என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • சாய் சுதர்சன் 53 பந்தில் 82 ரன்கள் விளாசினார்.
    • பட்லர், ஷாருக் கான் தலா 36 ரன்கள் சேர்த்தனர்.

    ஐபிஎல் 2025 சீசனின் 23ஆவது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி குஜராத் அணியின் சாய் சுதர்சன், சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சுப்மன் கில் 2 ரன் எடுத்த நிலையில் ஆர்ச்சர் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

    அடுத்து சாய் சுதர்சன் உடன் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. இதனால் ஓவருக்கு தலா 10 ரன்கள் என்ற அடிப்படையில் ரன்கள் வந்து கொண்டிருந்தது. பவர் பிளேயான முதல் 6 ஓவரில் குஜராத் 56 ரன்கள் சேர்த்தது. அணியின் ஸ்கோர் 10 ஓவரில் 96 ரன்களாக இருக்கும்போது பட்லர் 36 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    சாய் சுதர்சன் 32 பந்தில் அரைசதம் அடித்தார். குஜராத் அணி 11 ஓவரின் 100 ரன்னைத் தொட்டது. பட்லர் ஆட்டமிழந்ததும் ஷாருக்கான் களம் இறங்கினார். இவர் 20 பந்தில் 36 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த ரூதர்போர்டு 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய சாய் சுதர்சன் 53 பந்தில் 82 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது குஜராத் டைட்டன்ஸ் 18.2 ஓவரில் 187 ரன்கள் குவித்திருந்தது.

    அதன்பின் ராகுல் டெவாட்டியா உடன் ரஷித் கான் ஜோடி சேர்ந்தார். இவர் 19ஆவது ஓவரின் 3 பந்தில் சிக்சரும், அடுத்த பந்தில் பவுண்டரியும் அடித்தார். ஆனால் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். குஜராத் அணி 19 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் அடித்தது.

    கடைசி ஓவரை சந்தீப் சர்மா வீசினார். இந்த ஓவரில் 16 ரன்கள் கிடைக்க குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்துள்ளது.

    • குஜராத் டைட்டன்ஸ் புள்ளிகள் பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது.
    • ராஜஸ்தான் ராயல்ஸ் 7ஆவது இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் 2025 சீசனின் 23ஆவது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    குஜராத் டைட்டன்ஸ் அணி:-

    சுப்மன் கில், சாய் சுதர்சன், பட்லர், ரூதர்போர்டு, ஷாருக் கான், ராகுல் டெவாட்டியா, ரஷித் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:-

    ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, ரியான் பராக், த்ருவ் ஜுரெல், ஹெட்மையர், ஆர்ச்சர், தீக்ஷனா, பரூக்கி, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே.

    • பாகிஸ்தானில் பிஎஸ்எல் தொடர் வரும் ஏப்ரல் 11-ந் தேதி தொடங்குகிறது.
    • ரசிகர்கள் நல்ல கிரிக்கெட்டை பொழுதுபோக்குடன் எங்கே விளையாட்டினாலும் அதை பார்ப்பார்கள்.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்து வருகிறார்கள்.

    இந்நிலையில் நாங்கள் சிறப்பாக விளையாடினால் அனைத்து ரசிகர்களும் ஐபிஎல் தொடரை விட்டு விட்டு பிஎஸ்எல் தொடரை பார்க்க வந்து விடுவார்கள் என்று பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரசிகர்கள் நல்ல கிரிக்கெட்டை பொழுதுபோக்குடன் எங்கே விளையாட்டினாலும் அதை பார்ப்பார்கள். அந்த வகையில் பிஎஸ்எல் தொடரில் நாங்கள் நன்றாக விளையாடினால் பார்வையாளர்கள் ஐபிஎல் தொடரை விட்டு விட்டு எங்களைப் பார்ப்பார்கள். அதே சமயம் தேசிய அணி நன்றாக செயல்படாத போது அது பிஎஸ்எல் போன்ற உள்ளூர் தொடரிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    ஆனால் பாகிஸ்தான் நன்றாக செயல்படும் போது பிஎஸ்எல் தொடரின் மவுசும் ஏற்றத்தை நோக்கிச் செல்லும். தற்போது பாகிஸ்தான் அணியின் முடிவுகள் சிறப்பாக இல்லை. இருப்பினும் அணியில் நிறைய புது முகங்கள் இருக்கின்றனர். எனவே அணி நிர்வாகத்திற்கும் கொஞ்சம் நேரம் தேவை. எது தவறாக சென்றது எங்கே தவறு நடந்தது என்பதை அறிந்து வீரர்கள் முன்னேறுவார்கள்.

