில கட்சிகள் மனு அளித்ததால் பரிசீலித்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 56 கட்சிகள், இயக்கங்கள் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கின்றன.

    இன்று காலை 9.30 மணிஅளவில் இருந்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க அரசியல் தலைவர்கள் தலைமை செயலகத்திற்கு வருகை வந்தனர். அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த தலைவர்களை அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் வரவேற்றனர்.





    அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க. சார்பில் ஜெயக்குமார், இன்பதுரை, காங்கிரஸ் கட்சி சார்பில் செல்வப்பெருந்தகை, பா.ம.க. சார்பில் அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. சார்பில் வைகோ, சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் பூங்குன்றன், த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த், கொங்கு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன், உலகத் தமிழ் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

    • ஒவ்வொரு குடும்பத்தினரும் மறைமுகமாக ரூ.8500 கூடுதல் செலவு செய்ய வேண்டி உள்ளது.
    • அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க.வுக்கு சரியான பாடம் புகட்ட தயாராகி உள்ளனர் என்று பேசினார்.

    இடையகோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் புலியூர் நத்தத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கட்சியின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளில் தமிழக அரசு கடன் சுமையால் தத்தளிக்கிறது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினர் மீதும் ரூ.3.25 லட்சம் கடன் சுமை ஏற்பட்டுள்ளது. குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை கொடுத்து விட்டு பல்வேறு வரிகள் மற்றும் மின்சார கட்டணத்தை உயர்த்தி விட்டனர்.

    இதனால் ஒவ்வொரு குடும்பத்தினரும் மறைமுகமாக ரூ.8500 கூடுதல் செலவு செய்ய வேண்டி உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப், பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர்கள் போன்ற மக்கள் நலத்திட்டங்கள் அனைவருக்கும் சென்று சேர்ந்தது. ஆனால் தற்போது அந்த திட்டங்களை நிறுத்தி விட்டனர். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் என்று கூறி ஏமாற்றி விட்டனர். இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தி.மு.க. அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். மொத்தத்தில் அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க.வுக்கு சரியான பாடம் புகட்ட தயாராகி உள்ளனர் என்று பேசினார்.

    முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசிக்கொண்டிருந்த போதே குடிபோதையில் இருந்த ஒரு தொண்டர் 100 நாள் வேலைக்கு சம்பளம் தரமாட்டிங்கிறாங்க, ஒயின்ஷாப்பில் பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வாங்குகிறார்கள் அதையும் பேசுங்கள் என சத்தம் போட்டார். இதனால் டென்ஷனான திண்டுக்கல் சீனிவாசன் அ.தி.மு.க. தொண்டரை பார்த்து அமைதியாக இருப்பா... எல்லாத்தையும் பற்றி பேசுகிறேன் என கூறி விட்டு அவரை அங்கிருந்து அகற்றுமாறு அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். இந்த சம்பவத்தால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    • பெண்கள் சிறைச்சாலையின் அலுவலக கட்டிடத்திற்கு மேலே 25 மீட்டர் உயரத்தில் இந்த டிரோன் பறந்துள்ளது.
    • டிரோன் பறந்த நாளில் அந்த பகுதியில் திருமணமோ வேறு எந்த விழாவோ நடைபெறவில்லை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூரில் மத்திய சிறை உள்ளது. இதன் அருகே மாவட்ட சிறை மற்றும் ஒரு சிறப்பு துணை சிறைச்சாலை உள்ளது. இவற்றுக்கு பின்னால் பெரிய சுவர்களை கொண்ட பெண்கள் சிறையும் உள்ளது.

    இங்கு சம்பவத்தன்று இரவு ஒரு டிரோன் 2 முறை பறந்து சுற்றி வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயர் பாதுகாப்பு கொண்ட பெண்கள் சிறைச்சாலையின் அலுவலக கட்டிடத்திற்கு மேலே 25 மீட்டர் உயரத்தில் இந்த டிரோன் பறந்துள்ளது.

    முதலில் சிறை ஊழியர்கள் இதனை சாதாரணமாகத்தான் கருதினர். ஆனால், 2 முறை அந்த கட்டிடத்தை சுற்றி வந்த டிரோன், சிவப்பு மற்றும் பச்சை விளக்குகளை ஒளிரச் செய்து விட்டு மறைந்தது தான் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக சிறை ஊழியர்கள், கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுத்தனர். அவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் மற்றும் விழாக்களின்போது டிரோன் பறக்க விட்டு படம் எடுப்பது வழக்கம்.

