என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- இப்போட்டியில் கில் முதல் இன்னிங்சில் 269 ரன்கள் குவித்த கில் 2 ஆவது இன்னிங்சில் 161 ரன்கள் குவித்தார்.
- ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை கில் படைத்தார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 407 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
180 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை ஆடிய இந்தியா 427 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது.
இப்போட்டியில் முதல் இன்னிங்சில் 269 ரன்கள் குவித்த கில் 2 ஆவது இன்னிங்சில் 161 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை கில் படைத்தார்.
மேலும், ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் 2வது இடத்தை சுப்மன் கில் பிடித்தார். முதலிடத்தில் இங்கிலாந்தின் கிரஹாம் கூச் உள்ளார் (456 VS IND, 1990)
எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் 430 ரன்கள் குவித்த கேப்டன் கில்க்கு முன்னாள் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோலி தனது இன்ஸ்டா ஸ்டோரியில், "அருமை Star Boy. வரலாற்றை மாற்றும் ஒரு ஆட்டத்தின் தொடக்கம் மேலும் மேலும் வளரட்டும். எல்லா பாராட்டுகளுக்கும் நீ தகுதியானவன்" என்று தெரிவித்துள்ளார்.
- இறுதிப்போட்டி திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர்.கல்லூரி மைதானத்தில் இன்று நடக்கிறது.
- சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.50 லட்சமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.30 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.
9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர்.கல்லூரி மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் திருப்பூர் தமிழன்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.
சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் அணி லீக் சுற்றில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்து பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. அடுத்து முதலாவது தகுதி சுற்றில் 79 ரன் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு அதிர்ச்சி அளித்து முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டியது.
திருப்பூர் அணியில் பேட்டிங்கில் துஷர் ரஹேஜா (411 ரன்), அமித் சாத்விக், பிரதோஷ் ரஞ்சன் பால், சசிதேவும், பந்து வீச்சில் இசக்கிமுத்து (12 விக்கெட்), டி.நடராஜன், சிலம்பரசனும் நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் சாய் கிஷோர் (128 ரன், 12 விக்கெட்) ஆல்-ரவுண்டராக அசத்துகிறார்.
ஆர்.அஸ்வின் தலைமையிலான நடப்பு சாம்பியன் திண்டுக்கல் அணி லீக் சுற்றில் 4 வெற்றி, 3 தோல்வி கண்டு 8 புள்ளிகளுடன் 3-வது இடம் பெற்றது. இதைத்தொடர்ந்து வெளியேற்றுதல் சுற்றில் 6 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சியையும், 2-வது தகுதி சுற்றில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசையும் வீழ்த்தி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
திண்டுக்கல் அணியில் பேட்டிங்கில் ஷிவம் சிங் (327 ரன்), விமல் குமார், பாபா இந்திரஜித், ஹன்னி சைனியும், பந்து வீச்சில் ஜி.பெரியசாமி (11 விக்கெட்), வருண் சக்ரவர்த்தி (10 விக்கெட்), சசிதரணும், ஆல்-ரவுண்டராக கேப்டன் அஸ்வினும் (296 ரன், 13 விக்கெட்) வலுசேர்க்கின்றனர்.
லீக் ஆட்டத்தில் திருப்பூர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கலை தோற்கடித்து இருந்தது. இதனால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேநேரத்தில் லீக் ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொள்ள திண்டுக்கல் அணி தீவிரம் காட்டும். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு அந்த அணிக்கு அனுகூலமாக இருக்கும். இரு அணிகளும் சமபலத்துடன் மல்லுக்கட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.
ஒட்டுமொத்தத்தில் இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 5-ல் திண்டுக்கல்லும், ஒன்றில் (நடப்பு சீசனில்) திருப்பூரும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.1.7 கோடியாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.50 லட்சமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.30 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.
இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
திருப்பூர்: அமித் சாத்விக், துஷர் ரஹேஜா, சாய் கிஷோர் (கேப்டன்), முகமது அலி, சசிதேவ், பிரதோஷ் ரஞ்சன் பால், மோகன் பிரசாத், சிலம்பரசன், மதிவாணன், டி.நடராஜன், இசக்கிமுத்து, அனோவன்கர்.
திண்டுக்கல்: ஆர்.அஸ்வின் (கேப்டன்), ஷிவம் சிங், பாபா இந்திரஜித், மான் பாப்னா, விமல் குமார், ஹன்னி சைனி, தினேஷ், கார்த்திக் சரண், புவனேஷ்வர், வருண் சக்ரவர்த்தி, சசிதரண், ஜி.பெரியசாமி.
இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- இங்கிலாந்துக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
- 50 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகெளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாற தொடங்கியது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 407 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
180 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்திருந்தது.
மதிய தேனீர் இடைவேளை வரை இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் எடுத்திருந்தது. சுப்மன் கில் 100 ரன்களுடனும், ஜடேஜா 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
பின் இறுதியில் ஒட்டுமொத்தமாக இந்தியா 607 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இங்கிலாந்துக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கிராலி ரன் 0 ரங்களுடன் ஆட்டமிழந்தார். பென் டக்கெட் 25 ரன்னிலும், ஜோ ரூட் 6 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 50 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகெளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாற தொடங்கியது.
இந்நிலையில் 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது.
போப் 24 ரன்னிலும், புரூக் 15 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 536 ரன்கள் தேவைப்படும் நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 7 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. வெற்றி தோல்வியை நாளை நடக்க இருக்கும் 5-ம் நாள் ஆட்டம் முடிவு செய்யும்.
- சுப்மன் கில் 161 ரன்கள் விளாசினார்.
- கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், ஜடேஜா அரைசதம் அடித்தனர்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 407 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
180 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் 28 ரன்களுடனும், கருண் நாயர் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 4ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. கருண் நாயர் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் கே.எல். ராகுல் சிறப்பாக விளையாடி 78 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 55 ரன்களில் ஆட்டமிழந்தார்.
3ஆவது விக்கெட்டுக்கு சுப்மன் கில் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ரிஷப் பண்ட் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அருக்கு இணையாக சுப்மன் கில்லும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
இந்த ஜோடி 4ஆவது நாள் மதிய உணவு இடைவேளை வரை ஆட்டமிழக்காமல் விளையாடியது. இதனால் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்திருந்தது. சுப்மன் கில் 24 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 41 (35 பந்துகள்) ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ரிஷப் பண்ட் 48 பந்தில் அரைசதம் அடித்தார். சுப்மன் கில் 57 பந்தில் அரைசதம் அடித்தார். ரிஷப் பண்ட் 65 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜடேஜா களம் இறங்கினார்.
அரைசதம் அடித்த கில் அதை சதமாக மாற்றினார். அவர் 129 பந்தில் சதம் அடித்தார். மதிய தேனீர் இடைவேளை வரை இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் எடுத்திருந்தது. சுப்மன் கில் 100 ரன்களுடனும், ஜடேஜா 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
தேனீர் இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. சுப்மன் கில் மற்றும் ஜடேஜா வாணவேடிக்கை நிகழ்த்தினர். ஜடேஜா 94 பந்தில் அரைசதம் அடித்தார். சுப்மன் கில் 156 பந்தில் 150 ரன்னைத் தொட்டார். 27 பந்தில் 100-ல் இருந்து 150 ரன்னைத் தொட்டார். தொடர்ந்து விளையாடிய அவர் 162 பந்தில் 161 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 411 ரன்கள் குவித்திருந்தது.
அடுத்து வந்த நிதிஷ் ரெட்டி 1 ரன்னில் ஆட்டமிழந்தார். 7ஆவது விக்கெட்டுக்கு ஜடேஜா உடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். இந்தியா 427 ரன்கள் எடுத்திருக்கும்போது 2ஆவது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஜடேஜா 69 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ஒட்டுமொத்தமாக இந்தியா 607 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் இங்கிலாந்துக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.
