என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
![லில்லியம் மலர் லில்லியம் மலர்](https://img.maalaimalar.com/Articles/2022/May/202205121210045581_Tamil_News_Tamil-News-lilium-flowers-in-Ooty-botanical-garden_SECVPF.gif)
X
லில்லியம் மலர்
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் லில்லியம் மலர்கள்
By
மாலை மலர்12 May 2022 4:55 AM GMT (Updated: 12 May 2022 6:40 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் லில்லியம் மலர் வெள்ளை, சிவப்பு, ஆரஞ்சு, இளஞ்சிவப்பு நிறம், மெரூன் ஆகிய ஐந்து வண்ணங்களில் பூத்துக்குலுங்குவதை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா கோடை விழா மற்றும் மலர் கண்காட்சிக்கு தயாராகி வருகிறது. இங்கு பல லட்சம் மலர் நாற்றுக்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டு நடவு செய்யப்பட்டது. தற்போது அவைகள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும் வகையில் பல்வேறு வண்ணங்களில் பூத்துக் குலுங்குகின்றன. பல வகை ரோஜா மலர்கள், டெல்பீனியம், சால்வியா, டயாந்தஸ், ஹாலண்டுல்லா, பிங்க் ஆஸ்டர் போன்ற பல்வேறு வகை மலர்கள் பூத்துக்குலுங்கும் சூழலில் நெதர்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட லில்லியம் மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
லில்லியம் மலர் வெள்ளை, சிவப்பு, ஆரஞ்சு, இளஞ்சிவப்பு நிறம், மெரூன் ஆகிய ஐந்து வண்ணங்களில் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்குவதை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்துச் செல்கின்றனர். இந்த வருடம் பிரையண்ட் முழுவதும் அதிக பரப்பளவில் நடவு செய்யப்பட்டுள்ள பல்வேறு வகையான பல வண்ணங்களில் பூத்துள்ள மலர்களுக்கு நடுவே லில்லியம் மலர்கள் மட்டும் சுற்றுலா பயணிகளிடையே தனி முத்திரை பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா கோடை விழா மற்றும் மலர் கண்காட்சிக்கு தயாராகி வருகிறது. இங்கு பல லட்சம் மலர் நாற்றுக்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டு நடவு செய்யப்பட்டது. தற்போது அவைகள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும் வகையில் பல்வேறு வண்ணங்களில் பூத்துக் குலுங்குகின்றன. பல வகை ரோஜா மலர்கள், டெல்பீனியம், சால்வியா, டயாந்தஸ், ஹாலண்டுல்லா, பிங்க் ஆஸ்டர் போன்ற பல்வேறு வகை மலர்கள் பூத்துக்குலுங்கும் சூழலில் நெதர்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட லில்லியம் மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
லில்லியம் மலர் வெள்ளை, சிவப்பு, ஆரஞ்சு, இளஞ்சிவப்பு நிறம், மெரூன் ஆகிய ஐந்து வண்ணங்களில் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்குவதை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்துச் செல்கின்றனர். இந்த வருடம் பிரையண்ட் முழுவதும் அதிக பரப்பளவில் நடவு செய்யப்பட்டுள்ள பல்வேறு வகையான பல வண்ணங்களில் பூத்துள்ள மலர்களுக்கு நடுவே லில்லியம் மலர்கள் மட்டும் சுற்றுலா பயணிகளிடையே தனி முத்திரை பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)