என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை: அமைச்சர் கடம்பூர் ராஜு
Byமாலை மலர்1 Feb 2017 7:54 AM GMT (Updated: 1 Feb 2017 7:55 AM GMT)
தியாகி திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று திருப்பூர் குமரனுக்கு சென்னி மலையில் மணிமண்டபம் அமைக்கப்படுமா என்று தென்னரசு (அ.தி.மு.க.) கேள்வி எழுப்பினார். அதற்கு செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியதாவது:-
திருப்பூர் ரெயில் நிலையம் எதிரில் தியாகி திருப்பூர் குமரனுக்கு நினைவகம் அமைக்கப்பட்டு 1991-ம் ஆண்டு திறக்கப்பட்டது. அவரது சிலையும் நிறுவப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
அக்டோபர் 4-ந்தேதி திருப்பூர் குமரன் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட முதல்- அமைச்சர் உத்தவிட்டதின் பேரில் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு தியாகிகளுக்கு புரட்சி தலைவி அம்மா மணிமண்டபம் அமைக்கவும் திருவுருவ சிலை, நினைவு இல்லங்கள் போன்ற பணிக்காக 5 ஆண்டுகளில் ரூ.101 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சாதனை படைத்தார்.
எனவே உறுப்பினரின் கோரிக்கை கனிவுடன் பரிசீலிக்கப்படும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X