search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் ஊழியருக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்.: தொழில் அதிபர் மீது போலீசில் புகார்
    X

    பெண் ஊழியருக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்.: தொழில் அதிபர் மீது போலீசில் புகார்

    புதுவையில் பெண் ஊழியருக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி தொல்லை கொடுத்ததாக தொழில் அதிபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை கதிர்காமத்தை சேர்ந்தவர் ஜெனிபர் (வயது 24 பெயர் மாற்றம்). மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஊழியர்.

    இந்த பெண்ணின் செல்போனுக்கு அடிக்கடி ஆபாச எஸ்.எம்.எஸ். வந்தது. அந்த தொழிற்சாலையின் உரிமையாளரே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக அறிந்த ஜெனிபர் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தார்.

    இதுபற்றி அவர் தனது முதலாளியிடம் தட்டிக்கேட்டார். உடனே அந்த தொழிற்சாலையின் உரிமையாளர், காவலாளியிடம் கூறி ஜெனிபரின் செல்போனை பறித்து அதில் பதிவாகியிருந்த எஸ்.எம்.எஸ்.களை அழிக்க செய்தார். மேலும் அந்த பெண்ணுக்கு மிரட்டலும் விடுத்தார்.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் ஜெனிபர் புகார் செய்தார். அதன்பேரில் அந்த தொழிற்சாலையின் உரிமையாளர் மீது சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×