search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி முன்பு தாயாருடன் மாணவி தர்ணாவில் ஈடுபட்ட காட்சி.
    X
    பள்ளி முன்பு தாயாருடன் மாணவி தர்ணாவில் ஈடுபட்ட காட்சி.

    பிளஸ்-2 வில் இடைநின்றவர் பள்ளியில் மீண்டும் சேர்க்கக்கோரி தாயாருடன் மாணவி தர்ணா

    பிளஸ்-2 வில் இடைநின்றவர் பள்ளியில் மீண்டும் சேர்க்கக்கோரி தாயாருடன் மாணவி தர்ணாவில் ஈடுபட்டார்.
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள ராதாபுரத்தை சேர்ந்தவர் அசைன். கூலிதொழிலாளி. அவருடைய மனைவி ஹைரூபின். இவர்களுடைய மகள் ஷபனா (வயது 17), கடந்த கல்வியாண்டில் தண்டராம்பட்டு அரசு மகளிர் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். காலாண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் ஷபனாவிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் அவர் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் 2016-17-ம் கல்வியாண்டில் ஷபனாவை அதே பள்ளியில் பிளஸ்-2 படிக்க அனுமதிக்குமாறு தாயார் ஹைரூபின் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று கேட்டுள்ளார். அதற்கு பள்ளி தலைமை ஆசிரியை மாதவி மறுத்துள்ளார். மேலும் தனித்தேர்வு எழுதுமாறு கூறி உள்ளார். இந்த நிலையில் பள்ளியில் சேர்த்து பிளஸ்-2 படிக்க அனுமதிக்குமாறு ஹைரூபின், ஷபனாவுடன் பள்ளி வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.

    இதையடுத்து தலைமை ஆசிரியை மாதவி மற்றும் ஆசிரியர்கள் ஹைரூதின்- ஷபனாவிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து பள்ளியில் சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவத்தை ஆசிரியர்கள் ஏற்றுக்கொண்டனர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×