என் மலர்
நீங்கள் தேடியது "New Zealand Cricket Team"
- தலைமை பயிற்சியாளராக கேரி ஸ்டீட் 2018-ம் ஆண்டில் இருந்து பணியாற்றி வந்தார்.
- கேரி ஸ்டீட்டின் வழிகாட்டுதலில் 2021-ம் ஆண்டில் முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்து மகுடம் சூடியது.
வெலிங்டன்:
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மூன்று வடிவிலான போட்டிக்கும் தலைமை பயிற்சியாளராக கேரி ஸ்டீட் 2018-ம் ஆண்டில் இருந்து பணியாற்றி வந்தார். இடையில், இரண்டு முறை அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது. இதில் வெள்ளைநிற பந்து போட்டிக்கான (ஒரு நாள் மற்றும் 20 ஓவர்) பயிற்சியாளர் பணியில் இருந்து மட்டும் விலகுவதாக ஸ்டீட் நேற்று அறிவித்தார்.
டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பிப்பது குறித்து இன்னும் சில வாரங்களில் முடிவு செய்வேன் என்றும் கூறியுள்ளார். ஆனால் மூன்று வடிவிலான போட்டிக்கும் வெவ்வேறு பயிற்சியாளரை நியமிப்பது குறித்து நியூசிலாந்து இன்னும் முடிவு செய்யவில்லை. விரைவில் அது தொடர்பாக அறிவிப்பு வெளியிடும்.
53 வயதான கேரி ஸ்டீட்டின் பயிற்சியின் கீழ் நியூசிலாந்து அணி 2019-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை, 2022-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை மற்றும் இந்த ஆண்டில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தது.
2021-ம் ஆண்டில் முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மகுடம் சூடியது, கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று வரலாறு படைத்தது அவரது வழிகாட்டுதலில் முத்தாய்ப்பான வெற்றிகளாக அமைந்தன.
முதலில் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் நியூசிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து கேப்டன் சுஜி பேட்ஸ் (64 பந்தில் 124), டிவைன் (48 பந்தில் 73) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் குவித்தது. இதன்மூலம் பெண்கள் டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையைப் படைத்தது. இதற்கு முன் ஆஸ்திரேலியா பெண்கள் அணி 209 ரன்கள் அடித்ததே அதிகபட்ச ஸ்கோர் ஆக இருந்தது.
பின்னர் 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்அப்பிரிக்கா வீராங்கனையால் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தத. இதனால் நியூசிலாந்து பெண்கள் அணி 66 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதன்பின் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை டாமி பீமோண்ட் அதிரடியாக விளையாடி 52 பந்தில் 116 ரன்கள் குவிக்க 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் குவித்தது. இதன்மூலம் பெண்களுக்கான டி20 போட்டியில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.
காலையில் நியூசிலாந்து அணி பெற்ற சாதனையை மாலைக்குள் இங்கிலாந்து தட்டிப்பறித்தது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து ஆண்கள் அணி 481 ரன்கள் குவித்து உலக சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.