    பெண்கள் சிறைச்சாலையின் மேலே டிரோன் பறந்த நாளில் அந்த பகுதியில் திருமணமோ வேறு எந்த விழாவோ நடைபெறவில்லை. எனவே டிரோன் பறந்தது ஏன்? அதனை பறக்க விட்டது யார்? என்பது மர்மமாக உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இம்மாத தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.63,520-க்கு விற்பனையானது. தொடர்ந்து கடந்த 2 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,080-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 55 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,065-க்கும் சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,520-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    04-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,080

    03-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520

    02-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520

    01-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520

    28-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,680

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    04-03-2025- ஒரு கிராம் ரூ.107

    03-03-2025- ஒரு கிராம் ரூ.106

    02-03-2025- ஒரு கிராம் ரூ.105

    01-03-2025- ஒரு கிராம் ரூ.105

    28-02-2025- ஒரு கிராம் ரூ.105

    • ஊழல் குறித்து கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
    • முன்ஜாமீன் வழங்கக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.

    அரசு துறைகள் மற்றும் அரசியல் கட்சிகளில் உயர் மட்டங்களில் உள்ள ஊழல்வாதிகள், கூலிக்கு அமர்த்தப்பட்ட கொலையாளிகளை விட சமூகத்திற்கு மிப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், பொது வாழ்வில் ஊழல் குறித்து கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

    "வளரும் நாட்டில் ஒரு சமூகம் கூலிக்கு அமர்த்தப்பட்ட கொலையாளிகள் முதல் சட்டம்ஒழுங்கு வரையிலான அச்சுறுத்தலை விட பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது என்றால், அது அரசாங்கத்தின் உயர் மட்டங்களிலும் அரசியல் கட்சிகளிலும் உள்ள ஊழல்வாதிகளிடம் இருந்து தான் வருகிறது," என்று நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.

    கிராம பஞ்சாயத்துகள் மேற்கொள்ளும் வளர்ச்சி பணிகளை தணிக்கை செய்ய லஞ்சம் கேட்டதாக குற்றம்சாட்டப்பட்ட பஞ்சாப் அரசின் தணிக்கை ஆய்வாளர் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இத்தகைய காட்டமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து, இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மேலும் கூறும் போது, "நமது சமூகத்தின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்திய ஒரே ஒரு காரணியைக் குறிப்பிடச் சொன்னால், அது மறுக்க முடியாத ஊழல். ஊழலின் அளவு குறித்து மக்கள் மத்தியில் இருந்த கருத்துக்களில் ஒரு பகுதியே உண்மையாக இருந்தாலும், உயர் பதவியில் உள்ளவர்கள் தண்டனையின்றி செய்யும் பரவலான ஊழல்தான் இந்த நாட்டில் பொருளாதார அதிருப்திக்கு வழிவகுத்தது என்ற பார்வை உண்மையிலிருந்து தொலைவில் இருக்காது," என்று தெரிவித்தது.

    • பொதுத்தோ்வுக்கான அறைக் கண்காணிப்பாளா் பணியில் 44,236 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
    • பொதுத்தோ்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட மாணவா் மீது விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத் தோ்வு இன்று (புதன்கிழமை) முதல் நடைபெற உள்ளது. இந்தத் தோ்வை 8 லட்சத்து 23 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா்.

    தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தோ்வு கடந்த 3-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடா்ந்து பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தோ்வு இன்று (புதன்கிழமை) முதல் மாா்ச் 27-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    முதல் நாளில் தமிழ் உள்பட மொழிப் பாடங்களுக்கான தோ்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தோ்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,316 மையங்களில் 8 லட்சத்து 23 ஆயிரம் போ் எழுதினா். இதில் 7,557 பள்ளிகளில் இருந்து 8,18,369 மாணவ-மாணவிகள், 4,755 தனித்தோ்வா்கள் மற்றும் 137 கைதிகளும் அடங்குவா்.

