search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை - திருப்பூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி உள்பட 2 பேர் பலி
    X

    கோவை - திருப்பூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி உள்பட 2 பேர் பலி

    கோவை - திருப்பூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி உள்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள பொங்கலூர் தசராபாளையத்தை சேர்ந்தவர் தட்சணா மூர்த்தி. இவரது மனைவி ஷீலா. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இவர்களது மூத்த மகள் ரித்திகா (9). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். ரித்திகா கடந்த 1 வாரமாக மர்மகாய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.

    இதற்காக ரித்திகாவை அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை.

    இந்தநிலையில் ரித்திகா சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

    மற்றொரு சம்பவம்...

    மதுரை மாவட்டம் மேலதோப்பை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகள் தீபா (வயது 18). இவர் கடந்த 1½ வருடங்களாக கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள தனியார் மில்லில் தங்கி இருந்து தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இவர் கடந்த 1 வாரமாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை.

    இது குறித்து மில் நிர்வாகத்தினர் தீபாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவத்தன்று தீபாவின் சகோதரி திவ்யா மற்றும் உறவினர்கள் அவரை அழைத்து செல்வதற்காக கருமத்தம்பட்டியில் உள்ள மில்லுக்கு சென்றனர்.

    பின்னர் தீபா தங்கி இருந்த அறைக்கு சென்றனர். அறையில் தீபா மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    Next Story
    ×