என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
டிரைவரை திருமணம் செய்த ஐ.ஏ.எஸ். மாணவி போலீஸ் கமிஷனரிடம் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்
Byமாலை மலர்7 Dec 2017 12:54 PM GMT (Updated: 7 Dec 2017 12:54 PM GMT)
ஐ.ஏ.எஸ். மாணவி வீட்டை விட்டு வெளியேறி டிரைவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் பாதுகாப்பு கேட்டு கோவை போலீஸ் கமிஷனரிடம் இன்று தஞ்சம் அடைந்தனர்.
கோவை:
குமரி மாவட்டம் நாகர்கோவில் ஸ்காட் நகரை சேர்ந்தவர் பிளசி(வயது 21). என்ஜினீயரிங் படித்துள்ள இவர் தற்போது ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படித்து வருகிறார். இவரும், கட்டையன்விளையை சேர்ந்த டிரைவர் நிது(28) என்பவரும் கடந்த 1 வருடமாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் பிளசி வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காதலர்கள் கடந்த 29-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறி கோவைக்கு வந்தனர். பின்னர் நண்பர்கள் உதவியுடன் போத்தனூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
புதுமண தம்பதிகள் நிது - பிளசி ஆகியோர் கோவை போலீஸ் கமிஷனர் பெரியய்யாவை சந்தித்து பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தனர். அதில் பிளசி வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். தற்போது அங்குள்ள போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலைபார்க்கும் பிளசியின் உறவினர் ஒருவர் தங்களது நண்பர்களை மிரட்டுவதாகவும், எனவே எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் அதில் கூறியிருந்தனர்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் ஸ்காட் நகரை சேர்ந்தவர் பிளசி(வயது 21). என்ஜினீயரிங் படித்துள்ள இவர் தற்போது ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படித்து வருகிறார். இவரும், கட்டையன்விளையை சேர்ந்த டிரைவர் நிது(28) என்பவரும் கடந்த 1 வருடமாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் பிளசி வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காதலர்கள் கடந்த 29-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறி கோவைக்கு வந்தனர். பின்னர் நண்பர்கள் உதவியுடன் போத்தனூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
புதுமண தம்பதிகள் நிது - பிளசி ஆகியோர் கோவை போலீஸ் கமிஷனர் பெரியய்யாவை சந்தித்து பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தனர். அதில் பிளசி வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். தற்போது அங்குள்ள போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலைபார்க்கும் பிளசியின் உறவினர் ஒருவர் தங்களது நண்பர்களை மிரட்டுவதாகவும், எனவே எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் அதில் கூறியிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X