    பொதுத்தோ்வுக்கான அறைக் கண்காணிப்பாளா் பணியில் 44,236 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். மேலும், முறைகேடுகளைத் தடுக்க 4,470 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 154 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

    பொதுத்தோ்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட மாணவா் மீது விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தோ்வு எழுத தடை விதிக்கப்படும். மேலும், ஒழுங்கீன செயல்களை ஊக்கப்படுத்த பள்ளி நிா்வாகம் முயன்றால் அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

    இதுதவிர பொதுத்தோ்வு குறித்து மாணவா்கள், பெற்றோா் புகாா்கள் மற்றும் கருத்துகளைத் தெரிவித்து பயன்பெற வசதியாக தோ்வுக்கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. தோ்வு நாள்களில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த கட்டுப்பாட்டு அறை செயல்படும். இவற்றை 94983 83075, 94983 83076 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

    மேலும், பள்ளிக்கல்வித்துறையின் 14417 இலவச உதவி மையத்தையும் தொடா்பு கொள்ளலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

    • ரெயில் நிலையத்தில் கும்பமேளாவுக்கு செல்ல குவிந்த பயணிகளிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
    • ரெயில்வே மண்டல மேலாளர், கூடுதல் மேலாளர் உள்ளிட்ட 5 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி சமீபத்தில் நடந்து முடிந்தது. கோடிக்கணக்கான மக்கள் இதில் புனித நீராடினர்.

    கடந்த மாதம் டெல்லி ரெயில் நிலையத்தின் நடைமேடை 13, 14, 15-ல் நின்றிருந்த உத்தர பிரதேச மாநிலம் செல்லும் ரெயில்களில் ஏற பயணிகள் முண்டியடித்ததால் பயங்கர கூட்டம் கூடியது. இதனால் கும்பமேளாவுக்கு செல்ல குவிந்த பயணிகளிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த ரெயில் விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் டெல்லி ரெயில் நிலைய கூட்ட நெரிசலில் 18 பேர் பலியான விவகாரத்தில் ரெயில்வே மண்டல மேலாளர், கூடுதல் மேலாளர் உள்ளிட்ட 5 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    கோட்ட ரெயில்வே மேலாளர் சுக்விந்தர் சிங், கூடுதல் கோட்ட ரெயில்வே மேலாளர் விக்ரம் சிங் ராணா மற்றும் ரெயில்வே பாதுகாப்புப் படையின் உதவி பாதுகாப்பு ஆணையர் மகேஷ் சந்த் சைனி, ரெயில் நிலைய இயக்குநர் மகேஷ் யாதவ், முதுநிலை பிரிவு வணிக மேலாளர் ஆனந்த் மோகன் ஆகியோரை இடமாற்றம் செய்து ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

    • அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு ஆட்சி செய்கிறதா என்பதைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துவது ஆகும்.
    • அரசியல் தலையீடு இன்றிச் செயல்படும் நிலையை உருவாக்க வேண்டும்.

    இந்தியாவில் அதிகரித்துள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப அடுத்த ஆண்டு (2026) பாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. இது மக்கள்தொகை உயர்வை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ் நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. இது குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (புதன்கிழமை) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற இருக்கிறது.

    இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்புக்கு த.வெ.க. தலைவர் விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு!

    நம் அரசியல் சாசனத்தின் 64ஆவது சட்டத் திருத்தத்தின்படி நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு 2026ஆம் ஆண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் ஆண்டிற்கு பிறகு இந்த மறுசீரமைப்புப் பணி, ஒன்றிய அரசால் தொடங்கப்பட வாய்ப்புள்ளது. எவ்வகையில் இந்த மறுசீரமைப்பு நடைபெறும் என்பது பற்றி எந்த ஒரு தெளிவான விளக்கமோ வாக்குறுதியோ மாநிலங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை.

    தற்போதைய நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமலோ அல்லது இன்னொரு அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தியோ இந்த மறுசீரமைப்பு நடைபெறலாம். எந்த முறையைப் பின்பற்றினாலும் அதில் மாநிலங்களின் மக்கள் தொகை" என்பது ஒற்றை அளவுகோலாக இல்லாவிடினும் முக்கிய அளவுகோலாக இருக்கும் என்பது பட்டவர்த்தனமான உண்மை.

    நம் அரசியல் சாசன 81ஆவது சட்டப் பிரிவு, நாட்டிலுள்ள ஒவ்வொரு மக்களவை உறுப்பினரும் கூடுமானவரையில் "சம-எண்ணிக்கையிலான மக்களுக்குப் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது (equal population representation for each MP) இதற்கு அடிப்படையான One vote-one value' என்பது ஒரு ஜனநாயகக் கோட்பாடு. ஆனால் அதே சமயம் இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட கூட்டாட்சி நாட்டில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் சமமான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதும் ஒரு முக்கியமான ஜனநாயகக் கோட்பாடாகும். இந்த இரு கோட்பாடுகளையும் முடிந்தவரையில் ஒன்று மற்றொன்றை அதிகம் பாதிக்காத வகையில் நடைமுறைப்படுத்த முயல வேண்டும்.

    புதிதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் மட்டுமோ அல்லது புதிய மக்கள் தொகையை ஒரு முக்கிய அளவுகோலாகக் கொண்டோ நிகழ்த்தப்படும் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறையும் ஆபத்து உள்ளது.

    கடந்த 50 ஆண்டுகளாகக் கல்வி, சுகாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டில் முதலீடு செய்து, தனது மக்கள்தொகை வளர்ச்சியைத் திறம்படக் கட்டுப்படுத்தியுள்ள தமிழ்நாடு மற்றும் இதர தென்மாநிலங்களுக்கு இது ஒரு பெரும் தண்டனையே அன்றி வேறு இல்லை. ஏற்கெனவே ஒரு மாநிலத்தில் இருந்து மட்டும் 8C நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால், அது மற்ற மாநிலங்களை விடக் கூடுதல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. இந்த வேறுபாடு மேலும் அதிகரிக்கக் கூடாது. தென் மாநிலங்களுக்கு ஒப்பீட்டளவில் தொகுதிகள் மேலும் குறைக்கப்பட்டாலோ அல்லது உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களுக்கு ஒப்பீட்டளவில் கூடுதலாகத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலோ அது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனைத்து தேர்தல் அதிகாரிகளும் வாக்காளர்களிடம் கண்ணியத்தோடு நடந்துகொள்ள பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
    • வாக்குச்சாவடிகளை பொறுத்தவரை, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 800 முதல் 1,200 வாக்காளர்கள் இருக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றுள்ள 2 நாள் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது.

    ஞானேஷ்குமார், இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் மாநாடு இதுவாகும். மாநாட்டை அவர் தொடங்கி வைத்தார். பல்வேறு விஷயங்கள் குறித்து தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி, தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடினார்.

    மாநாட்டில் ஞானேஷ்குமார் பேசும்போது கூறியதாவது:-

    நாடு முழுவதும் உள்ள அனைத்து தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், வாக்காளர் பதிவு அதிகாரிகள், வட்டாரநிலையிலான அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்ற வேண்டும். அவ்வப்போது இந்திய தேர்தல் கமிஷன் வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளை உறுதியுடன் நிறைவேற்ற வேண்டும்.

    அரசியல் கட்சிகளுக்கு எளிதில் அணுகக்கூடியவர்களாகவும், பதில் அளிக்கக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். தற்போதுள்ள சிக்கல்களுக்கு தீர்வுகாண, அனைத்து சட்டப்பூர்வ நிலைகளிலும் அனைத்துக்கட்சி கூட்டங்கள், சம்பந்தப்பட்ட தகுதிவாய்ந்த அதிகாரிகளைக் கொண்டு தொடர்ந்து நடத்த வேண்டும்.

    ஒவ்வொரு தலைமை தேர்தல் அதிகாரியும் மார்ச் 31-ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட துணை தேர்தல் கமிஷனருக்கு பிரச்சினை வாரியான நடவடிக்கை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

    அரசியல் சட்டப்பிரிவு 325 மற்றும் பிரிவு 326-ன் படி, 18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்யப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

    அனைத்து தேர்தல் அதிகாரிகளும் வாக்காளர்களிடம் கண்ணியத்தோடு நடந்துகொள்ள பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் எந்தவொரு தேர்தல் ஊழியரோ அல்லது அதிகாரியோ மிரட்டப்படவில்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

    வாக்குச்சாவடிகளை பொறுத்தவரை, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 800 முதல் 1,200 வாக்காளர்கள் இருக்க வேண்டும். வாக்காளரின் வீட்டில் இருந்து 2 கி.மீ. தூரத்துக்குள் வாக்குச்சாவடிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வாக்களிப்பதை எளிமைப்படுத்தவும், அதிகரிக்கவும் கிராமப்புற வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகளை நிறைவு செய்ய வேண்டும். நகர்ப்புறங்களில் உயரமான கட்டிடங்கள் மற்றும் குடிசைப்பகுதிகளில் கூட வாக்குச்சாவடிகள் நிறுவப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தலைமை தேர்தல் அதிகாரிகளின் மாநாட்டுக்கு ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஒரு மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் ஒரு வாக்காளர் பதிவு அதிகாரி அழைக்கப்பட்டு உள்ளனர். இந்த நடைமுறை முதல் முறையாக செயல்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • டிரம்ப் அறிவித்த திட்டத்திற்கு மாற்றாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • டிரம்ப் அறிவிப்புக்கு அரபு தலைவர்கள் கடும் கண்டனம்.

