என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேலூர் அருகே கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வாலிபர் அடித்துக்கொலை
Byமாலை மலர்3 Oct 2020 4:17 AM GMT (Updated: 3 Oct 2020 4:17 AM GMT)
மேலூர் அருகே கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
மேலூர்:
மேலூர் அருகே உள்ள முத்திருளாண்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரபு(வயது 20). இவருக்கும், வெங்கடாச்சலம் என்பவரின் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியது. இதையறிந்த வெங்கடாச்சலம் பிரபுவை கண்டித்தார். இருப்பினும் பிரபு கள்ளத்தொடர்பை கைவிடவில்லை.
இந்தநிலையில் நேற்று அந்த பகுதியில் பிரபு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மேலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வெங்கடாச்சலம், பிரபுவை தனது வீட்டுக்கு அழைத்து மதுவாங்கி கொடுத்துள்ளார்.
மதுவை அருந்திய பிரபு போதையில் இருந்தபோது, நண்பர்களுடன் சேர்ந்து வெங்கடாச்சலம் அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் பிரபு பிணத்தை அந்த பகுதியில் போட்டு விட்டு வெங்கடாச்சலம் மற்றும் அவரது நண்பர்கள் தப்பியோடி விட்டனர். கொலை சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதுகுறித்து பிரபுவின் தாயார் வசந்தா மேலூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர் அருகே உள்ள முத்திருளாண்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரபு(வயது 20). இவருக்கும், வெங்கடாச்சலம் என்பவரின் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியது. இதையறிந்த வெங்கடாச்சலம் பிரபுவை கண்டித்தார். இருப்பினும் பிரபு கள்ளத்தொடர்பை கைவிடவில்லை.
இந்தநிலையில் நேற்று அந்த பகுதியில் பிரபு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மேலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வெங்கடாச்சலம், பிரபுவை தனது வீட்டுக்கு அழைத்து மதுவாங்கி கொடுத்துள்ளார்.
மதுவை அருந்திய பிரபு போதையில் இருந்தபோது, நண்பர்களுடன் சேர்ந்து வெங்கடாச்சலம் அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் பிரபு பிணத்தை அந்த பகுதியில் போட்டு விட்டு வெங்கடாச்சலம் மற்றும் அவரது நண்பர்கள் தப்பியோடி விட்டனர். கொலை சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதுகுறித்து பிரபுவின் தாயார் வசந்தா மேலூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X