    என்று கூறினார்.

    பாகிஸ்தானில் பிஎஸ்எல் தொடர் வரும் ஏப்ரல் 11-ந் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • சிஎஸ்கே அணிக்கு இன்னும் ஒன்பது போட்டிகள் உள்ளன.
    • சிஎஸ்கே இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 4-ல் தோல்வியடைந்துள்ளது.

    சென்னை:

    நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் நான்கு அணிகள் மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    இந்தச் சூழலில், ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும், சிஎஸ்கே அணியும் இந்தத் தொடரில் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகின்றன. மும்பை அணி 8-வது இடத்திலும், சிஎஸ்கே அணி 9-வது இடத்திலும் உள்ளன.

    இந்நிலையில் சிஎஸ்கே அணி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் இன்னும் எத்தனை போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

    ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால், ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் எட்டு போட்டிகளில் வெற்றி பெற்று, 16 புள்ளிகளைப் பெற வேண்டும். அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.

    இதனால், சிஎஸ்கே அணிக்கு இன்னும் ஒன்பது போட்டிகள் உள்ளன. இந்த ஒன்பது போட்டிகளில் குறைந்தபட்சம் ஏழு போட்டிகளிலாவது சிஎஸ்கே வெற்றி பெற வேண்டும். அப்படி ஏழு போட்டிகளில் வென்றால் மட்டுமே சிஎஸ்கே அணியின் புள்ளிகள் 16 என்ற அளவை எட்டும். ஆனால், தற்போது சிஎஸ்கே இருக்கும் நிலையைப் பார்க்கும்போது, இது மிகவும் கடினமாகத் தெரிகிறது.

    • தோனி இன்னும் நன்றாக விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார்.
    • இதைப் போன்று இன்னிங்சை பேட்டிங்கால் அபாரமாக முடிக்கும் திறனும் அவருக்கு இருக்கின்றது.

    சென்னை:

    நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் 4 தோல்வி ஒரு வெற்றியை பெற்று தற்போது புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கிறது.

    இந்நிலையில் சிஎஸ்கே அணி அவ்வளவுதான் என்று யாரும் நினைத்து விட வேண்டாம் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சிஎஸ்கேவின் செயல்பாடுகளில் நிச்சயம் எனக்கு ஆச்சரியம் தான் தருகிறது. ஏனென்றால் ஒவ்வொரு ஏலத்தின் முடிவிலும் சிஎஸ்கே அணி பலமான வீரர்களை தேர்வு செய்து, தங்களுக்கு எந்த வீரர்கள் வேண்டும் என்பதை முடிவு செய்து பிளேயிங் லெவனை தயார் செய்வார்கள்.

    பேட்டிங்காக இருந்தாலும் சரி, பந்துவீச்சாக இருந்தாலும் சரி ஆனால் தற்போது சிஎஸ்கே அணி தடுமாறுவதை பார்க்கும் போது இது சிஎஸ்கே போல் தெரியவில்லை. நான் சிஎஸ்கே அணியில் இருந்த போது தோனி மற்றும் பயிற்சியாளர் பிளமிங் ஆகியோர் வீரர்களிடம் உங்களுடைய பணி இதுதான் என்று ஒருவருக்கு ஒவ்வொரு ரோலை கொடுத்து விடுவார்கள். அதற்கு தகுந்தார் போல் நாங்கள் தயாராவோம்.