- 2ஆவது இன்னிங்சில் 57 பந்தில் அரைசதம் அடித்தார்.
- 129 பந்தில் சதம் விளாசினார்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 587 ரன்கள் குவித்தது. இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் விளாசினார்.
அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 407 ரன்கள் குவித்தது. 180 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. கருண் நாயர் 2ஆவது விக்கெட்டாக ஆட்டமிழந்ததும் சுப்மன் கில் களம் இறங்கினார்.
இவர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 57 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 129 பந்தில் 9 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் சதம் விளாசினார். இதன்மூலம் முதல் இன்னிங்சில் இரட்டை சதமும், 2ஆவது இன்னிங்சில் சதமும் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.
- பாகிஸ்தான் வீரர் கம்ரான் குலாம் 53 பந்தில் சதம் அடித்திருந்தார்.
- சூர்யவன்ஷி 52 பந்தில் சதம் விளாசி சாதனைப் படைத்துள்ளார்.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 4ஆவது போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 363 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 78 பந்தில் 13 பவுண்டரி, 10 சிக்சர்களுடன் 143 ரன்கள் விளாசினார்.
52 பந்தில் சதம் விளாசினார். இதன்மூலம் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக பாகிஸ்தான் வீரர் கம்ரான் குலாம் 53 பந்தில் சதம் அடித்திருந்தார்.
மேலும், 10 சிக்சர்கள் அடித்து அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் 35 பந்தில் சதம் விளாசி சாதனைப் படைத்திருந்தார்.
- கருண் நாயர் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- கே.எல். ராகுல் 55 ரன்கள் எடுத்து ஆவுட் ஆனார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 407 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
180 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் 28 ரன்களுடனும், கருண் நாயர் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 4ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. கருண் நாயர் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் கே.எல். ராகுல் சிறப்பாக விளையாடி 78 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 55 ரன்களில் ஆட்டமிழந்தார்.
3ஆவது விக்கெட்டுக்கு சுப்மன் கில் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ரிஷப் பண்ட் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
இந்த ஜோடி 4ஆவது நாள் மதிய உணவு இடைவேளை வரை ஆட்டமிழக்காமல் விளையாடியது. இதனால் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்துள்ளது. சுப்மன் கில் 24 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 41 (35 பந்துகள்) ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
தற்போது வரை இந்தியா 357 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ளன. இதனால் 500 ரன்களுக்கு மேல் இங்கிலாந்துக்கு இலக்கு நிர்ணயிக்க வாய்ப்புள்ளது.
- பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டதால் ஆகாஷ் தீப்பிற்கு 2ஆவது டெஸ்டில் வாய்ப்பு.
- முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 84 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.
6ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ப்ரூக்- ஸ்மித் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ப்ரூக் 158 ரன்களும், ஜெமி ஸ்மித் 184 (அவட்இல்லை) ரன்களும் விளாசினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் திணறினர். இறுதியாக 2ஆவது புதிய பந்து எடுக்கப்பட்டது. ஆகாஷ் தீப்பின் இன்ஸ்விங் பந்தில் ப்ரூக் ஸ்டம்பை பறிகொடுத்தார். இந்த ஜோடி 6ஆவது விக்கெட்டுக்கு 60.4 ஓவரில் 303 ரன்கள் குவித்தது.
இந்த ஜோடியை பிரித்ததும் முகமது சிராஜ் அடுத்தடுத்து விக்கெட் வீழ்த்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 407 ரன்னில் ஆல்அவுட் ஆனது. முகமது சிராஜ் 6 விக்கெட் வீழ்த்த, ஆகாஷ் தீப் டக்கெட், ஒல்லி போப், ஹாரி ப்ரூக், கிறிஸ் வோக்ஸ் ஆகியோரை வீழ்த்தினார்.
