என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    சிஎஸ்கே அவ்வளவுதான் என்று நினைக்க வேண்டாம்: எல்லாம் தோனி பாத்துப்பாரு- ஷேன் வாட்சன்
    X

    சிஎஸ்கே அவ்வளவுதான் என்று நினைக்க வேண்டாம்: எல்லாம் தோனி பாத்துப்பாரு- ஷேன் வாட்சன்

    • தோனி இன்னும் நன்றாக விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார்.
    • இதைப் போன்று இன்னிங்சை பேட்டிங்கால் அபாரமாக முடிக்கும் திறனும் அவருக்கு இருக்கின்றது.

    சென்னை:

    நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் 4 தோல்வி ஒரு வெற்றியை பெற்று தற்போது புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கிறது.

    இந்நிலையில் சிஎஸ்கே அணி அவ்வளவுதான் என்று யாரும் நினைத்து விட வேண்டாம் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சிஎஸ்கேவின் செயல்பாடுகளில் நிச்சயம் எனக்கு ஆச்சரியம் தான் தருகிறது. ஏனென்றால் ஒவ்வொரு ஏலத்தின் முடிவிலும் சிஎஸ்கே அணி பலமான வீரர்களை தேர்வு செய்து, தங்களுக்கு எந்த வீரர்கள் வேண்டும் என்பதை முடிவு செய்து பிளேயிங் லெவனை தயார் செய்வார்கள்.

    பேட்டிங்காக இருந்தாலும் சரி, பந்துவீச்சாக இருந்தாலும் சரி ஆனால் தற்போது சிஎஸ்கே அணி தடுமாறுவதை பார்க்கும் போது இது சிஎஸ்கே போல் தெரியவில்லை. நான் சிஎஸ்கே அணியில் இருந்த போது தோனி மற்றும் பயிற்சியாளர் பிளமிங் ஆகியோர் வீரர்களிடம் உங்களுடைய பணி இதுதான் என்று ஒருவருக்கு ஒவ்வொரு ரோலை கொடுத்து விடுவார்கள். அதற்கு தகுந்தார் போல் நாங்கள் தயாராவோம்.

    ஆனால் இந்த ஏலம் முடிந்த பிறகும் சிஎஸ்கே அணியின் சில குறைகள் இருக்கிறது. அதை நிவர்த்தி செய்ய சிஎஸ்கே போராடி வருகிறது.

    சிஎஸ்கே அணி அவ்வளவுதான் என்று யாரும் நினைத்து விட வேண்டாம். ஏனென்றால் அவர்களுக்கு எப்படி வெற்றி பெற வேண்டும் என்று நன்றாக தெரியும். அது பிளெமிங் ஆக இருக்கட்டும், தோனியாக இருக்கட்டும் ஒட்டுமொத்த அணியுமே வெற்றி பாதைக்கு எப்படி திரும்புவது என்பதை நன்கு அறிந்திருப்பார்கள். தோனி இன்னும் நன்றாக விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார். இதைப் போன்று இன்னிங்சை பேட்டிங்கால் அபாரமாக முடிக்கும் திறனும் அவருக்கு இருக்கின்றது.

    என்று வாட்சன் கூறியுள்ளார்.

    Next Story
    ×