    ஆனால் இந்த ஏலம் முடிந்த பிறகும் சிஎஸ்கே அணியின் சில குறைகள் இருக்கிறது. அதை நிவர்த்தி செய்ய சிஎஸ்கே போராடி வருகிறது.

    சிஎஸ்கே அணி அவ்வளவுதான் என்று யாரும் நினைத்து விட வேண்டாம். ஏனென்றால் அவர்களுக்கு எப்படி வெற்றி பெற வேண்டும் என்று நன்றாக தெரியும். அது பிளெமிங் ஆக இருக்கட்டும், தோனியாக இருக்கட்டும் ஒட்டுமொத்த அணியுமே வெற்றி பாதைக்கு எப்படி திரும்புவது என்பதை நன்கு அறிந்திருப்பார்கள். தோனி இன்னும் நன்றாக விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார். இதைப் போன்று இன்னிங்சை பேட்டிங்கால் அபாரமாக முடிக்கும் திறனும் அவருக்கு இருக்கின்றது.

    என்று வாட்சன் கூறியுள்ளார்.

    • ஆர்சிபி அணி 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.
    • ஆர்சிபி அணிக்காக 18-வது சீசனில் விராட் கோலி விளையாடி வருகிறார்.

    ஐபிஎல் தொடரில் கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் 200 -க்கும் கூடுதலாக ரன்களை குவிப்பது ரசிகர்களிடையே வரவேற்ப்பை பெற்றுள்ளது.

    இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகள் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்கள் முறையே டெல்லி, குஜராத், பெங்களூரு, பஞ்சாப் ஆகிய அணிகள் உள்ளன.

    இந்த ஐபிஎல் தொடரிலாவது ஆர்சிபி கோப்பையை வெல்லுமா என அந்த அணியின் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். அந்த அளவுக்கு ஆர்சிபி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    ஆர்சிபி அணிக்காக 18-வது சீசனில் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி விளையாடி வருகிறார். அவருக்காக இந்த முறை ஆர்சிபி கோப்பையை வெல்ல வேண்டும் என அந்த அணியின் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற அணியின் ரசிகர்கள் வரை வேண்டி கொள்கிறார்கள்.

    இந்நிலையில் ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் படத்தை உலகில் மிகவும் பிரபலமான மல்யுத்த வீரர்களில் ஒருவரான ஜான் சீனா தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த படத்தில் ஜான் சீனாவின் பிரபலமான ஸ்டைலில் கைகளை அசைப்பார். அதுபோல விராட் கோலி சுண்டு விரலில் ஒரு மோதிரம் அணிவித்தபடி கைகளை வைத்துள்ளார். இந்த பதிவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

    ஜான் சீனா ஒரு பிரபல அமெரிக்க தொழில்முறை மல்யுத்த வீரர், நடிகர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். அவர் WWE (World Wrestling Entertainment) உலகில் மிகவும் பிரபலமான மல்யுத்த வீரர்களில் ஒருவராக உள்ளார். அவர் 16 முறை உலக சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றனர்.
    • புள்ளிப்பட்டியலில் 8 மற்றும் 9-வது இடங்களில் இந்த இரண்டு அணிகளும் இடம் பெற்றுள்ளனர்.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சாம்பியன் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றனர். இதனால் புள்ளிப்பட்டியலில் 8 மற்றும் 9-வது இடங்களில் இந்த இரண்டு அணிகளும் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் இந்த இரு அணிகளில் இடம் பிடித்த வேகப்பந்து வீச்சாளர்களான டிரெண்ட் போல்ட் (மும்பை), பத்திரனா (சென்னை) ஆகியோர் பந்து வீச்சில் அரிதான ஒரு சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.

    அந்த வகையில் அவர்கள் இருவரும் 4 ஓவர்கள் பந்து வீசி 50-க்கும் கூடுதலான ரன்களை வாரி வழங்கியுள்ளனர். போல்ட் ஆர்சிபி அணிக்கு எதிராக 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 57 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார்.

