என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்தது: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்தது: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்](https://img.maalaimalar.com/Articles/2017/Apr/201704241247390089_Water-inflow-at-least-in-kalakkad-thalayanai_SECVPF.gif)
X
களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்தது: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
By
மாலை மலர்24 April 2017 7:17 AM GMT (Updated: 24 April 2017 7:17 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்ததுள்ளதால் சுற்றுலா வந்த பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
களக்காடு:
களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணையில் குளியல் நடத்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். தலையணையில் தண்ணீர் வரத்து இருப்பதால் கடந்த சில மாதங்களாக சுற்றுலா பயணிகள் குவிந்து உற்சாகமாக குளித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் வெப்பத்தால் களக்காடு மலையில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தலையணையில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து விட்டது.
நேற்று விடுமுறைநாள் என்பதால் தலையணையில் குளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஆனால் தலையணையில் குறைந்த அளவே தண்ணீர் வந்ததால் நன்கு குளிக்க முடியாமல் அவர்கள் ஏமாற்றமடைந்தனர். கடும் வறட்சி காரணமாக தலையணை பகுதியில் உள்ள மரங்களும் வெயிலால் பட்டு போய் காணப்படுகிறது.
வறட்சி எதிரொலியாக தலையணையை மூடுவது பற்றி வனத்துறையினர் பரிசீலனை செய்து வருகின்றனர். வழக்கமாக மே 1-ம் தேதி தலையணை மூடப்படும். ஆனால் இந்தாண்டு வறட்சி ஏற்பட்டுள்ளதால் அதற்கு முன்னதாகவே தலையணை மூடப்படும் என தெரிகிறது.
களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணையில் குளியல் நடத்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். தலையணையில் தண்ணீர் வரத்து இருப்பதால் கடந்த சில மாதங்களாக சுற்றுலா பயணிகள் குவிந்து உற்சாகமாக குளித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் வெப்பத்தால் களக்காடு மலையில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தலையணையில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து விட்டது.
நேற்று விடுமுறைநாள் என்பதால் தலையணையில் குளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஆனால் தலையணையில் குறைந்த அளவே தண்ணீர் வந்ததால் நன்கு குளிக்க முடியாமல் அவர்கள் ஏமாற்றமடைந்தனர். கடும் வறட்சி காரணமாக தலையணை பகுதியில் உள்ள மரங்களும் வெயிலால் பட்டு போய் காணப்படுகிறது.
வறட்சி எதிரொலியாக தலையணையை மூடுவது பற்றி வனத்துறையினர் பரிசீலனை செய்து வருகின்றனர். வழக்கமாக மே 1-ம் தேதி தலையணை மூடப்படும். ஆனால் இந்தாண்டு வறட்சி ஏற்பட்டுள்ளதால் அதற்கு முன்னதாகவே தலையணை மூடப்படும் என தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)