20 ஓவரில் 88 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். மேலும், முதல் ஓவரை தொடங்கியது இவர்தான். இந்த நிலையில் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கும் 3ஆவது டெஸ்டில் இடம் பெறுவேனா? என்பது தெரியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆகாஷ் தீப் கூறியதாவது:-
இந்த டெஸ்ட் போட்டியில் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறுவது எங்களுக்கு முக்கியமானது. ஆகவே, 3ஆவது டெஸ்ட் போட்டி பற்றி நான் நினைக்கவில்லை. என்னுடைய முழு எனர்ஜியையும் இந்த 2 நாட்களில் வெளிப்படுத்த வேண்டும் என நம்புகிறேன். அதன் பிறகு 3ஆவது டெஸ்ட் பற்றி பரிசீலிப்பேன். நான் விளையாட வேண்டுமா? வேண்டாமா? என்பதை அணி முடிவு செய்யும்.
நான் விளையாடுவேனா என்பது எனக்குத் தெரியாது. அணி முடிவை எடுக்கும். போட்டிக்கு ஒருநாள் முன்னதாக ஆடும் லெவனில் இடம் உள்ளதா? என்பது தெரியும்.
இவ்வாறு ஆகாஷ் தீப் தெரிவித்தார்.
முதல் டெஸ்டில் விளையாடிய பும்ரா 2ஆவது டெஸ்டில் விளையாடவில்லை. இதனால் ஆகாஷ் தீப்பிற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார். லார்ட்ஸ் டெஸ்டில் பும்ரா நிச்சயமாக விளையாடுவார். இதனால் யார் நீக்கப்படுவார்கள் என்பது தெரியது. ஒருவேளை பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் இடையே கடும் போட்டி ஏற்படலாம்.
- கடந்த வருடம் 7.4 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
- அடிப்படை விலை ரூ. 3 லட்சமாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 26.8 லட்சம் ரூபாய்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் (இந்தியன் பிரீமியர் லீக்) டி20 தொடர் பிரபலமான நிலையில் ஒவ்வொரு மாநில கிரிக்கெட் சங்கங்களும் டி20 கிரிக்கெட் லீக்கை தொடங்க ஆரம்பித்தன.
தமிழ்நாடு, கர்நாடகா, மேற்க வங்கம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் டி20 லீக் தொடர் நடத்தப்படுகின்றன. அதேபோன்று கேரள மாநில கிரிக்கெட் சங்கமும் கடந்த வருடத்தில் இருந்து டி20 லீக்கை நடத்துகிறது. இதற்கான ஏலம் நடைபெற்றது. இதில் நட்சத்திர வீரரான சஞ்சு சாம்சனை கொச்சி ப்ளூ டைகர்ஸ் 26.8 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது.
கேரள கிரிக்கெட் லீக்கில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தொகைக்கு சஞ்சு சாம்சன் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
கேரளா கிரிக்கெட் லீக்கின் கடந்த வருடம் ஏலத்தில் சஞ்சு சாம்சன் திருவனந்தபுரம் ராயல்ஸ் அணியால் 7.4 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்தார். இந்த வருடம் அவருடைய அடிப்படை விலை 3 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பல அணிகள் இவரை எடுக்க போட்டியிட்டதால் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
- வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தார்.
- அவருடன் மகிழ்ச்சியாக பந்து வீசினேன்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 84 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.
6ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ப்ரூக்- ஸ்மித் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ப்ரூக் 158 ரன்களும், ஜெமி ஸ்மித் 184 ரன்களும் விளாசினர். 2ஆவது புதிய பந்தை எடுத்த பிறகு ஆகாஷ் தீப், முகமது சிராஜ் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார். இதனால் இந்த ஜோடி 387 ரன்னில் பிரிந்தது. அதன் பிறகு இங்கிலாந்து 407 ரன்களில் ஆல்அவுட் ஆனது. முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.