    அதேபோல சென்னை வீரர் பத்திரனா 4 ஓவர்களில் ஒரு விக்கெட்டும் எடுக்காமல் 52 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். இந்த இரு பந்துவீச்சாளர்களும் இப்படி ரன்களை வாரி வழங்குவது அரிதான சம்பவமாக பார்க்கப்படுகிறது. 

    • நடப்பு ஐ.பி.எல். போட்டியில் மும்பை, சென்னை அணிகள் வழக்கத்திற்கு மாறாக தகிடுதத்தம் போடுகின்றன.
    • இந்த அணிகள் எஞ்சிய தங்களது 9 லீக்கில் குறைந்தது 7-ல் வெற்றி பெற்றால் தான் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும்.

    நடப்பு ஐ.பி.எல். போட்டியில் எதிர்பார்க்கப்பட்ட அணிகள் வழக்கத்திற்கு மாறாக தடுமாறி வருகின்றனர். 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் 2016-ம் ஆண்டு சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் தலா 4 தோல்விகளுடன் கடைசி 3 இடங்களில் பரிதாபகரமாக உள்ளன.

    இந்த அணிகள் எஞ்சிய தங்களது 9 லீக்கில் குறைந்தது 7-ல் வெற்றி பெற்றால் தான் பிளே-ஆப் சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும். 3 முறை சாம்பியனான கொல்கத்தாவும் பின்தங்கியே இருக்கிறது.

    ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 20 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன.

    இதன் முடிவில் புள்ளி பட்டியலில் அணிகளின் நிலை குறித்து காணலாம்.

    டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப், லக்னோ ஆகிய அணிகள் தலா 6 புள்ளிகள் (3 வெற்றிகள்) பெற்றிருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் டெல்லி (+1.257) முதலிடத்திலும், குஜராத் (+1.031) 2-வது இடத்திலும், பெங்களூரு (+1.015) 3-வது இடத்திலும் உள்ளன. பஞ்சாப் (+0.289) 4-வது இடத்திலும், லக்னோ (+0.078) 5-வது இடத்திலும் உள்ளனர்.

    கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் 2 வெற்றியுடன் இருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் கொல்கத்தா (-0.056) 6-வது இடத்திலும், ராஜஸ்தான் (-0.185) 7-வது இடத்திலும் உள்ளன.

    கடைசி 3 இடங்களில் முறையே முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் (-0.010) 8-வது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் (-0.889) 9-வது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் (-1.629) 10-வது இடத்திலும் உள்ளன.

    ஆரஞ்சு நிற தொப்பி:

    அதிக ரன் குவித்த வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியை லக்னோ வீரர் நிக்கோலஸ் பூரன் (288 ரன்கள்) தொடர்ந்து தன்வசம் வைத்துள்ளார்.

    இந்த பட்டியலில் உள்ள முதல் 5 வீரர்கள் விவரம்

    1. நிக்கோலஸ் பூரன் - 288 ரன்கள்

    2. மிட்செல் மார்ஷ் - 265 ரன்கள்

    3. சூர்யகுமார் யாதவ் - 199 ரன்கள்

    4. சாய் சுதர்சன் - 191 ரன்கள்

    5. ரகானே - 184 ரன்கள்

    ஊதா நிற தொப்பி:

    அதிக விக்கெட் வீழ்த்திய வீரருக்கு வழங்கப்படும் ஊதா நிற தொப்பியை சென்னை அணியின் நூர் அகமது (11 விக்கெட்டுகள்) தன்வசம் வைத்துள்ளார்.

