என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
![நெல்லை அருகே பிளஸ்-2 மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை நெல்லை அருகே பிளஸ்-2 மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை](https://media.maalaimalar.com/h-upload/2022/10/05/1771717-suicide.jpg)
நெல்லை அருகே பிளஸ்-2 மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- னக்கு தூக்கம் வருவதாக கூறிவிட்டு மாணவி ஹரினி மாடிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
- சேரன்மகா தேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி மூலக்கோவில் தெருவில் வசித்து வருபவர் அர்ஜூனன். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர்.
அர்ஜூனன் வெளியூரில் தங்கி இருந்து டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பத்தமடை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இந்தி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
இவர்களது மகள் ஹரினி(வயது 17) சேரன்மகாதேவியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று சரஸ்வதி பூஜையையொட்டி குடும்பத்தினர் அனைவரும் அங்குள்ள கோவிலுக்கு சென்றுள்ளனர். இரவு வீடு திரும்பிய அவர்கள் வீட்டில் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது தனக்கு தூக்கம் வருவதாக கூறிவிட்டு மாணவி ஹரினி மாடிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
சிறிது நேரத்தில் அவரை சாப்பிட அழைப்பதற்காக அவரது தாய் மாடிக்கு சென்று பார்த்தபோது கதவு பூட்டிக்கிடந்தது. இதனால் அங்குள்ள ஜன்னல் வழியாக அவர் எட்டிப்பார்த்துள்ளார். அங்கு ஹரினி தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கதவை உடைத்து ஹரினியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக சேரன்மகா தேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)