என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அனைத்துக்கட்சி கூட்டம்... தலைமைச்செயலகத்துக்கு வருகை தந்த அரசியல் தலைவர்கள்
- 56 கட்சிகள், இயக்கங்கள் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கின்றன.
- தலைவர்களை அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் வரவேற்றனர்.
சென்னை:
தொகுதி மறுசீரமைப்பு குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்குகிறது.
இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து சில கட்சிகள் மனு அளித்ததால் பரிசீலித்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 56 கட்சிகள், இயக்கங்கள் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கின்றன.
இன்று காலை 9.30 மணிஅளவில் இருந்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க அரசியல் தலைவர்கள் தலைமை செயலகத்திற்கு வருகை வந்தனர். அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த தலைவர்களை அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் வரவேற்றனர்.
அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க. சார்பில் ஜெயக்குமார், இன்பதுரை, காங்கிரஸ் கட்சி சார்பில் செல்வப்பெருந்தகை, பா.ம.க. சார்பில் அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. சார்பில் வைகோ, சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் பூங்குன்றன், த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த், கொங்கு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன், உலகத் தமிழ் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.






