என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![சங்கரன்கோவில் தொழில் அதிபர் நெல்லை தனியார் விடுதியில் மர்ம மரணம் சங்கரன்கோவில் தொழில் அதிபர் நெல்லை தனியார் விடுதியில் மர்ம மரணம்](https://img.maalaimalar.com/Articles/2017/Jan/201701151852345687_sankarankovil-entrepreneur-mystery-died-private-lodge-nellai_SECVPF.gif)
சங்கரன்கோவில் தொழில் அதிபர் நெல்லை தனியார் விடுதியில் மர்ம மரணம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
நெல்லை:
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் ஞானமுத்து (வயது65). இவர் ‘பிளாஸ்டிக் பை’ தயாரிக்கும் தொழிற்சாலை வைத்து நடத்தி வந்தார். இவர் நேற்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று வருவதாக மனைவியிடம் கூறி விட்டு நெல்லை வந்தார். இங்கு நெல்லை கொக்கிர குளம் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.
நேற்று மாலை நீண்ட நேரம் ஞானமுத்து அறையை விட்டு வெளியே வராததால், லாட்ஜ் ஊழியர் அறைக்கதவை தட்டினார். அப்போது கதவு திறந்து கிடந்தது. கழிவறை வாசலில் ஞானமுத்து தலையில் காயத்துடன் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து லாட்ஜ் ஊழியர்கள், பாளை போலீசுக்கும், ஞானமுத்து வின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்பதி, சப்- இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ஞானமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். விசாரணையில் தொழில் அதிபர் ஞானமுத்துவுடன் ஒரு பெண்ணும் லாட்ஜில் தங்கியதாக கூறப்படுகிறது.
இதனால் அவரிடம் இருந்து அதிக பணம் அல்லது தங்க சங்கிலியை பறிக்கும் நோக்கில் அவரை அடித்து கீழே தள்ளிவிட்டு இந்த கொலை சம்பவம் நடந்து இருக்குமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அவருடன் தங்கிய பெண் யார்? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகு மேல் விசாரணை தொடங்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)