என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும்: வானிலை மைய இயக்குனர் பேட்டி
Byமாலை மலர்8 Sep 2016 2:06 AM GMT (Updated: 8 Sep 2016 2:06 AM GMT)
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னை:
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
தென் மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கி இந்த மாதம் (செப்டம்பர்) இறுதி வரை பெய்யும். தமிழ்நாட்டை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழைதான் அதிக மழையை தரும். இருப்பினும் தென் மேற்கு பருவமழை ஓரளவு பெய்யும்.
இந்த நிலையில் செப்டம்பர் மாதம் பிறந்துவிட்டது. எனவே வெயில் குறைந்து விடும் என்று தமிழக மக்கள் நம்பி இருந்தனர். ஆனால் வருகிற 4 நாட்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-
கடந்த சில நாட்களாக கடற்காற்று வலுவிழந்து நேரம் கழித்து வீசுகிறது. அதனால் வெப்பம் அதிகரித்து வருகிறது. வருகிற 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் வெயில் கடுமையாக இருக்கும்.
இதன் காரணமாக வறண்ட வானிலை நிலவும் என்று கூற முடியாது. ஆனால் மழை பெய்யாது. அதன் பிறகுதான் வெயில் அடிக்குமா, மழை பெய்யுமா என்பது தெரியவரும்.
இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
நேற்று காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
சிவகங்கை, கூடலூர் பஜார் தலா 2 செ.மீ., காட்டுமன்னார் கோவில், தம்மம்பட்டி, பரங்கிப்பேட்டை, ஆனைக்காரன் சத்திரம், தேவலா, ஏற்காடு, ஜெயங்கொண்டம், ஓமலூர், சிதம்பரம், சீர்காழி தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
தென் மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கி இந்த மாதம் (செப்டம்பர்) இறுதி வரை பெய்யும். தமிழ்நாட்டை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழைதான் அதிக மழையை தரும். இருப்பினும் தென் மேற்கு பருவமழை ஓரளவு பெய்யும்.
இந்த நிலையில் செப்டம்பர் மாதம் பிறந்துவிட்டது. எனவே வெயில் குறைந்து விடும் என்று தமிழக மக்கள் நம்பி இருந்தனர். ஆனால் வருகிற 4 நாட்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-
கடந்த சில நாட்களாக கடற்காற்று வலுவிழந்து நேரம் கழித்து வீசுகிறது. அதனால் வெப்பம் அதிகரித்து வருகிறது. வருகிற 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் வெயில் கடுமையாக இருக்கும்.
இதன் காரணமாக வறண்ட வானிலை நிலவும் என்று கூற முடியாது. ஆனால் மழை பெய்யாது. அதன் பிறகுதான் வெயில் அடிக்குமா, மழை பெய்யுமா என்பது தெரியவரும்.
இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
நேற்று காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
சிவகங்கை, கூடலூர் பஜார் தலா 2 செ.மீ., காட்டுமன்னார் கோவில், தம்மம்பட்டி, பரங்கிப்பேட்டை, ஆனைக்காரன் சத்திரம், தேவலா, ஏற்காடு, ஜெயங்கொண்டம், ஓமலூர், சிதம்பரம், சீர்காழி தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X