    பாலஸ்தீன அதிகாரசபையின் எதிர்கால நிர்வாகம் காசா பகுதியை கட்டியெழுப்பும் திட்டத்தை அரபு தலைவர்கள் முன்மொழிந்துள்ளனர். காசாவை முழுமையாக கைப்பற்றி அதனை மீண்டும் கட்டியெழுப்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்த திட்டத்திற்கு மாற்றாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதியை கட்டியெழுப்பி, அங்கு நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார். இவரது இந்த அறிவிப்புக்கு அரபு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    பாலஸ்தீன அதிகாரசபை (PA) காசாவை ஆளும் வாய்ப்பு இன்னும் உறுதியாகவில்லை. எனினும், இஸ்ரேல் அந்த அமைப்பின் எதிர்காலத்தை நிராகரித்தது. மேலும் டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தின் போது வாஷிங்டனில் இருந்த பாலஸ்தீன விடுதலை அமைப்பின் அலுவலகத்தை மூடிவிட்டு இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தார்.

    கடந்த ஜனவரி மாதம் மீண்டும் ஆட்சிக்கு திரும்பிய டொனால்டு டிரம்ப், சிறிது நேரத்திலேயே, அமெரிக்கா காசா பகுதியை "கையகப்படுத்தி" அதை "மத்திய கிழக்கின் ரிவியரா"வாக மாற்ற வேண்டும் என்று பரிந்துரைத்தார். மேலும், பாலஸ்தீன மக்களை எகிப்து அல்லது ஜோர்டானுக்கு இடம்பெயர கட்டாயப்படுத்தினார். இவரது கருத்து உலகளவில் பெரும் எதிர்ப்பை தூண்டியது.

    நேற்று (செவ்வாய்க்கிழமை) கெய்ரோவில் நடந்த அரபு லீக் உச்சிமாநாட்டில் அதிபர் டிரம்ப்-இன் திட்டத்திற்கு மாற்று திட்டத்தை முன்மொழிந்தது. முன்னதாக அதிபர் டிரம்ப்-இன் கருத்தை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வரவேற்பதாக தெரிவித்து இருந்தார்.

    உச்சிமாநாட்டின் நிறைவில், "விரிவான அரபுத் திட்டம்" ஏற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்திற்கு சர்வதேச சமூகம் ஆதரவை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகா கும்பமேளாவிற்கு ரூ.7,500 கோடி முதலீடு செய்யப்பட்டது.
    • பிரயாக்ராஜில் ஒரு குற்றச் சம்பவமும் நடைபெறவில்லை.

    உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி மாதம் 13-ந்தேதி தொடங்கிய மகா கும்பமேளா பிப்ரவரி மாதம் 26-ந்தேதி நிறைவுபெற்றது. 45 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் சுமார் 66 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த விழாவில் சில அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றாலும், விழா சிறப்பாக நடைபெற்றதாக யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், 2025-26-ம் ஆண்டு பட்ஜெட் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது கும்பமேளாவில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சித்தன.

    அப்போது பேசிய முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், 45 நாட்களில் 66 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்ற பிரயாக்ராஜில் ஒரு குற்றச் சம்பவமும் நடைபெறவில்லை. மகா கும்பமேளாவிற்கு ரூ.7,500 கோடி முதலீடு செய்யப்பட்டது. இதில் ரூ. 3 லட்சம் கோடி வணிகத்தில் சாதனை படைத்துள்ளது. மகா கும்பமேளாவின் பொருளாதார தாக்கம் இந்த ஆண்டு இந்தியாவின் 6.5 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு பங்களிக்கும் என்று கூறினார்.

    இதனிடையே, கும்பமேளாவில் படகு ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டதாக சமாஜ்வாதி கட்சி குற்றம்சாட்டியது. இதற்கு பதிலளித்த யோகி ஆதித்யநாத், நான் ஒரு படகு ஓட்டுநர் குடும்பத்தின் வெற்றிக் கதையைச் சொல்கிறேன். அவர்களிடம் 130 படகுகள் உள்ளன. கும்பமேளா நடைபெற்ற 45 நாட்களில் அவர்கள் ரூ. 30 கோடி லாபம் ஈட்டியுள்ளனர். ஒவ்வொரு படகும் ரூ. 23 லட்சம் சம்பாதித்துள்ளது. தினசரி அடிப்படையில், அவர்கள் ஒவ்வொரு படகிலிருந்தும் ரூ. 50,000-52,000 சம்பாதித்தனர் என்றார். 

    ×