    இந்த பட்டியலில் உள்ள முதல் 5 வீரர்கள் விவரம்:

    1. நூர் அகமது - 11 விக்கெட்டுகள்

    2. கலீல் அகமது - 10 விக்கெட்டுகள்

    3. ஹர்திக் பாண்ட்யா - 10 விக்கெட்டுகள்

    4. முகமது சிராஜ் - 9 விக்கெட்டுகள்

    5. மிட்செல் ஸ்டார்க் - 9 விக்கெட்டுகள்

    • கடந்த நான்கு ஆட்டங்களிலும் நாங்கள் இறுதிவரை போராடி தோல்வியைத் தழுவியுள்ளோம்.
    • நாங்கள் ஒவ்வொரு முறை கேட்சை இழக்கும்போதும், அதே பேட்டர் 20-25-30 ரன்கள் கூடுதலாகச் சேர்க்கிறார்.

    ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 219 ரன்களைக் குவித்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 201 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.

    இந்நிலையில் நாங்கள் ஒவ்வொரு முறை கேட்சை இழக்கும்போதும், அதே பேட்டர் 20-25-30 ரன்கள் கூடுதலாகச் சேர்க்கிறார் என தோல்வி குறித்து ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கடந்த நான்கு ஆட்டங்களிலும் நாங்கள் இறுதிவரை போராடி தோல்வியைத் தழுவியுள்ளோம். இது மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது. நாங்கள் ஒவ்வொரு முறை கேட்சை இழக்கும்போதும், அதே பேட்டர் 20-25-30 ரன்கள் கூடுதலாகச் சேர்க்கிறார். அதிலும் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியைத் தவிர்த்து மற்ற போட்டிகளில் நாங்கள் இரண்டு அல்லது மூன்று ஹிட்களில் தான் தோல்வியைத் தழுவினோம்.

    பேட்டிங்கைப் பொறுத்தவரையில் நாங்கள் சரியாக விளையாடி இருந்தோம். மேலும் பவர்பிளேவில் நாங்கள் செயல்பட்ட விதம் சிறப்பாக இருந்தது. இது நாங்கள் எங்களுடைய சிறந்த மற்ற மேம்பட்ட செயல்திறனாகும். மேலும் இந்த ஆட்டத்தின் மூலம் எங்கள் சில நேர்மறையான அம்சங்களும் கிடைத்துள்ளன.

    என ருதுராஜ் கூறினார்.

    • முதல் 2 போட்டிகளில் திக்வேஷ் ரதிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    • கிரிக்கெட் வாரியத்தை சீண்டும் வகையில் திக்வேஷ் ரதி 3-வது முறையாக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    கொல்கத்தா:

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் திக்வேஷ் ரதி. இவரது பந்து வீச்சு எதிர் அணி பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கிறது.

    25 வயதான திக்வேஷ் ரதி இந்த ஐ.பி.எல்.லில் அறிமுகமாகி 5 ஆட்டத்தில் 7 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ரன்களை விட்டுக் கொடுக்காமல் மிகவும் நேர்த்தியாக வீசி வருகிறார்.

    அவர் விக்கெட்டுகளை கைப்பற்றும்போது வித்தியாசமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். பஞ்சாப் அணிக்கு எதிராக பிரியான்ஷ் ஆர்யாவை அவுட் செய்தபோது திக்வேஷ் ரதி அருகே வந்து கையில் நோட்புக்கில் கையெழுத்திடுவது போல் கொண்டாடினார். இதற்காக அவருக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீத அபராதம் விதிக்கப்பட்டது.

    அதை தொடர்ந்து மும்பைக்கு எதிராகவும் இதே மாதிரியான நோட்புக் கொண்டாட்டத்துக்காக 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் மொத்தமாக 2 தகுதி குறைப்பு புள்ளிகளை பெற்றார்.

    இந்த நிலையில் அபராதத்துக்கு அஞ்சாத திக்வேஷ் ரதி மீண்டும் சர்ச்சையான கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். நேற்றைய ஆட்டத்தில் அவர் கொல்கத்தா தொடக்க வீரர் நரைனை அவுட் செய்தார். அப்போது அவர் தனது வழக்கமான லெட்டர் பேட் கொண்டாட்டத்தை தற்போது திடலில் கொண்டாடினார். ஆடுகளத்தில் கையெழுத்திடுவது போல சைகை செய்தார்.

