search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்: தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை
    X

    முதல்வர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்: தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    சென்னை: 

    தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று வருகை தந்தார். அங்கு மருத்துவர்களிடம் முதல் அமைச்சரின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். 

     பின்னர் அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழிசை சவுந்தரராஜன், “முதல் அமைச்சர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. மிக விரைவில் அவர் குணமடைவார் என்று அவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் மருத்துவ தகவல் தெரிவிக்கிறது. அவர் விரைவில் பூரண நலம் பெற்று மக்கள் பணிகளை தொடருவார்.  

     தடைகளை மீறி வருவதை வாழ்க்கையாய் கொண்ட முதலமைச்சர் இந்த சோதனையையும் தாண்டி வருவார். மிகவும் துணிச்சலான முதல் அமைச்சரான அவர் பூரண குணம் அடைந்து வீடு திரும்புவார்” என்றார்.
    Next Story
    ×