இதனால் இந்தியா முதல் இன்னிங்சில் 180 ரன்கள் முன்னிலைப் பெற்றது. நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 இன்னிங்சில் 1 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை 244 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில் ஆகாஷ் தீப் குதிரை போன்றவர் என முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முகமது சிராஜ் கூறியதாவது:-
ஆகாஷ் தீப் குதிரை போன்றவர். வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தார். வாய்ப்பு கிடைத்தபோது, சாதிக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். உண்மையிலேயே அவருடன் மகிழ்ச்சியாக பந்து வீசினேன்.
பொறுப்பு கொடுக்கும்போது அதை விரும்புகிறேன். என்னுடைய பக்கத்தில் இருந்து ரன்கள் விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய இலக்கு. முடிந்தவரை பேட்ஸ்மேனை நெருக்கடிக்குள்ளாக்கி கட்டுக்கோப்பாக பந்து வீச முயற்சித்தேன்.
இவ்வாறு முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.
- இங்கிலாந்து 244 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
- 400 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்க வாய்ப்புள்ளது.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 84 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. 6ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ப்ரூக்- ஸ்மித் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ப்ரூக் 158 ரன்களும், ஜெமி ஸ்மித் 184 ரன்களும் விளாசினர். இதனால் இங்கிலாந்து 407 ரன்களில் ஆல்அவுட் ஆனது.
இதனால் இந்தியா முதல் இன்னிங்சில் 180 ரன்கள் முன்னிலைப் பெற்றது. நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 இன்னிங்சில் 1 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை 244 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
இன்று சிறப்பாக விளையாடினால் இங்கிலாந்துக்கு 400 ரன்களுக்கு மேலாக இமாயல இலக்கை நிர்ணயிக்க வாய்ப்புள்ளது. இதனால் இங்கிலாந்து அணி தற்போதைய நிலையில் மிகப்பெரிய நெருக்கடியில் உள்ளது.
இந்த நிலையில் ஹாரி ப்ரூக் சேஸிங் குறித்து கூறியதாவது:-
தற்போது வரை இந்த டெஸ்டில் எங்களால் வெற்றி பெற முடியும் என நினைக்கிறேன். 4ஆவது நாள் காலையில் (இன்று) இந்தியாவின் ஒன்றிரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டால், இந்தியா எவ்வளவு ஸ்கோர் இலக்காக நிர்ணயித்தாலும், நாங்கள் களத்தில் சென்ற சேஸிங் செய்ய முயற்சி செய்வோம் என்பது உலகில் உள்ள எல்லோருக்கும் தெரியும்.
இவ்வாறு ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளார்.
- முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 87 ரன்கள் அடித்தார்.
- இரண்டாவது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 28 ரன்கள் அடித்து அவுட்டானார்.
இங்கிலாந்து, இந்தியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.
இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து 269 ரன்கள் குவித்து அவுட்டானார். ஜடேஜா 89 ரன்களும் ஜெய்ஸ்வால் 87 ரன்களும் அடித்து அவுட்டாகினர்.
இதனை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 407 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதனையடுத்து 180 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது. மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் 244 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இப்போட்டியில் முதல் இன்னிங்சில் 87 ரன்கள் அடித்த ஜெய்ஸ்வால் இரண்டாவது இன்னிங்சில் 28 ரன்கள் அடித்து அவுட்டானார்.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 20 போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்களை கடந்து, சுனில் கவாஸ்கரின் 49 ஆண்டு கால சாதனையை ஜெயிஸ்வால் முறியடித்தார். முன்னதாக சுனில் கவாஸ்கர் 21 போட்டிகளில் 2,000 ரன்களை கடந்திருந்ததே சாதனையாக இருந்தது.
இருப்பினும், 40 இன்னிங்ஸில் 2000 ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட், சேவாக் உடன் ஜெயிஸ்வால் முதலிடத்தை பகிர்ந்து கொள்கிறார்.