    கிரிக்கெட் வாரியத்தை சீண்டும் வகையில் திக்வேஷ் ரதி 3-வது முறையாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதனால் அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஜஸ்பிரித் பும்ரா (2015), முகமது சிராஜ் (2023) கலீல் அகமது (2024) போன்றவர்கள் தொடர்ச்சியாக நான்கு வைடுகள் வீசியுள்ளனர்.
    • மொத்தத்தில் லக்னோ பவுலர்கள் வைடு வகையில் 20 ரன்களை வாரி வழங்கினர்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய முதல் ஆட்டத்தில் கொல்கத்தா- லக்னோ அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 238 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 234 ரன்கள் எடுத்தது. இதனால் லக்னோ அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    இந்த பரபரப்பான ஆட்டத்தில் லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் 13-வது ஓவரில் தொடர்ந்து 5 வைடுகளை வீசினார்.

    ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு பவுலர் தொடர்ச்சியாக 5 வைடு வீசியது இதுவே முதல் முறையாகும். மொத்தத்தில் லக்னோ பவுலர்கள் வைடு வகையில் 20 ரன்களை வாரி வழங்கினர். இதில் தாக்குரின் பங்களிப்பு மட்டும் 8. ஒரு இன்னிங்சில் அதிக வைடு போட்ட மோசமான பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

    ஜஸ்பிரித் பும்ரா (2015), பிரவீன் குமார் (2017), முகமது சிராஜ் (2023) மற்றும் கலீல் அகமது (2024) போன்றவர்கள் தொடர்ச்சியாக நான்கு வைடுகள் வீசியுள்ளனர்.

    மேலும் அவர் ஒரு ஓவரில் 11 பந்துகளை வீசி, துஷார் தேஷ்பாண்டே மற்றும் முகமது சிராஜ் ஆகியோரின் சாதனையையும் சமன் செய்தார். தேஷ்பாண்டே எல்எஸ்ஜிக்கு எதிராகவும் சிராஜ் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகவும் ஒரு ஓவரில் 11 பந்துகளை வீசியுள்ளனர். 2023-ம் ஆண்டு இந்த சம்பவம் அரங்கேறியது.

    • தலைமை பயிற்சியாளராக கேரி ஸ்டீட் 2018-ம் ஆண்டில் இருந்து பணியாற்றி வந்தார்.
    • கேரி ஸ்டீட்டின் வழிகாட்டுதலில் 2021-ம் ஆண்டில் முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்து மகுடம் சூடியது.

    வெலிங்டன்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மூன்று வடிவிலான போட்டிக்கும் தலைமை பயிற்சியாளராக கேரி ஸ்டீட் 2018-ம் ஆண்டில் இருந்து பணியாற்றி வந்தார். இடையில், இரண்டு முறை அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது. இதில் வெள்ளைநிற பந்து போட்டிக்கான (ஒரு நாள் மற்றும் 20 ஓவர்) பயிற்சியாளர் பணியில் இருந்து மட்டும் விலகுவதாக ஸ்டீட் நேற்று அறிவித்தார்.

    டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பிப்பது குறித்து இன்னும் சில வாரங்களில் முடிவு செய்வேன் என்றும் கூறியுள்ளார். ஆனால் மூன்று வடிவிலான போட்டிக்கும் வெவ்வேறு பயிற்சியாளரை நியமிப்பது குறித்து நியூசிலாந்து இன்னும் முடிவு செய்யவில்லை. விரைவில் அது தொடர்பாக அறிவிப்பு வெளியிடும்.

    53 வயதான கேரி ஸ்டீட்டின் பயிற்சியின் கீழ் நியூசிலாந்து அணி 2019-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை, 2022-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை மற்றும் இந்த ஆண்டில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தது.

    2021-ம் ஆண்டில் முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மகுடம் சூடியது, கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று வரலாறு படைத்தது அவரது வழிகாட்டுதலில் முத்தாய்ப்பான வெற்றிகளாக அமைந்தன.

    ×